Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்

September 6, 2025 8:00 pm

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்!

https://oruvan.com/we-will-provide-solutions-to-the-problems-of-the-tamil-people-and-build-reconciliation/

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும்

வட-கிழக்குப் பிரிப்பில் தொடங்கித் தமிழினத்தை இல்லாதொழிக்கும் அத்தனை செயற்பாட்டிற்கும் தூண்டுகோலாக இருந்த,இருக்கின்றவர்களான நீங்கள் தீர்ப்பீர்கள். இனத்தனித்துவத்தை இல்லாது தீர்ப்பதுதானே உங்களது மறைநிலை திட்டமாகும். இனப்பிரச்சினையை பொருளாதாரப் பிரச்சினை என்று அழைப்பதன் ஊடாகத் தமிழரது இனப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்ய எண்ணுவது 'பூனை கண்ணைமுடிப் பாலைக் குடித்தால் யாருக்கும் தெரியாதென்பதுபோல்' உங்கள் முன்மொழிவுகள் இருக்கிறது. இந்த உலகுகக் உங்கள் இனவாத முகம் தெரிய இன்னும் பல ஆண்டுகள் தேவை. ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோருக்கு நீங்கள் யே.வி.பி யின் மாற்றுவடிவம் என்பதில் தெளிவுண்டு.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இவையோடை தில்லு முல்லு.....இந்த திரியில் ..இருக்கு.. முழு நாடகம்......

ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்!

1 hour ago, nochchi said:

வட-கிழக்குப் பிரிப்பில் தொடங்கித் தமிழினத்தை இல்லாதொழிக்கும் அத்தனை செயற்பாட்டிற்கும் தூண்டுகோலாக இருந்த,இருக்கின்றவர்களான நீங்கள் தீர்ப்பீர்கள். இனத்தனித்துவத்தை இல்லாது தீர்ப்பதுதானே உங்களது மறைநிலை திட்டமாகும். இனப்பிரச்சினையை பொருளாதாரப் பிரச்சினை என்று அழைப்பதன் ஊடாகத் தமிழரது இனப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்ய எண்ணுவது 'பூனை கண்ணைமுடிப் பாலைக் குடித்தால் யாருக்கும் தெரியாதென்பதுபோல்' உங்கள் முன்மொழிவுகள் இருக்கிறது. இந்த உலகுகக் உங்கள் இனவாத முகம் தெரிய இன்னும் பல ஆண்டுகள் தேவை. ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோருக்கு நீங்கள் யே.வி.பி யின் மாற்றுவடிவம் என்பதில் தெளிவுண்டு.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

இந அடக்குமுறைகளும் அச்சுறுத்தல்களும் அழிப்புகளும் பறிப்புகளும் காணாமல் ஆக்குதல் கொக்கரிப்புகளும் கொலைகள் எல்லாம் பொருளாதாரம் என மூட்டை கட்டி மூடி மறைத்துவிட முயற்சிக்கிறார்கள். எடுபடுமா இருந்து பாப்போம்.

ஏன் நாட்டில் வடக்கு கிழக்கில் மட்டுந்தான் பொருளாதாரப்பிரச்சனையுண்டா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.