Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையரசுக்கு எந்தவித இராணுவ உதவிகளையும் வழங்கக்கூடாது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Featured Replies

தமிழர்கள் மீது இலங்கையரசு தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையரசுக்கு எந்தவித இராணுவ உதவிகளையும் இரகசியமாகவும் வழங்கக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து பேசினார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு ராணுவம் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது.

அந்நாட்டு ராணுவத்தின் அத்துமீறல்களை கண்டித்து இந்திய அரசு ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் ரகசிய பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் மத்திய அரசின் கொள்கையை விளக்க வேண்டும் என்றார் ராஜா.

இலங்கை ராணுவத்துக்கு ரகசியமாக இந்திய அரசு உதவக் கூடாது. கடலிலும், நிலத்திலும் கண்ணி வெடிகளை வைக்கக் கூடாது என்ற சர்வதேச ஒப்பந்தங்களை மீறி இலங்கை ராணுவம் செயல்படுகிறது என்றார் ராஜா.

நன்றி :முரசம்

சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா எந்த உதவியும் செய்யக்கூடாது என்று இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களான இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் டி.ராஜா மற்றும் தி.மு.க.வின் ஆர்.சண்முகசுந்தரம், பாரதீய ஜனதாக் கட்சியின் திருநாவுக்கரசு ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

இலங்கைக்கு உதவி: சிபிஐ கண்டனம்

இந் நிலையி்ல் இலங்கைக்கு மறைமுகமாக இந்திய அரசு ராணுவ உதவிகளைச் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உடனடியாக இலங்கைக்கு ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என ராஜ்யசபாவில் கோரிக்கை விடுத்தது.

ராஜ்யசபாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான டி.ராஜா பேசுகையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற நிலையிலிருந்து மாறி, தமிழர்களுக்கு எதிரான போராக அந்த நாட்டு ராணுவத்தின் செயல்கள் மாறியுள்ளன.

அப்படிப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசு மறைமுகமாக ராணுவ உதவிகளை அழித்து வருகிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் உயிரிழந்து வருகின்றனர். தமிழ் இனம் அங்கு அழிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசை இந்தியா கடுமையாக கண்டிக்க வேண்டும்.

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா ரகசியப் பயிற்சி கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன. இது மிகவும் கவலை தருவதாக உள்ளது. தமிழர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளிப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

இலங்கையிலிருந்து பெருமளவில் தமிழர்கள் அகதிகளாக வந்து கொண்டுள்ள நிலையில், இந்திய அரசு மெளனம் காத்து வருவது வேதனையாக உள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது.

இலங்கை விவகாரம் தொடர்பாக இந்திய அரசு தெளிவான கொள்கையை அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு ஆயுத உதவி தரப்படுகிறதா இல்லையா என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை ராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கப்படுகிறதா, இல்லையா என்பது தெளிவாகக் கூற வேண்டும் என்றார் அவர்.

ராஜாவின் பேச்சுக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் எம்.பிக்களும், பிற எம்.பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2008/03...o-sri-lank.html

பஜக கண்டனம் எண்டது பொய்....!!

Edited by தயா

ப ஜ கா உண்மையில் மதத்தின் பெயரில் நடத்தப்படும் ஒரு இடதுசாரி கட்சி என்ன அதில் வாஜ்பாய் போன்ற மென்மையானவர்களும் மோடி போன்ற கடும்போக்காளர்களும் இருக்கிறார்கள்..........

அது போக பல முறை ஆட்சியில் இருந்த காங்கிரசை விட சில முறை( 2 தடவை) ஆட்சியில் இருந்த பாஜாக்கா மேலானது............................................

இதை அரசியலாக்காமல் ஈழத்தமிழனினத்தின் வாழ்வா சாவா என்ற ரீதியில் தமிழககட்சிகள் நோக்கவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்ப்பு ஆகும்.

கொக்குவில்!

இது ஒரு அரசியல் தானே.. இதை எப்படி அரசியல் ஆக்காமல் விடுறது?

:D:D:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை எவ்வாறு வெளியுலகம் கண்டுகொள்ளவண்ணம் இனக்கொலை செய்யலாமென்தற்கான பயிற்சியையே இந்தியா இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தற்போது அளித்து வருவதாக அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். இது தொடர்பாக எம் கே நாராயணனின் செயல்பாடுகள் உட்பட மத்திய அரசின் செயல்திட்டங்களை எதிர்க்கும் கம்யுனிஸ்ட் கட்சி பாஜகஇ திமுக போன்றவற்றின் மத்திய அரசின் கொள்கை தொடர்பான சமீபத்திய விமர்சனங்கள், இந்தியாவின் இவ்வினக்கொலைத் திட்டத்தை அம்பலப்படுத்துவதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Edited by karu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.