Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளிர் போக்கும் ஞாபகங்கள்- வாசுதேவன் கவிதைகள்

Featured Replies

குளிர் போக்கும் ஞாபகங்கள்.

பாலத்தின் கீழே படர்ந்தோடும் நீரேபோல்

பாய்ந்தோடிப்போனதடி கண்ணம்மா காலத்தின் பயணம்.

கனியெனவே நானுரைத்தேன் நின் பெயரை

இனியொருகால் வருமோடி அவ்வின்பம்.

வருடங்கள் பலவாகியென்விழிகள் உனைக்காணும்

வழக்கிழந்து போனதுண்மை கண்ணம்மா.

இருந்துமென்ன மனதுழலும் நினைவுகளை

மறுத்தலொன்று ஆகுதலோ நடக்குதில்லை.

ஒருத்திக்கே தினமும் அன்புரைத்தல்

ஓரவஞ்சம் என அறிவேன் இருந்துமென்ன

வேறு வழியில்லையடி கண்ணம்மா.

வேதனைதான் மிஞ்சி இப்போ நிற்குதடி.

கூடிவாழ்ந்தோம் உண்மையடி கண்ணம்மா

கூடுடைந்து போனதுவும் குட்டை கலங்கியதும்

பீடை வந்து நாம் பிரிந்தது போனதுவும்

காடெரிந்து சாம்பரென ஆகியதாய்ப் போனதடி.

தொலைத் தொடர்பில் கேட்டேனுன் குரலின்று

உடலிலாக் குரலெனினும் உயிர்குடித்த குரலடியோ

கண்ணம்மா உறைந்து நின்றேன் ஒரு கணத்தில்.

அழிந்தேதான் வாழுவது அழுத்தியதே என்மனதை.

பதினாறில் நீயிருந்தாய் பத்தெனக்கோ அதிகம்

புதியோனாய் நானும் பூவைப்போல் நீயும்

மதனோடு வாழ்ந்து மதியிழந்து மகிழ்வுற்றோம்.

பொறுப்பிழந்த வாழ்வைப் பொறுக்கவில்லை விதியடியோ.

காதலெனும் தூக்கத்தின் காலனெனும் விழிப்புவந்து

போதை கலைத்தெனக்குப் பொறுப்பைத் தந்ததனால்

தூரத்துக் குரல்கள் துரத்திவந்து வருத்தியதால்

இயல்பழிந்து போன கதை எவ்வாறு நானுரைப்பேன்.

ஒருநாட்காய் வரைந்து யுகங்கள் பல மனதுறையும்

பெருங்கோலம் ஒன்றினைப்போல் கண்ணம்மா நம்

குறுங்கதையும் தொடருதடி உள்ளத்தே கண்டாயோ

வருங்காலமெங்கணுமே வாழுமடி நம் கதையே.

துக்கமெனக்கென்றால் தூக்கமிழந்தவளே,

குழந்தையாய் நீயிருந்தும் தாயாக அணைத்தவளே

குரல் கேட்டல் போதுடிமடி கண்ணம்மா

குளிர்போக்கும் ஞாபகங்கள் அழிவதில்லை கண்டாயே.

28.12.2006.

Edited by vasudevan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாசுதேவன்

உங்கள் கவிதைகள் இப்பதான் படிக்கிறேன்.

நல்லாகவே எழுதுகிறீர். இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்?

நாங்கள் வாய்பாடாக வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், என்றவர்களை அறிந்திருந்தோம்.

இப்போ உமது பெயரும் சேர்க்க வேண்டுமோ தெரியவில்லை.

வ.ஐ.ச .ஜெயபாலன், சேரன், ஆகிய இந்த மாபெரும் கவிஞர்கள் தங்களைத்தவிர வேறுயாரும் ஈழத்தில் கவிஞர்களாக இருப்பதாக அறிவிப்பதில்லை. சொல்வதுமில்லை.

யாழ் களத்தில் இதுவரை எழுதிய ஜெயபாலன் வேறு கவிஞர்கள் பற்றி மூச்சு விட்டதில்லை.

எப்படி நீர் இதற்குள் நுழைந்தீர்.

வாழ்க உம் புகழ்.

வளர்க உம் கவியின் புகழ்.

தி.ஆபிரகாம்

  • கருத்துக்கள உறவுகள்

கூடிவாழ்ந்தோம் உண்மையடி கண்ணம்மா

கூடுடைந்து போனதுவும் குட்டை கலங்கியதும்

பீடை வந்து நாம் பிரிந்தது போனதுவும்

காடெரிந்து சாம்பரென ஆகியதாய்ப் போனதடி.

அழகான வரிகள் .

தொடர்ந்து எழுதுங்கள். கவிதை அழகு

  • கருத்துக்கள உறவுகள்

தி.ஆபிரகாம்'

வணக்கம் வாசுதேவன்

உங்கள் கவிதைகள் இப்பதான் படிக்கிறேன்.

நல்லாகவே எழுதுகிறீர். இவ்வளவு நாளும் எங்கிருந்தீர்?

