Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மீதான படை நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படா இராணுவத் தளபதி சொல்கிறார்

Featured Replies

வன்னி மீதான படை நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படா இராணுவத் தளபதி சொல்கிறார்

விடுதலைப் புலிகள் தென்னிலங்கையில் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் வன்னி மீதான படை நடவடிக்கை கைவிடப்படமாட்டாது என்று தெரிவித்திருக்கும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வன்னியை விரைவில் மீட்டே தீருவோம் என்றும் சூளுரைத்துள்ளார்.

தென்பகுதியில் நடைபெறும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் தெரிவித்துள்ளவை வருமாறு

வடக்கில் வன்னிப் பகுதியில் உள்ள மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்ற

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொண்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகள் போலவே புலிகளும் தெற்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். நீங்கள் தமிழ்மக்களின் மேல் கொண்டுள்ள கரிசனை போலவே அவர்களும் கரிசனை கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தப்பில்லை ! அவர்கள் அதனை திறம்படவே செய்வார்கள். எல்லாம் நீங்கள் தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள கரிசனையில் தங்கியிருக்கிறது !!!!!

ரகுநாதன் அண்ணை அப்ப புலிகள் அப்பாவி சிங்கள மக்களை படுகொலை செய்கிறாhர்கள் இனியும் தாக்குவார்கள் என்று புலிகள் அல்லது தமிழர் சார்பில் உரிமை கோருகிறீர்களோ?

சிறீலங்கா அரசாங்கம் பயங்கரவாத அரசு என்ற மாதிரி புலிகளையும் பயங்கரவாத அமைப்பாக பார்ப்பதில் தவறில்லை என்றியளோ?

மாற்றுக்கருத்துக்காறார் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் என்றவர்களோடு சேர்ந்து ஊதுவதும் அதைத்தான் புலிகள் என்பது சிறீலங்காவின் பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக இயங்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு மாத்திரமே. மற்றும்படி அவர்களிற்கு மனித உரிமைகளை மதிக்கும் கொள்கைகளோ தேசிய விடுதலைப் போராட்ட அமைப்போ இல்லை என்று.

எப்படி சிறீலங்கா சார்பில் சொல்லும் விடையங்கள் வரலாறாக பதிந்து சர்வதேசத்தால் தனது நலனிற்கு ஏற்ப தேவை வரும் பொழுது எதிராக தூக்கிப்பிடிக்கப்படுகிறதோ அதே போலவே எமது சும்ம இருக்க முடியாது பேசும் வீராப்புகளும் எமக்கு எதிரான ஆதாரங்களாக காட்டப்படும் தேவை வரும் போது.

இக்பால் அத்தாசும் இந்த முறை எழுதியிருப்பது தமிழர் தரப்பு உத்தியோகபூர்வமாக உரிமை கோராவிட்டாலும் தனிப்பட்ட முறையில் நியாயப்படுத்தி பேசுகிறார்;கள் என்று தான். டிபிஎஸ் போன்றவர்கள் எழுதுவார்கள் grapevine இல் இருந்து உணரக் கூடியதாக இருந்தது என்று. அடுத்த கட்டமாக இவை எல்லாம் சர்வதேச அவதானிகளிற்கு போகும்.

இவை எல்லாவற்றின் விளைவுகளையும் இறுதியில் எதிர்கொள்ளப் போவது பதில் சொல்ல வேண்டிய வில்லங்கத்தில் இருக்கப் போவதும் விடுதலைப் புலிகள் தான். இங்கு குப்பை கொட்டும் எந்த நாய்களும் அல்ல. நாய்களுக்கு கருத்துச் சுதந்திரம் தேவை உணர்வுகள் பொங்குது புடுங்குது எண்டு அதுக்கு மூத்திரம் இருக்க இணையம் எண்டு ஒண்டு அம்பிட்டுவிட்டுது.

