Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது-இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது-இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்

2/26/2008 11:18:22 AM

வீரகேசரி இணையம் - இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இராணுவ ரீதியிலான நடவடிக்கை இதற்கு தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.மத்திய அரசின் கொள்கை முடிவுகளை விளக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே நாட்டின் வளர்ச்சி வீதம் என்பது தொடர்ச்சியாக 9 சதவீதமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலராக இருந்த போதிலும்கூட நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது.

விவசாயத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருவதால் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் இத்துறை குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதி எட்டப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 30 மெகா உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும். நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக தனி சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையின மாணவர்களுக்கு, தொழிற்கல்வி உதவியாக ரூ.800 கோடியும், பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.மூன்றாயிரத்து 300 கோடியும் அளிக்கப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டில் தற்போது 330 மாவட்டங்கள் மட்டுமே பயன்பெற்று வருவதை விரிவுபடுத்தி நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 11வது ஐந்தாண்டு திட்டத்தின்கீழ் 30 மத்திய பல்கலைக் கழகங்களும், கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் 370 புதிய கல்லூரிகளும், புதிதாக எட்டு ஐ.ஐ.டி.,க்களும், 20 தகவல் தொழில்நுட்ப மையங்களும், ஏழு இந்திய மேலாண்மை உயர் கல்வி நிலையங்களும், இரண்டு அறிவியல் ஆராய்ச்சி மையங்களும் துவங்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் ஒன்பது இடங்களில் நான்காயிரம் மெகா வாட் திறன் கொண்ட அல்ட்ரா மெகா மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, சாசன் மற்றும் முந்திரா ஆகிய இரு இடங்களில் பணிகள் ஆரம்பமாகி விட்டன. ரயில்வே துறையை நவீனப்படுத்தும் நோக்கில், நாட்டிலுள்ள 22 முக்கிய ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டு தனியார் நிறுவனங்களோடு சேர்ந்து அங்கு சுற்றுலா வசதிகளை மேம்படுத்தப்படும். இந்திய வான்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வாயிலாக இந்த ஆண்டு இறுதிக்குள் சந்திர மண்டலத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இலங்கையில் இனப் பிரச்னையில் வன்முறை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. ராணுவ ரீதியிலான நடவடிக்கை இதற்கு தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும். இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு இல்லாதவகையில் அங்கு வாழும் அனைத்து தரப்புக்களுமே ஒப்புக் கொள்ளும் வகையிலான தீர்வாக இருக்க வேண்டுமென இந்தியா விரும்புகிறது. இவ்வாறு இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தனது உரையில் தெரிவித்தார்.

ஜனாதிபதி உரையின் போது `கோஷம்': ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதன்முறையாக பிரதிபா பாட்டீல் உரை நிகழ்த்தினார். அவர் உரை நிகழ்த்தும் போது, எம்.பி.,க்கள் சிலர் மூன்று முறை கோஷங்கள் எழுப்பி குறுக்கீடு செய்தனர். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற கூட்டுக் கூட்டத்திற்கு காலையில் ஜனாதிபதி வந்த போது, அவரை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தாஸ் முன்ஷி ஆகியோர் வரவேற்றனர். சரியாக 11 மணிக்கு தனது உரையை பிரதிபா பாட்டீல் இருக்கையில் அமர்ந்தபடியே ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்தார். சமீப ஆண்டுகளில் முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் தனது இருக்கையில் அமர்ந்தபடியே உரை நிகழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

அடிக்கடி யாராவது தலைவர்களை வைத்து இப்படிச்சொல்லவேண்டிய தேவை என்ன? வேண்டுதலா

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்றால் , இலங்கை இராணுவத்துக்கு இரகசிய போர்ப்பயிற்ச்சியும் , ஆயுதவிற்பனையும் ஏன் ? யாரை திருப்திபடுத்த இப்படியான பேச்சு. மத்திய அரசு ஒரு கொள்கை.

அம்மையார் ஆட்சிக்கு வந்தாப்பிறகு முதல் முதலாக இலங்கை பற்றிய தனது கொக்கறையை மன்னிக்கவும் அக்கறையை வெளியிடுறா! சும்மா அதைப்போய் விமர்சுசனம் பண்ணிக்கொண்டு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நித்திரையிலிருந்து விழிப்பு :wub:

  • கருத்துக்கள உறவுகள்
:wub::wub::wub: வேறொன்றுமில்லை, எல்லாம் கள்ளச்சாராயம் அடிக்கிறதால வார பிரச்சனை. பாவம் மனுசி என்ன செய்யும், ஊத்திக் குடுக்கிறதைக் குடிச்சுப்போட்டு எழுதிக் குடுத்ததைப் படியுங்கோ எண்டால் படிச்சுப் போட்டுப் போகுது.

முன்னம் இருந்த அறிக்கைகளை எல்லாம் சேர்த்துவைத்து ஒரு பொதுவான அறிக்கை உருவாக்கி இருக்குறா... அவ்வளவுதான்... புதுசா ஒண்டும் வராது...

ஏதோ ஒண்டு கேட்கவேணும் போலகிடக்கு.... அவ வந்து அரசின் செயற்றிட்டத்தை சொல்லலாம் ஆனா ஏன் இலங்கையி விவகாரத்தை நாடாளுமண்றத்தில வாசிக்கவேணும்? ஒருவேளை இலங்கை ஒரு உள்நாட்டு விவகாரமாயிட்டுதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.