Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் முட்டாள்த்தனமான போரினால் என்றேனும் ஒருநாள் வடக்கு-கிழக்குப் பிரதேசம் கொசோவோவாக பிரியும்: சிங்கள ஏடு

Featured Replies

மகிந்தவின் முட்டாள்த்தனமான போரினால் என்றேனும் ஒருநாள் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் கொசோவோவாக பிரியும் என்று சிங்கள வார ஏடான "இருதின" தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

வடக்குக் கிழக்கு ஏன் கொசோவோவாகப் பிரிய வேண்டும். அது பிரிவதென்றால் தமிழீழமாகத்தான் பிரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rajapakse1.jpg

ஒருநாள் வடக்கு-கிழக்குப் பிரதேசம் கொசோவோவாக பிரியும்

சிங்கள ஏடு

மகிந்தவின் முட்டாள்த்தனமான போரினால் என்றேனும் ஒருநாள் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் கொசோவோவாக பிரியும் என்று சிங்கள வார ஏடான "இருதின" தெரிவித்துள்ளது. "இருதின" ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் போரை முடிவிற்கு கொண்டு வருவதாக முன்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தெரிவித்திருந்து. எனினும் போருக்கு அவ்வாறு கால நிர்ணயம் செய்யமுடியாது என இப்பொழுது கூறுகின்றனர். இராணுவத் தளபதியும் அதற்குச் சமமான ஒரு கருத்தையே அண்மையில் தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவிற்குச் சென்று நேரடியாக பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையைத் தீர்ப்பதாக மகிந்த ராஜபக்ச முன்னர் கூறியிருந்தார். அப்படி கூறிய மகிந்த ராஜபக்ச குறைந்த பட்சம் வன்னிக்கு அப்பால் சென்ற காலம் கூட எமக்கு நினைவு இல்லை. அதன் பின்னர் போர் தொடங்கியது.

போர் தொடங்கிய காலத்தில் விடுதலைப் புலிகளை ஓட ஓட விரட்டுவதாக கூறினார்கள். அதன் பின்னர் அனைத்துப் பக்கங்களாலும் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தி விட்டதால் அடுத்த மார்ச் மாதமளவில் விடுதலைப் புலிகளை முழுமையாக தோற்கடித்து போரை நிறைவு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

இப்பொழுது சொல்கின்றனர் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு தமக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் தேவைப்படும் என்று. இப்பொழுது 2008 ஆம் ஆண்டு 2 ஆம் மாத இறுதிப் பகுதியில் இருப்பதால் அவர்கள் கூறும் இந்த ஒன்றரை வருடம் பூர்த்தியாவது 2009 ஆம் ஆண்டு கடைசியில் ஆகும்.

2009 டிசம்பர் வரை போரின் பெயரால் இந்த அரசாங்கத்தை கொண்டு செல்லவே மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 2010 ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி வேலை செய்ய முடியாத மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் உள்நோக்கமானது இந்த அரசாங்கத்தை போரின் பெயரால் அடுத்த பொதுத் தேர்தல் வரை இழுத்துச் செல்வதாகும். இந்த அரசாங்கம் கடந்த 3 வருடத்தில் எதனையும் செய்யவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி தனது 2 வருட காலத்திற்குள் செய்திருப்பவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த அரசாங்கம் கடந்த 3 வருடங்களில் எதனையும் செய்யவில்லை. அவர்கள் செய்திருப்பது எல்லாம் மக்களை ஏமாற்றி நாட்டின் பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கி முழு நாட்டையும் பாதுகாப்பற்ற போரின் பொறிக்குள் சிக்கவைத்தது மட்டுமே ஆகும்.

இப்பொழுது நாம் சிந்திக்க வேண்டியது இந்த அரசாங்கம் இன்னும் ஒன்றரை வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்தால் இந்த நாட்டிற்கு என்ன நேரும் என்பதனைப் பற்றித்தான். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் போர் இழுபட்டுச் செல்லும் என்பது ஒருபக்கத்தில் போரினால் எமது பொருளாதாரத்தை பலி கொடுக்க வேண்டியேற்படும் என்பதனை குறிப்பிடத் தேவையில்லை.

மறுபுறத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எந்தத் திசையில் இடம்பெறும் என்பதனை எவரும் முன்கூட்டியே சொல்ல முடியாது. அதனால் இந்த போர் எதிர்காலத்தில் எந்த அழிவை நோக்கிச் செல்லும் என்பது பற்றி யாராலும் சொல்ல முடியாது. வேலை செய்து காண்பிக்க வேண்டுமாயின் மகிந்தவுக்கு இந்த மூன்றாண்டு போதுமானது. வேலை காண்பித்திருந்தால் இந்தப் போரை இப்பொழுது பாதி முடித்திருக்க வேண்டும்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் 5,000 - 6,000 பேர் உண்மையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும். கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை உண்மையாக தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் கூறும்படி பார்த்தால் தற்பொழுது விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள இராணுவப் பொறுப்பாளர்கள் பலர் கொல்லப்பட்டிருக்க வேண்டும். எனினும் நாம் அறிந்த வரையில் பிரபாகரன் இன்னும் அப்படியே உள்ளார்.

அது தவிர பொட்டு அம்மான், சூசை, பால்ராஜ், சார்ள்ஸ் அந்தனி, தீபன், சொர்ணம், பதுமன், பானு ஆகிய இராணுவத் தளபதிகளுக்கு இராணுவத்திடமிருந்து மட்டுமல்ல சிறு எறும்பினால் கூட பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த அரசாங்கம் உண்மையில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனை மட்டுமே உயிரிழக்கச் செய்யும் வகையில் தாக்கியது. தமிழ்ச்செல்வன் விளையாட்டிற்கு அல்ல உண்மையிலேயே இறந்தார்.

