Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதிர்கால தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவதுகுறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு-மு.கா. தலைவர் ஹக்கீம் கூறுகிறார்

Featured Replies

வீரகேசரி நாளேடு - எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எம்முடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த் தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என நம்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறந்தள்ளி ஒதுக்கி சிங்கள மேலாதிக்கத்தை திணிக்க முற்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எப்படி இணைந்திருக்க முடியும் அதனாலேயே நாம் அரசிலிருந்து விலகினோம் என்றும் அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் கட்டப்படவுள்ள பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் மசூர் சின்னலெப்பை தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் ரவூப் ஹக்கீம் எம்.பி. தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது :

அமைச்சுப் பதவிகளின் சுக போகத்திற்காக முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளையும் பார்த்துக் கொண்டு அரசாங்கத்துடன் ஒட்டியிருக்க முடியாது. இந்த அரசாங்கத்துடன் நாங்கள் விருப்பமின்றியே சேர்ந்து கொண்டோம். கட்சிக்குள் ஏற்படவிருந்த பிளவை தடுப்பதற்காகவே அரசாங்கத்துடன் சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பான அமைச்சர்களுக்கு எந்தவித அதகாரங்களும் வழங்கப்படாமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கிழக்கு மாகாணத்துக்குரிய அமைச்சர்களாக செயற்பட்ட இரு வேடிக்கைகளையும் பார்க்க முடிந்தது. முஸ்லிம்களுடைய காணிகளை சுவீகரித்து கபளீகரம் செய்வதற்கு சிங்கள மேலாதிக்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. காணி சுவீகரிப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனது பலத்த கண்டனத்தையும் எதிர்ப்பையும் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளது.

தேசியப் பட்டியல் மூலம் அமைச்சரான சம்பிக்க ரணவக்கவிடம் போய் கெஞ்சுகின்ற ஒரு நிலைக்கு முஸ்லிம் அமைச்சர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர். ஒரு போதும் முஸ்லிம்களுடைய காணிகளை வழங்குவதற்கு சம்பிக்க விரும்பமாட்டார். எமது மக்களின் காணிகளை பறிப்பதற்கு சம்பிக்கவுக்கு அதிகாரம் வழங்கியது யார்?

அதான் பாங்கு சொல்வதில் நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை பாராளுமன்றத்தில் சட்டம் ஒன்றை இயற்றுவதன் மூலம் சரிப்படுத்திக் கொள்ளலாம். அதனால் அமைச்சரவைப் பத்திரத்தை தயார் செய்து அமைச்சரவை அங்கீகாரத்தை பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தபோது ஜனாதிபதி சொன்னார் நீதியரசர்களுடன் பேசி அதைத் தீர்த்துக் கொள்ளுமாறும் நீதிமன்றத் தீர்ப்புகளை மாற்றுவது சரியல்ல என்று நழுவிக் கொண்டார்.

இப்படியான சம்பவங்கள் நடக்கின்றபோது இந்த அரசாங்கத்தை எப்படி ஆதரிக்க முடியும். சுபஹுத் தொழுகைக்குரிய அதான் சொல்வது சட்டத்துக்கு முரணாக இருந்தாலும் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களில் அதான் சொல்லப்படுகின்றது. இதை சட்டத்தினால் ஒன்றுமே செய்ய முடியாதிருக்கின்றது.

முஸ்லிம்களுடைய உரிமைகளில் யாரும் கை வைக்க முடியாது என்பதை முஸ்லிம் மக்கள் இன்று நிரூபித்துள்ளனர். அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் நடக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதன் நோக்கம் தேர்தல் நம்பகத் தன்மையை நிரூபிப்பதற்கும் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகளை ஏனையவர்கள் சூறையாடுவதைத் தடுப்பதற்காகவுமேயாகும். மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன போட்டியிடாத நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் போட்டியிட பின்வாங்கினால் அது தேர்தல் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என நாங்கள் கருதினோம். அதனாலேதான் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போட்டியிடுகின்றோம்.

