Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது- இனி சட்டத்தின் ஆட்சி தான்

adminSeptember 17, 2025

4-3-1.jpg?fit=1170%2C823&ssl=1

யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட  காவல்துறை அதிகாரிகள் சகிதம் கற்கோவளம் பகுதிக்கு இன்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதன் போது, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், மீனவர்கள் மீதான வாள்வெட்டு  தாக்குதல் பற்றியும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அதனை தொடர்ந்து மீனவர்கள் மற்றும் மக்களிடம், நடந்தவற்றை கேட்டறிந்து காவல்துறையினரால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் எடுத்து கூறினார். அத்துடன், சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றுக்கு நிச்சயம் முடிவு கட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சி தான் நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது என அமைச்சர் மக்களிடம் குறிப்பிட்டார்.

4-2-1.jpg?resize=800%2C544&ssl=14-4-1.jpg?resize=800%2C444&ssl=14-1-2.jpg?resize=800%2C493&ssl=1

https://globaltamilnews.net/2025/220449/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

ஒரு கிலோமீற்றர் தூரத்தில் பொலிஸ்நிலையம் இருக்கும் போது பாரிய டிப்பர்கள் மூலம் கள்ளமண் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய மாபியாவாக இருக்கிறார்கள்.

இலங்கைக்கு வெளியே பாதாள உலகைத் தேடும்போது உள்ளூரில் இருக்கும் பாதாள உலக கோஸ்டியையும்

அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கும் காவல்துறையையும் இதுவரை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்பதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு கிலோமீற்றர் தூரத்தில் பொலிஸ்நிலையம் இருக்கும் போது பாரிய டிப்பர்கள் மூலம் கள்ளமண் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பெரிய மாபியாவாக இருக்கிறார்கள்.

இலங்கைக்கு வெளியே பாதாள உலகைத் தேடும்போது உள்ளூரில் இருக்கும் பாதாள உலக கோஸ்டியையும்

அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கும் காவல்துறையையும் இதுவரை அரசு கண்டு கொள்ளவே இல்லை என்பதும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

ஒரு காலத்தில் தென்மராட்சி வெள்ளை மண்ணுக்கு பஞ்சமில்லாத இடம். தற்போது சொந்த நிலத்திலேயே மண் அள்ள முடியாத நிலையாம்.

வைரவருக்கு ஒரு மடம் கட்டுவம் எண்டால் மண் எடுக்க வசதி இல்லை எண்டு மேசன்மார் கைவிரிக்கினமாம்.😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.