Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதானத்திற்கு சாவு மணி அடிப்பதில் சர்வதேசத்தின் பங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்இணைய செய்தி அலசல்

ஆக்கம் - சுகன்

சமாதானத்திற்கு சாவு மணி அடிப்பதில் சர்வதேசத்தின் பங்கு

பெரும்பான்மை சிங்கள மக்கள் போரை விரும்புகின்றனர். கருத்துக்கணிப்பின் படி 87.3 வீதமான மக்கள் போரை விரும்புகின்றனர் என்று கூறப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு உச்சகதியில் இருக்கும் இத்தருணத்தில் போருக்கான ஆதரவு என்பது எவ்வாறு சாத்தியம் என்று கேள்வி எழுகின்றது.

வாழ்க்கைச் செலவுகள் உச்ச கதியில் இருப்பதே போருக்கான ஆதரவாக மாறுகின்றது என்பதும் ஒரு உண்மை. அரசு மீதான மக்களின் விசனத்தை போருக்கான ஆதரவாக மாற்றுவதே சிங்களத்தலைமையின் கெட்டித்தனமாக உள்ளது.

வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு என்பது மக்களின் இழப்பாக கருதப்படுகின்றது இருந்தும் கிழக்கு வெற்றி என்பது வரவாக காட்டப்படுகின்றது.

அனுராதபுர வான் படைத்தளம் மீதான தாக்குதல் என்பது இந்த சுழற்சியில் ஒரு திருப்பமாக அமைந்திருந்தாலும், அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் மீதான விமான குண்டுவீச்சு அந்த சுழற்சியை தொடரச்செய்கின்றது.

இந்த சுழற்சியில் கேள்விகள் இருப்பினும் வன்னி மீதான போர் முயற்சிகள் எதிர்பார்ப்புகளாகவும் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேசத்தின அனுசரிப்பு போக்குகளும், ஆயுத விநியோக தொடர் உதவிகளும், போர் மீது நம்பிக்கை கொள்ளவே செய்கின்றது. ஆதரவு என்பதற்கு அடித்தளமான நம்பிக்கை சர்வதேசத்திடம் இருந்தே கிடைக்கின்றது.

விடுதலைப்புலிகள் கிழக்கில் போர் செய்யாது பின்வாங்கியது அவர்கள் சார்ந்த தந்திரமாகவும் போர் நிறுத்தம் மீதான நம்பிக்கையாவும் இருந்தாலும், அது சிங்கள மக்களை போர் மீது நம்பிக்கை கொள்ளவே செய்திருக்கின்றது.

சர்வதேச நாடுகளின் அனுசரிப்பு போக்குகளும், புலிகள் மீதான தடை நடவடிக்கைகளும் சிங்கள மக்களை போர் மீது என்னும் நம்பிக்கை கொள்ளவே செய்திருக்கின்றது.

புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் கவன ஈர்ப்பு போராட்டங்களை அந்நாடுகள் கவனத்தில் கொள்வதில் பின்நிற்பதும் சர்வதேசம் சிங்களவர்கள் பக்கம் என்பதாகவே சிங்கள மக்கள் விளங்கிக் கொள்கின்றனர். அரசு, புலிகள் என்ற நிலையைக் கடந்து மக்களின் உணர்வுகளில் சர்வதேசம் நீதியுடன் செயற்படவில்லை. மனித உரிமை மீறல்களை பயங்கரவாதம் மீதான ஒரு நடவடிக்கையுள் உள்ளடக்குவதாகவே சர்வதேசம் இலங்கை விடயத்தில் நடந்து கொள்ள முற்படுகின்றது. இந்த நடைமுறை சிங்கள மக்களை ஒருவிதத்தில் வழிநடத்தவே செய்கின்றது.

இலங்கை தீவில் சமாதானம் என்பதை விரும்புவதாக காட்டிக்கொள்ளும் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசும் சமாதானத்திலிருந்து சிங்கள மக்களை போர்மீது நம்பிக்கை கொள்ள வைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதே யதார்த்தமான உண்மை.

அயல் நாடான இந்தியா ஆயுத உதவி செய்துகொண்டிருப்பது ஒரு வகையில் சிங்கள மக்கள் போர்மீது நம்பிக்கை கொள்ள வைத்தாலும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் போது தமிழகத்தில் எழும் உணர்வெழுச்சிகள் புலிகள் சாயம் பூசப்பட்டு மழுங்கடிக்கப்படுவதானது அரசு செய்யும் போரின் விளைவுகளை பற்றிய சிந்தனை இன்றி சிங்கள மக்களை போர்மீது அனுசரிப்பு போக்கை மேற்கொள்ள வைக்கின்றது.

இந்தியாவின் நிலைப்பாடு போல் சர்வதேச நாடுகள் புலிகளை தடைசெய்ததில் காட்டிய வேகமும் அக்கறையிலும் இரண்டு வீதமேனும் இலங்கை அரசின் மீதன மனித உரிமை மீறல்களில் நடவடிக்கை ரீதியாக காட்டவில்லை. இவ்வாறான விளைவுகள் தான் கிழக்கில் லட்சக்கணக்கான மக்களை அவலப்படுத்தி மேற்கொள்ளப்படும் போரை சிங்கள மக்கள் சர்வசாதாரணமாக ஆதரிக்கின்றனர்.

