Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Supreme_Court_1200px_24_04_30-1000x600-1

காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனு இன்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தகமானியை தற்காலிகமாக பலமற்றதாக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ளநிலையில், குறித்த வர்த்தமானியை மீள கைவாங்குவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு இல. SC/FR/112/25 இல் மனுதாரர் எம்.ஏ. சுமந்திரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் க. கனக-ஈஸ்வரன், விரான் கொறேயா மற்றும் சட்டத்தரணிகள் பவானி பொண்சேகா, லக்ஷ்மணன் ஜெயக்குமார், நிலோஷன் ரவீந்திரன், பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் ஆஜராகினர்.

Athavan News
No image preview

காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின்...

காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவ...

நல்ல பலனளிக்க கூடிய முயற்சி. சிங்கள இனவாத அரச இயந்திரத்தின் முதுகொழும்பாக இருக்கும் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு விளைவை ஏற்படுத்துவது சவாலான விடயம்.

இதைச் செய்த சுமந்திரனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் வழக்கு தொடுப்பதற்கு முன்னமே பாராளு மன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு, இந்த தீர்மானத்தை உடனடியாக பரிசீலிப்பதாக அரசாங்கம் அறிவித்தது தொடர்பாக செய்திகள் வாசித்த ஞாபகம்.

அது தவிர வழக்கரிஞர் அந்த காணி அபகரிப்பு அறிவிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தன்னை அணுகினால் சட்ட உதவி செய்வதாகவும் அறிக்கை விட்ட ஞாபகம்.

அது என்ன இடை நிறுத்தம்!!! தவறான ஒரு வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு அந்த செயல் பாட்டை நிறுத்துவது தானே சரியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

அது என்ன இடை நிறுத்தம்!!! தவறான ஒரு வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட்டு அந்த செயல் பாட்டை நிறுத்துவது தானே சரியாக இருக்கும்.

வட அமெரிக்காவில் இருந்து இவ்வளவு கேஸ்களைப் பற்றி இங்கே வாசிக்கிற நீங்களே இப்படி இருந்தால், சோசியல் மீடியாவில் சட்ட அறிவு பெறும் ஆட்களின் நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.

ஒரு வழக்கு முழுமையாக விசாரிக்கப் பட இரு தரப்பும் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் தர வேணும். அதன் பின்னர் தான் தீர்ப்பு (verdict) வரும். அப்படித் தீர்ப்பு வழங்கப் பட முன்னர், தீமை பயக்கும் செயல்பாடுகளை உடனே தடுக்கும் முறை தான் இந்த இடைக்காலத் தடை உத்தரவு (temporary injunction). இது அமலில் இருக்கும் போது வழக்கு முன்னோக்கி நகரும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

வட அமெரிக்காவில் இருந்து இவ்வளவு கேஸ்களைப் பற்றி இங்கே வாசிக்கிற நீங்களே இப்படி இருந்தால், சோசியல் மீடியாவில் சட்ட அறிவு பெறும் ஆட்களின் நிலையை எண்ணிப் பார்க்கிறேன்.

ஒரு வழக்கு முழுமையாக விசாரிக்கப் பட இரு தரப்பும் கோர்ட்டுக்கு வந்து விளக்கம் தர வேணும். அதன் பின்னர் தான் தீர்ப்பு (verdict) வரும். அப்படித் தீர்ப்பு வழங்கப் பட முன்னர், தீமை பயக்கும் செயல்பாடுகளை உடனே தடுக்கும் முறை தான் இந்த இடைக்காலத் தடை உத்தரவு (temporary injunction). இது அமலில் இருக்கும் போது வழக்கு முன்னோக்கி நகரும்!

இந்த விடயத்தில் எனக்கு முழுமையான சட்ட அறிவு / நுணுக்கம் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

இந்த திடீர் வர்த்தமானி அறிவிப்பு ஒருசட்ட மூலமாக்கல் முறைமையில் வரவில்லை. இது ஒரு காணி அதிகாரம் சார்ந்த தன்னிச்சையான அரசாங்க அறிவிப்பு மட்டுமே என்றே நான் கருதுகிறேன்.

இது தமிழர்களை பொறுத்தவரையில் அரச அடாவடித்தன நில அபகரிப்பு. இது அரசின் பிழையான முடிவு.

இதை வழக்குமூலம் மட்டும் தான் தான் நிறுத்தலாம் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆளை ஆள் தூக்கிக்கொண்டு வருஷ கணக்காய் அலைய வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Sasi_varnam said:

இது தமிழர்களை பொறுத்தவரையில் அரச அடாவடித்தன நில அபகரிப்பு. இது அரசின் பிழையான முடிவு.

இதை வழக்குமூலம் மட்டும் தான் தான் நிறுத்தலாம் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆளை ஆள் தூக்கிக்கொண்டு வருஷ கணக்காய் அலைய வேண்டியது தான்.

"பிழையான, அடாவடித்தனமான" - இவையெல்லாம் சட்ட ரீதியான வினையுரிச் சொற்கள் அல்ல. இந்தச் சொற்களை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது.

"இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரான" என்பது தான் வர்த்தமானியை நிரந்தரமாக அரசின் ஆயுதங்களுள் இருந்து அகற்றும் மந்திரச் சொல். அதைத் தான் சுமந்திரன் மனுதாரராக வழக்குப் போட, அவர் சார்பில் ஒரு திறமையான சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி தடை வாங்கியிருக்கிறது.

நீங்கள் சட்டப் பரிச்சயம் இல்லாமல் இதன் பலனைக் கேள்விக்குள்ளாக்கலாம். ஆனால், இங்கே இன்னும் சிலர் வருவார்கள். வந்து உங்கள் கேள்வியை "நிரந்தரமாக வர்த்தமானியை அகற்றுவதில் இருந்து சுமந்திரன் அரசைக் காப்பாற்றியிருக்கிறார்" என்று புது விளக்கம் தர வெளிக்கிடுவார்கள்😂. இப்படித் தான் இன அழிப்பு பற்றிய ஜெனிவா விடயங்களிலும் சுமந்திரன் நடந்து கொண்டார் எனக் குற்றம் சாட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி தடை வாங்கியிருக்கிறது.

தெளிவாக பலதை பேசும் நீங்கள் "இடைக்கால தடை" என்பதை வெறும் "தடை வாங்கி இருக்கிறார்கள்" என்பது சரியாகுமா?

"இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரான" பல விடயங்கள் தமிழர் சார்ந்து நடந்தேறுகிறது. ஐயாவால் போடப்பட்ட வழக்குகள் எல்லாம் எமக்கு நீதியை தேடி தரும் என்று எதிர்பார்ப்போம்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sasi_varnam said:

தெளிவாக பலதை பேசும் நீங்கள் "இடைக்கால தடை" என்பதை வெறும் "தடை வாங்கி இருக்கிறார்கள்" என்பது சரியாகுமா?

"இலங்கை அரசியலமைப்பிற்கு எதிரான" பல விடயங்கள் தமிழர் சார்ந்து நடந்தேறுகிறது. ஐயாவால் போடப்பட்ட வழக்குகள் எல்லாம் எமக்கு நீதியை தேடி தரும் என்று எதிர்பார்ப்போம்.

"தடை" என்றால் injunction. எனவே அர்த்தத்தைப் பொறுத்த வரை சரியாகத் தான் சொல்லியிருக்கிறேன்.

பிரச்சினை இங்கே இந்த வழக்கோ, வழக்கின் காரணமோ அல்ல. "எப்பிடி நாங்கள் சுமந்திரனுக்கு நன்றி சொல்லுறது? நாக்கு இழுத்து விடாதா?"😂 (பகிடி தான், சீரியசாக எடுக்காதீர்கள்!)

இந்த வழக்கில் என் புரிதல் (எனக்கு புரிவதற்கு மிகக் கஷ்டமான விடயங்களில் ஒன்று சட்டங்களும் அதில் பயன்படுத்தப்படும் சொற்களும் / வார்த்தைகளும்)

1. இந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வெளியிடும் போது, அது காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக அமைந்தது என கூறியிருந்தது

2. ஆனால் அந்த வர்த்தமானி அறிவித்தல் அது காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக இல்லை என தமிழ் தரப்புகள் சுட்டிக் காட்டின.

நிசாம் காரியப்பர் இதனை பற்றி தெளிவாக தமிழ் கட்சிகளுக்கு எடுத்துரைத்து இருந்தார்.

தமிழரசுக் கட்சி பாராளுமன்றத்தில் இதை முன்வைத்து கடுமையாக எதிர்த்து இருந்தது. இதில் முன் நின்றவர் சுமந்திரன்.

கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு இந்த வர்த்தமானி அறிவிப்பு பற்று தெளிவாக எடுத்துரைத்தது நினைவு.

3. பாராளுமன்ற விவாதங்களும் அழுத்தங்களுக்கும் பின்னர் இனவாத அனுர அரசு இந்த வர்த்தமானியை மீளப் பெறப் போவதாக அறிவித்தது.

4. ஆனால் மீளப் பெறும் வர்த்தமானி அறிவித்தலை அனுரவின் இனவாத அரசு இன்னும் வெளியிடவில்லை

5. எனவே காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக இல்லை என்ற விடயத்தின் அடிப்படையில் சுமந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்க செய்து இருந்தார்

6. அந்த மனுவை எடுத்து கொண்ட நீதிமன்றம், அதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்கி உள்ளது (ஏனெனில் சட்ட ரீதியில் இவ் அறிவிப்பு செல்லுபடியற்றது என மன்றுக்கு புரிந்து இருக்கும்)

7. அத்துடன் வர்த்தமானியை மீளப் பெறுவது தொடர்பாக அரசு ஏதாவது செய்து இருப்பின் அதனை சமர்பிக்க சொல்லியுள்ளது

நான் நினைக்கின்றேன், அனுரவின் இனவாத அரசுக்கு வேறு வழி இல்லையென. வர்த்தமானியை மீளப் பெறும் அறிவித்தலை விடுக்கும் என நினைக்கின்றேன்

(பின்னர் இன்னொரு விதமாக காணி அபகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.