Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

13 Nov, 2025 | 08:29 PM

image

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக்கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை , கொம்மாந்துறை பகுதியை சேர்ந்த நிரெக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொமாந்துறையில் உள்ள தோட்ட கிணற்றினுள் ஆளுக்கு ஒவ்வொரு கயிறு கட்டி இறங்கி ஐந்து பேர் நீராடியுள்ளனர். 

சில மணி நேரத்தில் நான்கு பேர் நீராடியது போது வீடு செல்வோம் என புறப்பட்ட போது , ஒருவர் மாத்திரம் நீங்கள் செல்லுங்கள் நான் இன்னும் சற்று நேரம் நீராடி விட்டு வருவதாக கூறி தொடர்ந்து கிணற்றினுள் நீராடி இருக்கிறார் 

ஏனைய நால்வரும் வீடு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் மற்றையவர் வராததால் , கிணற்றடிக்கு சென்ற போது , அவர் கட்டியிருந்த கயிறு அறுந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து கிணற்றினுள் தேடிய போது , கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். 

பின்னர் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் , நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் , அவற்றில் நீராடுதலை தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/230285

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

சில மணி நேரத்தில் நான்கு பேர் நீராடியது போது வீடு செல்வோம் என புறப்பட்ட போது , ஒருவர் மாத்திரம் நீங்கள் செல்லுங்கள் நான் இன்னும் சற்று நேரம் நீராடி விட்டு வருவதாக கூறி தொடர்ந்து கிணற்றினுள் நீராடி இருக்கிறார் 

ஏனைய நால்வரும் வீடு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் மற்றையவர் வராததால் , கிணற்றடிக்கு சென்ற போது , அவர் கட்டியிருந்த கயிறு அறுந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து கிணற்றினுள் தேடிய போது , கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். 

இந்த நாலுபேரையும் பிடிச்சு உழக்கினால் உண்மை தானா வரும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

இந்த நாலுபேரையும் பிடிச்சு உழக்கினால் உண்மை தானா வரும்!

நீங்கள் இந்த கோணத்தில் யோசிக்கின்றீர்கள். கிணறுகளை பார்த்தனான் கயிறு கட்டி இறங்கி குளக்கும் ஆசை ஒன்றும் வர வில்லை பயம் தான் வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களாக இருந்த காலங்களில் ஊரில் குளிக்கக் கூடிய குளங்கள் இருந்ததால் நண்பர்களோடு போய் குளிப்போம்.

இந்தக் குளங்களில் நான்கு பக்கமும் கிணறு மாதிரி கொங்கிறீற்ரால் கட்டப்பட்ட துருசு என்று சொல்லப்படும் இடம் உள்ளது.

எவருக்குமே நீச்சல் தெரியாது.

ஆனாலும் ஒல்லித் தேங்காயின் உதவியுடன் எல்லோரும் இறங்கி நீந்துவோம்.

தற்செயலாக ஒல்லித் தேங்காய் அறுந்தால் தாழ வேண்டியது தான்.

ஒருபக்கத்து சுவர்மட்டும் பதிவாக இருக்கும்.

மற்றைய மூன்று பக்கங்களும் உயரமாகவே இருக்கும்.

அந்த நேரங்களில் கற்றுக் கொண்ட நீச்சலே இப்போதும் கை கொடுக்கிறது.

இதே குளங்களில் எமது வயதானவர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கீரிமலை என்ற பீச்சில் கடலலுடன் சேர்ந்து ஒரு குளம் கட்டபட்டுள்ளது உள்ளது அது நல்லம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.