Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடா- பிரம்டன் நகரசபை  தமிழீழத் தேசியக் கொடியை அங்கீகரித்துள்ளது.

பிரம்டன் நகரில் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் முற்றம் போன்ற தாயக சார்ப்பு நகர்வுகள் இடம்பெற்ற நிலையில் இந்த புதிய முன்னெடுப்பு வந்துள்ளது.

இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில் நாளை நவம்பர் 21 ஆம் திகதி காலை 9.30 க்கு பிரெம்ரன் நகரமுதல்வர் பற்றிக் பிறவுண் (Patrick Brown) தலைமையில் கென் வலன்ஸ் சதுக்கத்தில் (Ken Whillans Square) உள்ள கொடிக்கம்ப முற்றத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்படும் என பிரம்டன் நகர சபை அறிவித்துள்ளது.

பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவு கப்பல் : தீவிர கண்காணிப்பில் பிரிட்டிஷ் கடற்படை

தமிழீழத் தேசியக் கொடி

முன்னதாக தமிழீழத் தேசியக் கொடி நாளை அங்கீகரித்து பிரம்டன் நகர சபை சுற்றுநிருபம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தமிழீழத் தேசியக்கொடியை அங்கீகரித்த கனடா- பிரம்டன் நகரசபை! | Recognition Of Tamil Eelam National Flag In Canada

தமது விடாமுயற்சி மற்றும் முன்னகர்வுகளால் தமிழீழத் தேசியக் கொடி நாளுக்குரிய இந்த அங்கீகாரம் கிட்டியதாக உலகத் தமிழர் உரிமைக் குரல் என்ற கனேடிய புலம்பெயர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள்

கனடாவில் இருந்து வெளியேறிச் செல்லும் மக்கள்

GalleryGalleryGalleryGalleryGallery


https://tamilwin.com/article/recognition-of-tamil-eelam-national-flag-in-canada-1763634312

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியை அங்கீகரித்தது பிரம்டன்

Published By: Priyatharshan

21 Nov, 2025 | 11:36 AM

image

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்துள்ளது. இதற்கான பிரகடனத்தை பிரம்டன் மாநகர மேயர் பற்றிக் பிரவுண் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்கான சான்றுப் பத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேயர் பற்றிக் பிரவுண் அங்கீரித்து வழங்கியுள்ள அறிவிப்பில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் புலிக்கொடி தினத்தை நினைவுகூருகின்றனர்.

இந்த நாள் ஈழத்தமிழ் தேசத்தின்கூட்டு அடையாளத்தையும் 1930 களில் இருந்து தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான அவர்களின் தொடர்ச்சியான எதிர்பார்ப்பையும் குறிக்கின்றது.

உலகளாவிய தமிழர் உரிமைகளின் குரல் என்பது தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிக்காக வாதிடுவதற்கும், தமிழ் வரலாற்றைப் பாதுகாப்பதற்கும், காப்பகப்படுத்துவதற்கும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவதற்குமானதொரு அமைப்பாகும்.

இந்நாளில், புலிக்கொடி சம்பிரதாயமாக ஏற்றப்படுவதோடு இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை மதிக்கும் வகையில் தொடர்ச்சியான நிகழ்வுகள் மற்றும் பட்டறைகள் நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் தமிழ் வரலாறு கலாசாரம் அடையாளம் குறித்த உரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கொடி தினத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுதல் மற்றும் ஈழத்தமிழர்கள், பிரம்டன் குடியிருப்பாளர்கள், பரந்த சமூகத்தினரிடையே பகிரப்பட்ட புரிதல், ஒற்றுமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

587029395_1173124481673309_1125301439188

585522203_811447061688831_63759621685830

https://www.virakesari.lk/article/230990

  • கருத்துக்கள உறவுகள்

சில நாடுகளில் இல்லாத புலிகளுக்கு தடை அறிவிக்கிறார்கள். இப்போ, கனடாத்தூதுவருக்கு கஸ்ர காலம். பக்கத்துவீட்டு சகுனிக்கு வயிறு எரியப்போகிறதே. தான் செய்ய மறுத்ததை, இல்லாமற் செய்ததை கனடா செய்து விட்டது என்கிற கடுப்பு அதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

1978 ல் அமெரிக்க மாநிலமான மசாசூசெற் தமிழீழ பிரகடனம் செய்திதை அன்று கொண்டாடினோம். அந்த பிரகடனம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுக்கு உதவியதா? தமிழர் பேரழிவை தடுக்க உதவியதா?large.IMG_6133.jpeglarge.IMG_6134.jpeg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

1978 ல் அமெரிக்க மாநிலமான மசாசூசெற் தமிழீழ பிரகடனம் செய்திதை அன்று கொண்டாடினோம். அந்த பிரகடனம் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுக்கு உதவியதா? தமிழர் பேரழிவை தடுக்க உதவியதா?large.IMG_6133.jpeglarge.IMG_6134.jpeg

இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதே ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதே ?

வித்தியாசம் உள்ளது தான். அது, அன்று வாழ்ந்த மக்களை ஏமாற்ற நன்றாகப் பயன்பட்டது.

இது, அன்றைய தீர்மானத்தை நம்பியதால் நாய்படா பாடு பட்டு பட்டுத் தெளிந்த, இன்று வாழும் மக்களையும் ஏமாற்ற முயற்சி செய்கிறது.

ஒற்றுமை, இரண்டாலும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

வித்தியாசம் உள்ளது தான். அது, அன்று வாழ்ந்த மக்களை ஏமாற்ற நன்றாகப் பயன்பட்டது.

இது, அன்றைய தீர்மானத்தை நம்பியதால் நாய்படா பாடு பட்டு பட்டுத் தெளிந்த, இன்று வாழும் மக்களையும் ஏமாற்ற முயற்சி செய்கிறது.

ஒற்றுமை, இரண்டாலும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு சதத்துக்கு பிரயோசனம் இல்லை.

