Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இருநாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு கத்தோலிக்க தேவாலயங்கள் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருநாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு கத்தோலிக்க தேவாலயங்கள் அழைப்பு

சிறீலங்கா கத்தோலிக்க தேவாலயங்கள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவையும் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் 48 மணித்தியாலங்களுக்கு போர்நிறுத்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

சிறீலங்காவில் கிறீஸ்தவர்கள் கொண்டாடும் கிறீஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைவிட கிறிஸ்தவ நாடுகளிடம் இந்த பயங்கர ஆயுத உற்பத்திகளை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் <_<

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று தொடக்கம் 48 மணிநேரம் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு கத்தோலிக்க திருச்சபை கோரியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிடமும் இக்கோரிக்கையை திருச்சபை விடுத்துள்ளது.

uthayan.com

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் மற்ற நாட்களில் மக்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா ? ஏனிந்த ரெண்டு நாட்களுக்கு மட்டும் போர் நிறுத்தம் ? தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் வந்ததே ? அப்போது ஏன் யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை ? இவர்கள் இவ்விரு நாட்களில் வேண்டுவதால் மட்டும் சமாதானம் வந்துவிடப் போகிறதா ?

கத்தோலிக்க திருச்சபையால் இங்கு நடை பெறும் திட்டமிட்ட இன அழிப்பை வெளியுலகிற்கு தகுந்த முறையில் கொண்டுசெல்ல முடியும். அதை அவர்கள் செய்கிறார்களா என்பது கேள்விக்குறிதான் ! அரசை பகைக்காமல் இருக்க வேண்டுமானால் தமிழ் பிரச்சனை பற்றி பேச முடியாதே ?!

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கமும் கொல்லப்பட்டது இதே கிறிஸ்மஸ் தினத்தில்தான்! அதை விட இன்னும் எத்தனை பாதிரிமார் காணாமல் போயுள்ளார்கள்!! ... இவற்றையே பெரிய அளவில் வெளியுலகிற்கு நொண்டு வர இவர்களால் முடியவில்லை??

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்க சுதந்திரப் போராட்டத்தில் கறுப்பின மேற்றானியரான பிஷப் டெஷ்மன்ட் டூட்டு,நெல்சொன் மண்டேலாவுடன் சேர்ந்து அம்மக்களின் விடிவுக்காக போராடினார். அவரது குரலுக்கு சர்வதேச ரீதியில் இன்றும் மதிப்பிருக்கிறது. இவர்களுடன் ஒப்பிடும் போது அதிகளவான படுகொலைகளுக்கும், அரச அட்டூழியங்களுக்கும் ஆளாக்கப்பட்டவர்கள் எமது தமிழீழ மக்களும் அதனோடினைந்த கத்தோலிக்கத் திருச்சபையும். இவர்கள் இன்னும் நிறையவே செய்ய வேண்டும் ! தனியே அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுப்பதால் மட்டும் எதுவும் ஆகிவிடப்போவதில்லை.

மடுத்தேவாலயத்தில் சிங்கள ராணுவம் தாங்கித் தாக்குதல் நடத்தி 40 பேரைக் கொன்றபோது "இதை யார் செய்தது என்று எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை " என்று மலுப்பல் பதிலை தந்து தனது கடமையிலிருந்து தப்பித்துக் கொண்டவர் அன்றய மன்னார் ஆயர்.

எமக்குத் தேவை இதுவல்ல, எமது இழப்புகளும், சிங்களவன் செய்யும் அட்டூழியங்களும் வெளியுலகிற்கு கொண்டுவரப்பட வேண்டும். கத்தோலிக்கத் திருச்சபைக்கு இருக்கும் உலகளாவிய செல்வாக்கைப் பாவித்து இதைச் செய்ய வேண்டும்.

அனால் எமது குருமார் ????? செய்வார்களா ?????

அய்யர்மார் குருக்கள்மார் நவராத்திரி சிவராத்திரி திருவெம்பாவை தீபாவளிக்கு வேண்டுகோள் விடுக்கலாமே? அதுகளுக்கு எப்பிடி பாதிரிமார் வேண்டுகோள் விடுறது?

அப்பிடியே இந்தியாவில உள்ள இந்து அமைப்புகள் ஊடாக வடக்கு கிழக்கில நடக்கிற அவலங்கள் இன அழிப்புகளை மாநாடுகள் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தி குறைந்த பட்சம் இந்திய மக்களின் கவனத்திற்கு ஆகுதல் கொண்டுவரலாமே?

