Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டதில் பிடித்தது..

Featured Replies

படம் : தலைநகரம்

பாடியவர்கள் : மஞ்சரி, தேவன் ஏகாம்பரம்

இசை : டி.இமான்

பெண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் (4)

ஆண் : பேசிடத்தானன்பே மொழி வரவில்லை

மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

பெண்: அடடா அடடா காதல் அழகிய தொல்லை!

உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்(2)

ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)

பெண்:ஊரைச் சுற்றிப்பார்த்தாலும் உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என்னன்பே

ஆண்:யாரைப்பற்றிக்கேட்டாலும் உன்னைப்பற்றிச் சொல்கிறேனே அன்பே என்னன்பே

பெண்: உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே!

துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே

ஆண்: இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம்

இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம்!

அடடா அடடா காதல் அழகிய தொல்லை

பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்!

ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)

பெண்:கண்ணாடிக்குப் பொட்டு வைத்தே உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா?

ஆண்: கண்மூடீயும் உன்னைக் கண்டேன்

கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா?

பெண்: அக்கம் பக்கம் யாருமில்லை அப்போதும் நான் சொல்லவில்லை

தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்

ஆண்: நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை

விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை

அடடா அடடா காதல் அழகிய தொல்லை!

பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்

ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்

பெண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்

ஆண்: பேசிடத்தானன்பே மொழி வரவில்லை

மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

பெண்:அடடா அடடா காதல் அழகிய தொல்லை

உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்

  • Replies 773
  • Views 92.6k
  • Created
  • Last Reply

நீங்கள் வரிகள் போட்டதற்கு பின்னர் தான் பாடலை கேட்கின்றேன்...நல்ல பாடல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை  

விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை  

அடடா அடடா காதல் அழகிய தொல்லை!  

:lol::lol::lol: நல்லபாடல் சினேகிதி. இணைப்புக்கு நன்றி.

  • 2 weeks later...

எனக்கு அஆ படப் பாடலான மயிலிறகே பாடலை யாரிடமாவது இருந்தால் தரமுடியுமா? :roll: :roll:

எனக்கு அஆ படப் பாடலான மயிலிறகே பாடலை யாரிடமாவது இருந்தால் தரமுடியுமா? :roll: :roll:

http://66.90.103.126/~rose4you/www.only4ro...A-Z/A/Ah%20Aah/

ஆண் : மயிலிறகே.... மயிலிறகே

வருடுகிறாய் மெல்ல....

மழை நிலவே... மழை நிலவே

விழியில் எல்லாம் உன் உலா.....

பெண் : உயிரை தொடர்ந்து வரும்

நீதானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே.....

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே....

மயிலிறகாய் ....மயிலிறகாய்

வருடுகிறாய் மெல்ல

பெண் : மழை நிலவே மழை நிலவே

விழியில் எல்லாம் உன் உலா...

(இசை)

பெண் : மதுரை பதியை மறந்து

உன் மடியினில் பாய்ந்தது வைகை

மெதுவா...மெதுவா..மெதுவா...

இங்கு வைகையில் வைத்திடு கை

ஆண் : பொதிகை மலையை பிரித்து

என் பார்வையில் நீந்துது தென்றல்

அதை நான் அதை நான் பிடித்து

மெல்ல அடைத்தேன் மனசிறையில்...

பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..

ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல்

பெண் : மயிலிறகே.... மயிலிறகே

வருடுகிறாய் மெல்ல....

மழை நிலவே... மழை நிலவே

விழியில் எல்லாம் உன் உலா.....

ஆண் : உயிரை தொடர்ந்து வரும்

நீ தானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே.....

உலக மொழியில் வரும்

எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே....

(இசை..)

பெண் : தமிழா தமிழா தமிழா

உன் தமிழ் இங்கு சேலையில் வருதா

அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்த

நன்றி நிலா அக்கா

எனக்கு இன்னொரு பாடலும் தேவை உங்களிடம் இருந்தா தரமுடியுமா?