நீங்கள் இப்படிஎழுதுவதாலும் ஏதாவது நன்மை உண்டா...எனாவெ அவனவன் செயல்பாட்டினால் ஏதோ முடிந்தளவு செய்கின்றார்கள் ... நன்மை கிடைக்குதோ இல்லையோ ...எமக்காக உயிர்விட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் பிரதியுபகாரம்

நன்மை செய்வாரென்று தூக்கிபிடித்த அனுரவால் என்ன செய்யமுடிந்தது..திரும்ப புத்தர் சிலயைத்தான் வைக்கமுடிந்தது ....உவ்வளவும் செய்கின்றார் எனத் தூக்கிப்பிடித்த அனுரவுக்கு ..சிங்களவர் செய்தது என்ன ..லட்சக்கணக்கில் கூடி ஆதரவு தெரிவித்துள்ளார்கள் ... இங்கு நாம் என்ன செய்கின்றோ ம் என்றூ செய்வது எல்லாவற்றிர்கும் முட்டையில் மயிர் புடுங்க யோசிக்கின்றோம் ..இந்த சிந்தனை மாறினாலே ஓரளவு நின்மதி கிடைக்கும்...முதலில் தமிழனாக யோசிக்கவேண்டும்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

City of Brampton – Your Local Government  ·

Follow

3h ·

This morning, a community flag raising was held in Ken Whillans Square to recognize Tamil Eelam National Flag Day.

The City of Brampton recognizes November 21 as Tamil Eelam National Flag Day, honouring the collective identity of the Eelam Tamil nation and their ongoing resistance to genocide.

We join Brampton’s Tamil community in recognizing this day and celebrating the many contributions of Tamil residents across our city.

Learn about the City’s flag raising program:

என்னைப் பொறுத்தவரை ...சரி பிழை...தேவை தேவையில்லை ..எனபதை ஆராயவிரும்பவில்லை ...ஆனால் இதனை கனடாவில் நடத்திக் காட்டியிருக்கின்றார்கள் ...அவர்களை பாராட்டலாம்...தேவையா ...தேவையில்லையா என்றும் கருத்து இங்கு வரலாம் ...அதற்கு நான் இங்கு விடைதரமாட்டென் ...அது ஒவ்வொருவர் கருத்தாக இருக்கட்டும் ...என்னை பொறுத்தவரை எதுவும் முயன்றால் முடியாத்தௌ ஒன்றில்லை ...உதாரணம் நாமல் ராஜபக்ச..

May be an image of text

May be an image of one or more people, people dancing and text

May be an image of one or more people and text that says 'O Glabal GlobalTamiRights Tamil Rights etamilnet ce ceCounts1'

May be an image of text

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

நீங்கள் இப்படிஎழுதுவதாலும் ஏதாவது நன்மை உண்டா...எனாவெ அவனவன் செயல்பாட்டினால் ஏதோ முடிந்தளவு செய்கின்றார்கள் ... நன்மை கிடைக்குதோ இல்லையோ ...எமக்காக உயிர்விட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் பிரதியுபகாரம்

நன்மை செய்வாரென்று தூக்கிபிடித்த அனுரவால் என்ன செய்யமுடிந்தது..திரும்ப புத்தர் சிலயைத்தான் வைக்கமுடிந்தது ....உவ்வளவும் செய்கின்றார் எனத் தூக்கிப்பிடித்த அனுரவுக்கு ..சிங்களவர் செய்தது என்ன ..லட்சக்கணக்கில் கூடி ஆதரவு தெரிவித்துள்ளார்கள் ... இங்கு நாம் என்ன செய்கின்றோ ம் என்றூ செய்வது எல்லாவற்றிர்கும் முட்டையில் மயிர் புடுங்க யோசிக்கின்றோம் ..இந்த சிந்தனை மாறினாலே ஓரளவு நின்மதி கிடைக்கும்...முதலில் தமிழனாக யோசிக்கவேண்டும்

உங்களது தனிப்பட்ட சென்றிமென்றுக்கோ குட்டி குட்டி சந்தோசத்துற்கோ நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், இவை போன்ற நிகழ்வுகள் எந்த விதத்திலும் தாயகத்தில் தீர்வுக்கு உதவப்போவதில்லை என்ற விழிப்புணர்வு எமது பட்டறிவில் உள்ளதை நிச்சயம் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். ஏற்கனவே, “தமிழீழம்” என்ற கற்பனை எண்ணக்கருவை நம்பியதால், practical அரசியல் தீர்வுகளை முயற்சிக்காமல் புறக்கணித்ததன் விளைவுகளை தமிழ் மக்கள் அனுபவித்துக்கொட்டிருக்கும் போது, இப்படியானவை தாயக மக்களுக்கு பயன்பாடாது என்ற ஜதார்ததத்தை உரைப்பதால் எவருக்கும் நட்டம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, island said:

உங்களது தனிப்பட்ட சென்றிமென்றுக்கோ குட்டி குட்டி சந்தோசத்துற்கோ நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், இவை போன்ற நிகழ்வுகள் எந்த விதத்திலும் தாயகத்தில் தீர்வுக்கு உதவப்போவதில்லை என்ற விழிப்புணர்வு எமது பட்டறிவில் உள்ளதை நிச்சயம் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். ஏற்கனவே, “தமிழீழம்” என்ற கற்பனை எண்ணக்கருவை நம்பியதால், practical அரசியல் தீர்வுகளை முயற்சிக்காமல் புறக்கணித்ததன் விளைவுகளை தமிழ் மக்கள் அனுபவித்துக்கொட்டிருக்கும் போது, இப்படியானவை தாயக மக்களுக்கு பயன்பாடாது என்ற ஜதார்ததத்தை உரைப்பதால் எவருக்கும் நட்டம் இல்லை.

அரசியல் தீர்வு என்பது முழுமையாய் ஏமாற்று பொருளாய் மாறிய பின் .உங்கள் பார்வையில் எப்படி நடந்து கொண்டு இருந்தால் நல்லது நடந்து கொண்டு இருக்கும் அந்த தீவில் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அரசியல் தீர்வு என்பது முழுமையாய் ஏமாற்று பொருளாய் மாறிய பின் .உங்கள் பார்வையில் எப்படி நடந்து கொண்டு இருந்தால் நல்லது நடந்து கொண்டு இருக்கும் அந்த தீவில் ?