அதேபோன்றுதான் சர்வகட்சிக் குழுவிலும் முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகித்து அதன் நம்பகத்தன்மையையும் இன்று பாதுகாக்கின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்துடன் சேர்வதற்கு முன்னர் அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டு வரப்படும் மசோதாக்களை தடுக்க முடியாதவர்களாக சில முஸ்லிம், தமிழ் அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால் நான் அமைச்சரவையில் இருந்தபோது சிறுபான்மை இனங்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை தனி ஒருவனாக நின்று எதிர்த்திருக்கின்றேன்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது சம்பந்தமாகவே பேச்சு நடைபெறுகிறது. இது வெற்றியளிக்கும் என நம்புகிறேன். எமது கட்சியை யாராலும் அழிக்க முடியாது என்பதை அட்டாளைச்சேனை மக்கள் இன்று நிரூபித்துள்ளார்கள். அவர்களை ஒரு போதும் மறக்கமாட்டேன்.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி. ஹசன் அலி, பைசால் காசிம் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு பிரதேச சபை வளவில் இடம்பெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உது தேள்வையில்லாத வேலை. முந்தி கல்முனைத் தொகுதியில தமிழரசுக்கட்சியிலேயே கேட்டு தமிழ்மக்களுடைய வாக்குகளையும் பெற்ற வேட்பாளர் கச்சேரியில வாக்குகள் எண்ணப்படக்குள்ள தனக்கு வெற்றி நிச்சயம் எண்டதை யாரோ ஒருவர் வந்து சொல்ல உடனே காரில கட்டியிருக்கிற தமிழரசுக்கட்சிக்கொடியைக் கழற்றிவிடு எண்டு சொன்னாராம். அதைப்போல இன்னுமொருதரம் தமிழன் நம்பி ஏமாந்து வஞ்சிக்கப்பட்டு சோணகிரியாகிறதுக்கு முயலுறான் போலகிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப் பட்டியல் மூலம் அமைச்சரான சம்பிக்க ரணவக்கவிடம் போய் கெஞ்சுகின்ற ஒரு நிலைக்கு முஸ்லிம் அமைச்சர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்

இப்ப தான் ஹக்கீமுக்கு ஞானம் பிறந்ததோ? அல்லது இன்னுமொரு தெரிவு இல்லாமல் கூட்டணியுடன் ஒரு இணைகிறாரா? சந்தர்ப்பவாத ஹக்கீம் முஸ்லிம் மக்களுக்காவே பாடுபடவில்லை. தமிழர் விடுதலை கூட்டணியுடன் சேர்ந்து தமிழ்- முஸ்லிம் மக்களின் உரிமைக்காக பாடுபடுவார் என்றால் நல்லாக யாருக்கோ காதில் பூ சுத்தப்போகிறார் என்று அர்த்தம்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்புல தமிழ்த்தேசியக் கூட்டணியுட்பட எந்தவொரு உருப்படியான தமிழர் கட்சியும் போட்டியிடாததால இந்த சால்ஜாப்புப் பண்ணி தமிழர் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளலாம் எண்ட நோக்கத்திலதான் உந்த விளையாட்டு நடக்குது. உதுக்குத் துணைபோற நம்மடையாக்களை என்னெண்டு சொல்லுறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமின் வேண்டுகோள் வரவேற்கத்தக்கது. ஆயினும் எதிர்காலத்தில் நடக்கின்ற தேர்தல்களில் நடப்பைப் பற்றித் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும். எது எப்படியோ மூஸ்லீம் மக்களும் தமிழீழத்தின் குடிமக்களே. அவர்கள் சார்ந்த அரசியலும் அவசியமானதே.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லீம் காங்கிரஸ் தேர்தல்களை இணைந்து சந்தித்தால் தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையேயான நெருக்கம் அதிகரிக்கும் அதேவேளை விடுதலைப் போராட்டத்திற்கும் அதன்மூலம் பலம் சேரும்.

ஆனால் தேர்தல்களைச் சந்தித்து வெற்றியைப் பெற்ற பின்னர் அமைச்சுப்பதவிக்காக முஸ்லீம் காங்கிரசே அரசுடன் இணையும் அல்லது கட்சியை விட்டு அரச பக்கம் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவுவதும் வாடிக்கையாகவே இருந்துவருகிறது

இப்படியான சூழ்நிலையில் இரு கட்சிக்கூட்டணி தேர்தலைச் சந்தித்து எவ்வளவு காலத்தான் நீடிக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பில் முஸ்லீம் பா.உ வருவது தனது வாக்குவங்கியைச் சிதைக்கும் என ஹக்கிம் கருதுவதால் தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் எமக்கு அனைத்து முஸ்லீம்கள் நிச்சயம் தேவை. அவரது வாக்குவங்கி எமக்குப் பயன்படும்.

காலம் கடந்தாலும் வரவேற்க பட வேண்டிய முடிவு....!!

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீமை நம்பி தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ களத்தில் இறங்குவது "மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது" போன்றது. ஆனால் முஸ்லிம் மக்களையும் போராட்டத்தில் இணைக்க நல்ல தலைவர் அவர்களிடம் இன்னுமில்லை என்பது தான் கவலையான விடயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.