Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் போர் விமானத்தை கண்காணிக்கிறது இந்தியா உஷார் : தமிழக கடலோரங்களில் நவீன ரேடார் நிறுவ முடிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போர் விமானத்தை கண்காணிக்கிறது இந்தியா உஷார் : தமிழக கடலோரங்களில் நவீன ரேடார் நிறுவ முடிவு

புதுடில்லி: விடுதலைப்புலிகள் வான்வழி தாக்குதலில் கைதேர்ந்துள்ளதையடுத்து, தமிழக கடற்கரை பகுதிகளில் பாது காப்பை பலப்படுத்தவும், புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், இத்தாலி நாட்டிலிருந்து நவீன ரேடார்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய் துள்ளது.

இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. தரை வழியாக மட்டும் தாக்குதல் நடத்திவந்த புலிகள் சில மாதங்களுக்கு முன், திடீர் வான்வழியில் விமான தாக்குதல் நடத்தி இலங்கை ராணுவத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். வான்வழி தாக்குதலில் புலிகள் கைதேர்ந்தது சர்வதேச அளவில் குறிப்பாக இந்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க கடற்படையும், கடலோர படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வான்வழியையும் கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய விமானப்படையையும் மத்திய அரசு உஷார் படுத்தியுள்ளது. இது குறித்து, இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது: இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பு வான் வழி தாக்குதலில் திறன் பெற்று இருப்பது, தமிழகம் உள்ளிட்ட தென்மாநில கடற்கரை பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது தவிர, கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க, கடலோர காவல் படை, கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள் ளன. இத்துடன் விமானப்படையும் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளது.இதற்காக ஐரோப்பிய அமைப்பில் உள்ள இத்தாலி நாட்டில் செயல்பட்டு வரும் ரேடார் நிறுவனமான பின்மெகானியா எஸ்.பி.ஏ., என்ற நிறுவனத்துடன் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. ரூ.293.72 கோடி செலவில் நவீன ரேடார்கள் வாங்கி, தமிழக கடற்படை பகுதிகளில் நிறுவப்பட உள்ளன. இத்தாலி நிறுவனத்திடம் 13 ஏ.டிசி.ஆர்., 33 எஸ் ரக ரேடார்களும், 13 எஸ்.ஐஆர்.எஸ்., ரக ரேடார்களும் வாங்கப்பட உள்ளன. மூன்று ஆண்டுகளில் இந்த ரேடார்கள் சப்ளை செய்யப்பட்டு விடும். இந்திய விமான நிலைய ஆணையம் இந்த ஆண்டு துவக்கத்தில் இவ்வகை ரேடார்களை வாங்கி பெங்களூரு மற்றும் ஐதராபாத் புதிய விமான நிலையங்களில் பொருத்தியுள்ளது. அந்த ரேடார்களுடன், தென் இந்திய கடற்கரை பகுதிகளில் வைக்கப்படும் ரேடார்களும் நெட்ஒர்க் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் கடலில் 300 முதல் 500 நாட்டிகல் மைல்கள் துாரத்துக்கு வான்வழி கண்காணிப்பை ஏற்படுத்த முடியும்.இது தென் மாநில கடற்கரை பகுதிகளுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். தமிழகத்தில் உள்ள அணு உலைகளை பாதுகாக்க நடமாடும் ரேடார்கள் இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்படும். புதிய ரேடார்களுக்கான தொழில்நுட்பம் கேட்டு பெறப்படும். இதன் மூலம் உள்நாட்டிலேயே ரேடார்களை உருவாக்க முடியும். பெங்களூரு, ஐதராபாத் தவிர தென் இந்திய பகுதியில் உள்ள ஒன்பது நகரங்களில் இத்தாலி ரேடார்களை இந்திய விமான நிலைய ஆணையம் நிறுவ உள்ளது.தென்மாநில கடல் பகுதியில் விரைவில் ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை ஆகியவை இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதன் மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தடுக்கப்படும். இவ்வாறு விமானப்படை அதிகாரிகள் கூறினர்.

http://www.dinamalar.com/

ஸ்ரீ லங்காவிற்கான மேலதிக சேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்னை மரத்திலே தேள் கொட்டினால் பனை மரத்திலே நெறி கட்டிச்சாம்!