எனது பார்வையில் தமிழருக்கு அதிகபட்ச நன்மை தந்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை உருவாக்குவதற்கான அருமையான இறுதிச் சந்தர்ப்பம் 2002 பேச்சுவார்ததைகள். அதை உதைத்து தள்ளிய பின் இனி செய்யக்கூடியது ஒன்று தான், தமிழரசுக் கட்சியானது எப்படி இனவாதத்தை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளை காண முயலாமல், மக்களுக்கு இனவாத பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி தங்கள் பின் வந்த இரண்டு தலைமுறையை நாசப்படுத்தியதோ அதே போல் நாமும் ஏற்கனவே தோல்வியடைந்த. எமது அணுகுமுறைகளை மாற்றாமல் அதை அப்படியே தொடர்ந்து அதே பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி அடுத்த தலைமுறையையும் நாசப்படுத்தி விட்டு அந்த மகிழ்வுடன் நிம்மதியாக கண்ணை மூடுவது தான்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

உங்களது தனிப்பட்ட சென்றிமென்றுக்கோ குட்டி குட்டி சந்தோசத்துற்கோ நான் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், இவை போன்ற நிகழ்வுகள் எந்த விதத்திலும் தாயகத்தில் தீர்வுக்கு உதவப்போவதில்லை என்ற விழிப்புணர்வு எமது பட்டறிவில் உள்ளதை நிச்சயம் சுட்டிக்காட்டப்படல் வேண்டும். ஏற்கனவே, “தமிழீழம்” என்ற கற்பனை எண்ணக்கருவை நம்பியதால், practical அரசியல் தீர்வுகளை முயற்சிக்காமல் புறக்கணித்ததன் விளைவுகளை தமிழ் மக்கள் அனுபவித்துக்கொட்டிருக்கும் போது, இப்படியானவை தாயக மக்களுக்கு பயன்பாடாது என்ற ஜதார்ததத்தை உரைப்பதால் எவருக்கும் நட்டம் இல்லை.

3 hours ago, island said:

எனது பார்வையில் தமிழருக்கு அதிகபட்ச நன்மை தந்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை உருவாக்குவதற்கான அருமையான இறுதிச் சந்தர்ப்பம் 2002 பேச்சுவார்ததைகள். அதை உதைத்து தள்ளிய பின் இனி செய்யக்கூடியது ஒன்று தான், தமிழரசுக் கட்சியானது எப்படி இனவாதத்தை எதிர்கொண்டு அதற்கான தீர்வுகளை காண முயலாமல், மக்களுக்கு இனவாத பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி தங்கள் பின் வந்த இரண்டு தலைமுறையை நாசப்படுத்தியதோ அதே போல் நாமும் ஏற்கனவே தோல்வியடைந்த. எமது அணுகுமுறைகளை மாற்றாமல் அதை அப்படியே தொடர்ந்து அதே பூச்சாண்டி காட்டி மக்களை உசுப்பேற்றி அடுத்த தலைமுறையையும் நாசப்படுத்தி விட்டு அந்த மகிழ்வுடன் நிம்மதியாக கண்ணை மூடுவது தான்.

அய்யா ..இந்த இரண்டிலும் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் .. அதாவது புலம்பெயர்ந்தவர்கள் ..பொத்திக்கொண்டு இருந்தால் சமாதானம் தன்னுடையபாட்டில் வரும் ...இதையும் நீங்கள் 16 வருசமா எழுதிறியள்..உங்கடை நம்பிக்கைக்குரிய சிங்கள சனாதிபதிகள் .. மகிந்த ,மைத்திரி ,ரணில், கோட்டா ...இப்ப .அனுர ..இவர்களில் யாராவது ஒருதர் ...இனப்பாகுபாட்டை ஒழிக்க ஏதாவது முயற்சி எடுத்தார்களா.... இல்லை ..அப்ப உள்ள உங்கடை சனாதிபதி அனுரவின் ...கடந்த 2 நாள் ...செயல்பாட்டை எடுப்பம் ...தூக்கின புத்த சிலையை ..ஒருநாளில் நவதுவாரங்களை பொத்தியபடி பழையைடத்தில் வைத்துவிட்டு போகிறார்...தையிட்டியில் ..கட்டிடம் கட்டுகிறார்..குருந்தூர் மலையில் காணி பிடிக்கிறார்...மட்டக்கிளப்பு முருகன் கோவிலில் புத்த சிலைவைக்கிறார் ...நாமலின் ஊர்வலத்தில் பட்டவர்த்தனமாக தமிழனை கொல்லுவோம் ..வெட்டுவோம் என்று கோசமிடுகின்றார்கள் ...இதற்கானகாணொலிகள் .. இருந்தும் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா....இப்படி ஆயிரம் என்னால் சொல்லமுடியும் ...நீங்கள் .. இங்கு கருத்திடுவதும் ..அர்ச்சனா பார்லிமெண்டில் சத்தம் போடுவதும் ஒன்று...அதாவது அர்ச்சனா புலிபோல நடித்து ...புலிகளை விற்கிறார் ...நீங்கள் தமிழர் மேல் அனுதாபம் கொள்வதுபோல.. தழருக்கு விடிவு ஏற்படுத்தவோ...அல்லது ..பிரச்சினை பிரச்சாரப் படுத்துவதை ...நரித்தனமாக தடுப்பதுபோல்தான் இருக்கிறது உங்கள் கருத்துக்கள் ... கனடாவில் நினைவுத்தூபி...இப்பகொடி ..இது அவர்களால் முடிந்தது ...அதாவது எமது பிரச்சினைகளை உலகறியச் செய்ய சின்ன உதவி....இதன செய்யாமல்விட்டால் ..நம்மினம் நாட்டில் நின்மதியாக இருக்கும் என்றால் செய்யாமல் விடலாம் ...அதுதான் இல்லையே ...ஏன் அதை செய்யக்கூடாது ..என்பதை இலங்கையில் கடந்த 2 நாளில் நடந்த சம்பவத்துடன் ..விளக்க முடியுமா ...அது முடியாது...நான் ஒரு பத்தி எழுத்தளானோ..பத்திரிகை காரனோ அல்ல ..சாதாரண .. பத்திரிகை படிப்பவன் ...அதிகம் எழுதத் தெரியாதவன் ...இந்த கருத்துக்கு .. உங்களுடன் பல ஜம்பாவான்கள் களத்தில் குதிப்பர் ... என்பது தெரியும் ...என்னுடைய நியாயம் இது.....அவ்வளவுதான்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

