Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நான்/நாம் அப்படியல்ல. எமக்கு என நாம் எம் இனம் என தனிப்பாதையுடன் பயணிக்கின்றோம்

அதுதான் புலிகள் விடயத்தில் இந்தியா நடந்து கொண்டது சரி என எழுதிய போதே உங்கள் தற்போதைய பாதை என்ன என்பதை காட்டி விட்டீர்களே.

அனுர மீதும் கொள்ளை பாசம் இருப்பதை உணர முடிகிறது…

ஆனால் குணா கமல் போல் அதை வார்த்தையில் எழுத முடியாமல் தவிக்கிறீர்கள் என்பதும் புரிகிறது.

5 hours ago, குமாரசாமி said:

அவ்வளவே....பதில் கருத்து எதிர்பார்க்கவில்லை. நன்றி

கேட்டும் கொடார்…சிறியர்

கேட்டதும் கொடுப்பார்…மனிதர்

கேட்காமலே கொடுப்பார்…பெரியர்

வேண்டாம், வேண்டாம் என கதற, கதற கொடுப்பார்…...

Edited by goshan_che

  • Replies 108
  • Views 5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஏராளன்
    ஏராளன்

    செய்தியில் மாற்றிவிட்டேன் அண்ணை.

  • “நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது

  • ஏராளன்
    ஏராளன்

    அண்ணை, தனித்திரி திறந்தால் கண்ணில படுமே என கும்பல்ல கோவிந்தாவா போட்டுவிட்டால் கண்ணில எண்ணெய் விட்டபடி தான் நீங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

ஒரு படத்துக்கு இவ்வளவு கோடிகள் வாங்குகின்றேன், அதை எல்லாம் அப்படியே விட்டு விட்டு தமிழ் மக்களை காப்பாற்ற அரசியலுக்கு வந்து இருக்கின்றேன் என்று சொல்லி விட்டு, சொத்து மதிப்பாக 400 அல்லது 500 கோடிகள் கூட காட்டாமல் இருக்க முடியாது தானே.

ஆனால் இவை எல்லாமுமே அவர் அரசியலுக்கு வர முன்பே உழைத்து வரியும் கட்டிய வருமானம்.

ஆகவே இது வருமான வரித்துறைக்கு தெரிந்தே வைத்திருக்கும் சொத்து.

ஒரு தனி நபராக இதை பொதுவெளியில் போட வேண்டிய தேவை இதுவரை இல்லை. இப்போ உள்ளது எனவே வெளியிடுகிறார்.

ஆகவே…

விஜை இதை வேறு வழியில்லாமல் வெளியிடவில்லை.

ஏற்கனவே வரி கட்டி சேர்த்த சொத்தை - இப்போ அனைவருக்கும் தெரியபடுத்துகிறார்.

இதில் அரசியலுக்கு வர முன்பே பானவிடயத்தில் ஒரு தூய்மை, சட்டத்துக்கு கட்டுபட்டு நடந்த விதம் என்பன தெரிகிறன.

விஜைக்கு சம்பளம் கொடுக்கும் ரெட்ஜயண்டின் 21 வயது ஓனரின் பாட்டனும், தகப்பனும்…

சோத்துக்கு வழியில்லை என கணக்கு காட்டுவதும் இதுவும் ஒன்றல்ல:

5 hours ago, ரசோதரன் said:

அம்மாவுக்கு கடன்/முன் பணம் கொடுத்தேன் , அப்பாவுக்கு கடன்/முன் பணம் கொடுத்தேன், சங்கீதாவுக்கு கொடுத்தேன், பிள்ளைகளுக்கு கொடுத்தேன்................... இந்தளவு விளக்கமாக இதுவரை பொதுவெளியியில் பேசிக் கொண்டிருந்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மட்டுமே......................

😂

ஆனால் உலக ஜனநாயகத்தின் தலைமகன் தம்பர் இன்னும் வருமான வரி கணக்கைன்காட்டவில்லைனென நினைக்கிறேன்.

குடும்ப சொத்து விபரமும் அப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

பதில் 1: நீ இப்படி போய் திமுக கூட்டத்தில் கேட்பியா

பதில்2: குடுப்பேன், குடுப்பேன் (எப்படி என்பதுதான் கேள்வி)

கேள்வி கேட்டவரை சீமான் கண் முன்பே நாதக குண்டர்கள் அடக்கி வெளியேற்றுகிறார்கள். பொலிஸ் வந்து அழைத்து போகிறது.

large.IMG_0103.jpeg.c52ce1ee448216b34941

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

அதுதான் புலிகள் விடயத்தில் இந்தியா நடந்து கொண்டது சரி என எழுதிய போதே உங்கள் தற்போதைய பாதை என்ன என்பதை காட்டி விட்டீர்களே.

நான் அப்படி எங்கும் எழுதவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்கவும்.

4 hours ago, goshan_che said:

அனுர மீதும் கொள்ளை பாசம் இருப்பதை உணர முடிகிறது…

ஆனால் குணா கமல் போல் அதை வார்த்தையில் எழுத முடியாமல் தவிக்கிறீர்கள் என்பதும் புரிகிறது.

