Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் பதிலடி: கர்நாடக பஸ்கள் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை: கன்னடர்களின் வன்முறைக்குப் பதிலடியாக தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு இடங்களில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) பேருந்துகள் தாக்கப்பட்டன. மதுரையில் கே.எஸ்.ஆர்.டி.சி புக்கிங் அலுவலகத்தைப் பூட்டி, ஊழியரை சிறை வைத்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

ஓகனேக்கல் பிரச்சினையைக் காரணம் காட்டி கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கன்னட வெறியர்கள் வன்முறையை அரங்கேற்றி வருகின்றனர். தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழக பேருந்துகளும் வழிமறிக்கப்பட்டன. தமிழ் டிவி சானல்களும் முடக்கப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்தில் ஒரு பேருந்தின் டயரில் காற்றை இறக்கி விட்டு, பேருந்தை சிலர் அடித்து நொறுக்கினர். விரைந்து வந்த போலீஸார் 8 பேரைக் கைது செய்தனர்.

கோவையிலிருந்து பெங்களூர் சென்ற பேருந்து கணபதி பகுதியில் தடுத்து நிறுத்தி தாக்கப்பட்டது. இதில் பஸ் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் மாற்றுப் பேருந்தில் பயணிகள் பெங்களூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரையில் சிறை வைத்துப் போராட்டம்:

இந்த நிலையில் மதுரையில் கேஎஸ்ஆர்டிசி புக்கிங் அலுவலகத்தை மூடி மதுரை வக்கீல்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்குச் சென்றனர்.

அங்குள்ள கே.எஸ்.ஆர்.டிசி புக்கிங் அலுவலகத்திற்குச் சென்ற வக்கீல்கள், அலுவலகத்தை மூடுமாறு அங்கிருந்தவரிடம் கூறினர். ஆனால் அவர் அமைதியாக இருக்கவே, அவரை உள்ளே வைத்து வெளியே பூட்டுப் போட்டுப் பூட்டினர்.

பின்னர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 3 கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் கரியைப் பூசியும், தாரைப் பூசியும் சுற்றி நின்று போராட்டம் நடத்தினர். புக்கிங் அலுவலக பெயர்ப் பலகையும் உடைக்கப்பட்டது. பின்னர் வக்கீல்கள் சிலர் பஸ்கள் மீது ஏறி கூரை மீது நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழர்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பூட்டை உடைத்து புக்கிங் அலுவலக ஊழியரை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

தற்போது அதிக அளவில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கேஎஸ்ஆர்டிசி புக்கிங் அலுவலகத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில்...

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்து நேற்றிரவு பெங்களூர் புறப்பட்ட கர்நாடக அரசு பஸ் தஞ்சாவூர் புது பஸ்நிலையம் வந்தது. அங்கு தமிழ் தேச பொதுவுடமை கட்சி மாவட்ட செயலர் பழ.ராஜேந்திரன் தலைமையில் பலர் அந்த பஸ்சை மறித்தனர்.

பஸ்ஸின் டயரில் இருந்து காற்றை இறக்கி விட்டனர். கர்நாடகாவுக்கு எதிராகவும், அங்குள்ள தமிழர்களை காக்க கோரியும் கோஷம் எழுப்பினர். பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

ரயிலை மறிக்க முயற்சி:

இதேபோல, இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு தூத்துக்குடியிலிருந்து மதுரை வழியாக பெங்களூர் செல்லும் ரயிலை மறிக்க மதுரை ரயில் நிலையம் நோக்கி விரைந்தனர்.

மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் திரளாக ரயில் நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் ரயில் நிலையத்திற்குள் அவர்களை நுழைய விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

பஸ்களில் கூட்டம் இல்லை: இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து பெங்களூர் செல்லும் கர்நாடக அரசுப் பேருந்துகளிலும், தமிழக அரசுப் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

சென்னையிலிருந்து நேற்று பெங்களூர் கிளம்பிய பல பேருந்துகளில் சொற்ப எண்ணிக்கையிலேயே பயணிகள் இருந்தனர்.

பஸ்களுக்குப் பதில், ரயில்களில் போவது பாதுகாப்பானது என்பதால் பயணிகள் ரயிலில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ரயில்கள் வழக்கம் போல கூட்டத்துடன் காணப்படுகிறது.

நன்றி: தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்றுமுதல் கன்னட சேனல்கள் 'கட்'

சென்னை: தமிழ்நாட்டுக்கு எதிராக போராடிவரும் கன்னட அமைப்புகளுக்கு பதிலடியாக தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் கன்னட டிவி சேனல்களை இருட்டடிப்பு செய்ய கேபிள் ஆபரேட்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒகேனக்கல் கூட்டுக்குடி நீர் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கூறி கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளன.