முதல் STF ல இருந்தவராம் மஹிந்தவுக்காக உயிரையும் குடுப்பாராம்

@ island ஒரு சின்ன உதாரணம்...நாமலின் நுகேகொட ஊர்வலத்தில்

May be an image of one or more people and text that says 'မှင Shabeer ShabeerMohamed Mohamed FREELANCE FREELANCEJOURNALIST JOURNALIST ΝΑ'

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள்; தமிழீழத் தேசியக்கொடி தின நிகழ்வில் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை

23 Nov, 2025 | 11:54 AM

image

(நா.தனுஜா)

இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாமென பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரம்டன் நகரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலிக்கொடியை அங்கீகரித்திருப்பதுடன் அதற்கான பிரகடனத்தை பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார். அதற்கமைய நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தமிழீழத் தேசியக்கொடி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிரம்டன் நகரில் நடாத்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் உரை நிகழ்த்தியதன் பின்னர்  புலிக்கொடியை ஏற்றிவைத்தார். அவர் தனது உரையில் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:

தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கும், அவர்களது குரல்கள்  நசுக்கப்படுவதற்கும் மத்தியில் பிரம்டன் நகரம் தமிழ் மக்களுடன் உடன்நிற்கின்றது.  தமிழர்கள் அவர்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். துப்பாக்கி முனையில்  நிறுத்தப்பட்டதுடன் பல்வேறு வகையிலும் உயிரச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தனர்.  இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு, நாம் வாழும் காலத்தில்  பதிவான மிகமோசமான மனிதப்பேரவலமாகும்.

ஆனால் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அழிப்பதற்கான  பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு  பின்னணியில் இந்தத் தமிழீழக்கொடி ஏற்றப்படுவதானது தமிழர்களுக்கு எதிரான  இனவழிப்பு தொடர்பான உண்மைகள், அவர்களது கலாசாரம், அடையாளங்கள் என்பன  அழிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்பதைக் காண்பிக்கும்  குறியீடாகும்.

அதேபோன்று உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்துப் பேசப்படுகின்றது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவழிப்பை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியே போதியளவு பேசப்படவேண்டும். இந்த இனவழிப்புக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அதிலிருந்து தப்பிவிடலாம் எனக் கருதினால், அவ்வாறு தப்பிக்க முடியாது என்பதே சர்வதேச சமூகம் கூறுகின்ற பதிலாகும்.

எமது நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக அரசாங்கத்தின் (இலங்கை) அடிவருடிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தகைய செயற்பாடுகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகும். அதுமாத்திரமன்றி இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது. இலங்கையில் இனவழிப்பே இடம்பெறவில்லை .

என்பது போல் சித்தரிப்பதற்கும், வரலாற்றை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்களை ஒடுக்குவதற்கும் விரும்புபவர்கள் கொழும்புக்கே திரும்பிச்சென்றுவிடலாம். அதேவேளை தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம், தமிழின அழிப்பு நினைவுத்தூபி, தமிழீழத் தேசியக்கொடிக்கான அங்கீகாரம் என்பன உள்ளடங்கலாக இவ்விடயத்தில் எட்டப்பட்டிருக்கும் கணிசமாளனவு முன்னேற்றம் வரவேற்கத்தக்கதாகும்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர் விவகாரம் பலரது அவதானத்தைப் பெறும். அத்தோடு வலிமையுடனும், மீண்டெழும் தன்மையுடனும் தொடர்ந்து குரல் எழுப்பும் பிரம்டன் மற்றும் கனேடிய தமிழ் மக்கள் குறித்துப் பெருமையடைவதுடன் நாம் தமிழீழ மக்களுடன் என்றும் உடன்நிற்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/231186

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

அய்யா ..இந்த இரண்டிலும் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் .. அதாவது புலம்பெயர்ந்தவர்கள் ..பொத்திக்கொண்டு இருந்தால் சமாதானம் தன்னுடையபாட்டில் வரும் ...இதையும் நீங்கள் 16 வருசமா எழுதிறியள்..உங்கடை நம்பிக்கைக்குரிய சிங்கள சனாதிபதிகள் .. மகிந்த ,மைத்திரி ,ரணில், கோட்டா ...இப்ப .அனுர ..இவர்களில் யாராவது ஒருதர் ...இனப்பாகுபாட்டை ஒழிக்க ஏதாவது முயற்சி எடுத்தார்களா.... இல்லை ..அப்ப உள்ள உங்கடை சனாதிபதி அனுரவின் ...கடந்த 2 நாள் ...செயல்பாட்டை எடுப்பம் ...தூக்கின புத்த சிலையை ..ஒருநாளில் நவதுவாரங்களை பொத்தியபடி பழையைடத்தில் வைத்துவிட்டு போகிறார்...தையிட்டியில் ..கட்டிடம் கட்டுகிறார்..குருந்தூர் மலையில் காணி பிடிக்கிறார்...மட்டக்கிளப்பு முருகன் கோவிலில் புத்த சிலைவைக்கிறார் ...நாமலின் ஊர்வலத்தில் பட்டவர்த்தனமாக தமிழனை கொல்லுவோம் ..வெட்டுவோம் என்று கோசமிடுகின்றார்கள் ...இதற்கானகாணொலிகள் .. இருந்தும் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா....இப்படி ஆயிரம் என்னால் சொல்லமுடியும் ...நீங்கள் .. இங்கு கருத்திடுவதும் ..அர்ச்சனா பார்லிமெண்டில் சத்தம் போடுவதும் ஒன்று...அதாவது அர்ச்சனா புலிபோல நடித்து ...புலிகளை விற்கிறார் ...நீங்கள் தமிழர் மேல் அனுதாபம் கொள்வதுபோல.. தழருக்கு விடிவு ஏற்படுத்தவோ...அல்லது ..பிரச்சினை பிரச்சாரப் படுத்துவதை ...நரித்தனமாக தடுப்பதுபோல்தான் இருக்கிறது உங்கள் கருத்துக்கள் ... கனடாவில் நினைவுத்தூபி...இப்பகொடி ..இது அவர்களால் முடிந்தது ...அதாவது எமது பிரச்சினைகளை உலகறியச் செய்ய சின்ன உதவி....இதன செய்யாமல்விட்டால் ..நம்மினம் நாட்டில் நின்மதியாக இருக்கும் என்றால் செய்யாமல் விடலாம் ...அதுதான் இல்லையே ...ஏன் அதை செய்யக்கூடாது ..என்பதை இலங்கையில் கடந்த 2 நாளில் நடந்த சம்பவத்துடன் ..விளக்க முடியுமா ...அது முடியாது...நான் ஒரு பத்தி எழுத்தளானோ..பத்திரிகை காரனோ அல்ல ..சாதாரண .. பத்திரிகை படிப்பவன் ...அதிகம் எழுதத் தெரியாதவன் ...இந்த கருத்துக்கு .. உங்களுடன் பல ஜம்பாவான்கள் களத்தில் குதிப்பர் ... என்பது தெரியும் ...என்னுடைய நியாயம் இது.....அவ்வளவுதான்...