நாங்கள் வாய்பாடாக வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், என்றவர்களை அறிந்திருந்தோம்.

இப்போ உமது பெயரும் சேர்க்க வேண்டுமோ தெரியவில்லை.

வ.ஐ.ச .ஜெயபாலன், சேரன், ஆகிய இந்த மாபெரும் கவிஞர்கள் தங்களைத்தவிர வேறுயாரும் ஈழத்தில் கவிஞர்களாக இருப்பதாக அறிவிப்பதில்லை. சொல்வதுமில்லை.

யாழ் களத்தில் இதுவரை எழுதிய ஜெயபாலன் வேறு கவிஞர்கள் பற்றி மூச்சு விட்டதில்லை.

எப்படி நீர் இதற்குள் நுழைந்தீர்.

வாழ்க உம் புகழ்.

வளர்க உம் கவியின் புகழ்.

தி.ஆபிரகாம்[/quote

அய்யா ஆபிரகாம் வாசுதேவன் இவ்வளவுகாலமும் இஞ்சைதாான் இருந்தவர்ஆனாால்இப்பததான் சேரவேண்டிய கூட்டத்தோடை சேர்ந்திருக்கிறார். அடுத்ததாய் ஜெயபாலன் தான் மூச்சுவிடவே சிரமப்படுகிறார் இதக்கை எப்பிடி மற்றவை பற்றிய மூச்சைச விடுகிறது.சரி வாசுதேவன் தொடந்து எடுத்து விடுங்கோ

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய சாஸ்திரி,

வாசுதேவனும் நானும் நல்ல நண்பர்கள் . அவர் தமிழ் கூறும் நல்லுல்கம் அறிந்த கவிஞர். நீங்கள் தேடி வாசித்திருந்தால் அறிந்திருப்பீர்கள். அது எனது தவறல்ல. கவிஞர்களை அறிமுகப் படுத்துகிறது விமர்சகர்கள் பல்கலைக் களகங்கள் இல்க்கிய சஞ்சிகைகள் என்பவற்றின் பணி. அவர்கள் இயன்ற அளவு செய்திருக்கிறார்கள். நீங்கள் அவற்றை வாசியாமல் பேசுவது தப்பு. பப்லோ நெருடாவில் இருந்து பாரதிவரை பாரதிதாசனில் இருந்து ஒக்டாவியோபாஸ்வரை உலக கவிஞர்கள் தங்கள் கவிதைகளைத்தான் எழுதினார்கள். நான் என் கவிதைகளுக்கு மேலதிகமாக இராணுவ அரசியல் ஆய்வுகளில் ஈடுபட சபிக்கப் பட்டிருக்கிறேன். முன்னுரைகள் கலந்துரையாடல்கள் வெளியீடுகளில் கலந்துபேசி இருக்கிறேன். நமது யாழ் கள கவிஞர் வசீகரனின் தொகுதிக்குக்கூட முன்னுரை எழுதியிருக்கிறேனே. வாசித்தீர்களா? நீங்கள் நிச்சயம் எனது பங்களிப்புகளை வாசித்தே இருப்பீர்கள். என் மூச்சு ஒழுங்காக இருக்கிறது சாஸ்திரி. உங்கள் மூச்சும் அப்படியே அக வேண்டுகிறேன். தேடி வாசியுங்கள். எழுதமுன் யோசியுங்கள். நான் விரும்பிவாசிக்கிற நகைசுவை எழுத்தாளர் நீங்கள். ஏன் இப்படி எழுதுகிறீர்கள். நான் யாழ்க் களத்தில் எழுதுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா. இனி நான் யாழ்க் களத்துக்கு எப்பவும் எழுதமாட்டேன். சந்தோசம்தானே சாஸ்திரி. தயவு செய்து இப்படி வக்கிரமாக எழுதாதீர்கள். அது என்னையல்ல உங்களையே இழிவு படுத்தும். உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2008 யாழ்க்கள உறுப்பினர்களின் நட்புக்கான ஆண்டாகச் சிறக்கட்டும் சாஸ்திரி.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞ!

சினம் தணிக!

பழுத்த மரத்திற்கு கல்லெறி விழத்தான் செய்யும்.

விரும்பினால் பழத்தை உதிர்த்துவிடு. இல்லையேல் கல்லெறி படதாது போல் மெளனம் காததிடு.

வெம்பல்களை மட்டும் உதிர்காதே.

அவையில் இருந்து வெளியேறுவதும் உள்வருவதும் அதனை ஆயுதாமாக மிரட்டுவதும் அசிங்கமான ஐனநாயகம்.

உன்னால் யாழ்களம் பொலிவுறுகின்றது.

வாசுதேவனால் மேலும் மிளர்கின்றது.

இப்படியானோர் இன்னும் நுழைய வாய்பாகின்றது.

யாழ் களம் செழிக்கட்டும்.

கவிஞ உன்பணியை தொடர். பலனை எதிர்பாராதே.

