Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகில இலங்கை மட்டத்தில் .மட்டக்களப்பு மாணவி முதலிடம் அடுத்து யாழ். இந்து, வேம்படியுடன் கரவெட்டி விக்னேஸ்வரா அதி சிறப்புச் சித்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை மட்டத்தில் .மட்டக்களப்பு மாணவி முதலிடம் அடுத்து யாழ். இந்து, வேம்படியுடன் கரவெட்டி விக்னேஸ்வரா அதி சிறப்புச் சித்தி

கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சி.ஈ. (சாதாரண) தர பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவி ஷாலினி முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் 10 "ஏ' சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அதி கூடுதல் புள்ளிகளையும் எடுத்துள்ளார்.

இவருக்கு அடுத்த நான்கு இடங்களையும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்(குகநந்தன் நிரூஜன், நரேந்திரன் திருத்தணிகன்), வேம்படி மகளிர் கல்லூரி மாணவி (ருக்ஷகா சந்திரபோஸ்), கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மாணவன் (அனந்தலிங்கம் நிதர்ஷன்) ஆகியோர் பெற்றுள்ளனர்.

பரீட்சை முடிவுகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்ட போதிலும் பெரும்பாலான பாடசாலைகளால் அவற்றைச் சீராகப் பெறமுடியாத நிலை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. (அ3)

http://www.uthayan.com/

  • கருத்துக்கள உறவுகள்

சாதனை படைத்த தெந்தமிழீழ மாணவிக்கும் இந்துவின் மைந்தர்களுக்கும் ஏனையவர்களுக்கும் முன்னாள் இந்துவின் மைந்தனின் வாழ்த்துக்கள்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஞ்சுகள், வாழ்த்துக்கள். ஏல் உம் உப்புடியே நல்லாப்படிச்சு நல்லா வந்து நாட்டுக்கும் வீட்டிற்கும் நல்லது செய்யுங்கோ.

சந்தோசம்.

சாமியின் ஆசீர்வாதங்கள்.

மாணவர்களிற்கு வாழ்த்துகள்!

இது தமிழ் மொழி மூலம் தோற்றியவர்களில் முதலிடம் வந்தோர் பற்றிய தகவல். இதில் பெரிதாக சந்தோசப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கின்றேன். அகில இலங்கையின் பெறுபேற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே தமிழ் மாணவர்களின் கல்வி நிலை தற்போது எந்தநிலையில் உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

எத்தனை 10 ஏ என்று பெருமைப்பட்டுக் கொள்ளாமல், எத்தனை சதவீதம் தமிழ் மாணவர்கள் பரீட்சையில் சித்திபெற்று உள்ளார்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

முன்பு ஓர் ஆய்வில் தமிழ் மாணவர்கள் ஓ எல் பரீட்சையில் சித்தி அடையும் வீதம் தற்போது குறைந்து செல்வதாக வாசித்ததாக நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் படிப்பில் அக்கறை செலுத்தி சிறப்பு சித்தி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.

மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.

எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் படித்து சிறப்பு சித்தி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தமற்ற சூழ்நிலையேற்பட்டால் அங்குள்ள மாணவர்களும் அகில இலங்கை ரீதியாக மேலும் பல சாதனைகளை நிலை நாட்டி பல சாதனைகள் படைப்பார்கள். க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் முதலிடம் பெற்றுள்ள கல்முனை, காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவி சந்திரசேகரன் சாலினி 'தினக்குரலு'க்ககளித்த செவ்வியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

'என்னுடைய குடும்பம் 5பேரைக் கொண்டது. ஆஸ்துமா நோயினால் அப்பா இறந்துவிட்டார். அம்;மா இல்லத்தரசியாக உள்ளார். அண்ணா வெளிநாட்டிலும், அக்கா வீட்டிலும் உள்ளானர்'.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில பரீட்சையிலும் 157 புள்ளிகள் பெற்று நான் சித்தியடைந்தேன். சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்தமையிட்டு மிகுந்த சந்தோஷமடைகிறேன்.

எனது இந்த சாதனைக்கு என்னுடைய தாய், குடும்பத்தினர், அதிபர், ஆசிரியர்கள் ஆகியோருடன் எனது விடா முயற்சி, இலவசக் கல்;வி நிலையங்கள், இறுதி நேரக் கருத்தரங்குகள் என்பனவும் காரணமாக இருந்தன.

உயிரியல் துறையில் மிகவுயர்ந்த நிலையை எட்டுவதே எனது இலட்சியமாகும்.

எதிர்வரும் காலங்களில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவ சகோதரர்களுக்கு நான் சில அறிவுரைகளை கூறவிரும்புகிறேன்.

அதாவது, அவர்கள் நூல் நிலையங்களை முழுமையாக உபயோகிப்பதுடன் ஆசிரியர்களை மதித்து கடந்தகால பரீட்சை வினாவிடைத்தாள்கள் மீட்டிப்பார்ப்பதன் மூலம சிறந்த அறிவு மற்றும் அனுபவத்தைப் பெற்று பரீட்சையில் சித்தியடைவதுடன் சாதனையையும் படைக்க முடியும். யுத்த மற்றும் இயற்கை அனர்த்தம் ஆகியன வடகிழக்கைப் பெரிதும் பாதித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலயிலும் வட,கிழக்கு மாணவர்கள் இம்முறை சாதரண பரீட்சையில் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளனர்.

உண்மையில் யுத்தமில்லாத ஒரு சூழ்நிலை வடகிழக்கில் நிலவுமாயின் இங்குள்ள மாணவர்களினாலும் அகில இலங்கை ரீதியாக மேலும், பல சாதனைகளைப்படைக்க முடியுமெனவும அவர் குறிப்பிட்டார்.

இதே வேளை, தனது மகளின் சாதனை குறித்து தாயார் எஸ். சந்திரா கூறுகையில் : 'மகள் இவ்வாறு சாதனை படைத்திருப்பது எனக்குப் பெருமகிழ்வாகவுள்ளது. சாலினி என்ன கஷ்டம் வந்தாலும் சிறந்த முறையில் படிக்க வேண்டுமென மரணிக்கும் தருணத்தில் அவருடைய தந்தை கூறியிந்தார். இன்று அவருடைய கனவின் ஒரு கட்டம் நிறைவேறியுள்ளது. பரீடசைக் காலத்திலும் அதற்கு முன்னரும் சாலினியை படிக்குமாறு நாம் வற்புறுத்தாத போதும் அவர் தனது சொந்த ஆர்வத்தில் படித்தார்'. என்றார்.

நன்றி தினக்குரல்.

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: வாழ்த்துக்கள் சாலினிக்குட்டிக்கு. எங்கட பிள்ளைகள் இந்த சிங்கள அரக்கர் மத்தியிலும் படிச்சிருக்கிறார்களே வாழ்த்துக்கள் அந்த யாழ் ஊடாக

மனிதனால் முடியாதது ஒண்றும் இல்லை

Edited by puspa

மாணவர்களிற்கு வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அட நெடுக்கும் என்ரை பள்ளிக்கூடம் தானா. போச்சடா.

வாய்க்கும் சந்தர்ப்பங்களை தமதாக்கி வளரவேண்டும். சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். ஏனையவர்கள் முயற்சி செய்யுங்கள். மீண்டும் முயற்சி செய்யுங்கள். நீங்களும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.