5 hours ago, alvayan said:

முதல் STF ல இருந்தவராம் மஹிந்தவுக்காக உயிரையும் குடுப்பாராம்

@ island ஒரு சின்ன உதாரணம்...நாமலின் நுகேகொட ஊர்வலத்தில்

May be an image of one or more people and text that says 'မှင Shabeer ShabeerMohamed Mohamed FREELANCE FREELANCEJOURNALIST JOURNALIST ΝΑ'

அல்வாயன்,

நான் ஏற்கனவே கூறியது தான். அவரவர் தமது மனத்திருப்திக்காக இவ்வாறான விடயங்களை செய்து தமக்குள் மகிழ்ந்திருப்பதற்கு எதிராக நான் கருத்து கூறவில்லை. அது அவரவர் உரிமை. ஆனால், இவை எதுவும் இலங்கையின் இன முரண்பாட்டை தீர்ககவோ தமிழருக்கான ஒரு அரசியல் தீர்வுக்கோ கிஞ்சித்தும் உதவப்போவதில்லை என்பதை உணர்வதற்கு ரொக்கெற் விஞ்ஞானம் படிக்க தேவையில்லை. ஒரு சாமான்ய மனிதனுக்கு உள்ள அறிவு போதுமானது. அமெரிக்காவின் மசாசூசெற் மாநில தமிழீழ பிரகடனம் எப்படி தாயகத்தில் போராட்டத்துக்கு பாதகமான விளைவை தந்ததோ அது போல் தான் இதுவும் என்ற புரிதலுடன் அரசியல் செய்வதே தமிழ் மக்களுக்கு பலன் தரும்.

இனவாதம் என்பது இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் மண்டைக்குள் திணிக்கப்பட்ட ஒன்று . அது உங்களுக்குள் கூட உள்ளது இனவாதத்துக்கு எதிராக பொங்கும் நீங்கள் முஸலீம்களுக்கு எதிராக பல இனவாத பதிவுகளை இங்கேயே செய்துள்ளீர்கள்.

அநுரா மட்டுமல்ல எந்த ஜனாதிபதியாலும் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனவாதத்தை ஒரு mouse click ல் delete பண்ணகூடிய நிலையில் அது இல்லை. அதற்கான செயல்முறை (Process) என்பது நீண்டது. அதன் முன்னேற்றம் என்பது இலங்கையில் வாழும் மக்கள், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் தான் தங்கியுள்ளது.

அதற்கு புலம் பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக செய்ய வேண்டியது வட கிழக்கு எமது மக்களை கல்வி பொருளாதார சமூக ரீதியிலான பலப்படுத்துதலை செய்ய உரிய முதலீடுகளை அங்கு செய்வதும், தம்பட்டம் அடிக்காமல் இலங்கை அரசின் பலவீனங்களை உபயோகித்து அதை செயற்படுத்துவதாகும். இதன் மூலம் தமிழ் மக்கள் இலங்கையில் ஒரு தவிர்கக முடியா சக்தியாக கட்டியெழுப்புவது. இதற்கு இனவாதிகளிடம் இருந்து தடைகள் வந்தால் அதை வைத்து உணர்ச்சி அரசியல் செய்யாமல் அதை தந்திரோபாயரீதியில் வெல்லும் செயற்பாடுகளே இலங்கை என்ற நாட்டிற்குள் தமிழருக்கு பலம் சேர்ககும் ஒரு அரசியல் தீர்வை உருவாக்க மெதுவாக வென்னும் உந்திதித்தள்ளும். ஏற்கனவே தமிழ் மொழிப்பயன்பாடு முன்னரை விட இலங்கையில் மேலோங்கி வருவதை அங்கு சென்று வந்தவர்கள் உணர்ந்திருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை தமிழர் பிரச்சனையை தீர்க அரும்பாடுபட்ட இலங்கை அரசுகள்

தமிழர்களின் தேசிய கொடியை கனடாவில் ஏற்றியவுடன் கவலையில் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

அல்வாயன்,

நான் ஏற்கனவே கூறியது தான். அவரவர் தமது மனத்திருப்திக்காக இவ்வாறான விடயங்களை செய்து தமக்குள் மகிழ்ந்திருப்பதற்கு எதிராக நான் கருத்து கூறவில்லை. அது அவரவர் உரிமை. ஆனால், இவை எதுவும் இலங்கையின் இன முரண்பாட்டை தீர்ககவோ தமிழருக்கான ஒரு அரசியல் தீர்வுக்கோ கிஞ்சித்தும் உதவப்போவதில்லை என்பதை உணர்வதற்கு ரொக்கெற் விஞ்ஞானம் படிக்க தேவையில்லை. ஒரு சாமான்ய மனிதனுக்கு உள்ள அறிவு போதுமானது. அமெரிக்காவின் மசாசூசெற் மாநில தமிழீழ பிரகடனம் எப்படி தாயகத்தில் போராட்டத்துக்கு பாதகமான விளைவை தந்ததோ அது போல் தான் இதுவும் என்ற புரிதலுடன் அரசியல் செய்வதே தமிழ் மக்களுக்கு பலன் தரும்.

இனவாதம் என்பது இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் மண்டைக்குள் திணிக்கப்பட்ட ஒன்று . அது உங்களுக்குள் கூட உள்ளது இனவாதத்துக்கு எதிராக பொங்கும் நீங்கள் முஸலீம்களுக்கு எதிராக பல இனவாத பதிவுகளை இங்கேயே செய்துள்ளீர்கள்.

