Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் பௌத்த துறவிகள் சிலர் எதிர்மாறான செயற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் பௌத்த துறவிகள் சிலர் எதிர்மாறான செயற்பாடு

[25 - February - 2008]

* இன்றைய அவலத்திற்கு இதுவே காரணம்; கலாநிதி விக்கிரமபாகு

கௌதம புத்தர், விடயங்களை ஆராய்ந்து உண்மையின் பிரகாரம் செயற்படுமாறே தமது சீடர்களுக்கு போதித்தார். ஆனால், எமது நாட்டிலுள்ள சில பௌத்த துறவிகள் இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் மாறாக செயற்படுவதே இன்றைய நிலைமைகளுக்கு காரணம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை திராவிட இயக்கத்தின் தலைவர் ஈ.மா. அருமைதாசனின் நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த புதன்கிழமை கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

மனிதர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என வாதிக்கும் நிலை முற்றாக இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். கௌதம புத்தர் 2500 வருடங்களுக்கு முன்பாக பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற ஆரியர்களின் கருத்தியலை நிராகரித்தனர். மனிதர்களின் செயற்பாடுகளின் மூலமே உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் யார் என தீர்மானிக்கப்பட வேண்டும் என புத்தர் வாதிட்டார். எனவே, அன்றைய ஆரிய ஒடுக்குமுறைக்கு எதிராக புத்தர் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்.

2500 வருடங்களுக்கு முன் ஆரிய மேலாதிக்கம் நிலவிய போது பெண்களுக்கு எத்தகைய உரிமையையும் அவர்கள் வழங்கவில்லை. அன்றைய மொழியான சமஸ்கிருதத்தில் பெண்களின் உரிமை தொடர்பாக ஒருவரி கூட இல்லை. புத்தர் பெண்களின் மத போதனைகளுக்கு இடமளித்தார். தீண்டாமைக்கு எதிராக போராடினார். இதனால், புத்தருக்கு அக்காலத்தில் உணவை வழங்க மறுத்து விட்டார்கள். இதனால் தான் பௌத்த துறவிகள் பிச்சைப் பாத்திரத்துடன், பேதங்கள் இல்லாது சகலரிடமும் உணவை பெற்று தமது மதத்தை பரப்பினார்கள்.

மனிதர்கள் 150 இலட்சம் வருடங்களுக்கு முன் தோன்றியதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், நான்கு வகையான மனித இனம் தோற்றம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கொக்கேசியஸ், நீக்ரோ, மொங்கேலிய, திராவிட இனத்தவர் என்ற பிரிவினர் மனித இனமாக கூறப்படுகிறது.

10 ஆயிரம் வருடங்களின் பின்பே மனித இனத்தில் பிரிவுகள் தோன்றியுள்ளன. மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் நிலவிய திராவிட நாகரிகம் உயர்ந்ததாக இருந்துள்ளது. அங்கே பெண்களே உயர் நிலையில் இருந்துள்ளனர். ஏற்றத்தாழ்வுகள் இருக்கவில்லை.

இலங்கையில் கூட ஆரிய விஜயன் இலங்கைக்கு வருகை தரும்போது குவேனி தலைமையிலான பெண்கள் உயர் நிலையில் இருந்த ஆட்சியே இருந்துள்ளது.

எனவே, ஆரியரின் வருகைக்கு பின்பே இந்த பகுதிகள் யாவிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன. இவர்களே பெண்களை கீழ் நிலைக்கு அடிமைகள் போல் நடத்தினர். அதன் தாக்கம் இன்று வரை தொடர்கிறது. பிறப்பால் உயர்ந்தவர்கள் என்ற இவர்களின் கொள்கையால் இன்றும் இந்த நாடு துயரத்துக்குள் சென்று கொண்டு இருக்கிறது. உயர்ந்த பரம்பரையினரே இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இவர்களே இந்த நாட்டை இவ்வளவு அழிவுக்கும் உள்ளாக்கியும் உள்ளனர்.

1929 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சமஷ்டி தீர்வை முன்வைத்தார். பின்பு சிங்களம் என்றார். அதன் பின்னர் சிங்களம் மட்டும் என்றார். நாடு பற்றி எரிந்தது. இதன் பின்னர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் ஒப்பந்தத்துக்கு சென்றார். மீண்டும் பௌத்த துறவிகளின் மிரட்டல்களுக்கு பணிந்து, அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார். இறுதியில் ஒரு பௌத்த துறவியால் கொல்லப்பட்டார். பின்னர் பதவிக்கு வந்த உயர்ந்த பரம்பரை என்றவர்கள் இந்த நாட்டை அழிவுக்குள் கொண்டு சென்றுள்ளனர்.

இதேநேரம், விஜய குமாரதுங்க, அரசியலில் முன்னுக்கு வந்தார். இவர் ஒரு கலைஞர், அதிகம் படிக்காதவர். கீழ் மட்ட மக்களில் இருந்தே அவர் உருவானார். ஆனால், இவரால் இந்த நாட்டுக்கு தலைமைதாங்க கூடியதாகவும், இந்த நாட்டின் பிரச்சினைகளையும் தீர்க்க கூடியவராகவும் இருந்தார்.

விஜய குமாரதுங்க வடக்கிற்கு சமாதானப் பயணத்தை மேற்கொண்டார். விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என பிரசாரங்களில் ஈடுபட்டார். வரலாற்றில் உயர்ந்த குலத்தினர் மேற்கொள்ளாத, மேற்கொள்ள முடியாத பெறுமதியான காரியத்தில் ஈடுபட்டார். பொறுக்க முடியாத பேரினவாதிகள் அவரின் முகத்தின் முன்னே துப்பாக்கியை குறிவைத்து கொன்றனர்.