போர் என்பது தமிழ்மக்களை அனைத்து விதத்திலும் நிர்கதியாக்குகின்றது என்பது சிங்கள மக்களுக்கு தெரிந்த ஒன்றாயினும், அதனை மேவி போர் மீதான ஆதரவு என்ற நிலைக்கு சிங்கள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு சர்வதேசத்தின் அணுகுமுறையின் பாரபட்சமான நகர்வுகள் பிரதான காரணமாகின்றது. அதன் அணுகுமுறை வழங்கும் நம்பிக்கை என்பது கண்மூடித்தனமான போர் ஆதரவாகவே மாறுகின்றது.

சிங்கள பேரினவாதம் என்பதை சர்வதேசம் அனுசரித்துபோவதே சாரதாரண சிங்கள மக்களையும் போர் மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்றது.

இவ்வாறு போர்மீதான விருப்பம் என்பது அரசின் விருப்பமாகவும், அதற்கு சர்வதேசத்தின் அனுசரிப்பாகவும் நகர்ந்து பெரும்பான்மை மக்களின் விருப்பாக மாறுகின்றது.

இறுதியாக சிங்கள மக்கள் போரை விரும்புகின்றனர் என்ற நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் அதை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாத நியாயமாக மாறுகின்றது. அரசு புலிகள் என்ற நிலையில் இருந்து அவர்கள் நிர்வகிக்கும் மக்களின் நிலைப்பாடு இதுவாக மாறுகின்றது. இந்த நிலைப்பாட்டுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய கடப்பாட்டுக்குள் அரசும், புலிகளும் தள்ளப்படுகின்றனர்.

படிப்படியாக ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் மன நிலை போருக்கான ஆதரவாக மாறுவதில், சர்வதேசம் அதிக பங்கை அந்த இனத்துக்கான ஆதரவு மூலம் வகித்து வந்துள்ளது என்பதில் இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்இணைய செய்தி அலசல்

ஆக்கம் - சுகன்

சமாதானத்திற்கு சாவு மணி அடிப்பதில் சர்வதேசத்தின் பங்கு

30வருடங்களுக்கு மேலாக என்ன நடக்கின்றது? இந்த செய்தி அலசலில் புதிதாக எது சொல்லப்படுகிறது?? முதலில் நாம் எம்மை திருத்த வேண்டும். தொடர்ந்து எழுதுவதாலோ ஊர்வலங்கள் நடத்துவதாலோ ஏதும் நடக்க போவதில்லை. இவை சிங்கள அரசின் பலத்தை கூட்டுவதற்கே உதவும். நாம் மனிதாபிமானம் சர்வதேசம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் ஈழத்தில் தமிழ் இனம் இருந்தது என்ற சுவடே இல்லாமல் காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிடும்.

ஏதாவது ஒரு சாட்டை சொல்லியே காலத்தை கடத்துகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் என்ற போர்வைக்குள் நரவேட்டையாடும் அமரிக்கா, இந்தியா, ஜப்பான், ரஷியா,பாக்கிஷ்த்தான் போன்ற நாடுகளும், மனிதாபிமான முகமூடியுடன் இலங்கைக்கு முண்டு கொடுத்துவரும் ஐரோப்பிய நாடுகளும் எமது அழுகுரலுக்கு ஒருபோதும் செவிசாய்க்கப்போவதில்லை. இவர்கள் எமக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்பி நாம் நடத்தும் எல்லாப் போராட்டங்களும் விளலுக்கு இறைத்த நீர் !

யாருக்கு வேண்டும் சர்வதேச அபிப்பிராயம் ? நாம் நாள்தோறும் செத்து மடியும்போது எங்கு போனது இந்தச் சர்வதேச அபிப்பிராயம் ? சிங்களவன் சாகும்போது மட்டும் கண்ணீர் விடும் அமைப்புத்தானே சர்வதேசம் ?!

இனிப் பேசிப் பயனில்லை ! அடிக்கு அடி. முந்திக் கொள்பவனுக்கே வெற்றியென்று ஆகிவிட்டது ! தேவையான ஏற்பாடுகள் முடிந்தபின் நாம் முந்திகொள்வதே நல்லது !

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கைச் செலவுகள் உச்ச கதியில் இருப்பதே போருக்கான ஆதரவாக மாறுகின்றது என்பதும் ஒரு உண்மை. அரசு மீதான மக்களின் விசனத்தை போருக்கான ஆதரவாக மாற்றுவதே சிங்களத்தலைமையின் கெட்டித்தனமாக உள்ளது.

பொருளாதார இலக்குகள் மீதும், இராணுவ இலக்குகள் மீதும் தாக்குதல் சமாந்தரமாக நடாத்தப்பட வேண்டும். அதே நேரம் சர்வதேசத்தில் நேசசக்திகளை இனம் கண்டு எமது போராட்டத்தை அங்கீகரிக்க செய்யவேண்டும்(இது புலம் பெயர்ந்த மக்களால் சாத்தியமாகும்). அமெரிக்காவும் அவரது அடிவருடிகளும் ஒரு போதும் தமிழ் மக்களுக்கு உதவ மாட்டார்கள்.

சுகன், உங்களின் செய்தி அலசலுக்கு பாராட்டுக்கள்.

அடியைத் தவற சிங்களவனுக்கு வேறு பாசை சரி வராது. இது தான் எங்களி வரலாற்றுப் பாடம். நாம் வெண்றால் தான் சர்வதேசமும் எமக்கும் மரியாதை தரும்.

  • 3 weeks later...

அடியைத் தவற சிங்களவனுக்கு வேறு பாசை சரி வராது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.