அநுரா மட்டுமல்ல எந்த ஜனாதிபதியாலும் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனவாதத்தை ஒரு mouse click ல் delete பண்ணகூடிய நிலையில் அது இல்லை. அதற்கான செயல்முறை (Process) என்பது நீண்டது. அதன் முன்னேற்றம் என்பது இலங்கையில் வாழும் மக்கள், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் தான் தங்கியுள்ளது.

அதற்கு புலம் பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக செய்ய வேண்டியது வட கிழக்கு எமது மக்களை கல்வி பொருளாதார சமூக ரீதியிலான பலப்படுத்துதலை செய்ய உரிய முதலீடுகளை அங்கு செய்வதும், தம்பட்டம் அடிக்காமல் இலங்கை அரசின் பலவீனங்களை உபயோகித்து அதை செயற்படுத்துவதாகும். இதன் மூலம் தமிழ் மக்கள் இலங்கையில் ஒரு தவிர்கக முடியா சக்தியாக கட்டியெழுப்புவது. இதற்கு இனவாதிகளிடம் இருந்து தடைகள் வந்தால் அதை வைத்து உணர்ச்சி அரசியல் செய்யாமல் அதை தந்திரோபாயரீதியில் வெல்லும் செயற்பாடுகளே இலங்கை என்ற நாட்டிற்குள் தமிழருக்கு பலம் சேர்ககும் ஒரு அரசியல் தீர்வை உருவாக்க மெதுவாக வென்னும் உந்திதித்தள்ளும். ஏற்கனவே தமிழ் மொழிப்பயன்பாடு முன்னரை விட இலங்கையில் மேலோங்கி வருவதை அங்கு சென்று வந்தவர்கள் உணர்ந்திருப்பர்.

5 hours ago, island said:

. ஆனால், இவை எதுவும் இலங்கையின் இன முரண்பாட்டை தீர்ககவோ தமிழருக்கான ஒரு அரசியல் தீர்வுக்கோ கிஞ்சித்தும் உதவப்போவதில்லை என்பதை உணர்வதற்கு ரொக்கெற் விஞ்ஞானம் படிக்க தேவையில்லை. ஒரு சாமான்ய மனிதனுக்கு உள்ள அறிவு போதுமானது. அமெரிக்காவின் மசாசூசெற் மாநில தமிழீழ பிரகடனம் எப்படி தாயகத்தில் போராட்டத்துக்கு பாதகமான விளைவை தந்ததோ அது போல் தான் இதுவும் என்ற புரிதலுடன் அரசியல் செய்வதே தமிழ் மக்களுக்கு பலன் தரும்.

ரொக்கட் விஞ்ஞானம் படித்தவன் ..செவ்வாய் கிரகத்துக்கே போய்விட்டான் ...செல்வநாயகம் காலத்தில் இருந்து ..அமைதிவழி காத்த நம் தமிழினத்தை ..அழித்த சிங்களவன் ...இப்ப 80 வீதம்வரை அழித்திருக்கின்றான் ...இதனை சாதாரண பத்திரிகை படிப்பவனே அறிவான் ...இதை விளங்கப் படுத்த ரொக்கட் ..புத்தகம் நீங்கள் படித்திருக்கத் ..தேவையில்லை ..நடைமுறையில் உள்ளதை பார்த்தாலே விளங்கும்..

அமெரிக்க தமிழீழிழப் பிரகடனம்தான் ..காரணம் என்பதை என்ன ஆதாரத்துடன் கூறுகின்றீர்கள்.. சிங்களவனின் அடிப்படைக் குணம் அறியாது கதைப்பது நகைப்புக்கிடம் ...அவர்களிடம் மதி மயங்கிக் கிடப்பவர்களுக்கு ...தமிழன் என்ன செய்தாலும் பிழையாகத்தான் இருக்கும்...நீங்கள் உட்பட..உங்கடை புரிதல் என்பதன் அர்த்தம் ...இப்ப 60 வருடகாலமாக .....கழுவி அரசியல் ..செய்தவையிடம்...கேட்டால் விளங்கப் படுத்துவினமே....ஏன் அதன நீங்கள் செய்யவில்லை ...இந்த கொடியேற்றலும் ..கொடித்தினமும்... அழிந்து கொண்டிருக்கும் ...எம் இனத்தின் இனவழிப்பை உலகின் ஒருபகுதியினருக்காவது ..உணர்த்த எடுக்கப்பட்ட முயற்சி ...இதனை செய்யாவிட்டால் சிங்களவன் .. தங்கத் தாம்பாளத்தில் வைத்து ..எமது உரிமையை தருவானென்பது ...உங்களைப்போல சிலரின் நப்பாசை ....

5 hours ago,island said:

அநுரா மட்டுமல்ல எந்த ஜனாதிபதியாலும் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனவாதத்தை ஒரு mouse click ல் delete பண்ணகூடிய நிலையில் அது இல்லை. அதற்கான செயல்முறை (Process) என்பது நீண்டது. அதன் முன்னேற்றம் என்பது இலங்கையில் வாழும் மக்கள், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் தான் தங்கியுள்ளது.

இது விளங்கினால் சரி ...எவ்வளவுகாலம் ...இப்பவே ஒவ்வொருநாளூம் ...இனப்பரம்பலை மடை மாற்றும் நிகழ்வு நடக்கிறது ... இன்னும் ஒரு 20 வருசம்...மிச்சம் ...அப்புரம் நீங்கள் விரும்பியவருடன் கொண்டாட்டமாக இருக்கலாம்....ஏனெனில் தழினமே இருக்காது..அதுவும் அனுர அரசில் இன்னும் வேகமாகும் ..

5 hours ago,island said:

இனவாதம் என்பது இலங்கையில் நீண்டகாலமாக மக்கள் மண்டைக்குள் திணிக்கப்பட்ட ஒன்று . அது உங்களுக்குள் கூட உள்ளது இனவாதத்துக்கு எதிராக பொங்கும் நீங்கள் முஸலீம்களுக்கு எதிராக பல இனவாத பதிவுகளை இங்கேயே செய்துள்ளீர்கள்.

