Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Digital Desk 1

17 Nov, 2025 | 08:08 AM

image

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) மாலை நிறுவப்பட்ட புத்தர் சிலை பெரும் பதற்றத்துக்கு மத்தியில், நேற்றிரவே அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

குறித்த புத்தர்சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவிற்கமைய இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், பேஸ்புக் பதிவில் குறித்த காணொளியை வெளியிட்டு, அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு குறித்த சிலை அகற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

திருகோணமலை பகுதியில் எந்த வித அனுமதிகளும் இன்றி புதிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்படுவதாக தகவல் வெளியாகியது.

நேற்று காலை திருகோணமலை கடற்கரைக்கு வந்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினர்.

கடலோர பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளனர்.

மக்கள் சட்டம் நடைமுறைக்கு வரும் என நம்புகின்றனர். எனினும், அங்கிருந்து கிடைக்கப்பெற்ற வீடியோ பதிவுகள், ஒரு பொலிஸ் அதிகாரி போல தோன்றும் ஒருவர், சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதிலாக பிக்குவிடம் பணிகளை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டதை காட்டுகிறது.

ஆனால் நேற்று இரவு 8 மணி வரை கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தன.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம், பொலிஸார் தங்கள் கடமையை செய்யாததை பற்றி நான் நேற்று இரவு தெரிவித்தேன். யாரும் சட்டத்திற்கு மேலானவரல்ல என்று கூறும் ஜேவிபியின் வாக்குறுதி, பௌத்த பிக்குகள் தொடர்பாக வரும்போது செயல்படுத்தப்படாததாகத் தோன்றுகிறது என்றும் கூறினேன்.

இதனை தொடர்ந்து சிலை அகற்றப்பட்டுள்ளது, மேலும் சட்டவிரோதமாக நடைபெறும் கட்டுமானமும் அகற்றப்படும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில் அரசு செயற்படுவதையொட்டி அவர் அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்றையதினம் (17) காலை திருகோணமலை மாநகரசபை உறுப்பினர்களை நகரசபையில் ஒன்று கூடுமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடவும் அவர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp_Image_2025-11-17_at_07.14.01.jp

WhatsApp_Image_2025-11-17_at_07.14.27.jp

https://www.virakesari.lk/article/230534

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அகற்றப்பட்டது - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Published By: Digital Desk 1

17 Nov, 2025 | 11:25 AM

image

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (17) விளக்கமளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று அந்த புத்தர் சிலையை குறித்த விகாரையில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளோம். அத்தோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கடை ஒன்று தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படியே செயற்பட வேண்டியுள்ளது. இந்த காணி தொடர்பிலான பிரச்சினையை நீதிமன்றத்திலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு காரணங்களை சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கு பின்னர் திருகோணமலையில் எந்த பிரச்சினையும் நடப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/230548

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

புத்தர் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அகற்றப்பட்டது - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Published By: Digital Desk 1

17 Nov, 2025 | 11:25 AM

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர்சிலை பாதுகாப்பு காரணங்களுக்காகவே, அகற்றப்பட்டதாகவும், இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் மீண்டும் வைக்கப்படும் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.

No photo description available.

.

அனுரவுக்கு சேர்ட்டிபிக்கட் கொடுத்த நம்ம சிவப்பு செம்மல்கள் எங்கை போயிட்டினம் ...கனடாவில் கதறல் அதிகம் ...முகப்புத்தகம் பார்க்க முடியவில்லை..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தனது இடத்தை வந்தடைந்த புத்த பெருமான்.

காணொளி: 👉 https://www.facebook.com/reel/1161565916114299 👈

----------------------------------------------------------

நேற்று (16) பாதுகாப்பின் நிமிர்த்தமாக கொண்டு செல்லப்பட்ட கூறப்பட்ட புத்தர் சிலை மீண்டும் இன்று (17) மதியம் அதே இடத்தில் நிறுவப்பட்டது.

15.11.2025 - இரவு குறித்த பகுதியில் கட்டுமானப் பொருட்கள் இரவோடு இரவாக இறக்கப்பட்டு பெயர்ப்பலகையும் நடப்பட்டது.

16.11.2025 - காலை புத்தர் சிலை வைப்பதற்கான வேலைகளும் கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன.

கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

கட்டுமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்தும் கட்டுமானம் இடம்பெற்றது.

இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டது.

நள்ளிரவு புத்தர் சிலை அகற்றப்பட்டது (பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்டது)

பலரினால் பலருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

பலரினால் உரிமை கோரப்பட்டன.

17.11.2025 - பாராளுமன்றில் புத்தர் சிலை தொடர்பான விவாதங்கள் இடம்பெற்றன.

மீண்டும் புத்தர் சிலை வைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் உறுதி வழங்கப்பட்டது.

12 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கூட்டம் இடம்பெற்றது.

மதியம் மீண்டும் பொலிஸாரினால் குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது.

ஜசிந்தன் அருண் அடங்காதமிழன் 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

அனுரவுக்கு சேர்ட்டிபிக்கட் கொடுத்த நம்ம சிவப்பு செம்மல்கள் எங்கை போயிட்டினம் ...கனடாவில் கதறல் அதிகம் ...முகப்புத்தகம் பார்க்க முடியவில்லை..

தூக்கின காவடி இறங்க முன்னம் புத்தர் திரும்பி வந்திட்டார்😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, alvayan said:

அனுரவுக்கு சேர்ட்டிபிக்கட் கொடுத்த நம்ம சிவப்பு செம்மல்கள் எங்கை போயிட்டினம் ...கனடாவில் கதறல் அதிகம் ...முகப்புத்தகம் பார்க்க முடியவில்லை..

அனுரவிற்கு கோத்தபாய துண்டைக் காணோம் துணியையை காணோம் என ஓடிய ஞாபகம் வந்திருக்கலாம்.

அந்த நேரம் ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் குப்பன் சுப்பன்கள் சன்லைட் சவுக்காரம் போட்டு குளிச்சது ஞாபகத்துக்கு வந்திருக்கலாம்.

👉அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கோத்பாயவின் கோமணம் கட்டித்தொங்க விடப்பட்டது ஞாபகத்திற்கு வந்திருக்கலாம்.👈

பிஎச்டபிள்யூ பண்டாரநாயக்க சுட்டுக்கொல்லப்பட்டது ஞாபகத்துக்கு வந்திருக்கலாம்.

கிறிஸ்தவ ஜேஆர் புத்தர் சிலையை தூக்கிக்கொண்டு ஊர்வலம் போனது ஞாபகத்துக்கு வந்திருக்கலாம்.

அதே அரசியலை செய்யும் கிறிஸ்தவ ரணில் விக்கிரமசிங்கவை பார்த்து மிரண்டிருக்கலாம்.

யார் கண்டார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தூக்கின காவடி இறங்க முன்னம் புத்தர் திரும்பி வந்திட்டார்😂

புத்தரை கொண்டுபோய் ..திருப்ப இறக்கினதில் அனுர கோஸ்டியின் சூட்ட்சுமமும் இருக்கலாம் ..21ம் திகதி கூடும் பிக்குமாருக்கு ...ஒரு ஆணி அடித்தமாதிரி ...நாம உங்களோடைதான் என்பது போலவும்

அடுத்தது நம்ம நாமல்தம்பியும் ....தமிழரின் நகை வித்து எடுத்த காசிலை ..4 பிக்கருக்கு விசுக்க ..அவையும் அந்த பிளாஸ்டிக்கு புத்தரை கொண்டுவந்து வைத்து குழப்பம் ஏற்படுத்தி...பிக்குமாரை திசை திருப்பி..21க்கு கொண்டுபோக முயற்சித்திருக்கல்லாம்

மாவீரர் நாளுக்குநாளிருக்கு ...நாமல் தம்பி ..அதுக்கும் ஏதாவது ஜொள்ளுவிட்டு ...ஆள்சேர்க்கல்லாம்..

சஜீத்து அண்ணையும் பாளிமெண்டிலை ...கொட்டு கொட்டென்று கொட்டிப்போட்டு போட்டார்...நம்ம ஆளூ

லேசான ஆள்கிடையாது..10 ஆயிரம்..புத்த கோவிலுக்கு அத்திபாரம் போட்ட ஆள்..அதோடை தொல்பொருள் திணைக்கள ம் ..தொடங்கி ..காணீ பிடித்த ஆள்...மொத்தத்தில் அனுரவுக்கு வருசக்கடைசிப் பலன்..சரியில்லைப்போல

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.