Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

09 Nov, 2025 | 10:56 PM

image

(இராஜதுரை ஹஷான்)

மத்தியக் கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளார்கள். போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த  விஜேபால தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்ற முழு நாடும் ஒன்றாக செயற்திட்ட கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

போதைப்பொருள் ஒழிப்புக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். சமூக கட்டமைப்பில் இருந்து போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வலையமைப்பை இல்லாதொழிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மத்தியக் கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

போதைப்பொருளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அரசியல் தரப்பினர் கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்கள் ஒன்றுக்கொண்டு தொடர்புப்பட்டுள்ளது. ஆகவே போதைப்பொருள் வர்த்தக வர்த்தக வலையமைப்பை இல்லாதொழித்தால் பாதாளக் குழுக்களை கட்டுப்படுத்தலாம்.

முழு நாடும் ஒன்றாக செயற்திட்டம் எதிர்கால இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டது. நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் இந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்படும். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/229942

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவில் இடம் பெறும்... போதைப் பொருள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்றவற்றின் சூத்திரதாரிகள் மத்திய கிழக்கில் இருப்பதாக பல்வேறு தரவுகள் மூலம் அறிய முடிகின்றது.

ஆதலால்... அரசின் கடுமையான நடவடிக்கைகளை அடுத்து... இவர்கள் சரண் அடைய முன் வந்திருப்பது நல்ல ஒரு ஆரம்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்காவில் இடம் பெறும்... போதைப் பொருள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்றவற்றின் சூத்திரதாரிகள் மத்திய கிழக்கில் இருப்பதாக பல்வேறு தரவுகள் மூலம் அறிய முடிகின்றது.

ஆதலால்... அரசின் கடுமையான நடவடிக்கைகளை அடுத்து... இவர்கள் சரண் அடைய முன் வந்திருப்பது நல்ல ஒரு ஆரம்பம்.

அவுஸ்திரேலியாவிலும் பல முக்கிய தாதாக்கள் துபாய், துருக்கி, லெபனான், தாய்லாந்து போன்ற நாடுகளிலே ஒளித்திருந்து கொண்டு நடவடிக்கைகளை இயக்குகிறார்கள். இப்படியான ஒரு தாதா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட தகவலின் அடிப்படையில் அவுஸ் போலீஸ் இங்கிருந்து துருக்கி போய் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Thumpalayan said:

அவுஸ்திரேலியாவிலும் பல முக்கிய தாதாக்கள் துபாய், துருக்கி, லெபனான், தாய்லாந்து போன்ற நாடுகளிலே ஒளித்திருந்து கொண்டு நடவடிக்கைகளை இயக்குகிறார்கள். இப்படியான ஒரு தாதா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட தகவலின் அடிப்படையில் அவுஸ் போலீஸ் இங்கிருந்து துருக்கி போய் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.

பெரும்பாலானவர்கள் துபாய், தாய்லாந்து போன்ற நாடுகளை தேர்ந்து எடுத்து அங்கு தலைமறைவாக வாழ்ந்து கொண்டு பெரும் குற்றங்களை மற்றைய நாடுகளில் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும்.

மேற்கூறிய நாடுகளின் காவல்துறைகள், கண்காணிப்புகள் போன்றவை பலவீனமான நிலையில் இருக்கின்றதா.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2025 at 17:31, தமிழ் சிறி said:

பெரும்பாலானவர்கள் துபாய், தாய்லாந்து போன்ற நாடுகளை தேர்ந்து எடுத்து அங்கு தலைமறைவாக வாழ்ந்து கொண்டு பெரும் குற்றங்களை மற்றைய நாடுகளில் செய்வதன் காரணம் என்னவாக இருக்கும்.

மேற்கூறிய நாடுகளின் காவல்துறைகள், கண்காணிப்புகள் போன்றவை பலவீனமான நிலையில் இருக்கின்றதா.

துபாய், துருக்கி, தாய்லாந்து - இந்த நாடுகள் தங்கள் நாட்டில் குற்றம் நடக்காமல் வேறு நாடுகளில் நடந்தால் கண்டும் காணாமல் விடுவார்கள், அதோட இந்த நாடுகளில் ஆள்மாறாட்டம் செய்து வேற பெயர்களில் கள்ள கடவுசீட்டு முதல் ஆவணங்களை எடுப்பது இலகு. இப்படியான தாதாக்கள் பெரும்தொகை கறுப்பு பணத்தை இந்த நாடுகளில் முதலிடுகிறார்கள், செலவளிக்கிறார்கள். சில நாடுகள் விட்டுப்பிடிப்பார்கள். ஹக்கான் அய்க் என்பவரை தேடிப்பாருங்கள். துருக்கியிலே பல மில்லியன்கள் முதலீட்டு பல சொகுசு கார்களை வாங்குமட்டும் விட்டு வைத்திருந்தார்கள். அவுஸ் ஆளை மடக்கித் தூக்கினவுடன் அனைத்தும் துருக்கி அரசுடைமையாகிவிட்டது.

அவுசிலேயே போலீசில் இருந்து நீதிபதிகள் வரை (பலர் கொடுத்த தீர்ப்புகள் அடிப்படையில்) வாங்குபவர்கள் மற்ற நாடுகளில் இதைவிட அதிகமாக செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2025 at 01:04, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்காவில் இடம் பெறும்... போதைப் பொருள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்றவற்றின் சூத்திரதாரிகள் மத்திய கிழக்கில் இருப்பதாக பல்வேறு தரவுகள் மூலம் அறிய முடிகின்றது.

ஆதலால்... அரசின் கடுமையான நடவடிக்கைகளை அடுத்து... இவர்கள் சரண் அடைய முன் வந்திருப்பது நல்ல ஒரு ஆரம்பம்.

போதையுடனேயே போக்காட்டி விடுவினம் ...இந்த நாலு வருசத்தை.... அனுர அரசு

Edited by alvayan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.