தமிழரில் எண்ணிக்கையில் எத்தனை வீதம் கிறீஸ்தவர்கள் எத்தனை பாதிரிமார்கள் இருக்கிறார்கள்? எத்தனை வீதம் இந்துக்கள் என்று எண்ணும் சைவர்கள் இருக்கிறார்கள் அய்யர்மார் குருககள்மார் இருக்கிறார்கள்? இதுவரை அவர்கள் தமது மதசார் கட்டமைப்புகள் ஊடாக எத்தனை வேண்டுகோள்களை விடுத்தார்கள் ஒப்பீட்டளவில்? எந்தளவிற்கு இயங்கியிருக்கிறார்கள். தனிமனிதர்களாக எல்லா மதத்தவரும் தான் போராட்டத்திற்கு பங்களிக்கிறார்கள் இஸ்லாமியர்கள் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான், நீங்கள் என்னைத் தவறாக விளங்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் சொல்ல வந்தது, இந்து மதகுருமாருடன் ஒப்பிடும்போது கத்தோலிக்கக் குருமாரின் குரலுக்குச் சற்று மரியாதையுண்டு, ஏனென்றால் மேற்குலகின் அநேகமான நாடுகள் நடைமுறயில் கத்தோலிக்கத்தைப் பின்பற்றாது விட்டாலும் அவை அடிப்படையில் கத்தோலிக்க நாடுகளே. ஆகவே இந்நாடுகளில் கத்தோலிக்க மதகுருக்கள் சொல்வது எடுபடும். ஆனால் இந்து மதம் இருக்கும் ஒரே இடம் இந்தியாவும் ஒருசில இந்தியாவின் அயல் நாடுகளும். இந்தியா எமது குரலுக்குச் செவிமடுக்கும் நிலையில் இல்லையென்பது நாம் அறிந்த விடயம்.

அதேபோல், இஷ்லாமியத் தலைவர்களும், மக்களும் ஈழப் போராட்டத்துடன் தம்மை எவ்வளவு தூரத்திற்கு அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதுடந்தான் அவர்களது ஈழம் சார்ந்த குரல் இருக்கிறது( இதுபற்றி அதிகம் கதைக்க நான் இப்போது விரும்பவில்லை).

ஆகவே உள்ள மதத் தலைவர்களில் இப்பணியைச் செய்ய அதிக வாய்ப்பைக் கொண்டவர்கள், எமது கத்தோலிக்கக் குருமார்தான் என்பது எனது அபிப்பிராயம். அவ்வளவுதான் !

ஐயர்மாரும் குருக்களும் கோயிலில மணியடிச்சு புலிகளுக்கு தகவல் கொடுப்பதாக அல்லே முதலில சொன்னவங்கள். இப்ப நீங்களெல்லாரும் உப்படிக் கேக்கிறீயள். அவர்கள் என்னதான் செய்வார்கள் ஓரு சிறு குழுமம். தனிச்சு நிண்டும் செயல்படேலாது, சேர்ந்து நிண்டும் செயல்படேலாதவங்கள். இந்து சமூகத்தில கூட மதிப்ப அவர்கள் கேட்டுத்தான் வாங்கவேண்டியிருக்கேக்க அவங்களால என்ன செய்யமுடியுமெங்கிறீயள். சொல்லுங்கோ பாப்பம்.

அப்படியானால் மற்ற நாட்களில் மக்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா ? ஏனிந்த ரெண்டு நாட்களுக்கு மட்டும் போர் நிறுத்தம் ? தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் வந்ததே ? அப்போது ஏன் யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை ? இவர்கள் இவ்விரு நாட்களில் வேண்டுவதால் மட்டும் சமாதானம் வந்துவிடப் போகிறதா ?

முக்கியமாக கிறிஸ்மஸ் தினம் அன்று போர்நிறுத்தம் செய்யுமாறு திருச்சபை கேட்டதன் நோக்கம் இரவு நடுநிசி ஆராதனைகளில் மக்கள் கலந்துகொள்வதற்காக இருக்கலாம்.

ஐயர்மாரும் குருக்களும் கோயிலில மணியடிச்சு புலிகளுக்கு தகவல் கொடுப்பதாக அல்லே முதலில சொன்னவங்கள்.

ஓம் உண்மைதான். நிறைய ஐயர்மார் மணி அடிச்சு ஆமிக்காரனிட்ட அடிவாங்கி உள்ளார்கள்.

Edited by கலைஞன்

1987 ஆம் ஆண்டு, இந்திய இராணுவத்துடன் போர் நடந்துகொண்டிருந்தபோது, அன்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களால், நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இரு நாட்கள் போர்நிறுத்தம் செய்யும்படி இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது அநேகமானோருக்கு தெரிந்திருக்கும்....

இதற்கு மறுப்பு தெரிவித்த அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி, அதற்கான காரணத்தை பின்வருமாறு கூறியிருந்தார்..........

அதாவது" இலங்கைத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள், அவர்களால் நத்தார் போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை......எனவே அங்கு போர் நிறுத்தம் என்பது தேவையில்லை."

இவருடைய இந்த பதிலைக்கேட்ட முதலமைச்சர்(ஏற்கனவே நோய்வாய்பட்டிருந்த) மிகவும் மனமுடைந்து போய்விட்டார்..

பின்னர் நத்தார் தினத்திற்கு முதல்நாள் (24/12/87) மாரடைப்பு காரணமாக தனது உயிரை விட்டார்.

அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அன்று தேசியத்தலைவரால் இவரின் மறைவையொட்டி இரங்கல் அறிக்கை ஒன்று விடப்பட்டது.

எம்.ஜி.ஆரின் மறைவானது வழமைபோல, சிங்களத்தரப்பால் வெடி கொழுத்தி கொண்டாடப்பட்டது....

Edited by muruga

அப்போ இந்துக்களின் தீபத்திருநாளிற்கு அடுத்த வருடம் வேண்டுகோள் விடுவார்களா? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.