அலையாயுதே படத்திலை உள்ள சினேகிதனே என்ற பாடல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினேகிதனே பாடல் இங்கே..

http://66.90.103.126/~rose4you/www.only4ro...=Snehethane.mp3

நேற்று முன்னிரவில் நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில் காற்று நுழைவதேனோ

உயிர் கலந்து களித்திருந்தேன்

இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ

மனம் கலங்கிப் புலம்புகிறேன்

கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் (2)

கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே

இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்

என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்...மலர்கள் மலர்வாய்

பூப்பரிக்கும் பக்தன் போல மெதுவாய்

நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்...சத்தமின்றித் துயில்வாய்

ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி சேவைகள் செய்யவேண்டும்

நீயழும்போது நான் அழ நேர்ந்தால் துடைக்கின்ற விரல் வேண்டும்

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே

நேற்று முன்னிரவில் உன்னித் திலவு மடியில் காற்று நுழைவதேனோ (?)

உயிர் கலந்து களிந்த்திருந்தேன்

இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோ

மனம் கலங்கிப் புலம்புகிறேன்

கூந்தல் நெளிவில் எழில் கோலச் சரிவில் (2)

கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்...

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்

நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்...காதில் கூந்தல் நுழைப்பேன்

உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்

நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்...உப்பு மூட்டை சுமப்பேன்

உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்

வெளிவரும்போது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே

இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் - கஸ்தூரிமான்

பாடலை கேட்க - பாடலை கேட்க

கேட்கலையோ கேட்கலையோ கண்ணனது கானம் :?

பூக்கலையோ பூக்கலையோ பூக்கள் நெஞ்சில் நாளும் :?

என்னைவிட்டு எங்கே போனாலும் :roll:

என் நெஞ்சம் மட்டும் உன்னைவிட்டு எங்கும் போகாது

(கேட்கலையோ கேட்கலையோ)

ஜமுனை கரையில் வந்து வந்து மோதும்

அலைபோல் நினைவு நெஞ்சில் வந்து போகும்

அலைகள் எழுந்தால் தாங்கும் கரை நானே

நதிநீர் பிரிந்தால் இல்லை இந்த மீனே :(

வெயிலால் உருகி வெள்ளைப்பனி ஓடும்

நினைவால் உருகி உள்ளம் வழிந்தோடும்

உன்னைப்போல் காதல் கரம் சேர்க்காது

தவிக்கும் தவிப்பை யாரைக்கேட்டு நானும் சொல்வேன் :(

(கேட்கலையோ கேட்கலையோ)

முள்ளிலே மெத்தையிட்டு தூங்கும்படி சொன்னால்

எவரால் முடியும் நீயும் சொல்லு கண்ணே :(

கண்ணனின் கண்கள் விடும் பாணம் ஒருபோதும்

காமனின் பாணம் போல் உன்னை வருத்தாது

.......... தனிமை என்னை இந்த நாளில்

மூட்டுதே நெருப்பை போதை எனும் தீவில்

மழை பெய்தாலும் குளிர் அடித்தாலும்

தணல் போல் கொதிக்கும் ஆசை கொண்ட தேகம் ரண்டும்

(கேட்கலையோ கேட்கலையோ)

நல்ல பாடல் விஸ்ணு. என்னது விஸ்ணு கோடிட்டு இருக்கிறீங்க இரு வரிகளுக்கு. :lol::lol: சரி சரி எங்கும் போகாமல் பார்த்துக்கொள்ளுங்க :wink:

நல்ல ஒரு எனக்கு மிகவும் பிடித்த பாடல் இணைப்புக்கு நன்றி விஷ்ணு

படம்:டிஸ்யூம்

பாடியவர்கள்:காயத்ரி ,ராகுல் நம்பியார்

இசை:விஜய் அன்ரனி

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்

பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்

காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்

பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்

காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய்

உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்

உன் அழகால் எனை நீ அடித்தாய்

அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்

என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்

நீ மதுவாய் எனையே குடித்தாய்

இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு

வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை

ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்

எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்

பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்

என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்

ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்

என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்

என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்

நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்

என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை சிம்பொனி

மின்னலில் சங்கதி(???) புரிகின்றதே

தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்

புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்

பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்

காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

இந்த பாடலை -எழுதியது யாரென்று- குறிப்பிடலாமே - சினேகிதி!

