Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பில் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருந்தும் கூட இந்த வருடம் நிறைவேறவுள்ள தீர்மானம் அவை அனைத்தையும் விட மிகவும் மோசமான, பலவீனமான ஒரு தீர்மானம் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து ஜெனிவா அமர்வுகளில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களும் எடுக்கின்ற நடவடிக்கைகளும் மோசமான ஏமாற்றமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைந்திருந்தும்கூட இந்த வருடம் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட மிகவும் பலவீனமான ஒரு தீர்மானம்.

ஒரு வருடத்தை கடந்த தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பு கூறல் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் இன பிரச்சினை சம்பந்தமாகவும் எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் மாறாக இதற்கு முதல் ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் செயல்பட்டதை போன்றே அதே நிலைப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தொடர்கின்றதாகத் தான் இருக்கிறது.

அப்படி இருக்கின்ற நிலையிலும் ஜெனீவாத் தீர்மானம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற அடிப்படை துரோகம். முழுக்க முழுக்க தங்களுடைய நலன்கள் சார்ந்த முடிவுகளாக இந்த நாடுகள் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை கொடுக்காத,மாறாக நிரந்தரமாகவே பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையிலே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை உண்மையில் நாம் கண்டிக்கிறோம்.

அந்த வகையில் செம்மணியிலே சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்பங்கள் இந்த வருட ஐ.நா.வின் அறிக்கையை எரித்தார்கள்.
2009 ஆம் ஆண்டில் இருந்து பொறுப்புக்கூறலுக்கு அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளக ரீதியாக செய்ய வேண்டும் எனக் கேட்டும் அந்த கோரிக்கையை முன் வைக்கின்ற வகையிலும் சர்வதேச கோணத்தில் எந்த விதமான பொறுப்பு கூறலும் வலியுறுத்தாமல் இருப்பது இந்த தீர்மானம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகிறது.

இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ள சுமந்திரன் தலைமையிலான செயற்பாடுகளை கண்டறிய வேண்டும். சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் பிரித்தானியாவிற்கு இரகசியமாக சென்று இந்த வரைவை தயாரிப்பதில் பணியாற்றினார்.
பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பான ஒரு வரைவை உருவாக்குவதற்கான முயற்சியை நிராகரித்து தமிழ் அரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை விலத்தி வைத்திருந்து தீர்மானத்தின் இறுதி வடிவங்களை வரைந்திருந்த சூழலில் அவர் அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற வேண்டும் என்ற கருத்துக்களையும் கூறி பச்சைக் கொடி காட்டுகின்றார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர் தன்னுடைய செல்வாக்கை கட்சிக்குள் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புகளுடைய செல்வாக்கை தன்னுடைய தோல்வி அடைந்த போக்குக்கு பயன்படுத்துகின்ற அவல நிலையை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக சுமந்திரன், சிவஞானம் போன்றவர்களின் படுமோசமான செயற்பாடுகளை விளங்கிக்கொண்டு மக்கள் நிராகரிக்கின்ற தரப்புகளை கட்சிக்குள் எதிர்ப்பதற்கு முன்வர வேண்டும். அல்லது அவர்களும் சேர்ந்து இந்த படுமோசமான செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு எதிராக செயலாற்றுகிறார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டி இருக்கும் என்றார்.

https://akkinikkunchu.com/?p=343593

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ள சுமந்திரன் தலைமையிலான செயற்பாடுகளை கண்டறிய வேண்டும். சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் பிரித்தானியாவிற்கு இரகசியமாக சென்று இந்த வரைவை தயாரிப்பதில் பணியாற்றினார்.
பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பான ஒரு வரைவை உருவாக்குவதற்கான முயற்சியை நிராகரித்து தமிழ் அரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை விலத்தி வைத்திருந்து தீர்மானத்தின் இறுதி வடிவங்களை வரைந்திருந்த சூழலில் அவர் அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற வேண்டும் என்ற கருத்துக்களையும் கூறி பச்சைக் கொடி காட்டுகின்றார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர் தன்னுடைய செல்வாக்கை கட்சிக்குள் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புகளுடைய செல்வாக்கை தன்னுடைய தோல்வி அடைந்த போக்குக்கு பயன்படுத்துகின்ற அவல நிலையை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

