Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இ­லங்­கை ­க­டற்­ப­டை­யி­ன­ரால் மீ­ன­வர் ­ஒ­ரு­வர் ­­சுட்­டு கொல்­லப்­பட்­ட­தை ­தொ­டர்ந்­து ­­மீ­ன­­வர்­கள் வே­லை­நி­றுத்­தம்

Featured Replies

­­­இ­லங்­கை ­க­டற்­ப­டை­யி­ன­ரால் மீ­ன­வர் ­ஒ­ரு­வர் ­­சுட்­டு கொல்­லப்­பட்­ட­தை ­தொ­டர்ந்­து ­பு­துக்கோட்­டை­யில் ­மீ­ன­­வர்­கள் ­வே­லை­நி­றுத்­தத்­தில் ­ஈ­டு­பட்­ட­னர். ­நேற்­று ­மீ­ன­வர் ­சி­லர் ­க­ட­லுக்­கு ­மீன் ­பி­டிக்­க ­சென்­றி­ருந்­த ­போ­து இ­லங்­கை ­க­டற்­ப­டை­யி­­னர் ­தாக்­கு­தல் ­ந­டத்­­தி­னர். இ­தில் ­தங்­க ­பாண்­டி­யன் ­என்­ற ­மீ­ன­வர் ­சுட்­டுக்கொல்­லப்­பட்­டார் . இ­ந்­த ­சம்­ப­வத்தால் பு­துக்­கோட்­டை­யில் ­மீ­ன­­வர்­கள் ­வே­லை­நி­றுத்­தத்­தில் ­ஈ­டு­பட்­ட­னர். ­­மே­லும் ­­ ­இ­றந்­த ­­மீ­ன­வர் ­கு­டும்­பத்­துக்­கு மு­தல்வர் ­க­ரு­ணா­நி­தி ­ஒ­ரு ­லட்­சம் ­ரூ­பாய் ­உ­த­வித்­தொ­கை ­வ­ழங்­கி­னார்.

ஆதாரம் தினமலர்

Edited by ஔவையார்

வெட்கம்!

சிங்கள இராணுவத்திற்கு பயிற்சியும், பலியும் கொடுத்து பின்னர் நஷ்டஈடும் கொடுக்க வேண்டிய நிலை!

இந்த நிலை எந்த ஒரு நாட்டுத் தலைவருக்கும் வரக்கூடாது!

தமிழனின் உயிருக்கு எங்கும் மதிப்பில்லை இதற்கு முக்கிய காரணம் ஒற்றுமை இன்மை

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது கடற்படைப் படகு காணவில்லை என்று நியாயப்படுத்தல் வெளிப்படுத்தப்பட்டதே இதற்காகத் தானே.

வட நாட்டு இந்தியனே மதிக்காத தமிழ் நாட்டு தமிழனின் உயிரை சிங்களவன் மதிக்கனுமா?

தமிழ்நாட்டுத்தமிழன் ஆனால் என்ன எந்த நாட்டுத்தமிழன் ஆனால் என்ன எல்லாமே என் தமிழ் சாதி தான் என்பதை அறியாது எழுதியது என்னை வேதனையில் ஆழ்த்தி விட்டது காரணம் எங்கு செத்தாலும் எப்போது செத்தாலும் தமிழன் தான் என்று அறியப்ப்டும் போது எமது உறவுகள் பதறுகின்றன.

***

நன்றியுடன் நாதன்

உறுப்பினர் பற்றிய விமர்சனங்கள் நீக்கப்பட்டுள்ளன. - இணையவன்

Edited by இணையவன்

தமிழன் எல்லோரும் ஒற்றுமையாய் இருந்தால் மட்டும் போதுமா? இல்லையே தான் தான் தமிழன் என்பதை தன்மனதில் இருத்தி தனது இலட்சிய வேட்கையோடு வாழ்ந்தால் (குறிக்கோளுடன் வாழ்ந்தால்) தமிழன் தமிழனாய் வாழ்ந்து தமிழனின் மதிப்பை பாதுகாத்து வழி நடத்துவான் எனவே தமிழினம் ஒற்றுமையாக வாழ வழி எப்படி என்பதை நான் தான் காணவேண்டும் யாரும் சொல்லி தமிழினம் தமிழன் ஒற்றுமையாக வாழ்;வான் என்றால் அது எப்போது? தமிழா நீ உன்னை திருத்து மற்றவனை பார்க்காதே? நல்லதை நீ செய் மற்றவன் எப்படி என்று பார்க்காதே? நீ உன்னை மாற்றினால் மற்றவன் உன்னைபார்த்து திருந்துவான் அல்லவா???????

