Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பினை ஐ.நா. பிரதிச் செயலாளர் நாயகம் புறக்கணிப்பு: மனோ கணேசன் விசனம்

Featured Replies

சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது ஐகிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் நாயகம் அஞ்சலா கனே அம்மையார் தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பினை புறக்கணித்திருப்பது குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அஞ்சலா கனே அம்மையாருக்கு தனது விசனத்தை தெரிவித்திருக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்துக்குப் பின் எளிய வசன நடையில் காட்டமான அறிக்கையொன்று தமிழ் தரப்பிடமிருந்து ஐநா பிரதிநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கூறியதை சுருக்கமாகவும் பக்குவமாகவும் எந்தவித பிதற்றலுமின்றி எடுத்துக்கூறி அழகான வசனநடையில் இவ் அறிக்கையை எழுதியவரை வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசன் துணிந்து கருத்துகளை தெரிவிப்பவர்.இதனை பல முறை செய்துள்ளார்.தனது பாதுகாப்பையும் உறுதிப்படுத்திகொள்ளவேண்டும

  • கருத்துக்கள உறவுகள்

மனோவின் பாதுகாப்பு மகிந்தவின் கையில் உள்ளது என்பது தான் கசப்பான உண்மை.

வீரகேசரி இணையம் - தமிழ் தரப்பினரை ஐ.நா.வின் உதவிச் செயலாளர் சந்தித்து பேசாமை குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன் கடும் விசனத்தை தெரிவித்துள்ளார். ஐ.நாவின் உதவிச் செயலாளர் ஏஞ்சலினா கனே நேற்று மனோ கணேசன் எம்.பியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதே தமிழ் தரப்பினரின் கவலையையும் விசனத்தையும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

ஜே.வி.பி. கட்சியினரை அவர்களின் அலுவலகத்துக்கு சென்று உங்களால் சந்திக்க முடியுமானால் ஏன் தமிழ், முஸ்லிம் தரப்பினரை சந்திக்க முடியவில்லை என்றும் மனோ கணேசன் எம்.பி ஏஞ்சலினா கனேயிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னை சந்திக்காமை குறித்து மனோ கணேசன் எம்.பி தெரிவித்த கடுமையான கண்டனத்தையடுத்து ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நேற்று காலை தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டு நேரடியாக சந்தித்து உரையாட முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதன்போதே மனோ கணேசன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் தொலைபேசி மூலமாக மேலக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் எம்.பியின் இல்லத்திற்கு தொடர்பை ஏற்படுத்திய ஐ.நா சபையின் உதவிச் செயலாளர் நாயகம், மனோ கணேசன் எம்.பியை சந்தித்து அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் உரையாட முடியாமல் போனதை ஒரு குறைபாடாக ஏற்றுக் கொண்டு அது தொடர்பில் தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார். எனினும் தனது விஜயம் தொடர்பில் தமது அறிக்கையை முழுமை செய்து கொள்வதற்காக தனக்கு கிடைக்கும்படியாக விபர அறிக்கை ஒன்றை உடனடியாக அனுப்பி வைக்கும்படியும் மனோ எம்.பியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தினால் இத்தகைய சந்திப்பு உதவிச் செயலாளரின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாதது தொடர்பில் தனது கடுமையான கண்டனத்தையும், ஏமாற்றத்தையும் மனோ கணேசன் எம்.பி உதவிச் செயலாளர் நாயகம் ஏஞ்சலினா கனேவிடம் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லிம் தலைவர்களைச் சந்திக்காமலேயே

ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் புறப்பட்டார்!

இலங்கைக்கு ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு வந்திருந்த ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் அங்கெலா கானே அம்மையார் அரசுத் தலைவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும், ஜே.வி.பி. தலைவர்களையும் சந்தித்துப் பேசிய பின்னர் தமிழர் மற்றும் முஸ்லிம் தரப்புகளின் முக்கிய தலைவர்களைச் சந்திக்காமலேயே நாட்டிலிருந்து நேற்று புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில்விக்கிரமசிங்க, மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரையும் மற்றும் அரசுத் தரப்பினர் பலரையும் சந்தித்து விரிவான பேச்சுகளை நடத்திய அங்கெலாகானே அம்மையார், ஜே.வி.பி. தலைவர்களை அவர்களது அலுவலகத்துக்குச் சென்று சந்தித்தார்.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற தமிழர், முஸ்லிம்களின் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளை அவர் சந்திக்காமலேயே கொழும்பை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

இதேசமயம், இப்படி அவர் நடந்து கொண்டமைக்காக நேற்று அவர் புறப்பட முன்னர் தொலைபேசி மூலம் தமது அதிருப்தியைத் தாம் அவருக்குத் தெரிவித்தார் என்றும்

அதற்காக அவர் தம்மிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டார் என்றும் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. குறிப்பிட்டார். (உ)

http://www.sudaroli.com/pages/news/today/03.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.