Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது டயறி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

29.02.2008 காலை 09.35

இன்று காலை எனக்கு மனம் மிகவும் மனம் பாரமாக இருக்கிறது. உண்மையில் சுஜாதாவின் இழப்பு தொடர்பாகத்தான் அது. ஒரு அறிவாளியின் இழப்பு அது. அவருடனான நேரடி தொடர்பு எனக்கு இருந்தது. பழகுவதற்கு மிக அன்பானவர். ஒரு தேர்ந்த விஞ்ஞானி அவர். அவரின் இழப்பு மிகவும் கவலையாக இருக்கிறது.

அனஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் அனாஸ்! நான் இன்னொருவரின் டயறியை படிப்பதில்லை. (பகிரங்கமாக.) :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாலை 6.55

இன்று மாலை எனது நண்பன் ஒருவன் கோல் பண்ணி சொன்னான் தான் ட்றைவிங் பரீட்சையில் பாஸ் பண்ணி விட்டேன் என்று. உண்மையில் ஐரோப்பிய நாடுகளில் அது ஒரு முக்கிய விடயம் தான். மிகவும் புளகாங்கிதம் அவன் குரலில் தொனித்தது. உண்மையிலேயே திருமணம் முடிப்பதை விட இது புளகாங்கிதம் தான்.

அனஸ்

  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

யாராலும் திருடப்பட முடியாதது.. யாராலும் களவா வாசிக்கப்பட முடியாதது.. யாராலும் திருட்டுத்தனமா எழுதப்பட முடியாதது.. மிகவும் ரகசியமானது எனது டயறி. அது வேற எதுவுமல்ல.. எனது மூளை..! நான் எனது டயறியா எனது மூளையைப் பாவிக்கிறேன்..! :D<_<

இது உண்மைக் கதை.. கதை என்று நினைச்சு.. அது நல்லா இருந்தா ஒருக்கா ஜோராக் கைதட்டுங்கோ..! முடியல்ல...! :wub::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அனஸ் உங்களது கண்ணோட்டத்தில் டயறி(நாட்குறிப்பு) என்றால் என்ன? :unsure:

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்களப்பூவான், கறுப்பியின் முகமடையாளம், நுணாவில்காரர் எல்லோரும் டயறி பற்றி .......................

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.25

எனது நண்பியொருத்தி கோல் பண்ணி சொன்னாள் தனது 12 வயது மகனை இங்கு வெளிநாட்டில் வைத்திருக்க முடியாது என்று. அவன் வந்து 8 மாதம்தான் ஆகிறதாம். அவன் தனது சொல் கேட்கிறானில்லையாம். எதற்கெடுத்தாலும் வெள்ளைக்கார பிள்ளைகள் போல எல்லாம் வேண்டுமாம். மிகவும் மனம் நொந்து போயிருந்தாள். காலப்போக்கில் இது பெரிய பிரச்சனையாக போகிறது.

அட ....மற்றவையின்ட டயறியை படிக்கிறது என்றா நேக்கு சரியான விருப்பம் பாருங்கோ... :unsure: (நன்னா எழுதுங்கோ நான் வாசிக்கிறேன் பட் ஒரு விசயமும் சென்சர் பண்ணாம எழுத வேண்டும் சொல்லிட்டேன் :D )...

அப்ப நான் வரட்டா!!

யாராலும் திருடப்பட முடியாதது.. யாராலும் களவா வாசிக்கப்பட முடியாதது.. யாராலும் திருட்டுத்தனமா எழுதப்பட முடியாதது.. மிகவும் ரகசியமானது எனது டயறி. அது வேற எதுவுமல்ல.. எனது மூளை..! நான் எனது டயறியா எனது மூளையைப் பாவிக்கிறேன்..!

இது உண்மைக் கதை.. கதை என்று நினைச்சு.. அது நல்லா இருந்தா ஒருக்கா ஜோராக் கைதட்டுங்கோ..! முடியல்ல...!

அட...அட அப்ப தாத்தாவின்ட பிரேயின் தான் டயறி.. :lol: (நன்னா இருக்கே :D )...பட் நேக்கு டயறி என்பதே இல்லை.. :D (நானே தொலைந்த டயறி நானறியேன் கண்மணியே எப்படி இருக்கு பாட்டு :D )..அட தாத்தாவிற்கு கைதட்டல் என்ன விசிலே அடித்து விடுறோம்...(என்னாலையும் முடியல தாத்தா :D )..

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று காலை 6.00 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இலங்கையில் இருந்து பழைய சினேகிதன். அவரை எப்படியாவது ஐரோப்பாவிற்கு கூப்பிடட்டாம்.

உண்மையில் எனக்கு அவ்வாறான வசதி செய்ய முடியாது என்று சொன்னேன். அவ்வாறான விசா இல்லையென்றதும் உடனடியாக அவன் கோபித்துக்கொண்டான். ஏனெனில் நான் இங்கு வந்து 10 வருடமாகிவிட்டதாம் ஆகவே எனக்கு கூப்பிட முடியுமாம். தன்னில் நான் அக்கறை கொள்ளாததன் காரணத்தில்தானாம் தன்னை கூப்பிடவில்லையாம்.

நிலமையை நான் விளக்கிசொன்னாலும் அவர் விளங்குகிறார் இல்லை. என்ன செய்வது கவலையாக இருக்கிறது.

Edited by ANAS

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தப்பொழுது

-------------------

ஒவ்வொரு முறையும்

எனது இருளுக்குள்ளேயே நான்

தொலைந்து போகிறேன்

ஒளி வரும் பாதைகளை எதிர்பார்த்தபடிக்கு

ஓர் ஒளியிடையேனும்

விகாரமில்லாத எதுவும் தென்படாத படிக்கு

மூலையில் கிடக்கிறது இருள்.

