Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி திஸ்ஸ விகாரையில் ஆயிரக்கணக்கில் சிங்கள மக்களை களமிறக்குவதற்குத் தீவிர முயற்சி!

494048520.jpeg

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையில் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு தெற்கில் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. 

எதிர்வரும் 10ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அந்த வழிபாடுகளுக்காகவே, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை வழங்கி ஆட்களைத் திரட்டும் பணியில் சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. 

திஸ்ஸ விகாரைக் காணிகள் தொடர்பான போலியான தகவல்களை வழங்கியே இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் ஒவ்வொரு பொசன் தினத்தன்றும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

https://newuthayan.com/article/தையிட்டி_திஸ்ஸ_விகாரையில்_ஆயிரக்கணக்கில்_சிங்கள_மக்களை_களமிறக்குவதற்குத்_தீவிர_முயற்சி!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

https://newuthayan.com/article/தையிட்டி_திஸ்ஸ_விகாரையில்_ஆயிரக்கணக்கில்_சிங்கள_மக்களை_களமிறக்குவதற்குத்_தீவிர_முயற்சி!

. வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தளங்கள் மூலம் தகவல்களை வழங்கி ஆட்களைத் திரட்டும் பணியில் சில சிங்கள கடும்போக்குச் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. 

🤣

இலங்கை இந்திய மக்களுக்கு எல்லாம் கோவில் சேர்ச் விகாரைக்கு அவர்களை கூட்டி கொண்டு வருவதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை எல்லாம் ஒருபோதும் தேவையில்லை தாங்களாகவே அள்ளுபட்டு எவ்வளவு தூரம் என்றாலும் பணம் செலவழித்து பரவச நிலையில் செல்வார்கள்

போர் முடிந்தபின் எல்லோரும் திட்டமிட்டுத் தையிட்டியை அடுத்த இன மோதல் களமாகக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வக்கத்த அரசியல்வாதிகளுக்கு குழப்பங்களே அரசியல் முதலீடு. இவர்களை சிறைக்கு அனுப்பாவிடில் நாட்டில் குழப்பங்களும் பிரிவினைகளும் மரணங்களும்  தொடர்ந்து கொண்டே இருக்கும். தெருவில் நின்று அரசியல்வாதி முதல் காவியுடை தரித்தவர்கள் வரை நாட்டை கொளுத்துவோம், இரத்த ஆறு ஓடப்பண்ணுவோம் என்று ஊழையிடுகிறார்கள். அவர்களுக்கு தமிழரின் இரத்த தாகம் எடுக்கிறது  

  • கருத்துக்கள உறவுகள்

'பொசென் நிகழ்வு என்ற பெயரில் தையிட்டி விகாரைக்கு சென்ற சிங்கள ராவய அமைப்பின் செயலாளர், உறுப்பினர்கள்!; இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்து; தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அக்கறை காட்டவேண்டும் - ரஜீவ்காந்

12 JUN, 2025 | 10:36 AM

image

மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதைக் கவனத்தில் கொள்ளவும். தாமதிக்காமல் இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

ஜூன் 10ம் திகதி அன்று பொசன் நிகழ்வு எனும் போர்வையில் தையிட்டிக்கு வந்தவர்கள் யார் என்பதை நான் அனைவருக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்.

முதலாவது மற்றும் இரண்டாவது படம் நேற்று முன்தினம் தையிட்டியில் எடுக்கப்பட்டது. சிங்களக் கடும் போக்கு தேசிய வாத சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் செயலாளரே இதில் உள்ளவர்கள்.

பொதுபலசேன, ராவண பலய போன்ற கடும்போக்குத் தேசிய வாத அமைப்புகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளவர்களே இவர்கள்.

தொடர்ச்சியாக அமைதியான முறையில் நாங்கள் செய்யும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பியிருக்கின்றார்கள், விளக்குகளை காலால் தட்டி இருக்கின்றார்கள், மாலைகளை கிழித்து எறிந்திருக்கின்றார்கள்.

நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம் வரும் என்று நேரடியாக மிரட்டி இருக்கின்றார்கள்.

இப்படிப்பட்டவர்களை 10ம் திகதி முழுமையான பொலீஸ் பாதுக்காப்புடன் வரவேற்று தையிட்டியின் சட்ட விரோத விகாரையினுள் வைத்திருந்தார்கள்.

இவர்கள் உள்ளேயும் காணிகளைத் தொலைத்தவர்கள் வெளியே வெயிலில் இருந்தார்கள்.

இவர்கள் இங்கு வழிபட வரவில்லை எமது கடந்தகால அனுபவ அடிப்படையில் இவர்களால் தமிழ் மக்களுக்கு ஆபத்தே அதிகம்.

இவர்கள் போன்றவர்கள் தங்கள் இனவாதத் தேவைக்கு இந்தப் போராட்டத்தை பயன்படுத்துவார்கள் என நன்கு அறிந்த அரசாங்கம் இதற்கு எந்த தீர்வையும் முன்வைக்காது அமைதியாகவுள்ளது.

https://www.virakesari.lk/article/217229

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.