அதுசரி இந்தக் கூ(த்து)ட்டு ரோந்துக்கான செலவை எந்த நாடு பொறுப்பேற்கப் போகுதாம்? ஏனென்றால் இப்ப எல்லாமே இலாபக்கணக்குப் பார்த்துத்தான் நடக்கிறது. இலங்கையின் இராணுவப் படஜெட் நிறைவேறிய பின்னர்தான் இந்த அறிக்கை வெளிவந்திருக்கு.

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் பெப்ரவரி 4ம் இந்தியாவின் வேகமான நகர்வும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா சார்பான கொள்கையிலிருந்து முற்றிலும் வெளியேறினால் ஈழத்தமிழருக்கு விரைவில் ஒரு விடிவுகாலம் ஏற்பட இடமுண்டு. முக்கியமாக தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை நம்பியிருத்தல் அவர்களின் போராட்டங்களை முதன்மை படுத்தல் என்பன கைவிடப்படல் வேண்டும். இதை நாம் தொடர்சியாக செய்வதால் தான் சில வல்லரசுகள் இன்றும் எம்மை சந்தேக கண்கொண்டு பார்க்கின்றன அல்லது நெருங்காமல் இருக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்காணிக்கும் வகையில் இத்தாலியிடமிருந்த நவீன ராடர்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய விமானப் படை முடிவு

வீரகேசரி நாளேடு

விடுதலைப் புலிகளின் விமானங்களை கண்காணிக்கும் வகையில் இத்தாலியிடமிருந்த நவீன ராடர்களை கொள்வனவு செய்வதற்கு இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது. புலிகள் வான்வழித் தாக்குதலில் கைதேர்ந்துள்ளதையடுத்து தமிழக கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்தும் கண்காணிப்பினை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து தமிழகத்திலிருந்து வெளிவரும் "தினமலர்' நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையல் இராணுவத்திற்கும் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. தரைவழியாக மட்டும் தாக்குதல் நடத்திவந்த புலிகள் சில மாதங்களுக்கு முன் திடீர் வான்வழியில் விமானத் தாக்குதல் நடத்தி இலங்கை இராணுவத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

வான்வழித் தாக்குதலில் புலிகள் கைதேர்ந்தது சர்வதேச அளவில் குறிப்பாக இந்திய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்க கடற்படையும், கடலோர படையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வான்வழியையும் கண்காணிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறியதாவது;

இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பு வான்வழி தாக்குதலில் திறன் பெற்று இருப்பது, தமிழகம் உள்ளிட்ட தென்மாநில கடற்கரை பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க, கடலோர காவல் படை, கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இத்துடன் விமானப் படையும் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளது. இதற்காக ஐரோப்பிய அமைப்பில் உள்ள இத்தாலி நாட்டில் செயல்பட்டு வரும் ராடர் நிறுவனமான பின்மெகானியா எஸ்.பி.ஏ. என்ற நிறுவனத்துடன் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.293.72 கோடி செலவில் நவீன ராடர்கள் வாங்கி தமிழக கடற்படை பகுதிகளில் நிறுவப்பட உள்ளன.