எல்லா நியாயங்களுக்குமான

கூக்குரலை உயர்த்தி கத்தியபடிக்கு

ஒரே ஒரு வெளியில் அலைந்தபடிக்கு உள்ளேன்.

எனது சுமைகள் எதனையும்

பொருட்படுத்த முடியாமல்

பாரப்பட்ட வெளியை விட்டும் தூரமாகிவிட்டேன்.

உயிரை ஒரு ஜீவித காலத்துக்கு

மட்டுமாகிலும் நகர்த்தினால் உத்தமம்.

மரணம் பற்றிய ஒவ்வொரு

நினைவினூடாகவும் கழிந்து போகின்றன

நொடிகள்.

இருள் சூழும் பொழுதை விரட்டியபடிக்கு

ஒரு இயலாக் கருவியாய்

எறியப்பட்டுப் போனேன் மூலையில்

ஒரு புரட்சி நாள் வரவேண்டும்

அதில் நானும் எல்லா இருள் விலக்கிய

பகல் பொழுதொன்றில்

என் வீட்டில் மட்டுமிருந்து பகல் போசனம்

அருந்த வேண்டும்.

ஒளி மட்டுமே வேறொன்றையும் காணாதபடிக்கு

நானும்.

எனது கவிதையொன்று நண்பர்களுக்காக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்.பி சிவநேசனின் இழப்பு பெரியது. அவரை ஒரு முறை சந்தித்திருக்கிறேன் எனது தொழல் நிமித்தம். மிகவும் நல்ல மனிதர். மரணம் மிகவும் கடுமையானததான். அவரது குடும்பத்தினருக்கு அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள்.

அனஸ்

ஆனாஸ் அக்கா/ அண்ணா, உங்கட நாட்குறிப்பு நல்லா இருக்கு வாசிக்க.

உங்களோட சேந்து நானும் என்ட நாட்குறிப்ப இதுக்க இறக்கிவிட்டா கோவிக்க மாட்டீங்கள் தானே? ஹாகா.

மார்ச் 08, 2008:

@இண்டைக்கு பால் குடிச்சுப்போட்டு மல்ரிவிற்றமின் போடலாம் எண்டு டப்பாவது தூக்கினன். ஐயோ அது முடிஞ்சுபோச்சிது. நேற்று கடைசியா பாக்கேக்க இரண்டு, மூண்டு இருந்துச்சிது. எப்பிடி இன்டைக்கு ஒண்டும் இல்லாமல் போனது? அம்மாவிட்ட கேட்டன். அம்மா சொன்னா தனக்கு களைப்பா இருந்திச்சிதாம். தான் எடுத்துப்போட்டாவாம் எண்டு.

@ எனக்குள்ள ஒரு கேள்வி.. என்ன எண்டால் வாழைப்பழம் சாப்பிட்டால் ஏன் நித்தா வருகிது எண்டு. எனக்கு வாழைப்பழம் சரியான விருப்பம். ஆனா அத சாப்பிட்டா நித்தா வரும். என்ன செய்யுறது எண்டு யோசிச்சுக்கொண்டு இருந்தன் இதப்பற்றி கொஞ்ச நேரம்.

@ ஒருத்தர் தன்னோட சேந்து பிஸ்னஸ் செய்யுறதுக்கு எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அவரோட இன்டைக்கு கோல் எடுத்து கதைச்சன். இலகுவான பாதை எண்டு ஒண்டும் இல்ல எண்டு எனக்குள்ள இருந்து ஒரு சிந்தனை வந்திச்சிது.

@இன்டைக்கு இஞ்ச சினோ பெஞ்சு கொண்டு இருக்கிது. பேசாமல் போத்துக்கொண்டு படுக்க வேண்டியதுதான். வெளியில ஒரு இடமும் போக ஏலாது இந்த வெதருக்க.

@நிறைய வேலை இருக்கிது செய்யுறதுக்கு. இதவிட பிரிஜ்ஜிக்க கடையில வாங்கி வந்த அன்னாசிப்பழம் இருக்கிது. நேற்று . எப்ப நான் அதச்சாப்பிடுவன் எண்டு மனம் அலைஞ்சு கொண்டு இருக்கிது.

ஹிஹி நன்றி! வணக்கம்!

அனஸ் உங்களின் பினவரும் வரிகள் எனக்கு நன்கு பிடித்திருக்கின்றன.

"எல்லா நியாயங்களுக்குமான

கூக்குரலை உயர்த்தி கத்தியபடிக்கு

ஒரே ஒரு வெளியில் அலைந்தபடிக்கு உள்ளேன்."

"இருள் சூழும் பொழுதை விரட்டியபடிக்கு

ஒரு இயலாக் கருவியாய்

எறியப்பட்டுப் போனேன் மூலையில்"

வெளியில் ஒளியை உள்வாங்க எண்ணும் உங்கள் பிரயத்தனங்கள் வாழட்டும். நீங்கள தன்னந்தனியாக அலையும் வெளியில் உங்களுக்கான வெளிச்சம் உண்டு. ஆனால், உங்கள் பார்வையைப் புலப்படுத்தும் வெளிச்சம் எமக்குத்தான் தெரியவில்லை. உங்களது இருளில் என்னென்ன உண்டென நீங்கள் தெளிவுற அறிவீர்கள். ஆனால் நாங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசு உங்களின் உள்வாங்கல் எனக்கு பிடித்திருக்கிறது. நன்றி.

உங்களின் அந்த நகைச்சுவையுணர்வை நான் விரும்புகிறேன். தொடர்ந்தும் எழுதுங்கள். கலைஞன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.