நன்றி நாதன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டு புதுக்கோட்டை மீனவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 10, 2008

இலவச நியூஸ் லெட்டர் பெற

சென்னை: இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டு புதுக்கோட்டை மாவட்ட மீனவர் பலியானார். இதனால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 படகுகளில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

தங்கப்பாண்டி (35) என்பவரும், இன்னும் சில மீனவர்களும் ஒரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது படகு திசை மாறி இந்திய கடல் எல்லையைத் தாண்டிச் சென்று விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து இலங்கை கடற்படையினர் அங்கு விரைந்து வந்தனர். எந்தவித முன்னெச்சரிக்கையும் தெரிவிக்காமல் தமிழக மீனவர்களின் படகு மீது சரமாரியாக சுட்டுத் தள்ளினர்.

இதில் தங்கப்பாண்டியனின் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படகில் இருந்த மற்ற இரு மீனவர்களும் காயமின்றி தப்பினர். பின்னர் தங்கப்பாண்டியனின் உடலுடன் அவர்கள் கரைக்கு வந்து சேர்ந்தனர்.

உடனடியாக தங்கப்பாண்டியனின் உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் பெரும் சோகத்திலும், கொந்தளிப்பிலும் மூழ்கியுள்ளனர்.

சமீப காலமாக பலி ஏதும் நிகழாமல் இருந்த நிலையில் மீண்டும் இலங்கை கடற்படை கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ. 1 லட்சம் நிதியுதவி:

புதுக்கோட்டை மீனவர் இலங்கை படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர் தங்கப்பாண்டியனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தங்கப்பாண்டியன் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடாக உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று மத்திய அரசின் மூலமாக இலங்கை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2008/02...ankan-navy.html

  • கருத்துக்கள உறவுகள்

இதே நிலை ஒரு கர்நாடகக் காரனுக்கு ஏற்பட்டிருந்தால் ஒரு பூகம்பமே வெடிச்சிருக்கும்.

வெறும் ஒரு லட்சத்தை காட்டி தட்டிக்கழிக்கப்படுகிறது இந்த நிகழ்வு.

இதே நிலை ஒரு கர்நாடகக் காரனுக்கு ஏற்பட்டிருந்தால் ஒரு பூகம்பமே வெடிச்சிருக்கும்.

வெறும் ஒரு லட்சத்தை காட்டி தட்டிக்கழிக்கப்படுகிறது இந்த நிகழ்வு.

இந்தியாவில் எதற்க்குமே ஒரு விலை இருக்கு என்று சொல்லுவார்கள் இப்ப தான் புரிச்சுது :D

நாதன் அது சலிப்பில் எழுதிய கருத்து

தமிழ் உயிரை கொச்சைபடுத்துவதுக்கு இல்லை

நான் சொன்னேன் இந்தியனே மதிக்காத தன் நாட்டு தமிழனை வெறிபிடித்த சிங்களவன் மதிப்பனா என்ர அர்த்தத்தில் தான்................

சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலிலேயே கடற்தொழிலாளி கொல்லப்பட்டார் - தமிழக முதல்வர்

சிறீலங்கா கடற்படையினரின் தாக்குதலிலேயே தமிழகம் புதுக்கோட்டையைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக தமிழக முதல்வர் மு.கருனாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை தனுஷ்கோடி கடற்கரையில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 35 அகவையுடைய தங்கபாண்டி கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.

எனவே இது தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமாறு தமிழக முதல்வர் மத்தியரசிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சிறீலங்காப் கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்தொழிலாளர் குடுபத்திற்கு ஒரு இலட்சம் இந்திய ரூபாக்களை இழப்பீடாக வழங்குமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளரிடம் தமிழக முதல்வர் கட்டளையிட்டுள்ளார்.

http://www.pathivu.com/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் உயிர் கிள்ளுக்கீரை!

சிங்களக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த உதவியதாக சிங்கள அரசு கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து ராமேசுவரம் பகுதி மீனவர்களிடம் தமிழக அரசு அதிகாரிகளும் உளவுத்துறையினரும் விசாரணை நடத்தியதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

10-02-08 அன்று ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை சுட்டதில் தங்கபாண்டியன் எனும் மீனவர் பலியானார். ஆனால் இதுகுறித்து இந்தியக் கடற்படையோ, தமிழ்நாட்டுக் கடலோரக் காவல்படையோ கவலைப்படவில்லை. விசாரணை நடத்தவோ, சிங்களர் மீது நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை. இப்போது மட்டுமல்ல. கடந்த 25 ஆண்டுகாலத்திற்குமேலாக 300க்கு மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டபோதும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.