அந்த அனுர பாசத்தை எப்படி உணர்கின்றீர்கள்?

யார் குணா கமல்? ஓ கமலகாசன் நடித்த குணா திரைப்படத்தை சொல்ல வருகின்றீர்களா? அது நல்லபடமாச்சே?

கண்மணி அன்போட காதலன் பாடலும் அருமையோ அருமை😎

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_0103.jpeg.c52ce1ee448216b34941

அருமை ஐயா. அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள்.

குண்டர்களை ஏவி விட்டு கழுத்தை பிடிக்கவைத்த பின், அவரை கேள்வி கேட்க விடுங்கள் என சீமான் சொன்னது…

கட்டுமரத்தின் உண்ணாவிரத டிராமாவின் தரத்துக்கு நிகரானது…

இதை விளங்கி கொள்ளாதவர் போல் சிலர் இங்கே யாழில் நடிப்பது…

கட்டுமரம், சீமான் இருவரையும் தூக்கி சாப்பிடும் ஆஸ்கார் நடிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இவரிடம் மட்டும் அதிகாரம் போனால், கருணாநிதி குடும்பம், லாலு பிரசாத், ஜெ சசி எல்லாரையும் சேர்த்தாலும் வெல்ல முடியாத ஊழல் சாதனைதை நிகழ்த்துவார்.

அதே தான் உறுதியாக நடைபெறும் அந்த ஊழல் மோசடி அழுகிய வாசனை இலங்கைக்கும் வீசும்.

நாம் தழிழர் பாசறையில் இருந்து வந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் சீமான் வீட்டு மாத வாடகை 3 இலட்சம் / ஒரு மில்லியன் இலங்கை ரூபா / 3200 டொலர் என்று குற்றம் சாட்டுகின்றார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத சீமான் வேலைக்கு செல்லாத மனைவி. முன்பு நமது உறவு வீரபையன் தெரித்திருந்தார் சீமான் மனைவி செல்வந்தர் ஆனால் பல சொத்துக்கள் இப்போது செல்வம் வந்து தான் வாங்கபட்டுள்ளன என்பதை காண முடிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

நான் அப்படி எங்கும் எழுதவில்லை. ஆதாரத்துடன் நிரூபிக்கவும்.

ஒரு மாததுக்குள் நான் இதை எழுதி அதை @ரஞ்சித் . உண்மை என சாட்சியும் கூறினார்.

நீங்கள் எழுதியது உக்ரேன் போர் பற்றிய ஒரு திரியில்.

இப்போ யாழில் முன்பை போல் விடயங்களை search பண்ண முடிவதில்லை.

இதே பலருக்கு வசதியாய் போய் விட்டது.

54 minutes ago, குமாரசாமி said:

அந்த அனுர பாசத்தை எப்படி உணர்கின்றீர்கள்?

அது ஒரு விதைவையின் இரண்டாம் காதல் போல மிக சன்னமாக ஆனால் நிச்சயமாக வெளித்தெரியும்😂. அடுத்த முறை இதை நீங்கள் வெளிக்காட்டும் போது கட்டாயம் ஒரு @ போட்டு விடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

ஒரு மாததுக்குள் நான் இதை எழுதி அதை @ரஞ்சித் . உண்மை என சாட்சியும் கூறினார்.

நீங்கள் எழுதியது உக்ரேன் போர் பற்றிய ஒரு திரியில்.

ஓ...உக்ரேன் திரியிலா? அது பிராந்திய அரசியல் ஆதிக்கம் பற்றி வரும் போது ஒரு ஒப்பீட்டுக்காக எழுதப்பட்டதே தவிர இந்தியா செய்தது சரி எனும் தொனியில் எழுதவில்லை.

பிராந்திய அரசியல் ஆதிக்கம் ஒவ்வொரு நாடுகளுக்கும் வெவ்வேறு கோணங்களில் இருக்கும். எல்லா நாட்டு ஆதிக்கங்களையும்/ஆக்கிரமிப்புகளையும் ஒரே தராசில் வைத்து பார்க்க முடியாது. இதையும் அந்த உக்ரேன் திரிகளில் எழுதியிருந்தேன். அண்ணாக்கள் வாசிக்கல போல

3 hours ago, goshan_che said:

அது ஒரு விதைவையின் இரண்டாம் காதல் போல மிக சன்னமாக ஆனால் நிச்சயமாக வெளித்தெரியும்😂. அடுத்த முறை இதை நீங்கள் வெளிக்காட்டும் போது கட்டாயம் ஒரு @ போட்டு விடுகிறேன்.

ஈழத்தமிழருக்கென இன்றிருக்கும் ஒரு தமிழ் அரசியல் தலைவர் பெயரை சொல்லுங்கள்.அதன் பின்னர் அனுர பற்றி விவாதிக்கலாம்.

