Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுப்பள்ளி கலவரம் : வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேருக்கு சிறை- போலீஸ் அதிரடி!

காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எல்.என்.டி கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் துறைமுகம் அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

காட்டுப்பள்ளி கலவரம்

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமரேஷ் பிரசாத் என்ற நபர் கடந்த 35 நாட்களுக்கு வேலையில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று அமரேஷ் பிரசாத் மது அருந்தியுள்ளார். பின்னர் மது போதையில் அவரின் வீட்டு மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அமரேஷ் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது மீட்டு உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்குப் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் வைக்கப்பட்டு உள்ளது.

போலீஸ் மீது கல்வீசி தாக்குதல்

இதனையடுத்து உயிரிழந்த தொழிலாளி அமரேஷ் பிரசாத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி திடீரென்று வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து உடனடியாகக் கூடுதல் காவல் ஆணையர் பவாணீஸ்வரி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.. அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகக் காவல்துறையினர் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள்

இதனால் காவல்துறையினர் வந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. மேலும் ஒரு சில காவலர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டது. பின்னர் அதிரடியாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அப்போது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட புலம் பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்களை விரட்டி அடித்து அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து காவல்துறையினர் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பிரச்சனை ஏதும் ஏற்படாத வண்ணம் அமைதி காத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆவடி கூடுதல் ஆணையர் பவானிஸ்வரி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளிகள்

இதற்கிடையே உயிரிழந்த வடமாநிலத் தொழிலாளி அமரேஷ் பிரசாத் குடும்பத்திற்கு நிறுவனத்தின் சார்பில் 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. குறிப்பாகச் சம்பவத்தில் ஈட்டுப்பட்டக் காவல்துறையினரிடமும் வட மாநில ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தக் கலவரத்தால் திருவள்ளூரில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கல்வீசித் தாக்குதலில் ஈட்டுப்பட்ட 29 வடமாநிலத் தொழிலாளர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் காட்டுப்பள்ளி துறைமுகக் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காட்டுப்பள்ளி பகுதியில் காவலர்கள் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளது குறிப்பிடத்தகது.

https://tamil.samayam.com/latest-news/state-news/thiruvallur-kattupalli-attack-northern-state-workers-vellore-jailed/articleshow/123669669.cm

டிஸ்கி:

குடி வெறியில் செத்தால் 5 லட்சம் இழப்பீடு ..? வட நாட்டவர்கள் அட்டகாசம் தாங்க முடியல.. நானும் ஊர காலி பண்ணிவிட்டு வேற நல்ல நாட்டில் செற்றில் ஆகலாம் என்டு இருக்கன்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன… “வடக்கன்ஸ்” பெரிய அட்டகாசமாக இருக்கிறாங்கள். 😂

மது வெறியில் தனது வீட்டு மடியில் இருந்து விழுந்து செத்தாலும், நட்ட ஈடு கேட்கிறாங்கள். 🤣

டாஸ்மாக்கின் “வீரனை” குடித்துவிட்டு… வீர விளையாட்டு எல்லாம் நடக்குது. 😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2025 at 20:19, தமிழ் சிறி said:

இது என்ன… “வடக்கன்ஸ்” பெரிய அட்டகாசமாக இருக்கிறாங்கள். 😂

மது வெறியில் தனது வீட்டு மடியில் இருந்து விழுந்து செத்தாலும், நட்ட ஈடு கேட்கிறாங்கள். 🤣

டாஸ்மாக்கின் “வீரனை” குடித்துவிநடத்துனர் : ரிக்கற் எடுப்பா..?

வட மாநில இளைஞர் : கியா ( அப்படின்னா ? )ட்டு… வீர விளையாட்டு எல்லாம் நடக்குது. 😂🤣

நடத்துனர் : ரிக்கற் எடுப்பா..?

வட மாநில இளைஞர் : கியா ( அப்படின்னா ? )

No image preview

563K views · 3.7K reactions | திருப்பூர் கலைஞர் கருணாநிதி...

திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளகவுண்டம்பாளையம் பகுதிக்கு செல்லும் அரசு நகர பேருந்தில் கந்தசாமி என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல...

எங்க பரம்பரையிலேயே ரிக்கற் எடுத்தது கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நடத்துனர் : ரிக்கற் எடுப்பா..?

வட மாநில இளைஞர் : கியா ( அப்படின்னா ? )

No image preview

563K views · 3.7K reactions | திருப்பூர் கலைஞர் கருணாநிதி...

திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளகவுண்டம்பாளையம் பகுதிக்கு செல்லும் அரசு நகர பேருந்தில் கந்தசாமி என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல...

எங்க பரம்பரையிலேயே ரிக்கற் எடுத்தது கிடையாது

தமிழர்களுக்கு அடித்தாலே புத்தி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நடத்துனர் : ரிக்கற் எடுப்பா..?

வட மாநில இளைஞர் : கியா ( அப்படின்னா ? )

No image preview

563K views · 3.7K reactions | திருப்பூர் கலைஞர் கருணாநிதி...

திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளகவுண்டம்பாளையம் பகுதிக்கு செல்லும் அரசு நகர பேருந்தில் கந்தசாமி என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம் போல...

எங்க பரம்பரையிலேயே ரிக்கற் எடுத்தது கிடையாது

கருணாநிதி பேரூந்து நிலையம் என்று வைத்துக் கொண்டு… பஸ்சுக்கு ரிக்கற் எடுக்கச் சொன்னால், வடக்கனுக்கு கோபம் வரும் தானே.

கருணாநிதி ரயிலுக்கே ரிக்கற் எடுக்காமல் கக்கூசில் ஒளித்து பயணம் செய்யும் ஓசி பிரயாணி. அதே வழியை… வடக்கன்சும் பின்பற்றுவதில் தவறு இல்லையே.

😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.