சரியாத் தெரியேல்ல வர்ணனண்ணா...சில இணையத்தளங்களில் பாடல்கள் வைரமுத்து என்று போட்டிருக்கு வேறுசிலதில் நா.முத்துக்குமாரும் வைரமுத்துவும் என்று போட்டிருக்கு.இந்தப்படத்தில் இடம்பெற்ற நெஞ்சாங்கூட்டில் நீயே நிக்கிறாய் என்ற பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார்.

படம்- இங்கிலீஸ்க்காரன்

பாடியவர்- சித்திரா

இசை- தேவா

பாடலைக் கேட்க- http://www.tamilsongs.net/page/build/album...aran/index.html

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே

சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவிடு (2)

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே

சோகத்தை மூட்டை கட்டி போகியில் போட்டுவிடு

நிலவுக்கு காலிருக்கா? வானத்தில் நடக்கலையா?

மேகத்துக்கு கையிருக்கா? நீச்சல் அடிக்கலையா?

ஓடைக்கு வாயிருக்கா? பாட்டு படிக்கலையா?

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே

சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவிடு

மலைகள் இல்லையென்றால் மலையேற முடியுமா?

அட ஒரு நாளில் உதிர்ந்தாலும் பூக்கள் சிரிக்குமே?

இறக்கைகள் ஏதுமின்றி அந்தப் பட்டம் பறக்கலையா?

அட விழுந்தாலும் வருந்தாமல் அருவி சிரிக்குமே

இரப்பர் மரம் மீது பல காயம் உண்டு தோழா

காயம் இருந்தாலும் அது பாலைத் தரும் தோழா

மேற்கில் மறைவதெல்லாம் மரணமாவதில்லை

கிழக்கு வெளிச்சம் தர மறந்து போனதில்லை

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே

சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவிடு

தையல் ஊசிக்கெல்லாம் அட காது ஒன்றுதான்

தன் ஊனத்தால் உடையாமல் உடைகள் தைக்குமே

துன்பங்கள் ஆணியில்லை வரும் வெற்றியின் ஏணியது

தீ தலைகீழாப் பிடித்தாலும் நிமிர்ந்து எரியுமே

துயரம் கடக்காமல் ஒரு உயரம் கிடையாது

தலையே நீ குனிந்தால் அந்த வானம் தெரியாது

முற்றுப்புள்ளி முடிவினிலே கோலம் ஒன்று போடு

ஜெயிக்கும் வரை நீயும் ஒரு கண்ணால் தூங்கு

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே

சிறகுகள் இல்லாமலே சிகரம் தொட்டுவிடு

நண்பனே நண்பனே ஆருயிர் நண்பனே

சோகத்தை மூட்டை கட்டி போகியில் போட்டுவிடு

நிலவுக்கு காலிருக்கா? வானத்தில் நடக்கலையா?

மேகத்துக்கு கையிருக்கா? நீச்சல் அடிக்கலையா?

ஓடைக்கு வாயிருக்கா? பாட்டு படிக்கலையா?

அக்கா நல்ல பாட்டுவரிகள். நன்றிக்கா :P

படம்:டிஸ்யும்

பாடியவர்கள்:சங்கீதா ராஜேஸ்வரன் விஜய்அன்ரனி

இசை:விஜய்அன்ரனி

பெண்: டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ (4)

பெண்: காலைக்கு ராத்திரிமேல் காதலே(2)

தீக்குச்சிக்கு தண்ணிமேலே காதலே

So றிஸ்க் பாஸ்கர் என்னோட லவ்வர்தான்பா(2)

ஆண்: டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ (4)