நாராயண கௌடா தலைமையிலான கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பெங்களூரில் பல பகுதிகளிலும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களின் அலுவலகங்களில் நேற்று புகுந்து ரகளை செய்தனர். தமிழ் சேனல்களை ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்டன.

தியேட்டர்களிலும் தமிழ்படங்களை திரையிட விடாமல் தடுத்தனர்.

இந்தநிலையில் கன்னட அமைப்புகளின் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் கன்னட சேனல்களை இருட்டடிப்பு செய்ய கேபிள் ஆபரேட்டர் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகிவரும் 9 கன்னட டிவி சேனல்களை ஏப்ரல் 2ம் தேதி மாலை முதல் நிறுத்தவுள்ளனர். இதை மீறி கன்னட சேனல்களை ஒளிபரப்பும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/04...a-channels.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோவையில் கன்னட சங்கம் மீது தாக்குதல்

கோவை: கோவையில் இன்று கன்னட சங்கம் தாக்கப்பட்டது. பஸ் மறியலும் நடந்தது.

பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து தமிழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று மதுரை, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடந்தது.

இன்றும் தமிழகத்தில் போராட்டம் தொடர்கிறது. கோவையில் உள்ள கன்னட சங்கத்தை சிலர் தாக்கினர். இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்தனர். மேலும் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

இதேபோல சத்தியமங்கலத்தில் இன்று கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை வழிமறித்து மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

நன்றி: தற்ஸ் தமிழ்

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதாவது தமிழ்நாட்டுத் தமிழனுக்குத் தன்மானம் வந்ததே ! அடிக்க அடிக்கக் குனிபவன் இல்லை தமிழன், புலியாகச் சீறுபவனே தமிழன் என்று ஈழத்தமிழன் 30 வருடங்களுக்கு முன்பே பாடம் கற்பித்து விட்டான். தமிழ்நாட்டுத் தமிழன் இனி ஒழுங்காகப் படித்தால் சரி !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் கன்னடர்களின் ஹோட்டல்கள் மீது தாக்குதல்

சென்னை: தமிழகத்தில் நேற்றும் கன்னடர்களுக்கு எதிரான போராட்டம் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. சென்னையில் கன்னடர்கள் நடத்தி வரும் ஹோட்டல்கள் தாக்கப்பட்டன. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்த மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரில் தமிழ் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள், தமிழ்நாட்டுப் பேருந்துகளை தடுத்து நிறுத்தி மறியல் என கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வழக்கமாக பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு தமிழகத்தில் கண்டனமும், கோபமும் மட்டுமே வெளிப்படுத்தப்படும். ஆனால் இந்த முறை தமிழகத்தில் பதிலடி நடவடிக்ைககள் நடந்து வருகின்றன.

கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஆங்காங்கு தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றன. மறியல் போராட்டமும் நடைபெறுகிறது. மதுரையில், கே.எஸ்.ஆர்.டி.சி. புக்கிங் அலுவலகத்தை மூடி, ஊழியரை சிறை பிடித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள கன்னடர்கள் நடத்தும் ஹோட்டல்கள் தாக்கப்பட்டன. சென்னை பாரிமுனையில் உள்ள ஹோட்டல் சங்கீதாவை சிலர் கும்பலாக வந்து தாக்கினர். சாப்பிடும் டேபிள்களை அடித்து நொறுக்கினர். டம்பளர்களை தூக்கி வீசினர். ஹோட்டல் போர்டும் தாக்கி உடைக்கப்பட்டது. உணவுப் பொருட்களும் தூக்கி வீசப்பட்டன.

இதேபோல உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்கீதா ஹோட்டலின் கிளையும் தாக்கப்பட்டது.

இதுகுறித்து உயர்நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உடுப்பி ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு:

சங்கீதா ஹோட்டல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் உள்ள கன்னடர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.

உடுப்பி ஹோட்டல்கள், ஹோட்டல் பாம்குரோவ், வெல்கம் ஹோட்டல்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஹோட்டல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கன்னடர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக சங்கத்திற்குப் பாதுகாப்பு:

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக சங்கத்திற்கும், அதனுடன் இணைந்துள்ள பள்ளிக்கூடத்திற்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்குசீர்இல்லை அதனால் திமுக ஆட்ச்சியைகலைக்கனும்.

செயல்லலிதாஅம்மா இன்னும்அறிக்கைவிடவில்லையா?

இந்த முறைதான் .. கொஞ்சம் பறவா இல்லை... ஆனா இது காணாது..

அடுத்த முறை கன்னடக்காரன் கைவைக்க யோசிக்க வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் சூறாவளி. கை வைத்தால் வடிவாக கை வைக்கவேண்டும் .

அடுத்த முறை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.