சுமந்திரன் என்பவர் தமிழ் அரசியலுக்குள் வராமல் இருந்திருந்தால் ஒரு சில நல்ல முடிவுகள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் என சொல்கிறார்கள். அதை விட 2009க்கு பின்னர் சமரசம் இல்லாத நல்லதொரு அழுத்தம் சிங்களத்தின் மேல் இருந்திருக்கும் எனவும் மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா பிரான்சில் நிற்கின்றார், சுவிசிக்கு செல்கின்றார் என நினைக்கின்றேன். இவர் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தால் இம்முறை நிகழ்வு செய்திகள் சற்று வித்தியாசமாக வரலாம். சரி பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ள சுமந்திரன் தலைமையிலான செயற்பாடுகளை கண்டறிய வேண்டும். சுமந்திரன் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் பிரித்தானியாவிற்கு இரகசியமாக சென்று இந்த வரைவை தயாரிப்பதில் பணியாற்றினார்.
பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சார்பான ஒரு வரைவை உருவாக்குவதற்கான முயற்சியை நிராகரித்து தமிழ் அரசுக் கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை விலத்தி வைத்திருந்து தீர்மானத்தின் இறுதி வடிவங்களை வரைந்திருந்த சூழலில் அவர் அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற வேண்டும் என்ற கருத்துக்களையும் கூறி பச்சைக் கொடி காட்டுகின்றார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர் தன்னுடைய செல்வாக்கை கட்சிக்குள் பயன்படுத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புகளுடைய செல்வாக்கை தன்னுடைய தோல்வி அடைந்த போக்குக்கு பயன்படுத்துகின்ற அவல நிலையை நாங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

சுத்துமாத்து சுமந்திரன் என்றுமே….. தமிழ் இனம் சார்ந்தோ, தமிழரசு கட்சி சார்ந்தோ…. கொள்கை அளவில், பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்காக நல்ல முடிவு எடுக்கும் மனிதன் கிடையாது. செய்வது முழுக்க “பின்கதவு சுத்துமாத்து” வேலைகள்தான்.

கடந்த காலங்களில் கூட…. ஜனாதிபதிகளாக இருந்த மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் போன்றவர்களை…. தமிழரசு கட்சிக்கும், சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல், இரகசியமாக பின் கதவால் சென்று சந்தித்து விட்டு வந்து, அதனைப் பற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் “அமுசடக்கி திருடன்” போல் இருப்பது அவரின் வழமையான செயல். ஜனாதிபதிகளை பின்கதவால் சந்தித்த செய்திகள் பத்திரிகைகளில் கசிந்த பின்பு…. தான், இவர் அங்கு சென்று இரகசிய சந்திப்பு நடத்தியது வெளியே தெரிய வரும்.

அதே போன்று தான்… வெளி நாட்டு தூதுவர்களையும் கட்சி சார்பாக அல்லாமல், தனியாக சென்று சந்தித்து…. சந்திப்பில் என்ன விடயமாக பேசப் பட்டது என்பது குறித்தும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் “இருட்டுக்குள், திருட்டு பேரம்” பேசுவதை வழமையாக கொண்ட கீழ்த்தரமான நடத்தை கொண்ட தமிழ் மக்களுக்கு எள்ளளவும் பிரயோசனமற்ற ஆபத்தை விளைவிக்கும் கேடு கெட்ட மனிதன்தான் சுமந்திரன்.

சுமந்திரன்…. காலம் காலமாக செய்து வரும், இந்தத் திருட்டுத்தனமான இரகசிய சந்திப்புக்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையோ, அல்லது ஏதாவது ஒரு முன்னேற்றமோ கிடைத்ததா என்றால்… எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை நிலை.

“தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து…. தங்களது வயிற்றை வளர்க்கும்” இந்தச் செயல் உடனடியாக, அடியோடு நிறுத்தப் பட வேண்டும்.

வர இருக்கும் ஜெனீவா தீர்மானம் சம்பந்தமாக…. சுமந்திரன், பிரித்தானியாவுக்கு இரகசியமாக சென்று தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் வேலைகளை செய்யக் கூடிய ஆள்தான் சுமந்திரன்.

சுமந்திரன், கடந்த காலங்களில் கூட… ஐக்கிய நாடுகள் சபையில், போர்க்குற்ற விசாரணகளுக்கு வெளிநாட்டு விசாரணை தேவை இல்லை, உள்ளக விசாரணையே போதும் என்றும் சொல்லி ஶ்ரீலங்கா சிங்களவருக்கு முட்டுக் கொடுத்து விட்டு வந்த, “தற்குறி”தான் சுமந்திரன்.

இப்படிப்பட்ட….. சுமந்திரன் போன்ற நாத்தம் பிடித்த அரசியல்வாதிகளால், தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு, ஆபத்தாக மாறி விட்டது என்பதே கசப்பான உண்மை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.