பெண்: அமெரிக்கா நீயானான ஆப்கானிஸ்தான் நானான

கல்யாணம் எந்த ஊhரு கூறு

ஆண் : உன் ஊhரும் ஓகேதான் என்னூரும் ஓகேதான்

பின்லாடன் என்ன சொல்றான் பாரு

பெண்: உன்மேலே பித்து பித்து பித்து பித்து

நோய்தீர மொத்து மொத்து மொத்து மொத்து

உன்மேல பித்து பித்து பித்து

நோய்தீர மொத்து மொத்து மொத்து

காதலும் ஜே(????) போடணும் ஜெட் வேகத்துல

ஆண்: டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ (4)

பெண் : சிறீலங்கா நீயானா LTTE நானான

ஆண்: ஐயையோ வாயைக் கொஞ்சம் மூடு

பெண்: DMK நீயானா ADMK நானானா

ஆண்: கோட்டையில் நம்ம வீட்டைப் போடு

பெண்: வாய்மேலே இச்சு இச்சு இச்சு இச்சு

தாடா நீ நச்சு நச்சு நச்சு நச்சு

வாய்மேல இச்சு இச்சு தாடா நீ நச்சு நச்சு

காய்ஞ்ச மாடு கம்பில பாயுறதைப்போல

ஆண்: டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ (4)

பெண்: காலைக்கு ராத்திரிமேல் காதலே(2)

தீக்குச்சிக்கு தண்ணிமேலே காதலே

so றிஸ்க் பாஸ்கர் என்னோட லவ்வர்தான்பா(2)

என்ன சினேகிதி ஒரே டிஸ்யும் பாட்டோடை இருக்கிறியள்? :lol:

எனக்கு பிடித்த ஒரு பாட்டிருக்கு அதை எழுதுவியளா

என்ன படம் என தெரியாது. நாளைக்கு சொல்லுறேன் என்ன பட பாட்டு என சரியா? :wink:

இந்தப்பாட்டு முதல்தடவை கேட்டவுடன் பிடிக்கேல்ல திரும்ப இரண்டு தரம் கேட்டவுடன் திரும்பக்கேக்கோணும் போல இருக்கும்.

என்ன பாட்டு என்று சொல்லுங்க எழுதுவம் :-)

என்ன பாட்டு என்று சொல்லுங்க எழுதுவம் :-)

அட நீங்க வேறை இன்றுதான் அந்த பாட்டை கேட்டேன். பிடிச்சிருந்திச்சு ஆனால் என்ன படம்னு தெரியல்லை. ஆனால் அப்பாடலுக்கு ஜெய் ஆகாஷ் நடித்திருந்தார். பாடலின் ஆரம்பவரி இப்படி வரும்னு நினைக்கிறன்

"நான் வசித்திட வீடு வேணாம் நீயே போதும்............" :lol: :arrow:

டிஸ்யூம் பட பாடல்கள் எல்லாம் நல்ல பாட்டுகள் சினேகிதி சொன்ன மாதிரித்தான் இந்த டைலமோ பாடலும் முதல் கேக்கும் போது பெருசா பிடிக்கல.... பிறகு இப்ப அடிக்கடி கேக்கிறன் ... நல்லாயிருக்கு.... முதல் இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் அடிக்கடி கேட்ட பாடல் என்றால்.... " பூ மீது யானை பூ வலியை தாங்குமோ.... (மால்குடி சுபா வின் குரலில்) என்ற பாடல் அடிக்கடி கேப்பன் .... பிடித்திருந்தது.....! பாடல் வரிகளை இணைத்த அனைவருக்கும் நன்றிகள்....! :P :P :lol:

பெண் : சிறீலங்கா நீயானா LTTE நானான

ஆண்: ஐயையோ வாயைக் கொஞ்சம் மூடு

:lol::lol::lol:

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர..........நிலா நீங்கள் தந்த தகவல் பிழை :-( நீங்கள் கேட்ட பாடல் ஜெய்ஆகாஷ் நடித்த படத்திலில்லை. படத்தின்ர பெயர் அந்த நாள் ஞாபகம்.றமணா சிறீதேவிகா நடித்திருக்கிறார்கள்.மூன்று நாளா இந்தப்பாட்டுத்தேடி ம் :evil: ...இப்ப லொலிபொப் மட்டும் வாங்கித்தரேல்ல என்றால் நான் என்ன செய்வன் என்று எனக்கே தெரியாது.பாடல் வரி எழுதுறன்.

