Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கோழைகள்!''

Featured Replies

''மரத்திலிருந்து உதிரும் இலை எங்கே செல்ல வேண்டும் என்று காற்றுதான் தீர்மானிக்கும்; இலை அல்ல! அப்படி, காற்றில் மிதக்கும் இலை போல என் வாழ்வு சென்றுகொண்டு இருக்கிறது. ஈழத்தில் பிறந்தேன்; கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்; சென்னை என் தற்காலிக வேடந்தாங்கல். அடுத்து, எங்கே என்று தெரியாது. காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!'' என்கிற கவிஞர் தமிழ்நதி, கொழும்புவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தார்.

தமிழ்நதி, ஈழத்தின் முக்கியப் பெண் கவிஞர்களான சிவமணி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை போன்று நவீன தமிழ்க் கவிதையில் தடம் பதித்தவர். 'சூரியன் தனித்தலையும் பகல்', 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' ஆகிய படைப்புகள் எழுத்துலகில் தமிழ்நதிக்குத் தனித்த இடத்தைப் பெற்றுத் தந்தன.

p69bg1.jpg

''நான் நாடோடியாகவும் அகதியாகவும் அலைந்து திரிகிறேன். கனடாவுக்குப் புலம்பெயர்ந்ததால் என்னிடம் இருப்பது கனடா பாஸ்போர்ட். இந்தியாவில் எனக்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை. ஆறு மாதத்துக்கு ஒரு முறை இலங்கை போய், இந்திய விசா வாங்கி வர வேண்டும். இப்படி நானும் என் பெற்றோரும் இலங்கைக்குத் தொடர்ந்து போய் வருவதிலேயே பொருளாதாரம்பாதிக் கிறது. கணவர் இருப்பது கனடாவில். நீங்கள் சென்னையை விட்டு மதுரைக்குப் போய் வசிக்க நேர்ந்தால் எவ்வளவு கஷ்டப்படுவீர்கள்? நாங்களோ நாடுவிட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் என அலைந்துகொண்டு இருக்கிறோம். அலைவதே வாழ்க்கையாகிவிட்டது. நான் மட்டுமல்ல, எல்லா ஈழத் தமிழர்களுமே இப்படித்தான் அலைகிறார்கள்!''

''சென்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?''

''அண்ணா சாலையில் ஸ்பென்சர், பாண்டி பஜாரில் போத்தீஸ், பனகல்பார்க்கில் புக் லேண்ட், கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ...இப்படியாகத்தான் சென்னை என் மூளையில் பதிந்திருக்கிறது. நான் பேசும் தமிழை வைத்து மலையாளமா என்கிறார் காய்கறிக்காரர். என்னைத் தமிழச்சி என்று ஒப்புக்கொள்ள அவர் தயாராக இல்லை. ஈழத் தமிழர்களுக்கு இங்கே வாடகைக்கு வீடு கொடுக்கவே பயப்படுகிறார்கள்.

சினிமாவும் அரசியலும் இங்கே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந் தைகள் போல இருக்கின்றன. அண்ணா சாலையில் பேனர் மயம். யாரோ ஒரு நடிகையும்நடிக ரும் சதா காதல் பார்வை பார்த்த படி, கட்டிப்பிடித்துக்கொண்டு வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். இளம் பெண்களும் நாகரிகக் குமரன்களும் கோந்துவைத்து ஒட்டியது போல பைக்கில் பறக்கிறார்கள்.அம்மாவும் அப்பாவும் மற்றொரு பக்கம் டிஜிட்டல் சிரிப்பு சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது தான் சென்னை!''

''ஈழப் பிரச்னையில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகள் சரியானவையா?''

''நான் புலம்பெயர்ந்தவள். நாடோடி. இங்குள்ள அரசியல் சூழல் பற்றி வெளிப்படையாகப் பேச முடியாது. இருப்பினும், கேட்டதற்காகச் சொல்கிறேன். ஈழ மக்களின் அவலத்தைப் பயன் படுத்திக்கொள்ளுதல் அல்லது பாராமுகமாக இருத்தல் என்னும் இரண்டு நிலைப்பாடுகளில் ஒன்றைத்தான் இங்குள்ள அரசியல் வாதிகள் எடுக்கின்றனர். வைகோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன், திருமாவளவன் போன்றோரின் அரசியல் நிலைப்பாடுகள் திருப்தி அளிக்கின்றன. ஈழப் பிரச்னையில் நடுநிலைமை வகிக்கிறோம் என்று சொல்வது மனித சமூகத்துக்கு எதிரானது. ஒரே மொழி பேசும் இனத்துக்குள் ஒரு சாராரின் படு கொலைகளைக் கண்டும் காணாமல் இருப்பது உறுத்தலாக இருக்கிறது!''