தி.ஆபிரகாம்

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய சாஸ்திரி,

வாசுதேவனும் நானும் நல்ல நண்பர்கள் .

எனக்குத்தெரியும் ஜெயபாலன் நீங்கள் நல்ல நண்பர்கள் என்று

அவர் தமிழ் கூறும் நல்லுல்கம் அறிந்த கவிஞர். நீங்கள் தேடி வாசித்திருந்தால் அறிந்திருப்பீர்கள். அது எனது தவறல்ல. கவிஞர்களை அறிமுகப் படுத்துகிறது விமர்சகர்கள் பல்கலைக் களகங்கள் இல்க்கிய சஞ்சிகைகள் என்பவற்றின் பணி. அவர்கள் இயன்ற அளவு செய்திருக்கிறார்கள். நீங்கள் அவற்றை வாசியாமல் பேசுவது தப்பு.

உண்மையாகவா எனக்கத்தெரியாது வாசுதேவன் மொழிபெயர்ப்பு செய்த என்னுடைய பிறப்பு அத்தாட்சிபத்திரம் ஒன்றை மட்டும்தான் நான் படித்திருக்கிறேன்

பப்லோ நெருடாவில் இருந்து பாரதிவரை பாரதிதாசனில் இருந்து ஒக்டாவியோபாஸ்வரை உலக கவிஞர்கள் தங்கள் கவிதைகளைத்தான் எழுதினார்கள். நான் என் கவிதைகளுக்கு மேலதிகமாக இராணுவ அரசியல் ஆய்வுகளில் ஈடுபட சபிக்கப் பட்டிருக்கிறேன். முன்னுரைகள் கலந்துரையாடல்கள் வெளியீடுகளில் கலந்துபேசி இருக்கிறேன். நமது யாழ் கள கவிஞர் வசீகரனின் தொகுதிக்குக்கூட முன்னுரை எழுதியிருக்கிறேனே. வாசித்தீர்களா? நீங்கள் நிச்சயம் எனது பங்களிப்புகளை வாசித்தே இருப்பீர்கள்.

படித்திருக்கிறேன் அதனால்தான் உங்கள் வேலைப்பழு காரணமாக உங்களிற்:கே மூச்சுவிட நெரம் இல்லை பிறகெப்படி மற்றவர்களை பற்றி மூச்சுவிட நேரமிருக்கும் என்று எழுதினேன்

என் மூச்சு ஒழுங்காக இருக்கிறது சாஸ்திரி. உங்கள் மூச்சும் அப்படியே அக வேண்டுகிறேன். தேடி வாசியுங்கள். எழுதமுன் யோசியுங்கள். நான் விரும்பிவாசிக்கிற நகைசுவை எழுத்தாளர் நீங்கள். ஏன் இப்படி எழுதுகிறீர்கள். நான் யாழ்க் களத்தில் எழுதுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா.

உங்களிற்கு ஏதும் இரத்த அழுத்த பிரச்சனையா ஜெயபாலன் இப்படி எதுக்கெடுத்தாலும் கோபப்படகூடாது

இனி நான் யாழ்க் களத்துக்கு எப்பவும் எழுதமாட்டேன். சந்தோசம்தானே சாஸ்திரி.

இல்லை கவலை

தயவு செய்து இப்படி வக்கிரமாக எழுதாதீர்கள்.

நான் எழுதியதில் வக்கிரமான ஒரு சொல்லை எனக்கு கோடிட்டு காட்டுங்:கள் ஏனென்றால் உங்களை விட எனக்கு தமிழறிவு குறைவு

அது என்னையல்ல உங்களையே இழிவு படுத்தும். உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2008 யாழ்க்கள உறுப்பினர்களின் நட்புக்கான ஆண்டாகச் சிறக்கட்டும் சாஸ்திரி.

உங்களிற்கும் புத்தாண்டு வாழ்த்தக்கள் அடுத்த புத்தாண்டில் நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களில் வேண்டியதை எடுத்து வேண்டாததை விட்டு விட்டு வேண்டிய விமர்சனங்களிற்:கு ஆக்கமான பதில் விமர்சனங்களை எழுத பண்படவேண்டும் என்கிறதுதான் எனது விருப்பம் அதை எங்கே எப்போது எழுதுவது என்றுதான் யோசித்து கடைசியாய் இப்படி கோபப் படுத்தி எழுதினால்தான் புரியும் என்று எழுதினேன் இனிமேலாவது எடுத்ததற்கொல்லாம் யாழை விட்டு போகிறேன் எழுதமாட்டேன் என்றெல்லாம் குழந்தைகள் போல அடம் பிடிக்காமல் கருத்துக்கள உறவுகளிற்கு முடிந்தால் பதிலளியுங்கள் இல்லா விட்டால் பேசாமல் தொர்ந்து கொண்டேயிருங்கள் கவிஞன் என்றால் கோபம் மட்டுதான் வரவேண்டும் என்றில்லை அனைவரையும் அரவணைத்துப்போகும் பக்குவமும் வேண்டும்.ஏனெனில்கடந்தகாலத்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.