]படம்:அந்த நாள் ஞாபகம்

பாடியவர்:விஜய் யேசுதாஸ்

இசை:பரத்வாஜ்

நான் வாழ்ந்திட காற்று வேண்டாம் காதல் போதும்

நான் வசித்திட வீடு வேண்டாம் இதயம் போதும்

காலை எழுந்ததும் தேநீர் வேண்டாம்

புன்னகை கலந்த முத்தம் குடு

குளித்து முடித்து வந்து நிக்கிறேன்

துடைத்திட உனது கூந்தல் கொடு

என் காதல் தேவதையே

இந்த வரங்கள் போதுமடி

நான் வாழ்ந்திட காற்று வேண்டாம் காதல் போதும்

நான் வசித்திட வீடு வேண்டாம் இதயம் போதும

வளையல்கள் கொலுசுகள் சத்தங்கள் போதும் இசை வேண்டாம

அந்தப்பொழுதில் சிந்திச்சிணுங்கிடும் கொஞ்சல்கள் போதும் மொழி வேண்டாம்

ஓ நீ தந்த நிழலே போதும் வெயில் நாளில் குடை வேண்டாம்

உன் வாசச் சேலைகள் போதும் போர்வைகளே இனி வேண்டாம்

தலை வைக்க மடி கொடுத்தால் தலையணையின் துணை வேண்டாம்

உனக்குள் வாழ்கிறேன் உனக்குள் வாழ்கிறேன் இப்படியே என்னை வாழவிடு

நான் வாழ்ந்திட காற்று வேண்டாம் காதல் போதும்

நான் வசித்திட வீடு வேண்டாம் இதயம் போதும்

நான் வாழ்ந்திட காற்று வேண்டாம் காதல் போதும்

நான் வசித்திட வீடு வேண்டாம் இதயம் போதும்காலை எழுந்ததும் தேநீர் வேண்டாம்

புன்னகை கலந்த முத்தம் குடு

குளித்து முடித்து வந்து நிக்கிறேன் துடைத்திட உனது கூந்தல் கொடு

என் காதல் தேவதையே இந்த வரங்கள் போதுமடி

நான் வாழ்ந்திட காற்று வேண்டாம் காதல் போதும்

நான் வசித்திட வீடு வேண்டாம் இதயம் போதும்

ஒளிவிடும் உன்னுடல் வெளிச்சங்கள் போதும் இரவினிலே

உன்னை சூடிடும் வண்ண மலர்களின் வாசனை போது மூச்சினிலே

உன் பேரைச்சொன்னால் போதும் பிரார்த்தனைகள் தேவையில்லை

நீ நடந்த சுவடுகள் போதும் வேறு வழி தேவையில்லை

ஓ பசியேற்றும் உன்னழகை ருசிபார்க்கும் சுகம் போதும்

உனது காதலில் உனது காதலில் மரணம் என்பது மறந்து விடும்

நான் வாழ்ந்திட காற்று வேண்டாம் காதல் போதும்

நான் வசித்திட வீடு வேண்டாம் இதயம் போதும்

காலை எழுந்ததும் தேநீர் வேண்டாம்

புன்னகை கலந்த முத்தம் குடு

குளித்து முடித்து வந்து நிக்கிறேன் துடைத்திட உனது கூந்தல் கொடு

என் காதல் தேவதையே இந்த வரங்கள் போதுமடி

நான் வாழ்ந்திட காற்று வேண்டாம் காதல் போதும்

நான் வசித்திட வீடு வேண்டாம் இதயம் போதும்

ஆமா அனி எனக்கும் அந்தப் பாடல் பிடிக்கும் ;-) பாடல்வரிகள் கூட இணைத்திருந்தேனே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.