''உலகில் நடக்கும் ஒடுக்கு முறைகள் பற்றி எழுத்தாளர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். ஆனால், 25 ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கும் இனப் படுகொலைகள் பற்றி அதிகமான பதிவுகள் இல்லையே, ஏன்?”

''ஆம், ஒரு சிலரைத் தவிர்த்து, எவரும் ஈழப் பிரச்னை தொடர்புடைய படைப்புகளைப் படைப்பதில்லை. காரணம், அரசியல்சூழ் நிலையின் காரணமாக, ஈழமக் களின் பிரச்னையையும்பயங் கரவாதத்தையும் ஒன்றெனப்பார்க் கும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதனால்தான், லத்தீன் அமெரிக்க இலக்கியம் பேசும் இவர்கள் காதில், பக்கத்திலேயே தினமும் கேட்கும் வெடிகுண்டு ஓசைகள் விழுவதில்லை. இவர்களுக்குத் தங்கள் வாழ்க்கை, உயிர் குறித்த பயம் இருக்கிறது. அதை இழக்க இவர்கள் தயாரில்லை. இதை மீறி எழுதுவதுதான் உண்மையான எழுத்தாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அனைவரும் கோழைகள்தான். இதில் என்னையும் உள்ளடக்கித்தான் கூறுகிறேன்.''

''பெண் கவிஞர்களான சல்மா, கனிமொழி, தமிழச்சி ஆகியோர் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''பெண்கள் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், அரசியல் என்பது ஒரு சூதாட்டம். கபட வேடதாரிகளுக்கே அது கச்சிதமாகப் பொருந்தும். எழுத்தாளராக இருக்கும் போது உள்ள தார்மிக கோபம், நேர்மை எல்லாம் அரசியல்வாதியாக மாறும்போது தொலைந்து போய்விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.''

''ஈழத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன?''

''தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவரையும் பதிப்பகம் ஒன்றையும் 'ஃப்ரெண்டு' பிடித்துக்கொண்டால் செல்வாக்காக இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கை ஈழ எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. இது முட்டாள் தனமானது. இப்படி வருகிற புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் வேட்டிகளை இங்குள்ள பதிப்பகங்கள் உருவிக்கொண்டுதான் அனுப்புகின்றன. அவர்கள் கொண்டுவருகிற பணம், டாய்லெட் கழுவிச் சம்பாதித்த பணம்; கோப்பை கழுவிச் சம்பாதித்த பணம். அப்படிக் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொண்டுவருகிற பணத்தை இங்குள்ளவர்கள் கபளீகரம் செய்யக் கூடாது!'' உறுமல் ஓசை போல முடிக்கிறார் தமிழ்நதி.

ஆனந்தவிகடன்

  • கருத்துக்கள உறவுகள்

''ஈழத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன?''

''தமிழ்நாட்டு எழுத்தாளர் ஒருவரையும் பதிப்பகம் ஒன்றையும் 'ஃப்ரெண்டு' பிடித்துக்கொண்டால் செல்வாக்காக இருக்க முடியும் என்ற மூட நம்பிக்கை ஈழ எழுத்தாளர்களுக்கு இருக்கிறது. இது முட்டாள் தனமானது. இப்படி வருகிற புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் வேட்டிகளை இங்குள்ள பதிப்பகங்கள் உருவிக்கொண்டுதான் அனுப்புகின்றன. அவர்கள் கொண்டுவருகிற பணம், டாய்லெட் கழுவிச் சம்பாதித்த பணம்; கோப்பை கழுவிச் சம்பாதித்த பணம். அப்படிக் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கொண்டுவருகிற பணத்தை இங்குள்ளவர்கள் கபளீகரம் செய்யக் கூடாது!'' உறுமல் ஓசை போல முடிக்கிறார் தமிழ்நதி.

