Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி செல்வதற்கு சிறிலங்கா அரசு அனுமதி வழங்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நோர்வேயின் அமைதி முயற்சிக்கான அனுசரணையாளர்கள் வன்னி செல்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இதோடா வந்திட்டாங்கங்க....... :lol:

இந்த கோரிக்கைக்கு அரசு செவிமடுத்தே ஆகவேண்டும். இல்லாது போயின் மேற்குலகுடன் இராஜதந்திர மோதலை நேரடியாக இலங்கை அரசு தொடங்கிவிட்டது போன்ற தோற்றப்பாடு வெளிப்படும்.

'சமாதான' பேச்சு தொடர்பான அறிவிப்பொன்றை புலிகளின் அரசியல் துறை ஏற்கனவே செய்திருந்தையும் இங்கு நினைவில் கொள்ளல் அவசியம்.

புலம் பெயர் தமிழர்கள் 'யுத்த' முனைப்புடன் மட்டும் செயல்படாமல் 'சமாதான' வழிவகைகள் குறித்தும் புதிய விவாத களங்களைத் திறந்து விடவேண்டும். அதில் ஆர்வத்துடன் பங்கு கொள்ளவும் வேண்டும்.

'சமாதான' வழிமுறைகள் குறித்த விவாதங்களில் யாழ்களம் நண்பர்கள் அதீதமான 'பஞ்சி'யை காட்டுது ஏனோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா வந்திட்டாங்கங்க....... :lol:

ஏன் இந்தளவு சலிப்பு.....

இந்த கோரிக்கைக்கு அரசு செவிமடுத்தே ஆகவேண்டும். இல்லாது போயின் மேற்குலகுடன் இராஜதந்திர மோதலை நேரடியாக இலங்கை அரசு தொடங்கிவிட்டது போன்ற தோற்றப்பாடு வெளிப்படும்.

'சமாதான' பேச்சு தொடர்பான அறிவிப்பொன்றை புலிகளின் அரசியல் துறை ஏற்கனவே செய்திருந்தையும் இங்கு நினைவில் கொள்ளல் அவசியம்.

புலம் பெயர் தமிழர்கள் 'யுத்த' முனைப்புடன் மட்டும் செயல்படாமல் 'சமாதான' வழிவகைகள் குறித்தும் புதிய விவாத களங்களைத் திறந்து விடவேண்டும். அதில் ஆர்வத்துடன் பங்கு கொள்ளவும் வேண்டும்.

'சமாதான' வழிமுறைகள் குறித்த விவாதங்களில் யாழ்களம் நண்பர்கள் அதீதமான 'பஞ்சி'யை காட்டுது ஏனோ?

இது மேறகுலகின் பகை என்ற மட்டுப்படுத்தலில் மட்டும் தங்கியிருக்கவில்லை. இரசினால் முன்னேறவும் முடியாமல் பின்வாங்கவும் முடியாமலுள்ள வட போர்முனையில், மண்கவ்வாமலிருப்பதற்காகவாவத

அய்ரோப்பிய ஒன்றியம் வந்துட்டுது...

அப்பாடி... இனி விடியுதான் எங்களுக்கு...

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிக்குச் சென்று புலிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இணைத் தலைமை நாடுகளுக்கும், நோர்வேக்கும் சிறிலங்கா அரசாஙகம் அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருக்கின்றது. சிறிலங்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 3 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு, அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்த போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தது.

சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது உட்பட பல முக்கிய செய்திகளை விடுதலைப் புலிகளுக்குத் தெரிவிப்பதற்காகவும், மனிதாபிமான உதவிகள் அப்பகுதிக்கு எவ்வாறு சென்றடைகின்றன, மனித உரிமைகள் எந்தளவுக்கு மதிக்கப்படுகின்றது என்பவற்றை அவதானிப்பதற்காகவுமே இவர்கள் வன்னி செல்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தார்கள். வெளிவிவகார அமைச்சர், மனித உரிமைகள் விவகார அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருடனான சந்திப்பின்போதே இந்தக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இருந்தபோதிலும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பகுதி மீது படையினர் கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், அப்பகுதிக்குள் சென்றுவருவது பாதுகாப்பானதல்ல என்பதாலேயே இந்தக்கோரிக்கையைத் தாம் நிராகரிப்பதாக அரசாங்கத் தரப்பில் காரணம் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிககப்படுகின்றது. எந்த ராஜதந்திரிகளுக்கும் தற்போதைய நிலையில் வன்னி சென்றுவருவதற்கு அனுமதியளிக்கப்படாது என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது.

இதேவேளையில் தம்முடைய இரண்டுநாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் தமது விஜயம் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தகவல்களை வெளியிட்டனர். நாட்டில் காணப்படும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக தமது கவலையை வெளியிட்ட இவர்கள், இனநெருக்கடிக்கான இறுதியான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் எதிர்வரும் மாதங்களில் வெளியிடும் என்பதை தாம் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்கள்.

மேலும் செய்திகள் : http://www.webeelam.com

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுற வேலையைதான் இவையள் இப்ப செய்யினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.