Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுக்கு உதவவேண்டும் ஆனந்தசங்கரி லண்டனில் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Feb 12 2:00:00 2008

புலிகளை தோற்கடிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுக்கு உதவவேண்டும் ஆனந்தசங்கரி லண்டனில் தெரிவிப்பு

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உதவ வேண்டும்.

இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி.

நெடுங்காலமாக நீடித்துவரும் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வுக்கும் விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள 74 வயதான ஆனந்தசங்கரி செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றின்போதே இவற்றைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:

இலங்கையில் தமிழர்களுக்கு தனித் தாயகம் அமைக்கவேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கோரிக்கையை உலகில் எந்தவொரு நாடும் ஆதரிக்காது. நீண்டகாலமாக நீடித்துவரும் தமிழர் இனப்பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வுக்கும் பிரபாகரனும் ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டார்.

இந்தியாவில் இருப்பது போல் கூட்டாட்சி முறையில் ஈழத்தமிழர்களுக்கு தீர்வு காண்பதை பிரபாகரன் எதிர்க்கின்றார். தமிழர்களுக்குத் தனித்தாயகம் அமைக்கவேண்டும் என்ற பிரபாகரனின் கோரிக்கை நிறைவேறாது என்பதை இந்தியாவும் நன்கு அறிந்துவைத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அவர்களை தோற்கடிக்க இந்தியா தலையிட்டு இலங்கை அரசுக்கு உதவவேண்டும். புலிகளுக்கு ஆதரவு அளிப்பதால் ஏற்படும் ஆபத்தை சர்வதேச சமுதாயம் விரைவில் உணரும்.

இந்திய தலைவர்களுடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுடனும் நான் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினேன். புலிகளை ஆதரித்தால் இந்தியாவிலேயே ஒரு யாழ்ப்பாணத்தை காண்பீர்கள் என்று நான் இந்தியத் தலைவர்களை எச்சரித்தேன்.

தமிழர் பகுதிக்கு சுயாட்சி வழங்கும் வகையில் இலங்கை அரசியல் சாசனத்தின் 13ஆவது திருத்தத்தை அமுல் செய்வது வரவேற்கத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்பு உலகம் முழுவதற்குமே ஓர் அச்சுறுத்தலாக உள்ளது. விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஆதரிப்பதால் உண்டாகும் ஆபத்தை சர்வதேச சமூகம் விரைவில் உணரும்.

உலகின் பல நாடுகளிலும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். ஒன்றில் அவர்கள் பயத்தினால் அவ்வாறு மாறியிருக்கவேண்டும். அல்லது யாழ்ப்பாணத்தில் தமது தாயகத்தை உருவாக்க முடியும் என்ற மடைத்தனமான நம்பிக்கையால் அவ்வாறு மாறியிருக்கவேண்டும்.

இந்தியாவில், வைகோ மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கித் தவறு இழைத்து வருகிறார்கள். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்னர் அங்கு விடுதலைப் புலிகளுக்கு நிறைய ஆதரவு இருந்தது. ஆனால் அதன் பின்னர் நிலைமை வெகுவாக மாறிவிட்டது.

ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வை பெரிதும் விரும்புகிறேன். ஆனால் இலங்கையில் சமஷ்டி என்ற சொல் மிகப் பலருக்கு ஒவ்வாமையாகவே இருக்கிறது என்றார். (அ)

http://www.uthayan.com/

அடிரா சக்க, சுந்தரியார் ஒரு தீர்வைச் சொல்லிவிட்டார். இந்தியா அதைச் செயற்படுத்தப் போகிறது. சமஷ்டி ஆட்சியமைத்து சுந்தரியார்தான் முதலமைச்சர் ஆகப்போகிறார். தமிழர்களின் எதிரிகளுக்கு இதைவிட்டால் வேறென்ன வேலை.

பரதேசிக்கு நட்டு லூசு என்றது தெரிஞ்ச விசயம்

இந்த மாதிரி ஆட்களின் கருத்தை ஏன் இங்கு போடுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வதற்கு ஒண்டுமில்லை.பாவம் அறளை பேர்ந்து விட்டது, விட்டு விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"உலகின் பல நாடுகளிலும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள். ஒன்றில் அவர்கள் பயத்தினால் அவ்வாறு மாறியிருக்கவேண்டும். அல்லது யாழ்ப்பாணத்தில் தமது தாயகத்தை உருவாக்க முடியும் என்ற மடைத்தனமான நம்பிக்கையால் அவ்வாறு மாறியிருக்கவேண்டும்."

சங்கரி ஜயா இந்த உண்மையையாவது நன்றாக ஒப்புக்கொள்கின்றார்.

மண்டையைப்போடுற நேரத்திலை இந்த ஜயாவுக்கு ஏன் இந்த வேலை?

Edited by Valvai Mainthan

இந்த நாயை ஐரோப்பாவிலேயே குழி தோண்டி புதைத்து விட வேண்டும். இது எல்லாம் நிச்சயமாக மனிதப்பிறவியே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பாவம், சாகிறதுக்கு இடமில்லாமல் ஓடித்திரிகிற ஆளைப் போய் நீங்கள் எல்லாரும் இப்படி கிண்டலடிக்கக் கூடாது.

சமாதானம் 2005 வந்துவிட்டது. இனி சுந்தரியார் தாரளமாக கிளிநொச்சிக்கு வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை அமிர்தலிங்கத்தை போட்ட கையோடு இன்னுமொரு குண்டை(bullet) மேலதிகமாக பாவித்திருந்தால் இந்த துள்ளு துள்ளாது.

இதை அமிர்தலிங்கத்தை போட்ட கையோடு இன்னுமொரு குண்டை(bullet) மேலதிகமாக பாவித்திருந்தால் இந்த துள்ளு துள்ளாது.

வார்த்தைகளை அவதானமாக பாவியுங்கள் நாமே நமக்கு பிரச்சினையை உண்டாக்க கூடாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.