Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மாநகர சபை திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கெதிராக எம்மால் பேச முடியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர சபை திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கெதிராக எம்மால் பேச முடியுமா?

[10 - February - 2008]

*அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி

வடபகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு மாநகர சபைத் திடலில் கூட்டம் நடத்த முடியும். ஆனால், எமக்கு யாழ்ப்பாணம் சென்று யாழ். மாநகரத் திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கு எதிராகப் பேச முடியுமா? எங்கே ஜனநாயகம் மீறப்படுகின்றது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டுமென பெருந்தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திற்கான புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா தலைமையில் கொச்சிக்கடை பொலிஸ் நிலைய வளவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற அடிக்கல் நடு விழாவில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றும்போது;

"கொச்சிக்கடை பொலிஸ்நிலையம் இதுவரையில் பழைய வீடொன்றிலேயே இயங்கி வருகின்றது. இங்கு வேலைசெய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இங்கு வரும் பொது மக்களுக்கும் சிறைக் கைதிகளுக்கும் எந்தவித வசதியும் இருக்கவில்லை. இதனை உணர்ந்தே இங்கு புதிய கட்டிடம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுத்தோம்.

கொச்சிக்கடை பிரதேசம் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் இடம். சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்கின்றார்கள். வெளியிலிருந்து வந்தும் இங்கு குடியேறுகிறார்கள். சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் மக்கள் மத்தியில் சேவை செய்ய பொலிஸாருக்கு சகல வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். அரசாங்கம் பாரிய வேலைத் திட்டங்களை முன்வைத்து நாடு முழுவதிலுமுள்ள பொலிஸாருக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது.

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு முப்படையினரும் பொலிஸாரும் உதவி வருகின்றனர். பயங்கரவாதிகளின் பிரதேசங்களை படையினர் கைப்பற்றிய பின்னர் அங்கு சமாதானத்தையும் சகவாழ்வையும் நிலைநாட்டுவதற்கு பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாம் இவ்வாறு வசதிகளைச் செய்துகொடுக்கும் போது ஒருசிலர் சர்வதேச மட்டத்தில் எம்மை பலவீனப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த வருடம் முடிவடைய முன்னர் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட ஜனாதிபதியும் படையினரும் உறுதிபூண்டுள்ளனர். இது சிறுபான்மையினருக்கு எதிராகச் சொல்வதல்ல பயங்கரவாதத்திற்கு எதிரானதே. நாட்டில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட பயங்கரவாதம் இல்லாதொழிய வேண்டும். அரசியலமைப்புக்கு உட்பட்டதாக தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படுகின்றது.

இலங்கையை இரண்டாகப் பிரித்து வேறு இராஜ்ஜியம் அமைக்க இடமளிக்க மாட்டோம். புலிகளின் தலைவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு அரசுடன் பேச முன்வர வேண்டும். இந்தக் கடமையை அவர்கள் தட்டிக்கழிக்கின்றனர். அவர்களுக்குத் தேவை பயங்கரவாதத்தை நாடு முழுவதும் வியாபிப்பதே. அதற்கு அரசும் முப்படையினரும் பொலிஸாரும் இடமளிக்கமாட்டார்கள். தமிழருக்குத் தேவையான உச்ச அதிகாரங்கள் வழங்கப்படும். ஆனால், நாட்டைப் பிரிக்க இடமளியோம்.

வடக்கிலிருந்து தெற்கிற்கு எவருக்கும் வரமுடியும். ஆனால், தெற்கிலிருந்து வடக்கிற்கு போக முடியாது. வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மாநகரத் திடலில் கூட்டங்களை வைத்து அரசுக்கு எதிராகப் பேசுகிறார்கள். ஆனால், எமக்கு யாழ்ப்பாணம் சென்று யாழ். திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கு எதிராகப் பேச முடியுமா? எங்கே ஜனநாயகம் இருக்கிறது. இந்த ஜனநாயகம் எங்கும் இருக்க வேண்டும்.

உரிய காலத்திற்கு முன்னர் தேர்தல் வைக்கப்படமாட்டாது. தேர்தலைக் கேட்டு சந்தை சந்தையாகச் சென்று காலத்தை வீணடிக்காமல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து தீர்வுகாண ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

இங்கு பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன, நீர்கொழும்பு மேயர் நிமல்லான்ஸ, பிரதிப் பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், டி.ஐ.ஜி. சரத் ஜயசுந்தர, என்.எஸ்.பி. பிரேமசிறி விதாரண ஆகியோரும் கலந்துகொண்டனர்.

http://www.thinakkural.com/news/2008/2/10/...s_page45616.htm

முடியாதே! எப்படி முடியும்? கொஞ்ச காலத்துக்கு முன்னம் மாநகரசபை கூரையுக்கால பிச்சுக்கொண்டு மழை பெஞ்சு கனபேர் கும்பலில கோவிந்தா போனது மறந்து இருக்குமா?

கூட்டம் வைச்சு பார்க்க ஆசையா இருந்தா... வைச்சுபாக்கிறது.... அதுதான் 50 000 ஆமி இருக்கினமில்லோ... பிறகேன் சனநாயகத்தை பத்தி கவலைப்படுவான்?

அண்ணனுக்கு இன்னும் புலிகள் ஒரு விடுதலை அமைப்பு என்று தெரில்ல போலகிடக்கு.... சிரிப்புத்தான்..

இரண்டுங் கெட்டான் பேச்சு.

"வடபகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொழும்பு மாநகர சபைத் திடலில் கூட்டம் நடத்த முடியும். ஆனால்இ எமக்கு யாழ்ப்பாணம் சென்று யாழ். மாநகரத் திடலில் கூட்டம் வைத்து புலிகளுக்கு எதிராகப் பேச முடியுமா? "

"வடக்கிலிருந்து தெற்கிற்கு எவருக்கும் வரமுடியும். ஆனால்இ தெற்கிலிருந்து வடக்கிற்கு போக முடியாது."

அப்படியென்றால் அங்கு வேறொரு ஆட்சிதானே.

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதி இப்போது அவர்களின் கொல்லைப்புறமாகத்தானே இருக்கிறது. அங்கு அவர்கள் கூட்டமும் போடலாம், பெட்டிக்குள் வோட்டும் நிரப்பலாம். ஆனால் இரண்டுமே காலவிரயம்தான். :icon_mrgreen::)

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவையே தேர்தல் காலத்தில செருப்புக் காட்டி அனுப்பின இடத்தில புலிகளை எதிர்த்துக் கூட்டம்? சிறிதர் தியேட்டரில வேணுமெண்டால் சிறப்புக் காட்சி வரையறுக்கப் பட்ட விருந்தினர்களுக்கு வைக்கலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.