Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேட்டோவும் ஆப்கானிஸ்தானும் சிறீலங்காவும் தமிழீழமும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிநவீன விமானப்படை விமானங்களைக் கொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்று அப்பாவி ஆப்கான் மக்களை தினமும் கொன்று குவிக்கின்றன. அப்படி கொன்று குவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல நூறாகும்.

ஆனால் நேட்டோவின் ஆதிக்கத்துள் இருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஐநாவும் இதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லை. ஏனெனில் மனித உரிமைகளை மீறிறவர்கள் அமெரிக்க தலைமையிலான ஜனநாயக முதலாளிமார்.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய அகோர விமானத் தாக்குதலில் வீதிப்புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதை அம்மாகாணத்துக்கான கவர்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

ஆனால் நோட்டோவோ தாக்குதல் நடந்தி உள்ளூரில் இருந்து அப்பாவிகளின் கொலை தொடர்பில் கண்டனங்கள் வெளியான பின்னரும் தனது தாக்குதலில் தலிபான் தலைவர்களே கொல்லப்பட்டதாக சிறீலங்கா போல அறிக்கை விடுகிறது.

இது அப்பட்டமான போர் குற்றம் என்பதற்கும் மேலால் நேட்டோ தனது மனித உரிமை மீறல்களை தலிபான் தீவிரவாதத்தை அழிக்கின்றன் என்ற போர்வையில் அரங்கேற்றி வருவது உலகில் அடக்குமுறை அரசுகளுக்கு நேட்டோ முன்னுதாரணமாக விளங்க வகை செய்கிறது. இது தொடர்பில் ஐநா உட்பட மற்றும் நாடுகளும் பாரா முகமாகவே நடந்து கொள்கின்றன.

ஆப்கானிஸ்தான் மக்கள் சோவியத் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் உதவியால் வளர்க்கப்பட்ட தலிபானின் உதவி கொண்டு சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டனர். இன்று அமெரிக்கா தானே உருவாக்கிய தலிபானையும் ஒசாமாவையும் அழிக்கிறன் என்று தனது பிராந்திய நலன்களுக்காக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து நின்று கொண்டு அப்பட்டமான மனிதப் படுகொலைகளை தனது வல்லாதிக்க விரிவாக்கத்துக்காகச் செய்கின்ற போது உலகம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

சிறீலங்காவிலும் இதேபோன்ற ஒரு நிலையை அமெரிக்கா சிங்கள பயங்கரவாத அரசுக்கு உதவி செய்வதன் மூலம் உருவாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலைகளுக்கு எதிராக உலக நாடுகளின் தலைவர்களை நம்பி காரியமாகப் போவதில்லை. உலகெங்கும் மக்கள் அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் அப்பட்டமான மனிதப் படுகொலைகளை திரண்டு கண்டிப்பதுடன் அமெரிக்காவின் வல்லாதிக்க விரிவாக்கதுக்கு முடிவு கட்ட போராடத் தயாராகவும் வேண்டும்.

Nato denial over civilian deaths

Nato says it is confident that reports that it killed a number of civilians in an air strike in Nuristan province on Monday are incorrect.

Governor Nuristani told AFP news agency: "We had reports that rebels were there.

"There was an air strike by coalition forces but later we found out that 12 people, all local road workers, were killed.

"The road workers were in a tent which was hit by one bomb. All died," he said.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7118939.stm

  • கருத்துக்கள உறவுகள்

இதே உலக பயங்கரவாதிகள் எங்களை பார்த்து பயங்கரவாதிகள் என்பது நகைப்புக்கு இடமானது.அத்தோடு இவர்களின்(உலக அபிப்பிராயம்)தமிழ்மக்களுக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.