புத்தர் விடயங்களை ஆராய்ந்து உண்மையின் பிரகாரம் செயற்படுமாறு தமது சீடர்களுக்கு உபதேசித்தார். இன்று இராப்பகலாக மத அனுஷ்டானங்களை பௌத்த துறவிகள் மேற்கொள்கின்றனர். ஆனால், இவர்கள் புத்தரின் போதனைகளை முழுமையாக பின்பற்றவில்லை.

கிளிநொச்சி மீது குண்டுகள் பொழியப்பட்டு, அங்கே மாணவர்கள்,பொது மக்கள் கொல்லப்படும்போது இங்கே மகிழ்ச்சி கொண்டாடப்படுகிறது. ஆனால், இங்கே குண்டுகள் வெடித்தால் பெரும் கண்டனங்கள் விடப்படுகின்றன. ஒரு நாயை கூட தொடர்ந்து தாக்கினால் அது ஒரு கட்டத்தில் திரும்பி வந்து அடித்தவனை தாக்கத் தொடங்கும். நாட்டின் ஒரு பகுதி மக்கள் மீது போர் பிரகடனம் செய்து அம்மக்களை அழிக்கின்றார்கள். தொடர்ந்து அம்மக்கள் அழிவதை அம்மக்கள் ஏற்பார்களா? எனவே தான் தாக்குதல்களுக்கு மறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று பௌத்த மதத்தில் பெண்களுக்கு இடம் இல்லை. 1500 வருடங்களுக்கு முன்பு புத்தரின் புனித சின்னத்தை ஒரு பெண்ணே இந்த நாட்டுக்கு கொண்டு வந்தார். அக்காலத்தில் அந்த சின்னத்தை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றன.

நாட்டின் பல இடங்களில் சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டு ஆட்கள் மீது சோதனை இடம்பெற்றது. ஆனால், இன்றும் சோதனைகள் இடம்பெறுகிறது. அது வேறு தேவைக்காக எனவே ஹேமமாலா என்ற பெண்ணே தனது தலைக்குள் அந்த சின்னத்தை ஒழித்து வைத்து அதை இங்கே கையளித்தார்.

இன்று அந்த புனித சின்னம் தலதா மாளிகைக்குள் வைத்து போற்றப்படுகிறது. ஆனால், அதில் உள்ள சோகம் என்னவென்றால் தற்போது பெண்கள் தலதா மாளிகைக்குள் அந்த சின்னத்தை வணங்கச் செல்ல முடியாது. எனவே, பெண்களை இன்று பௌத்தம், மேல் நிலைப்படுத்தவில்லை. திராவிட இயக்க தலைவர் தோழர் அருமைதாசனை எனக்கு 40 வருடங்களாக தெரியும். அவருடன் ஏற்பட்ட தொடர்புகளால் நான் பெரியாரைப் பற்றியும் திராவிட கொள்கைகளையும் அறிந்துகொண்டேன். விடயத்தை புரிந்துகொள்ள மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்பதை திராவிட கொள்கை வலியுறுத்துகிறது. இவை இந்த நாட்டில் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டால் இந்த நாட்டில் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2008/2/25/...s_page46482.htm

  • கருத்துக்கள உறவுகள்
:lol: எதிர்மாறான செயற்பாடுகள் செய்வதற்காக தான் இலைங்கையில் துறவி ஆகுவது.ஓடிப்போன ஆமியில் காவி உடைக்குள் கனபேர் இருக்கினம்.அது ஒரு பாதுகாப்பு.

என்ன? புத்தற்ற பல்லை ஒரு பொம்புளை தான் தலைக்குள்ள வைச்சு ஒழிச்சு கொணந்தவவோ? நல்லா இருக்கு

இந்த நவீன யுகத்திலும் புலிகளையும் போராட்டத்தையும் பற்றி உவங்கள் சொல்லுற பொய்களை அப்புடியே நம்புறாங்கள் உந்த சிங்களவங்கள்... அந்தகாலத்தில ஏதோ ஒரு பல்லை காட்டி உதுதான் புத்த பல்லு எண்டு ஆரோ விட்ட வெடியை நம்பிக்கொண்டு இண்டைக்கும் அந்த பல்லை போட்டு பட்டாத பாடு படுத்துறாங்கள்.. உவங்கள...

அந்த பெட்டிக்குள்ள இருக்குற உண்மை தெரியகூடாதெண்டுதான் அதை அவங்கள் திறக்க விடுறதில்லை.

உந்த சிங்களவங்களுக்கும் பிக்கு மாருக்கும் தைரியம் இருந்தா புதைபுருள் ஆராச்சியாளரிடம் அந்த பல்லை கொடுத்து ஆய்வு கூடத்தில பரிசோதனை செய்யட்டும் பார்க்கலாம்?

முதலாவது பந்தையம்? ஒரு பல்லு இருக்கு

இரண்டாவது? அது ஒரு மனுசப்பல்லு

மூண்டாவது? அது எத்தினை ஆண்டுகள் பழமையானது?

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பல்லைப் பார்த்தா அது மனிசர்ர பல்லைப்போல இல்லையாமெண்டு சொல்லினம்.

உந்த "பல்வணங்கிச் சொல்வணங்கா" பாவியளைப் பற்றிக் கதைச்சதில என்ன பிரயோசனம்.

உவங்களுக்கு யுத்தத்துக்குப்போக ஆசை ஏனெண்டால் போனால் பொம்பிளப் பிள்;ளையளோட சேட்டை விடலாமெண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.