Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போறவழியில தெருவில கிடைச்ச கடவுள் பற்றிய ஒரு துண்டுப்பிரசுரம்..

Featured Replies

வணக்கம், இண்டைக்கு பள்ளிக்கூடத்தால இரவு வீட்ட வந்துகொண்டு இருக்கேக்க சந்தியில ஒரு பெண் என்னை மறிச்சி ஒரு துண்டுப்பிரசுரம் மாதிரியான சின்னப்புத்தகம் ஒண்டு தந்தா. நானும் அத வாசிச்சுக்கொண்டு வீட்ட மெல்ல மெல்ல நடந்து வந்தன்.

என்னைப் பொறுத்தவரையில் மதம் என்றவகையில் எனக்கு எதுவித வேறுபாடுகளும் இல்லை. எந்தமதத்திலும் கூறப்படும் விடயங்களை காதுகொடுத்து கேட்பேன். பிடித்தால் அவற்றை பின்பற்றவும் செய்வேன். உங்களுக்கும் போற வாற இடங்களில இப்பிடி துண்டுப்பிரசுரங்கள், புத்தகங்கள் கிடைச்சு இருக்கும். சிலருக்கு வீடுகளிலையும் வந்து தந்து இருப்பீனம். இப்பிடி ஆயிரக்கணக்கானதுகள நீங்கள் ஏற்கனவே கண்டு இருக்கலாம்.

நான் எனக்கு தெரிவில கிடைச்ச புத்தகத்த படம் பிடிச்சு யூரியூப்புல ஒட்டி இருக்கிறன். உங்களுக்காக இஞ்சையும் இத இணைக்கிறன்.

புத்தகத்தின் தலைப்பு Have you heard the way to new life?

சிலருக்கு இதப்பார்க்க எரிச்சலா இருக்கலாம். சிலருக்கு அறுவையா, நக்கலா, கோவமாக் கூட இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரையில் மதப் பிரச்சாரங்களாக இருந்தாலும் சரி, அவை தனிமனிதர்களிற்கு நிம்மதியை, அமைதியை, சந்தோசத்தை கொடுக்குமாக இருந்தால் அவற்றை நிச்சயம் வரவேற்பேன். சந்தியில குளிருக்க நின்று அந்தப்பெண் தந்த இந்தப் பிரசுரத்த சும்மா பாத்துவிட்டு அல்லது வாசித்து பார்க்காமல் அப்படியே குப்பையுக்க போட்டுட்டு போக என்னால் முடியவில்லை. மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தெருவில் இதுபோன்ற துண்டுப்பிரசுரங்கள் கிடைத்து நேரமிருந்தால் அதை வாசித்துப் பர்க்கலாம். ஆனால் சிலர் தங்கள் சமயம் தான் மெய்யான சமயம் என்ற எண்ணத்தோடு அந்த பிரசுரங்களை தந்தால் பிறகு என்னிடம் அவர்கள் நெருங்கவே முடியாது. உலகில் எத்தனையோ சமயங்ள் இருக்கின்றன அதில் உண்மையெது பொய் எது என்று அறிவது இயலாத ஒன்று. மற்றைய சமயங்களை மதிக்கவேண்டும் ஆனால் அவற்றை நாம் பின்பற்ற வேண்டுமென்பதில்லை. அவனவன் சமயத்திலேயே நிறைய நல்ல விடயங்கள் சொல்லப்பட்டிருக்கும் நாம்தான் அவற்றைக் கண்டுகொள்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கலைஞன். இதுக்கெல்லாம் கவலைப்படுகின்றீர்கள். வேலை வெட்டியில்லாமலா அவர் துண்டு கொடுத்திருப்பார். ஆட்களை மாத்திக் கொடுத்தால் அதற்கு குறித்தளவு பணம் கிடைக்கும் அவருக்கு. உங்களுக்குத் துண்டு தான்.... புதிய உலகம் ... போய்ப் பார்க்லாமே!