2006 இல் எங்கடை பன்னாடை ஊடகங்கள் கதைச்ச மாவிலாறு மூதூர் முகமாலை என்று வீராப்புகள் எல்லாம் பதிவாகி இருக்கு சர்வதேசமட்டத்தில என்பதை பிபிச இன் கேள்விகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகாகுதல் திருந்துவோம? பிபிசி மாத்திரம் அல்ல இன்னும் பல தரப்புகள் பலமட்டங்களில் சந்தர்ப்பம் தேவை வருபோது கேட்கும். யாரை? அங்குள்ள புலிகளைத்தான் இங்கு கூத்தாடிவயவர்களை அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இங்க பரிசில கன இடத்தில கண்டிருக்கிறன் எங்கட ஆக்கள.............................. புலியளே உரிமைகோராத கன விசயங்கள..... வெளிநாட்டுக்கு ஓடி வந்து வெள்ளையன்ர கால்நக்கிற விசுக்கோத்துகள் உரிமை கோருறத...... ஏதோ இதுகள் தான் அங்க நிண்டு சண்டைபிடிச்சமாதிரி....................... :D

போராட்டத்த பொறுத்தவரைக்கும்.............. போராட்ட சூழ்நிலையையும் எதிர்காலத்தையும் கவனத்தில எடுத்து......................... செஞ்சத செய்யலயெண்டும்................... செய்யாதத செஞ்சதெண்டும்............. தொலைநோக்கு பார்வையோட அரசியல் ராசதந்திர வியூகத்தொடயும் போராடுற தரப்பு சொல்லும். சிலநேரம் மெளனமாவும் இருக்குமு்............ ஆனா வெளிநாட்டில இருக்கிற முந்திரிக்கொட்டையள் வெளிநாட்டுக்கு ஓடிவந்து ஒளிஞ்சுகொண்டு வீரவசனங்கள் கதைக்கும்....................... இதுகள என்ன செய்யிறது............... இதுகளுக்கு தாங்கள் தான் புலியளின்ர ஊடகத்துறைப் பேச்சாளர்கள் எண்டு நினைப்பு :D

இந்த சனத்துக்கு நான் என்ன சொல்லுறனெண்டா.................... வீட்டுக்குள்ள கதையுங்கோ.......... துள்ளுங்கோ ......... குதியுங்கோ................ பல்லிளியுங்கோ........................ பெருமைபேசுங்கோ................. வெளியிடங்களில பொது இடங்களில பரதேசித்தனமா உரிமை கொண்டாடதேங்கோ..........

உரிமைகோருறது புலியளின்ர வேலை............ அவை எது போராட்டுத்துக்கு தேவையோ அத அவை செய்வினம்............... நீங்க உங்கட பங்களிப்புகள ஒழுங்கா செய்யுங்கோ..................... வெளிநாட்டில செய்யவேண்டிய பிரசாரங்கள ஒழுங்கா செய்யுங்கோ....................... அதுகள ஒழுங்கா செய்யக் காணம்................... அதுக்குள்ள அற்பத்தனமாவும் அரைவேக்காட்டுத்தனமாவும் பல்லிளிக்குதுகள்.................. :lol:

Edited by poonai_kuddy

குறுக்கால போகுது பூனைக்குட்டி...

  • கருத்துக்கள உறவுகள்

:lol: குறுக்காலபோவான், பூனைக்குட்டி ! நீங்கள் இருவரும் எழுதியதுன் சரிதான். புலிகள் இனிமேல் தாக்குதல்கள் வடக்கு, கிழக்கு என்று மட்டுப்படுத்தப்படாமல் நாடு முழுவதற்கும் பரவும் என்று ஒருமுறை கூறியதை வைத்துக்கொண்டு அப்படி எழுதிவிட்டேன்.

தெற்கில் நடக்கும் தாக்குதல்களை நான் தமிழர் சார்பாகவும், புலிகள் சார்பாகவும் உரிமை கோரவில்லை.

தவறு இனிமேல் திருத்தப்படும்.

நன்றி.

  • தொடங்கியவர்

நானும் இங்க பரிசில கன இடத்தில கண்டிருக்கிறன் எங்கட ஆக்கள.............................. புலியளே உரிமைகோராத கன விசயங்கள..... வெளிநாட்டுக்கு ஓடி வந்து வெள்ளையன்ர கால்நக்கிற விசுக்கோத்துகள் உரிமை கோருறத...... ஏதோ இதுகள் தான் அங்க நிண்டு சண்டைபிடிச்சமாதிரி....................... :lol:

.

அதெல்லாம் மகிழ்ச்சி உளறல்கள் அதெல்லாம் பாதகத்தை ஏற்படுத்தாது. செய்தவர்களால் உரிமைகோரப்படாமல், வதந்திகளும் குற்றச்சாட்டுக்களும் எடுபடாது. உதாரணமாக நெடு நாளாகிவிட்டது சிறுவர் படைச் சேர்ப்புக் குற்றச்சாட்டு.

ஏன்ரகுநாதன் சின்ன எதிர்ப்புகளுக்கெல்லாம் பயப்படுகிறியள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.