Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி மஹிந்த ஜப்பானுக்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்த ஜப்பானுக்கு விஜயம்

வீரகேசரி நாளேடு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை ஞாயிற்றுக்கிழமை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் ஜனாதிபதி பலதரப்பட்டவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.ஜப்பானிய பிரதமர் யூசுவேக புக்குடாவின் அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி இவ்விஜயத்தினை மேற்கொள்கிறார்.

இதன்போது இலங்கைக்கும், ஜப்பானுக்குமிடையேயான வரலாற்று உறவுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதோடு ஜப்பானிய ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

அத்தோடு அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் இலங்கைக்கு ஜப்பõன் பாரிய அளவில் நிதியுதவி செய்து வருகிறது. இது தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளது. 200 இலங்கையர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இலங்øகக்கான விசேட தூதுவர் யசூஷி அகாஷியையும் ஜனாதிபதி சந்திக்கலாம் என்றும் தெரியவருகிறது

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளர் கூட்டம் தன்னில் நம்பிக்கை இல்லாமல் 200 கள்ளரையும் கூட்டி செல்கின்றனர். :lol::D:(

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் எல்லா நாடுகளுமே இலங்கைக்கு கடன் வழங்கும்போதோ அல்லது வேறு பொருளாதார உதவிகளை வழங்கும்போதோ பேச்சுவார்த்தையை அல்லது சமாதானத்தை நிபந்தனையாக முன்வைப்பது இல்லை. இதன் காரணமாக இவ்வாறு வழங்கப்படும் நிதி ஒன்றில் நேரடியாகவே யுத்தத்தில் கொட்டப்படுகிறது அல்லது இலங்கை அரசு யுத்தத்தை தங்கு தடையின்றி நடாத்துவதற்கு உதவி செய்கிறது.

ஆக சர்வதேசம் என்பது எம்மைப் பொறுத்தவரை எப்போதுமே நடுநிலமையாக இருந்ததில்லை. ஆகவே இப்படியான சர்வதேச அபிப்பிராயம் பற்றித் தமிழ்த்தேசியம் அவ்வளவாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பது எனது தாழ்வான அபிப்பிராயம்.

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 4 நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானிய பிரதமருடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

வீரகேசரி நாளேடு 10.12.2007

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை அந்நாட்டின் சக்கரவர்த்தி அக்கிஹிரோ, பிரதமர் யசோ புகுடா உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை ஜப்பான் கன்சாய் விமான

நிலையத்தினை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் தூதரகக் குழுவினரையும் ஒசாகா நகர தூதுவர் உட்பட அதிகாரிகள் வரவேற்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜப்பானின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கியாமுசு விஹாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அதன் பிரதம குரு மோரி தேரரை சந்தித்து ஆசி பெற்றதோடு இரண்டு நாடுகளுக்கிடையேயான வரலாற்று ரீதியான தொடர்புகள், வரலாற்று தொன்மை வாய்ந்த புராதன சின்னங்கள் உட்பட நட்புறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதோடு பிரதம குருவான மோரி தேரரை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் இன்றைய தினம் திங்கட்கிழமை முக்கியமானதாகும். ராஜ தந்திர ரீதியான பல சந்திப்புக்கள் இன்று இடம்பெறவுள்ளன. ஜப்பானிய சக்கரவர்த்தி அக்கிஹிரோ மற்றும் பிரதமர் யசோபுகுடா உட்பட உயர்மட்ட அரச அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை -ஜனாதிபதி

வீரகேசரி இணையம்

எவ்வறான இடையூறுகள் வந்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டோக்யோவிலுள்ள சிக்காவா பிரின்ஸ் ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எமது அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றதென, சுயலாபம் தேடும் கட்சிகள் பரப்புரை செய்து வருகிறது. மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளையே நாங்கள் மேற்கொண்டுவருகிறோம். பயங்கரவாதிகளின் இறுதி மூச்சு முடியும் வரை, அவர்களுக்கு எதிராக நாம் போர் தொடுப்போம் என அவர் கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 10-12-2007 19:57 மணி தமிழீழம் [தாயகன்]

சிறீலங்காவிற்கு 1.9 பில்லியன் யென் நிதியுதவி - யப்பான்

சிறீலங்காவிற்கு 1.9 பில்லியன் யென் (17 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியுதவி செய்ய இருப்பதாக யப்பானிய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

சிறீலங்காவின் அமைதி முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தி, வறுமையை ஒழிப்பதற்கு அடுத்த வாரம் இந்த நிதி சிறீலங்கா அரசிடம் கையளிக்கப்பட இருப்பதாக, யப்பானின் வெளிவிவகார அமைச்சர் மசஹிகோ கொமுறா ( Masahiko Komura) தெரிவித்துள்ளார்.

யப்பானுக்குச் சென்றுள்ள சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவிடம் நிதியுதவி தொடர்பான விபரங்களை இன்று தெரிவித்துள்ள யப்பானின் வெளிவிவகார அமைச்சர், மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கா அரசு மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார்.

அனல் மின்னிலையம் அமைப்பதற்கும், அபிவிருத்திக்கும் என யப்பானிடம் நிதியுதவி கோரிய சிறீலங்கா அதிபர், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் யப்பான் இடம்பெறுவதற்கு தமது நாடு பூரண ஆதரவு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.