Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Girl.jpg?resize=700%2C375&ssl=1

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது.

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வந்த நிலையில், குறித்த சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அவரே சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து வந்து 17 நாட்கள் விடுதியொன்றில் தங்க  வைத்திருந்தார் எனவும்   தெரியவந்துள்ளது.

அதேவேளை, விடுதியின் உரிமையாளரும், குறித்த சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டார் எனவும்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனைக் கைதுசெய்த பொலிஸார் இது தொடர்பான   மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1438714

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது!

10 JUL, 2025 | 09:00 AM

image

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் மச்சான் முறையுள்ள 19 வயதுடைய இளைஞன் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் இளைஞனை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/219631

உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

என்ன ஏராளன் உங்க ஏரியாவில் அடிக்கடி நடக்கிற மாதிரி இருக்கே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 வயது சிறுமியை… அந்த இளைஞன் விடுதிக்கு கொண்டு வரும் போதே, விடுதி உரிமையாளர் காவல் துறைக்கு இரகசிய தகவல் கொடுத்திருக்க வேண்டும்.

மாறாக… அந்த விடுதி உரிமையாளரும் சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டமைக்காகவும், சிறுமியை பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்காமல் இருந்தமைக்காகவும் பாரதூரமான குற்றமாக கருதி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,

  • கருத்துக்கள உறவுகள்

அவசரம் அவசரம் எதிலும் அவசரம்.அறியாத வயது ...சந்தில சிந்து பாடிய வரை யும் உள்ளே தள்ளனும். தண்டனை கடுமையாகும் வரை குற்றங்கள் குறையாது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன ஏராளன் உங்க ஏரியாவில் அடிக்கடி நடக்கிற மாதிரி இருக்கே?

உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார்.

இன்னொரு சம்பவம் 11ஆம் ஆண்டில் மாணவன் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திவிட்டு அதனை பெருமையாக ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். அந்த மாணவியும் பாடசாலை வராதிருந்துள்ளார். இப்போது அதிபர் தலையிட்டு மாணவியை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார்.

இன்னொரு சம்பவம் 11ஆம் ஆண்டில் மாணவன் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திவிட்டு அதனை பெருமையாக ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். அந்த மாணவியும் பாடசாலை வராதிருந்துள்ளார். இப்போது அதிபர் தலையிட்டு மாணவியை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சும்மாதான்...எறிந்து பார்ப்பம்...இது வெளிநாட்டுக்காசு செய்யிற வேலைதான்...ஒன்ரில் மோட்டச்சயிக்கில் வாங்கி ஓடி போஸ்ரோடை ..அல்லது ரிப்பரோடை மோதி இல்லாமல் போவினம்...அல்ல்து பெட்டையோடயோ..பொடியனோடைய தொடர்புபட்டு...எக்குத்தக்காய் நடந்து மாட்டுப் படுவினாம் ..இது எல்லாம் கொலஸ்திரோல்.. கூடி குணம் பாருங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, alvayan said:

சும்மாதான்...எறிந்து பார்ப்பம்...இது வெளிநாட்டுக்காசு செய்யிற வேலைதான்...ஒன்ரில் மோட்டச்சயிக்கில் வாங்கி ஓடி போஸ்ரோடை ..அல்லது ரிப்பரோடை மோதி இல்லாமல் போவினம்...அல்ல்து பெட்டையோடயோ..பொடியனோடைய தொடர்புபட்டு...எக்குத்தக்காய் நடந்து மாட்டுப் படுவினாம் ..இது எல்லாம் கொலஸ்திரோல்.. கூடி குணம் பாருங்கோ..

நேற்று மாலை நான் அருந்தப்பில் உயிர் தப்பினேன், நீங்கள் சொல்வதில் இருக்கும் ஒரு புள்ளிங்கோ 80-90 கி.மீ வேகத்தில் என்னை விலத்தி சென்றார். நான் ஒரு மில்லி செக்கன் வேகமாக வீதியில் ஏறிவிட்டேன். எப்போதும் பொறுமையாக ஆறுதலாக எல்லோரும் சென்றபின் வீதியை கடப்பேன். நேற்று கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன். ஆனாலும் புள்ளிங்கோ வேகமாக வருவது தெரியவே இல்லை.

சிறுமி காணாமல்போய் வந்த சம்பவத்தில் முறை மச்சானுக்கு வெளிநாட்டில் மச்சாளோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்க உள்நாட்டு மச்சாள் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தி இருந்தார்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.