இலங்கையின் வட பகுதியில் அனுரவை தேர்ந்தெடுத்தது வாக்களித்தது அந்த பகுதி மக்களே ஒழிய நீங்களோ நானோ அல்ல. புலம்பெயர் மக்களும் அல்ல. அல்லது வாக்குக்கு பணம் செலுத்தி வந்தவரும் அல்ல அனுர. எல்லாம் பல இன்னல்களையும் அனுபவித்தவர்களும் தமிழ் அரசியல்வாதிகளின் உண்மை முகம் தெரிந்தவர்களாலும் தேர்தெடுக்கப்பட்டவர் தான் அனுர.அனுரவிற்கும் ஒரு அவகாசம் கொடுக்கலாம் என்று சொன்னேனே தவிர அனுரவிற்கு ஆதரவு என நான் எங்கும் எழுதியதில்லை.

உங்கள் அடுத்த உருட்ட சந்திக்கும் வரை.....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

இதில் அரசியலுக்கு வர முன்பே பானவிடயத்தில் ஒரு தூய்மை, சட்டத்துக்கு கட்டுபட்டு நடந்த விதம் என்பன தெரிகிறன.

விஜைக்கு சம்பளம் கொடுக்கும் ரெட்ஜயண்டின் 21 வயது ஓனரின் பாட்டனும், தகப்பனும்…

சோத்துக்கு வழியில்லை என கணக்கு காட்டுவதும் இதுவும் ஒன்றல்ல:

😂

இவர்கள் எவரையும் நம்பி தூய்மை, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதம் என்று நாங்களும் சொல்லலாமா.............

'புலி' படத்துக்கு கறுப்பாக வாங்கிய 15 கோடி ரூபாய்களுக்கு வந்த வழக்கில், விஜய் தரப்பு என்ன பிரதிவாதத்தை வைத்தார்கள்.................... அது தூய்மையா அல்லது சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதமா................

அந்த 15 கோடி தனியே நடந்த ஒரு ஒற்றைத் தவறு அல்ல............ ஒவ்வொரு படத்துக்கும் இவர்கள் இப்படியே செய்கின்றார்கள்............... வாங்கிய சொத்துகளின் பத்திரப் பதிவுகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், அங்கேயும் சீமான் போன்றே இவர்கள் எல்லோரும் நடந்து கொண்டிருப்பார்கள்.............. இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

120 ரூபா டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்கும் ஒரு விடயம் பற்றி ஒரு வார்த்தை சொல்லியிருக்கின்றாரா, விஜய்.................. தூய்மை, நேர்மை என்றால் அங்கிருந்தும் ஆரம்பிக்கலாம் தானே...............

லெஜண்ட் சரவணன் இந்த தேர்தலில் நின்றால், அவர் தன் சொத்துகளை காட்டியே ஆகவேண்டும். அவருக்கு வேறு வழியே கிடையாது. இதையே தான் விஜய்யும் செய்கின்றார். தொழில்முறை அரசியல்வாதிகளுக்கு பினாமிகள் ஆரம்ப நாட்களில் இருந்தே இருக்கின்றார்கள். சாமியார்கள், பெரிய சாமிகள் கூட அரசியல்வாதிகளின் பினாமிகளாக இருக்கின்றார்கள். ஆனால் விஜய்க்கும், லெஜண்ட் சரவணனுக்கும் இதுவரை பினாமிகள் இல்லை. ஆனால் இவர்கள் அரசியலில் சம்பாதிக்கும் போது இவர்களும் பினாமிகளை உருவாக்கிக் கொள்வார்கள்.

'அவர்கள் காசாக கொடுத்தால், நாங்கள் மாஸாக கொடுப்போம்.................' என்று விஜய் நிற்கும் தொகுதிகளில் தவெகவினர் பெண்களுக்கு மூக்குத்தி கொடுக்கப் போகின்றார்கள். கூவம் ஆற்றின் நடுவில் தான் விஜய்யும் குளித்துக் கொண்டு நிற்கின்றார்.

விஜய் போன்று புதிதாக அரசியலுக்கும் வருபவர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான விடயம் என்னவென்றால் ஊழலை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே, ஆனால் அவர்களுக்கு நன்கு தெரிந்த, மிகவும் பரிச்சயமான அவர்களின் துறைகளில் இருக்கும் ஊழல், அநீதிகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டார்கள். கமல் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.

சுருக்கமாகச் சொன்னால், விஜய் ஒரு மாற்றுச் சக்தியே கிடையாது. இவரும் அவர்களில் ஒருவரே. அதைவிட இவர் அறிமுகப்படுத்தும் 'வொர்த்தே இல்லை.................' போன்ற முன்னுதாரணங்கள் இவரது ரசிகர்களை சீரழிக்கவே போகின்றது.

ஸ்டாலின் காட்டியிருக்கும் சொத்து மதிப்பு.................. 2001ம் ஆண்டில் இவரது நண்பர் ரமேஷும், அவரது குடும்பமும் தற்கொலை செய்து கொண்டார்கள்............... அரசியல்வாதிகளின் ஈவிரக்கம் அற்ற பினாமி உலகம்........... ஜெயலலிதாவுக்கும், சங்கராச்சாரியாருக்கும் கூட இதுவே தான் தகராறு என்று அன்று பேசப்பட்டது............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.