Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நாட்டைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்வதாக பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் இதற்காக பல்வேறு உத்திகளைத் கையாள்வதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொக்காவில் தாக்குதலின் 35வது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

"நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தசம புள்ளிக் கூட மாறவில்லை. 

இந்தியா இப்போது இலங்கைக்கு 300 பில்லியன் ரூபாய் கடன் நிவாரணம் வழங்கப் போகிறது. 

இலங்கை இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் டொலர்களை மீள அறவிடாமல் நமது பெரிய சகோதரர் கடன் நிவாரணம் வழங்கப் போகிறார்.... 

புலம்பெயர் மக்களைப் பயன்படுத்தியேனும், அப்பாவி தமிழ் மக்களைப் பயன்படுத்தியேனும், தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியேனும், நமது நாட்டை பொருளாதார ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஒரு நாடாக நிலைகுலைத்து இறுதியில் 29வது இந்திய மாநிலமாக உருவாக்கி, அதன் பின்னர் கிழக்கு மற்றும் வடக்கை உடைத்த உடனேயே 30வது இந்திய மாநிலமாக உருவாக்கும் திட்டமே இடம்பெறுகின்றது" என்றார்.

https://adaderanatamil.lk/news/cmd09a7rk012jqp4kv7liupqu

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஏராளன் said:

நாட்டைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்வதாக பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஈழத்தீவினுள் உங்களுடைய அதிதீவிர பௌத்தமதவாதச் சிந்தனையே இந்தியத் தலையீட்டுக்கு வழிவகுத்துக் கொடுத்தது. சமத்துவம், சகோதரத்தவத்தை நாடிய மிதவாதத்த தமிழ்த் தலைமைகளை அடித்து அவமானப்படுத்திக் கொன்றொழித்ததோடு, தென் பகுதியில் வாழ்த்த அப்பாவித் தமிழர்களைக் கொன்றதோடு, தொழிற்றுறையாளர்களையும் கைப்பற்றி வட- கிழக்கை நோக்கி அடித்து விரட்டியபோதே இந்தியத் தலையீடு கப்பல் வடிவிலே வந்துவிட்டது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. தமிழினத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்பதன் ஊடாக தமிழரும் சிங்களவரும் ஒரு வலிமை மிக்க சக்தியாகப் பரிணமிக்க முடியும். ஆனால், அதற்கு நீங்கள் உங்களின் மகாவம்ச மனோபாவத்திலிருந்தும், பொளத்த உயரினவாதச் சித்தாந்தத்திலிருந்தும் விடுபட வேண்டும். 42ஆண்டுகளின் முன் நீங்கள் ஆடிய பெருமாட்டம் மீண்டும் மீண்டும் உங்களின் முகத்தைக் காட்டி நிற்கிறது. நீங்கள் புத்தனைத் தொழும் தகுதியற்ற இனமாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உண்மையான பௌத்தர்களாக இனியேனும் சிந்தித்தால் ஈழத்தீவு சிறக்கும். இல்லையேல் இரந்து வாழும் இழிநிலை தொடரும்.

குறிப்பு: அமெரிக்காவும் கடன் வேண்டுதுதானே; அதனால், இலங்கையரசு இரந்து சீவிப்பது சரிதானே என்று யோசிக்கலாம். யுத்த பேரிகையின் தொடர்ச்சியே பொருண்மிய வீழ்ச்சியாகத் தொடர்கிறது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

நாட்டைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்வதாக பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் இதற்காக பல்வேறு உத்திகளைத் கையாள்வதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொக்காவில் தாக்குதலின் 35வது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு பேராசியரின் சிந்தனையும் பேச்சும் இப்படி என்றால் ஈழத்தமிழினம் தனக்காக யுகம் யுகமாக போராட வேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

"நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தசம புள்ளிக் கூட மாறவில்லை. 

அதற்கு ஏன் நீங்கள் இடம் அளிக்கிறீர்கள்? உங்கள் பிரஜைகளை நீங்கள் கௌரவத்துடன் வாழ விட்டால் மற்றவர்கள் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? தமிழரின் அரசியல் உரிமைகளை பறித்தது இந்தியாவா? அவர்கள் மீது கலவரங்களை தூண்டி கொன்று ஒழித்தது இந்தியாவா? அவர்களின் நிலங்களைபறித்தது இந்தியாவா? தமிழரின் பூர்வீக நிலங்களில் இராணுவ காவலரண்களை, விகாரைகளை உருவாக்கியது இந்தியாவா? பிக்குவிற்கு இப்போ சிங்களத்தை புனிதமாக்க வேண்டிய தேவையுள்ளது. எங்கோ கேட்டதை இங்கு வந்து கக்குகிறார். ஆனால் கண்ணுக்கு முன் நிகழ்ந்தவைகளை, நிகழ்த்தியவைகளை மறைக்கிறார். பிரச்சனைக்கு தீர்வு காண முயலாமல் பழியை வேறொரு பக்கம் காட்டி தொடருங்கள் அடுத்த அத்தியாயத்தை, அந்த இந்தியாவே வெகு விரைவில் உங்களையும் கூறு போடும். உள்நாட்டு பிரச்சனையை சுமுகமாக தீர்க்க வக்கில்லாமல் சர்வதேசத்துக்கு கொண்டு போய், பிச்சை எடுத்து, சர்வதேச படைகளையும் ஆலோசனைகளையும் கையாண்டு சொந்த மக்களை கொன்றொழித்த இந்த இந்த நாட்டுக்கு இறைமையேது, அதிகாரமேது, பொருளாதாரமேது? உங்கள் மதம் என்னத்தை போதித்தது, சாதித்தது? நீங்கள் போதிப்பது மத போதனையுமல்ல நீங்கள் ஆன்மீக வழிகாட்டியுமல்ல. உங்கள் வாயிலிருந்து வெளிவருவது இனவாதம் மதவாதம் அழிவின் வழிகாட்டிகள் நீங்கள். அதுபற்றி நீங்கள் வெட்கப்படுவதில்லை, பெருமை பேசிக்கொள்கிறீர்கள். அரசியல் கூட்டங்களில் அரசியல்வாதிகளில் முதல் இருக்கைகளை தேடுகிறீர்கள். உங்களுக்கு எதற்கு மதம், காவி? இரத்தம் குடித்து வாழும் விஷ ஜந்துக்கள். முகத்தில் குரூரம், வாயில் கக்கும் இனவாதம், அடாவடி, பொய், திரிப்பு. வேறு என்ன உங்களிடமுண்டு மக்களுக்கு போதிப்பதற்கு?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.