  • தொடங்கியவர்

ஓம் நான் புதிய உலகத்துக்க ஏற்கனவே வந்துட்டன். நீங்களும் இதில் ஆர்வமாய் இருக்கக்கூடும் எண்டுதான் இஞ்ச இத நானும் இணைச்சு இருக்கிறன். இதில கூறப்பட்டத எல்லாம் நான் ஏற்றுக்கொள்ளுறன் எண்டு இல்ல. ஆனா யோசிக்க வேண்டிய விசயங்களும் இதுக்க இருக்கிது.

உதாரணமா இப்பிடி ஒண்டு இதில எழுதி இருக்கிது..

WE HAVE

SEPERATED

OURSELVES

FROM GOD

AND TURNED

TO OUR OWN

WAY, SO WE

MISS THE LOVE AND

NEW LIFE HE HAS FOR US.

இதே மாதிரி விசயத்த தமிழ் சித்தர்களும் சொல்லி இருக்கிறீனம். அதாவது இப்ப குழந்தைகள பாருங்கோ. அதுகளில கடவுள் எம்மில் குடிகொள்ளவதை விட அதிகளவில் குடிகொண்டு இருப்பார் எண்டு சித்தர்கள் சொல்லுறீனம். காரணம் என்னவெண்டா நாங்கள் வளர, வளர எங்கட இதயம் துலைஞ்சு போகிது. மனம் மட்டும் பூதாகாரமா வளர்ந்து கொள்ளுது. கடவுளைக் காண, கடவுளை எங்களுக்குள் உறைய வைக்க நாங்கள் குழந்தைகள் போல் இருக்கவேண்டும்.

நான் சொல்லிறது விளங்குதோ? இல்லாட்டி உங்கள ரொம்ப குழப்புறனோ?

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் துண்டு கொடுத்தவர் தாங்கள் தானே என்ற டவுட்டு வருது.

உப்படிக் குழப்பித் தானே, மண்டை காய வைச்சுச் சனத்தை இழுக்கின்றது.

ஜெனரல்!!

பள்ளிகூடத்தால இரவில வரும் போது வழியில யாரு மறித்தா ஒன்றும் வாங்க கூடாது என்று என்ட மம்மி சொல்லி இருக்கா உங்களின்ட மம்மி சொல்லவில்லையோ :lol: ....குப்பையில போடாம இங்கே வந்து போட்டதும் ஒன்று தான் மறந்து போனியள் போல :D எனிவே நேக்கும் இதற்கும் வெகுதூரம் எனக்கு எது நிம்மதி என்றா ஜைபோர்டில மெலோடி பாட்டை கேட்டு கொண்டு நித்தா கொள்ளுறது தான் :) .....இல்லாட்டி கனவில அவுஸ்ரெலிய பிரதமரா வாரது :lol: ...இப்ப அடிகடி என்ட கனவு அது தான் ஜெனரல்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அந்தத் துண்டு கொடுத்தவர் தாங்கள் தானே என்ற டவுட்டு வருது.

உப்படிக் குழப்பித் தானே, மண்டை காய வைச்சுச் சனத்தை இழுக்கின்றது.

நான் ஏன் சனத்த மண்டை காய வைக்க வேணும்? சனம் ஏற்கனவே மண்டை காய்ஞ்சு தானே இருக்கிது?

ஜெனரல்!!

பள்ளிகூடத்தால இரவில வரும் போது வழியில யாரு மறித்தா ஒன்றும் வாங்க கூடாது என்று என்ட மம்மி சொல்லி இருக்கா உங்களின்ட மம்மி சொல்லவில்லையோ :D .

எண்ட மம்மி வேறமாதிரி சொன்னவ. பள்ளிக்கூடத்தால இரவில வரும்போது வழியில யாரும் மரிச்சா அவேக்கு ஒண்டும் குடுக்ககூடாது எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். அப்ப இழுக்கச் சுகம் தானே

  • தொடங்கியவர்

விளங்கினாச் சரி.. :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்புவுக்கு அரோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓகரா

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்ன! நாங்கள் பழைய பழக்கவழக்கங்கள் எல்லாவற்றுக்கும்' போகி" பண்ணிவிட்டு புதிய வாழ்க்கைதானே இப்ப வாழ்ந்து கொண்டிருக்கிறோம். :lol::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.