Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில் நாம் விடும் தவறுகள்

Featured Replies

கடந்த இரு வாரங்களாக வேறு சில அலுவல்கள் வந்து விட்டதால் எழுத முடியவில்லை.

"பறவை பறக்கும்" என்பதன் பன்மை பற்றி பல இடங்களில் விசாரித்துப் பார்த்தேன். எனக்குத் தெரிந்த பேராசிரியர்களையும் கேட்டேன்.

பலருடைய கருத்து "பறவைகள் பறக்கும்" என்பதாகத்தான் இருக்கிறது.

அந்த வகையில் நான் முன்வைத்த "பறவைகள் பறப்பன" என்பது சரி அல்ல என்று படுகிறது. இது சரியா என்பதில் எனக்கு உள்ள சந்தேகத்தையும் நான் ஏற்கனவே வெளியிட்டிருந்தேன்.

ஒருமை பன்மை இரண்டிற்குமே "பறக்கும்" என்றுதான் வரும் என்பது பல தமிழாசிரியர்களின் கருத்து. இங்கே களத்திலும் பல உறவுகளும் அப்படித்தான் சொல்லியிருந்தார்கள். பல இடங்களில் விசாரித்ததன் பிறகு அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆகவே

"பறவைகள் பறக்கும்" என்பதுதான் சரி

ஒருமையில் எடுத்தால்

பறவை பறந்தது

பறவை பறக்கின்றது

பறவை பறக்கும்

பன்மையில் நோக்கினால்

பறவைகள் பறந்தன

பறவைகள் பறக்கின்றன

பறவைகள் பறக்கும் :D:D

எங்கேயோ இடிக்குதே.

சரி சபேசன் நீங்கள் நிறைய பண்டிதர்களிடம் கேட்டு இங்கு பதிஞ்சமைக்கு நன்றிகள்.

  • Replies 55
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதோ கெட்டதோ ஒருசில ஆக்களுக்கு மாடு சொன்னால் கேட்க மாட்டினம்.மணி கட்டின மாடு சொன்னாத்தான் கேட்பினமாக்கும்.

இவ்வளவு பண்டிதர்களும், தமிழறிஞர்களும் தங்களுக்கு அருகில் இருக்கும் போது எதற்கு யாழ் உறவுகளிடம் தெரியாத மாதிரி கேள்விகளை முன்வைத்தீர்கள்?

அல்லது இங்கே தமிழ்ப்பாடம் நடத்துகின்றீர்களா?

ஏன் சடலம் என்ற சொல்லுக்கு பதிலாக உடலம் என்ற சொல்லை பாவிக்கிறார்கள்? ஊடகங்களில் கேள்விப்பட்டுள்ளேன்.

பெளதிகம் படிக்கும் மாணவர் சடப்பொருளை எப்படி மாற்றி கூறவேண்டும்?

Edited by Eas

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா சொல்வது போல எங்கோ இடிக்கின்றது. சபேசன் உண்மையாகவே தமிழறிஞர்களிடம் கேட்டுத் தான் பதிகின்றீர்களா?

இன்று தமிழில் உள்ள பிரச்சனை என்னவென்றால் ஒழுங்கான தமிழ் அகராதி இல்லாதது தான். இதனால் எத்தனை தமிழ் சொற்கள் உள்ளன. என்ன மாதிரி எழுத வேண்டும் என்று யாருக்குமே தெரியாமல் உள்ளது. மேலும் தமிழ் சொற்கள் புணர்ச்சி செய்து அதில் மாற்றங்களைக் காட்டும் என்பதால், சொற்கள் பற்றிய ஒழுங்கான தெளிவு நம்மிடம் இல்லை.

முதலில் சொற்களைத் தொகுக்குகின்ற வேலையைச் செய்வது நல்லது எனத் தோன்றுகின்றது. தூயதமிழ் இருந்தால் அச்சொற்களையும், அதில்லாவிட்டால் மாற்றீடான சொற்களையும் பாவிப்போம். உதாரணத்திற்கு இலத்திரன், நியுத்திரன் என்று நாம் பாவிக்கும் விஞ்ஞானப்பெயர்களுக்கு நிகராகத் தமிழ்பெயர்கள் இல்லை. எனவே அவற்றைத் தமிழ்வடிவத்தில் உள்வாங்குவோம். இன்றைக்கு ஆங்கிலம் எல்லாமொழிச் சொற்களையும் உள்வாங்கியதால் தான் அது முன்ணனியில் நிற்கின்றது.

முதலாவதாக பிறிதொரு தலைப்பில் "அ" என்று ஆரம்பிக்கும் சொற்களை எழுதுவோம். அதற்கான அர்த்தங்களையும் தருவது நல்லது.

எடுத்துக்காட்டு:

அன்பு= பாசம், பற்று, இன்னுமொரு உயிர் மீது காட்டும் பரிவு, காதல்

போன்று எல்லாச் சொற்களையும் திரட்டுவோம்.

நீங்கள் ஒத்துழைப்புத் தருவதாகச் சொன்னால் மட்டுமே புதுத் தலைப்பை ஆரம்பிக்கலாம்.

  • தொடங்கியவர்

வெண்ணிலா தந்த அதே உதாரணங்களை தந்துதான் என்னுடைய கேள்வியை எழுப்பியிருந்தேன்.

இப்பொழுது வேறு ஒரு கேள்வி உங்களைக் கேட்க விரும்புகிறேன். காலம் பற்றிய ஒரு கேள்வி

பறவை பறந்தது - இது இறந்தகாலம்

பறவை பறக்கிறது - இது நிகழ்காலம்

பறவை பறக்கும் - இது எதிர்காலம்

அதே போன்று

பறவைகள் பறந்தன - இது இறந்தகாலம்

பறவைகள் பறக்கின்றன - இது நிகழ்காலம்

இப்பொழுது இதனுடைய எதிர்காலம் என்ன?

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்!

என்னுடைய கருத்தாக "பறவைகள் பறப்பன" என்பதையும் முன்வைத்தேன். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு உள்ள ஒருவர் எனக்கு சொன்ன பதில் இது. எனக்கும் அது சரி போன்றுதான் பட்டது.

ஆயினும் "பறப்பன" என்பது ஒரு முற்றெச்சம். அந்த வகையில் ஒரு சந்தேகமும் எனக்குள் இருந்தது.

அத்துடன் "பறவைகள் பறக்கும்" என்பதுதான் சரி என்று இங்கே களத்திலும் பலர் சொன்னார்கள்.

இதையடுத்து எனக்கு தெரிந்த தமிழறிஞர்களிடமும் நான் விசாரித்துப் பார்த்தேன்.

அவர்களும் "பறவைகள் பறக்கும்" என்பதுதான் சரி என்று சொன்னார்கள். ஆனால் அவர்களால் ஒரு தெளிவான விளக்கத்தை தரமுடியவில்லை. அஃறிணை எழுவாயாக உள்ள எதிர்கால வசனத்தில் பயனிலை ஒருமையிலும் பன்மையிலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் இப்படி ஒரு விதி இருக்கிறதா என்பது பற்றி அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை.

என்னாலும் வேறு பதில்களை தரக்கூடிய இலக்கிய உதாரணங்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. (தேடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை)

இதில் ஒரு மயக்கம் இருப்பது உண்மைதான்.

தமிழ் இலக்கியங்களில் இது போன்ற உதாரணங்கள் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்

  • 2 weeks later...

இதில் ஒரு மயக்கம் இருப்பது உண்மைதான்.

ரொம்ப மயக்குதுங்கோ அதிரடித் தொடர். ஹீஹீ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.