இத்தாலி நிறுவனத்திடம் 13 ஏ.டி.சி.ஆர்., 33 எஸ். ரக ராடர்களும், 13 எஸ்.ஐ.ஆர்.எஸ். ரக ராடர்களும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. மூன்று ஆண்டுகளில் இந்த ராடர்கள் விநியோகம் செய்யப்பட்டு விடும். இந்திய விமான நிலைய ஆணையம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இவ்வகை ராடர்களை வாங்கி பெங்களூர் மற்றும் ஐதராபாத் புதிய விமான நிலையங்களில் பொருத்தியுள்ளது. அந்த ராடர்களுடன் தென் இந்திய கடற்கரை பகுதிகளில் வைக்கப்படும் ராடர்களுக்கிடையில் வலைப்பின்னல் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் கடலில் 300 முதல் 500 நாட்டிகள் மைல்கள் தூரத்துக்கு வான்வழி கண்காணிப்பை ஏற்படுத்த முடியும். இது தென் மாநில கடற்கரை பகுதிகளுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். தமிழகத்தில் உள்ள அணு உலைகளை பாதுகாக்க நடமாடும் ராடர்கள் இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்படும்.

புதிய ராடர்களுக்கான தொழில் நுட்பம் கேட்டு பெறப்படும். இதன் மூலம் உள்நாட்டிலேயே ராடர்களை உருவாக்க முடியும். பெங்களுப் ஐதராபாத் தவிர தென் இந்திய பகுதியில் உள்ள ஒன்பது நகரங்களில் இத்தாலி ராடர்களை இந்திய விமான நிலைய ஆணையம் நிறுவ உள்ளது. தென்மாநில கடல் பகுதியில் விரைவில் இராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர பாதுகாப்பு படை ஆகியவை இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட உள்ளன. இதன் மூலம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தடுக்கப்படும்

அப்படியென்றால் இந்திய ராடர்களை உருக்கி மண்வெட்டி செய்யச் சொன்னவையள் சரியாகத்தான் சொல்லியிருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes::D:D அதுமட்டுமல்ல இறைவன், சோனியாவின் சொந்தக்காரரின்ர கம்பனியில தான் வேண்ட வேணுமெண்டு அந்த அம்மையார் கேட்டிருக்கிறா போல !!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்தங்களை பலப்படுத்துவதற்கு இதான் தருணம்

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: ராஜீவ் காந்தி சுவீடனிடமிருந்து போபோர்ஷ் பீரங்கி வாங்கி தனது உறவுகளை பலப்படுத்திய மாதிரி, அவற்ற மனுஷியும் தன்ர ஊரிலிருந்து ராடர் வாங்கி உறவுகளைப் புதுப்பிக்கப் போறா போல. கோவிந்தா...கோவிந்தா !


புலிகள் வான்வழித் தாக்குதலில் கைதேர்ந்துள்ளதையடுத்து தமிழக கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்தும் கண்காணிப்பினை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

புலிகளின் வலிமையை தெரியாத புரியாத நம்மவர்கள் இந்தச் செய்தியை பார்த்தாவது புரிந்துகொள்ளுங்கள்

ஒரு மிகப்பெரிய நாடு புலிகளுக்கு பயந்து தற்பாதுகாப்புத் தேடுதெண்டால் புலிகளின் பலத்தையாராலும் கணக்கிடமுடியாது

தங்கள் நாட்டுத் பழைய காயலான் கடைத் தாயாரிபுகளை அண்டைய நாட்டுக்கு கொடுத்து விட்டு இவர்கள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கிறார்கள். அவர்களின் தயாரிப்புகளில் அத்தனை நம்பிக்கை.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக வல்லரகுகளிள் இந்தியாவும் ஓன்றாம்

உண்மையா?

கட்டுநாயக்காவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட வான் தாக்குதலின்போது, இந்தியா கொடுத்து உதவிய இராடர்கள் வேலை செய்யவில்லை என்று சிங்களத்தரப்பு சொன்னதன் பொருள் இப்பதான் புரிகிறது

என்ன இருந்தாலும் வருங்கால வல்லரசு வல்லரசுதான்.........

  • கருத்துக்கள உறவுகள்
:lol::D யாரை வல்லரசு என்று குறிப்பிட்டீர்கள் முருகா ? தமிழீழத்தைத் தானே, நான் எங்கே நீங்கள் இந்தியாவைக் குறிப்பிட்டீர்களோ என்று பயந்து விட்டேன் !!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.