Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திரலோகத்தில் நா. அழகப்பன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்குள் ஷூட்டிங் - பொங்கிய பக்தர்கள்

theethasharmavadivelu25hl1.jpg

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோவிலில் நடந்த வடிவேலு நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஷூட்டிங்கால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்தக் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் வடிவேலு நாயகனாக நடிக்க, தீத்தா ஷர்மா ஜோடி போட, தம்பி ராமையா இயக்க,ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் ஷூட்டிங்கை இங்கு நடத்தி வருகின்றனர்.

இதற்காக 500க்கும் மேற்பட்ட படக்குழுவினர் கோவிலில் குவிந்தனர். பிரமாண்ட யாக சாலை செட்களும் போடப்பட்டது.

இதனால் பகலில் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கோவில் நிர்வாகமும், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

ஆனால் படக்குழுவினரோ, அதை கோவில் என்றும் பாராமல், கண்ட இடத்தில் சாப்பிடுவது, சாப்பிட்ட இலையை அப்படியே போட்டு வைப்பது என்று கோவிலையே நாறடித்து வைத்தனர்.

இதனால் பக்தர்கள் பெரும் அதிருப்தியும், கோபமும் அடைந்தனர். கோவில் நிர்வாகம், பணத்திற்காக கோவிலை வாடகைக்கு விட்டு, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதைப் பொறுக்க முடியாத பொதுமக்களும், பக்தர்களும், பேரூராட்சித் தலைவர் செல்வமேரி அருள்ராஜிடம் சென்று எப்படி படக்குழுவினருக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தீர்கள் என்று கேட்டனர். ஆனால் அவரோ இதுபற்றி எதுவும் தனக்கு தெரியாது என்றார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், திமுக நகர செயலாளர் சதீஷ் ஆகியோர் பொதுமக்களுடன் திரளாக சென்று படப்பிடிப்பு குழுவினரிடம் படப்பிடிப்பை நிறுத்தக் கோரினர். ஆனால் அவர்களோ முறையாக அறநிலையத் துறையினரிடம் வாங்கிய அனுமதி கடிதத்தை

எடுத்துக் காட்டி, நிறுத்த முடியாது என்று தெனாவெட்டாக பேசியுள்ளனர்.

இதனால் கடுப்பான பொதுமக்கள் படப்பிடிப்புக் குழுவினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமாவதைப் பார்த்த படக்குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு உடனடியாக இடத்தைக் காலி செய்தனர்.

இருப்பினும் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் இரவு நேரத்தில் வந்து படமாக்கியுள்ளார் இயக்குநர் தம்பி ராமையா.

மிகப் பழமையான, புராதனமான இதுபோன்ற கோவில்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரவே கூடாது. சினிமாக்காரர்களால் கோவிலின் புனிதமும், சுத்தமும் கெட்டுப் போய் விட்டது என்று அப்பகுதி பொதுமக்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர்.

http://thatstamil.oneindia.in/movies/speci...ing-241207.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு படத்துக்கும் அந்தமாதிரி செட் போடுறம் பிரமாண்டமாய் எடுத்துக்கிழிக்கறம் எண்டாங்கள் அவ்வளவு கோடி செலவு எண்டுறாங்கள் பிறகு என்ன கோதரிக்கு கோயில் மண்டபத்துக்கை போய் நிண்டு டான்ஸ் ஆடுறாங்கள் எல்லாம் சரி மற்றவங்களுக்குத்தான் அறிவில்லையெண்டால் உவன் வடிவேலுவுக்கு எங்கை போச்சு அறிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு படத்துக்கும் அந்தமாதிரி செட் போடுறம் பிரமாண்டமாய் எடுத்துக்கிழிக்கறம் எண்டாங்கள் அவ்வளவு கோடி செலவு எண்டுறாங்கள் பிறகு என்ன கோதரிக்கு கோயில் மண்டபத்துக்கை போய் நிண்டு டான்ஸ் ஆடுறாங்கள் எல்லாம் சரி மற்றவங்களுக்குத்தான் அறிவில்லையெண்டால் உவன் வடிவேலுவுக்கு எங்கை போச்சு அறிவு