கனடாவில் ..டொரொன்டோவில் பலஸ்தீனகொடி ஏற்றப்பட்டது...பிரம்டனில் ..தமிழ்ழீழக்கொடி எற்றப்பட்டது... .முதலாவதை முசுலீமும் ..சிங்களவனும் வரவேற்கினம் ...இரண்டாவதை ஏன் எதிற்பான் ...இரண்டிலும் நடந்தது இனஅழிப்பே ... இந்த இடத்தில் முசுலிம் செய்கின்ற அட்டகாசங்களை ...தட்டிக்கேட்பது உங்களைப்போன்றவர்களுக்கு ...அது இனவாதக் கருத்தாகவே தெரியும் ...ஏனெனில் இலங்கை முசுலிம்கள் எம்மை அழித்து ..தம்மை நிலைநாட்ட துணியும் ஒரு இனம் என்பது ...நடுநிலையளன் என்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு விளங்காதுதானே..

5 hours ago,island said:

இதற்கு இனவாதிகளிடம் இருந்து தடைகள் வந்தால் அதை வைத்து உணர்ச்சி அரசியல் செய்யாமல் அதை தந்திரோபாயரீதியில் வெல்லும் செயற்பாடுகளே இலங்கை என்ற நாட்டிற்குள் தமிழருக்கு பலம் சேர்ககும் ஒரு அரசியல் தீர்வை உருவாக்க மெதுவாக வென்னும் உந்திதித்தள்ளும். ஏற்கனவே தமிழ் மொழிப்பயன்பாடு முன்னரை விட இலங்கையில் மேலோங்கி வருவதை அங்கு சென்று வந்தவர்கள் உணர்ந்திருப்பர்.

உங்கடை அழகான கற்பனையில் எவ்வளவு காலம் இன்புறுவீர்கள்....

5 hours ago, ஈழப்பிரியன் said:

இதுவரை தமிழர் பிரச்சனையை தீர்க அரும்பாடுபட்ட இலங்கை அரசுகள்

தமிழர்களின் தேசிய கொடியை கனடாவில் ஏற்றியவுடன் கவலையில் இருக்கிறார்கள்.

நிஜமாகவா...பிரியன்சார்....என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்

Nov 24, 2025 - 04:51 PM

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த இலங்கை வௌிவிவகார அமைச்சர்

இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரித்தல் மற்றும் இலங்கையில் உள்ள இன சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முற்படும் செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசியத்தை கனடிய அரசாங்கத்திற்கு எடுத்துரைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். 

கனடாவில் உள்ள சில உள்ளூர் குழுக்களின் இத்தகைய செயற்பாடுகள், தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதற்காக எமது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முரணாக அமைந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்குப் பதிலளித்த கனேடிய உயர்ஸ்தானிகர், கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே இருப்பதாக தெரிவித்தார். 

அந்த அமைப்புடனோ அல்லது பிரிவினைவாத கொள்கைகளுடனோ தொடர்புடைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

மேலும், இலங்கையின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் கனடா தொடர்ந்தும் மதிப்பளித்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmid23hsu01yao29nv7ewnbc5

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

செல்வநாயகம் காலத்தில் இருந்து ..அமைதிவழி காத்த நம் தமிழினத்தை ..அழித்த சிங்களவன் ...இப்ப 80 வீதம்வரை அழித்திருக்கின்றான் ...இதனை சாதாரண பத்திரிகை படிப்பவனே அறிவான் ...இதை விளங்கப் படுத்த ரொக்கட் ..புத்தகம் நீங்கள் படித்திருக்கத் ..தேவையில்லை ..நடைமுறையில் உள்ளதை பார்த்தாலே விளங்கும்..

தமிழ் மக்கள் அழிந்ததாக நீங்கள் கவலைப்படுகின்றீர்கள். நீங்கள் கூறிய மக்களில் 90 வீதம் யுத்த காலத்திலேயே கொல்லப்பட்டனர். 1983 வரையும் தமிழர் சனத்தொகை அதிகரித்தே வந்தது. 2009 ம் ஆண்டின் பின்பும் தமிழர் சனத்தொகை அதிகரித்தே வருகிறது. யுத்தகலத்தில் தினசரி 10 தமிழர்களாவது கொல்லப்பட்டனர். ஏற்கனவே சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களில் பாரிய மக்கள் அழிவுகளினூடான போராட்டங்களை தவிர்க்க வேண்டும் அது எம்மை மேலும் மேலும் பலவீனப்படுத்தும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத போராட்டத்தினால் எந்த பயனும் இல்லை. பாரிய மக்கள் அழிவு ஏற்பட்டால் சர்வதேசம் தலையிட்டு தமிழீழம் எடுத்து தரும் என்று நினைத்து மக்களை பலியிட்ட முட்டாள்தனம் 2009 ல் அரங்கேறியது. மேற்கு நாடுகளில் யுத்தத்திற்கு பாரியளவில் பணம் சேர்தது அதை கொள்ளையிட்ட மாபியாகளின் தாகத்தை மட்டும் தான் அந்த போராட்டம் தீர்ததது.

முஸ்லீம்கள் அதிக பிள்ளைகளை பெற்று சனத்தொகையில் வளர்ந்து வருகிறார்கள் என்று இனவாதம் பேசும் உங்களைப் போன்றவர்கள் மீண்டும் மோதல் தமிழர் அழிவுகளை நோக்கிய அரசியலையே ஆதரிப்பது முரண்நகை. முஸலீம்கள் எங்களை அழிக்கவந்தவர்கள் என்று பச்சை இனவாதம் பேசும் உங்கள் இனவாத சிந்தனையையே தான் சிங்கள இனவாதிகளும் தமிழர்களை பார்தது கூறுகிறார்கள். இனவாதிகள் எந்த இனத்தில் இருந்தாலும் ஒரே மாதிரி தான் சிந்திப்பார்கள்.

தாங்கள் தமது குடும்பங்களுடன் சுகபோக வாழ்ககை வாழ்வது போலவே தாயகத்தில் உள்ள மக்களும் வாழ விரும்புவார்கள் சிந்திக்காத சிந்திக்க விரும்பாத ஒரு சைக்கோ கூட்டமே புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் அரசியல் நடத்துகிறன.

  • கருத்துக்கள உறவுகள்

2009 போர் நிறைவடைந்தது. இப்போது ஆண்டு 2025 நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இலங்கை அரசின் அனுமதியுடன் புத்தபகவான் வடக்கு, கிழக்கில் சிலைகளாகவும், விகாரைகளாகவும் வியாபிக்கின்றார். தொல்பொருள் திணைக்களம் காலங்காலமாக தமிழர் உரிமைகொண்டாடும் இடங்களை கையகப்படுத்துகின்றது.

