Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளான புலிகளின் பங்களிப்பின்றி தீர்வு காண முடியாது - தென்னாபிரிக்கா பிரதி அமைச்சர் படையாச்சி

Featured Replies

இலங்கைத் தமிழர்கள் தங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளையே கருதுகின்றார்கள். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை.

கடந்த வார இறுதியில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் 'இங்கையின் இனப்பிரச்சினை' எனும் தலைப்பிலானா அனைத்துலக மாநாட்டில் தென்னாபிரிக்கா சார்பில் படையாச்சி கலந்துகொண்டா போதே இக்கருத்தைத் தெரிவித்தார்;

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் இடம் பெற்று வரும் இனப்பிரச்சினைக்கு ஓர் இறுதித் தீர்வைக் காண்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு தென்னாபிரிக்கா அரசு தொடர்ந்தும் ஆர்வமாக உள்ளது.

இம்மாநாட்டில் நான் கண்ட உணர்வுகளையும் முடிவுகளையும் தென்னாபிரிக்கா அரசிற்குத் தெரிவிப்பேன். இலங்கை அரசையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் பேச்சுக்குத் திரும்ப வைப்பததே அம் மாநாட்டின் நோக்கம். பேச்சுகளே அப்பிரச்சினைக்குரிய தீர்வு காண வழியை ஏற்படுத்தும்.

இரு தரப்புகளையும் பேச்சு மேசைக்குத் திரும்ப வைப்பதே இம்மாநாட்டின் நோக்கம். பேச்சுகளே இப்பிரச்சினைக்குரிய தீர்வுகாண வழியை ஏற்படுத்தும்.

இருதரப்புகளையும் பேச்சு மேசைக்குத் திரும்ப வைப்பதை நோக்கமாகக் கொண்ட இம் மாநாடு, இலங்கை தொடர்பான அனைத்துலக்த்தின் கவனத்தைத் திருப்புவதற்கான ஒரு படிக்கல்லாகும்.

அனைத்துலக சமூகம், அனைத்துலக அமைப்புகள், தொண்டர் அமைப்புகள் என்பன இரு தரப்புகளைளும் பேச்சு மேசைக்குத் திரும்ப வைப்பதற்கான அழுத்தங்ளைப் பிரயோகிக்க வேண்டும் என்று இம் மாநாட்டில் வலியுறுத்தபட்டுள்ளது.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தென்னாபிரிக்கா சகல உதவிகளையும் வழங்கும். எனினும் தென்னாபிரிக்கா ஒருபோதும் தமது பங்களிப்பை இப்பிரச்சினையில் வலிந்து திணிக்காது.

இலங்கையில் மோதல்கள் தீவிரமடைவது குறித்து தென்னாபிரிக்கா ஆழந்ந்த கவலை கொண்டுள்ளது குறிப்பாகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் உள்ள நெருக்கடிகள் தொடர்பாக சிரத்தை கொண்டுள்ளது. இலங்கையின் நெருக்கடிக்கு சமாதானத் தீர்வைக் காண்பதற்கான ஆதரவை சர்வதேச சமூகம் அதிகரிக்க வேண்டும்.

எனினும் பிரச்சினைக்கு என்ன தீர்வைக் காணவேண்டும் என்பதை சர்வதேச சமூகம் பரிந்துரைக்கக் கூடாது. அது இலங்கை மக்களைப் பொறுத்த விடயம். இதுவே தென்னாபிரிக்கா மக்களினதும் அரசினதும் நிலைப்பாடு.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டமை போலவே தென்னாபிரிக்காவிலும் நிற வெறிக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்ட வேளை அப்போதைய தென்னாபிரிக்க அரசு எம்மையும் பயங்கரவாத அமைப்பென வர்ணித்தது. எனினும் நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அதற்கெதிராக போராடினோம்.

சுதந்திரமான அரசியல் செயற்பாட்டிற்கான பொருத்தமான சூழ்நிலைகளை நாங்கள் உருவாக்கினோம். இது மிகவும் முக்கியமான விடயம். இதன் மூலம் மக்கள் வெளிப்படையாக ஒடுக்கு முறை சட்டங்கள் குறித்து அஞ்சாமல் விவாதங்களில் பங்கு கொள்ள முடிந்தது.

தென்னாபிரிக்காவில் பேச்சு மூலமான தீர்வை காண்பதற்கு அவசியமான சூழலை உருவாக்குவதற்கு எம்மீதான தடையை நீக்கி, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்றோம். இதுவே எமது போராடட்டத்தில் நாங்கள் எதிர்கொண்ட தடை.

இதை எதிர்கொள்வதற்காக மக்களையும், சர்வதேச சமூகத்தையும் ஒன்று திரட்டி தடைகளை அகற்ற வேண்டியிருந்தது, இது உங்களுடைய போராட்டத்துக்குப் பொருந்தும். இப்படி அவர் குறிப்பிட்டார்.

நன்றி சுடர் ஒளி

வெற்றியை கண்டால் துள்ளிக் குதிப்பதும், ஓரிரு தோல்விகள் வந்து விட்டால் துவண்டு விழுவதும் என்று இல்லாமல், விடுதலைபுலிகள் வேறு ஈழத்தமிழர்கள் வேறு அல்ல என்று அகில உலகுக்கும் ஆணித்தரமாக தமிழர்கள் உரைக்க வேண்டிய காலகட்டம் இது!

இந்த செய்தியை புலம்பெயர் தமிழர்கள் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும்! பல்வேறு காரணங்களுக்காக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாதவர்களும், தினமும் தாம் சந்திக்கும் நபர்களிடமும் நண்பர்களிடமும் இதை எடுத்துரைக்க தயங்க கூடாது.

பிரசாரம் என்பது ஏதோ 100 பேர் மாதம் ஒரு தடவை கூடி ஊர்வலம் செல்வது மட்டும் அல்ல. தனிநபர்களால் தினந்தோறும் செய்யப்படும் வாய்வழி பிரசாரமும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதை செய்வதற்கு ஒரு செப்புக்காசும் செலவு ஆகாது! தேசப்பற்றும், பொறுப்பும், நேர்மையும் மட்டும் தான் தேவை

--**--

இன்னும் கொஞ்சம் அதிகமான வாசகர்களை அடைவது நன்மை பயக்கும் என்பதால் மேலுள்ள கருத்து மீண்டும் இணைக்கப்பட்டுள்ள்து

Edited by vettri-vel

இது எல்லோருக்குமே தெரிந்த விடயந்தான். ஆனால் வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு உலக நாடுகளுக்கான தேவை இன்னமும் எதையோ எதிர்பார்க்கிறது. விடுதலைப் புலிகளுடன்தான் எந்த நிலையிலும் பேச வேண்டிவரும்.

என்ன இறைவன்!

என்னத்தையோ எதிபார்க்கினம் எண்டு மொட்டையா சொல்லி போட்டு நீங்கள் போட்டியழ்.. இன்ச எனக்கு நித்திரையும் வரமாட்டுது... என்னத்தை எதிர் பாக்கினம் எண்டு தெரிஞ்சவ சொல்லுங்கோ..

ஏதாவது கிடந்தா.. (இல்லாட்டா கடன் எண்டாலும் எடுத்து).. குடுக்கிறதை குடுத்து.. எடுப்பம.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.