பிரபாகரன் பல தடவைகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் இதுவரை உண்மையில் கொல்லப்படவில்லை. அதனை எதிர்காலம் தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் போரைத் தொடர்ந்து சரியாக செய்திருந்தால் இப்பொழுது விடுதலைப் புலிகளின் இராணுவப்பிரிவு முன்னணித் தலைவர்கள் சிலராவது கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

அப்படி அவர்கள் உயிரிழக்க மாட்டார்கள். உயிரிழப்பது கொழும்பு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் இருக்கும் வெள்ளை வேனினால் கடத்தப்படும் ஈசி டார்கட்டுக்களாகும். கடினமான இலக்குகள் இந்த மூன்று வருடங்களில் கேலியாகக் கூட உயிரிழக்கவில்லை. அப்படியாயின் இந்த மூன்று வருடங்களில் என்ன நடந்துள்ளது. போரின் பெயரால் பொதுமக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை தான் நடந்துள்ளது.

தற்பொழுது மனித உரிமை மீறல், வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு முன்வைக்காமை ஆகியவற்றினால் சிறிலங்காவானது அனைத்துலக ரீதியாக ஓரங்கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் GSP+ திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஆடைத்தொழிற்சாலைகளுக்கான கோட்டாவும் கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆடைத் தொழிற்சாலைக்கான கோட்டா கிடைக்காது போனால் இந்நாட்டு இளைஞர், யுவதிகள் 10 லட்சம் பேரளவில் வீதிக்கு வருவார்கள்.

இன்று ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய அனைத்துலக சமூகமும் இந்நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகளை நிலைநாட்டுமாறு அழுத்தம் கொடுக்கின்றன. 10 லட்சம் பேர் வேலையின்றி வீதியில் இறங்குவதனைப்பற்றி இந்த அரசாங்கம் நினைக்கவில்லை. போரின் பெயரால் இவை அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுமாறே அரசாங்கம் கூறுகிறது.

போர் உக்கிரமடைந்து ஒரு தூரம் வரை இந்த பயணம் இவ்வாறே சென்றால் வடக்கு-கிழக்கு கொசோவோ போன்று தனியே பிரிந்து செல்வதற்கு இடமுள்ளது. இன்று கொசோவோவை அமெரிக்கா உட்பட்ட அனைத்துலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ராஜபக்ச கூட்டணியினரின் செயற்பாடுகளினால் இந்த முட்டாள்த்தனமான போரினால் என்றாவது ஒருநாள் வடக்கு-கிழக்கு வேறு நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டால் அந்தப் பிழையை மீண்டும் திருத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

தற்பொழுது செல்லும் இந்த முட்டாள்த்தனமான பயணத்தின் முடிவானது சில வேளைகளில் அதுவாகவும் இருக்கலாம். இந்த அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் HSBC வங்கியிடமிருந்து வட்டிக்கு 500 மில்லியன் டாலரை கடனாக பெற்றுக்கொண்டது. அந்த பெரும் தொகை பணத்தைப் பெற்று 6 மாதங்கள் செல்வதற்கு முன்னதாக அடுத்த ஏப்ரல் மாதம் தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து மேலும் 300 மில்லியன் டாலர் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

4 மாதங்களினுள் மீண்டும் கடன் பெறப்படுகிறது. எனினும் நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் ஏற்படவில்லை. 1 கிலோ அரிசி 80 ரூபாவிற்கு உயர்ந்துள்ளது. இப்பொழுது உண்ணவும் வழியில்லை. ஆனால் உப்பும் சோறும் உண்ணும் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

மக்கள் உப்பும் சோறும் சாப்பிட்டாலும் அந்த கூட்டணி உப்பும் சோறும் சாப்பிடாது. இந்நாட்டு மக்கள் 3 வருடங்களுக்கு முன்னர் ராஜபக்ச கூட்டணியிடம் ஏமாந்தனர். மக்கள் இப்பொழுது கிணற்றில் விழுந்துவிட்டனர். இனி மக்கள் கொக்கியைப் பிடித்தே வெளியே வரவேண்டும் என்றார் அவர்.

http://www.koodal.com/

  • கருத்துக்கள உறவுகள்

பறவாயில்லையே. "இருதின" காரன் கொஞ்சமாவது யோசிக்கிறான் போல கிடக்கு.கடைசி மகிந்தாவின் நாடகம் அம்பலத்துக்கு வர தொடங்கியுள்ளது. அதுவும் சிங்கள மக்களின் வயிற்றில் அடிக்கும் போதாவது ஞானம் பிறந்தால் சரி. பிறக்குமா?

சிங்களவர் அப்படி சிந்திப்பது கடினம் இனவாதத்தை வளர்த்துவிட்டால் சிங்களவர் எந்த சுமையையும் தாங்குவார்கள் ஏன் இந்த கட்டுரையில் கூட விடுதலைபுலிகள் தோற்கடிக்க பட கூடியவர்கள் ஆனால் அரசு முயலவில்லை என்ற தோரணையிலேயே எழுதப்பட்டிருகின்றது

என்ரு சிங்களம் தமிழரின் பலத்தை மீண்டும் உணருகிறதோ அன்றே மகிந்தாவுக்கு அப்பாக அமையும் அந்த ஆப்பு கிடைக்க கனநாளாகாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.