இலங்கை அரசு தரப்பில் யாராவது அனைத்து மக்கள் நலன்களையும் கருத்திற்கொண்டு அக்கறையுடன்/கரிசனையுடன் இப்படியான விடயங்களை கையாள்வதாகவோ கண்டுகொள்வதாகவோ தெரியவில்லை.

யதார்த்தம் இலங்கையில் இவ்வாறு காணப்படுகையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் தமது இருப்பை, நலன்களை உறுதிப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

விடுதலை புலிகளை அனைத்து தமிழர்களும் ஆதரித்தார்களா ஆதரிக்கின்றார்களா என்பதற்கு அப்பால் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட தேசியகொடி ஒரு வெளிநாட்டு மாநகரசபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு பலர் உழைத்து வெற்றி பெற்றுள்ளார்கள். இது தவறான விடயமாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது.....இப்ப விளங்குதா ...இந்த கொடியேற்றம் ...நினைவுத்தூபிகட்டல்...லண்டனில் ஆற்பாட்டம் ..இதுவெல்லாம் சின்ன சின்ன ..சில்லறை வேலையல்ல..எமக்காக உயிநீத்த 60000 போராளிகளுக்கும் ,2 லட்சம் பொது மக்களுக்கும் நாம் செய்யும் சிறு நன்றிக்கடன் ...

மக்கள் சாகும், அழிவை ஊக்குவிக்கும் அரசியலை செய்துவிட்டு, மக்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு நன்றிகடன் என்று உண்டியல் குலுக்கும் அரசியலை மட்டும் தான் செய்து வருகிறார்கள். இப்ப கொஞ்ச நாள் மக்கள் சாகவில்லை என்பது பும் பெயர் தேசியர்களுக்கு மிகுந்த கவலை. புதிய தலைமுறை பிள்ளைகள் படித்து முன்னறுகிறார்களே, அவர்களை உசுப்பேற்றி மீண்டும் இரத்தகளரியை உண்டாக்கி, பின்னர் இறந்த மக்களுக்கு நன்றி செலுத்துவதாக முதலைக்கணீர் வடித்து கலெக்சன் செய்வது, தாயகத்தில் மக்களின் வாழ்வை சீரழித்து அந்த பிள்ளைகளின் கல்வியை சீரழிக்கும் வேலைகளை செய்வது, ஆனால் தமது பிள்ளைகளை மட்டும் மேற்கு நாட்டு பல்கலைகழகங்களில் கற்பிப்பது போன்ற சுயநல செயற்பாடு குறித்து தாயக மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, island said:

மக்கள் சாகும், அழிவை ஊக்குவிக்கும் அரசியலை செய்துவிட்டு மக்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு நன்றிகடன் என்று உண்டியல் குலுக்கும் அரசியலை மட்டும் தான் செய்து வருகிறார்கள். இப்ப கொஞ்ச நாள் மக்கள் சாகவில்லை என்பது பும் பெயர் தேசியர்களுக்கு மிகுந்த கவலை. புதிய தலைமுறை பிள்ளைகள் படித்து முன்னறுகிறார்களே, அவர்களை உசுப்பேற்றி மீண்டும் இரத்தகளரியை உண்டாக்கி பின்னர் இறந்த மக்களுக்கு நன்றி செலுத்துவதாக முதலைக்கணீர் வடித்து கலெக்சன் செய்வது தாயகத்தில் மக்களின் வாழ்வை சீரழித்து அந்த பிள்ளைகளின் கல்வியை சீரழிக்கும் வேலைகளை செய்வது ஆனால் தமது பிள்ளைகளை மட்டும் மேற்கு நாட்டு பல்கலைகழகங்களில் கற்பிப்பது போன்ற சுயநல செயற்பாடு குறித்து தாயக மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.

இது நல்ல கற்பனைதான்...இது ரொம்ப பழையது...கொஞ்சம் புதிசாக எழுதினால்தான் ...பதில் எழுதமுடியும் ...கற்பனையில் வாழாமல் கொஞ்சம் நியத்தில் வாழவும் .. நான் இந்த திரியில் குறிப்பிட்ட விசயம் ..கொடி ஏற்றியவர்களுக்கு வாழ்த்து தெர்வித்ததே ...அதையே விளங்க்காமல் எங்க்கெங்கோ போவதில்...இங்கு நான் என்ன எழுதக்கிடக்கு....அமைதியாக படுத்து ஆறுதலாக புதுவிடையத்துடன் வரலாம்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

இது நல்ல கற்பனைதான்...இது ரொம்ப பழையது...கொஞ்சம் புதிசாக எழுதினால்தான் ...பதில் எழுதமுடியும் ...கற்பனையில் வாழாமல் கொஞ்சம் நியத்தில் வாழவும் .. நான் இந்த திரியில் குறிப்பிட்ட விசயம் ..கொடி ஏற்றியவர்களுக்கு வாழ்த்து தெர்வித்ததே ...அதையே விளங்க்காமல் எங்க்கெங்கோ போவதை நான் என்ன எழுதக்கிடக்கு....அமைதியாக படுத்து ஆறுதலாக புதுவிடையத்துடன் வரலாம்

உங்கள் வாழ்தது கருத்துக்கு எதிராக நான் எதுவுமே கூறவில்லை. பொதுபடையாக தாயகமக்கள் உரிமை போராட்டத்திற்கு இது கிஞ்சித்தும் உதவப்போவதில்லை என்ற உண்மையை எனது கருத்தாக மட்டுமே தெரிவித்ததற்கு நீங்கள் தான் எனக்கு பதிலெழுதி விவாதத்தை ஆரம்பித்தீர்கள். அதில் தவறில்லை ஆனால், இப்போது உங்கள் வாழ்த்துக்கு எதிராக உங்கள் கருத்துக்கு எதிராக நான் பதிவிட்டது போல் கதையை மாற்ற எத்தனிக்கின்றீர்கள். அது தான் தவறு. நான் பல முறை கூறிவிட்டேன் உங்கள் திருப்தி என்பது உங்கள் உரிமை என்பதை. உங்கள் உரிமையில் நான் என்றும் தலையிடவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.