அதுதானுங்க நகைச்சுவை நடிகராய் இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு ரெம்பப் பெரிய கீரோ ஆகிட்டாரே..! :D:lol:

கடவுள் கல்லாகவே இருப்பதால் எல்லாம் கண்மூடித்தனமாக நடக்கின்றன

கடவுள் கல்லாகவே இருப்பதால் எல்லாம் கண்மூடித்தனமாக நடக்கின்றன

கடவுள் வருவதற்கு உண்மையான பக்தன் பூலோகத்தில் இல்லாமல் போயிட்டான்.. அவளவுதான்..! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் வருவதற்கு உண்மையான பக்தன் பூலோகத்தில் இல்லாமல் போயிட்டான்.. அவளவுதான்..! :D

அதுமட்டுமா மனிதனாலேயே கணக்கிட முடியாத அளவுக்கு இந்தப் பிரபஞ்சம் விரிந்து கிடக்கிறது. கடவுளுக்கு எப்பபார் பூமியில உள்ள மனிசரைக் கவனிச்சிட்டு இருக்கிறதுதான் டியூட்டியா என்ன..! அமெரிக்காவும் புஷ்ஷும் போல சதா அடுத்தவனை எப்படி சுரண்டிறது என்று சிந்திச்சுக் கொண்டிருக்கிறவங்களுக்கு மட்டும் தான்.. பூமியோட மினக்கெட அதிக சாத்தியம்..! :D:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் வருவதற்கு உண்மையான பக்தன் பூலோகத்தில் இல்லாமல் போயிட்டான்.. அவளவுதான்..! :D

இவருக்கு வாற முறை ஹம் கோயிலிலை இருக்கு விளையாட்டு :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுமட்டுமா மனிதனாலேயே கணக்கிட முடியாத அளவுக்கு இந்தப் பிரபஞ்சம் விரிந்து கிடக்கிறது. கடவுளுக்கு எப்பபார் பூமியில உள்ள மனிசரைக் கவனிச்சிட்டு இருக்கிறதுதான் டியூட்டியா என்ன..! அமெரிக்காவும் புஷ்ஷும் போல சதா அடுத்தவனை எப்படி சுரண்டிறது என்று சிந்திச்சுக் கொண்டிருக்கிறவங்களுக்கு மட்டும் தான்.. பூமியோட மினக்கெட அதிக சாத்தியம்..! :D:icon_idea:

இதை இப்படி சொன்னா நல்லா இருக்கும் சிங்களவன் ஈழத் தமிழரின் உயிரை குடிக்க இந்தியா துணை நிற்பது போல

அதுக்கு மணிமகுடம் சூட்டுவது போல இந்திய பிரதமர் சிங்கள சுதந்திர தினத்துக்கு வந்து வாழ்த்த போறாராம்

Edited by tamillinux

இவருக்கு வாற முறை ஹம் கோயிலிலை இருக்கு விளையாட்டு :icon_idea:

சென்றமுறை மோகன் அண்ணாவை சந்திச்சதைபற்றி எழுதினேன்.. சரி.. அடுத்தமுறை குமாரசாமியை சந்திச்சால்.. அதைப்பற்றியும் எழுதலாம்.. ஹம் அம்பாளைப்பற்றி எழுதலைத்ததானே?! :D :D

  • 2 weeks later...

அட எப்படி இருந்த வடிவேல் இப்படி ஆகிட்டார் :) பட் நேக்கு இதில ஒரு சந்தோசம் ஏனென்றா ஜம்மு பேபி கூட வரும் காலத்தில அவுஸ்ரெலிய பிரதமர் ஆகினாலும் ஆகலாம்..... :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.