என்ன தான் இருந்தாலும் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் சுயரூபத்தை இப்படிச் சொல்லி இருக்கக் கூடாது..! அவர்களைப் பயன்படுத்திக்கிற.. தமிழக பதிப்பகங்கள் மீதான சாடல் வரவேற்கத்தக்கது. ஆனா திருந்துவாய்ங்கள் என்று நினைக்கிறீங்க..! ம்ங்கும்.. அது மட்டும் நடவாது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல. நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும்கூட"" - நோம் சோம்ஸ்கி

ஏப்ரல் 9,2008 எனத் திகதியிடப்பட்ட இவ்வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளிவந்திருக்கிறது. அதை வாசித்த எனது நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கக்கூட

  • தொடங்கியவர்

அடப்பாவிகளா! :unsure::rolleyes:

நன்றி சபேசன்.

இப்படியான நேர்காணல்களை ஒலிப்பதிவு செய்வார்கள். தமிழ்நதி ஆனந்தவிகடனை அணுகி அடுத்த இதழில் தவறை சுட்டிக்காட்டி அதே பத்திரிகையளரை மன்னிப்பு கேட்கவைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நதியை நன்கு அறிந்தவர்களுக்கு ஆனந்தவிகடனின் தலைப்பு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கும். ஊடகங்கள் தத்தம் பரபரப்புக்காக படைப்பாளிகளின் மனங்களை நோகடிக்கக் கூடிய வகையில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது. தமிழ்நதியின் எதிர்வினையை அதே ஊடகத்தில் தெளிவாகப் பதிந்து எதிர்காலத்தில் அத்தகைய தவறுகள் நடக்காதவண்ணம் பார்த்து கொள்ளவேண்டும்.

தமிழ்நதி, காலநதியில் ஈழத்து உறவுகள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உறவுகள் திசைக்கொன்றாய் தேங்கி, தோள்சாயமுடியாப் பெருநெருப்பில் தீய்கிறது. காலம் எமக்கானதாக வரும் என்ற நம்பிக்கை மட்டுமே எங்கள் நாட்களைக் காவிச் செல்கின்றன. காத்திருக்கும் பொழுதுகள் காய்க்கத் தொடங்கிவிட்டன. விழியோரக் கசிவிலெல்லாம் அனல் பிறக்க ஆரம்பித்துவிட்டன. நெஞ்சக் கூட்டறைக்குள் நிலவு கொஞ்சி விளையாடும் கனவுகள் கூடக் காணாமல் போய் சூரிய நெருப்பு சீறிக் கனல்கிறது. இப்போது இந்த வலைப்பின்னலும் வார்த்தைகளும் மட்டுமே எம்மை ஆற்றுப்படுத்தும் நம்புகிறேன்.

நமது தலமைகளும் கவனிக்க வேண்டிய ஒன்று...! சில ஊடகங்கள் ஊதிப்பெருசாக்குவதில் வல்லவர்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த விகடன் இதையெல்லாம் கண்டுக்காது.. தமிழின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் அண்மையில் பிரச்சினைகள் ஏற்படச் செய்தார்கள்.. வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கா இடம் கொடுப்பார்கள்?

உள்ளுணர்வு எச்சரித்தும் பேட்டி கொடுத்தது சரியாகப்படவில்லை.. ஆனந்தவிகடனுக்குப் பிழைப்பு முக்கியம்.. அதற்காக எங்கள் போராட்டத்தையும் பாவிக்கிறார்களா தெரியவில்லை.. தெரிந்தவர்கள் அறிந்து சொல்லவும்..

பிரச்சினை நம் ஊடகங்களிலேயே என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது. நம் மக்களை மூளையில்லாத கும்பலாக அணுகவே அவை ஆசைபப்டுகின்றன. விகடனின் எதிர்பார்ப்பும் கட்டுரையின் தொனியும் அதையே காட்டின

பொதுவாக இதழ்களின் தலையங்கம் அவ்விதழின் இதயம் என்பார்கள். நம் இதழ்களின் இதயங்கள் ஜனநாயகந் மனிதாபிமானம் என்ற லப்-டப் ஒலியில் இயங்குகின்றன. விகடனுக்கு இரட்டை இதயம்

ஆனால் விகடன் அதன் செயலைக் கண்டித்து வந்த எந்த கடிதத்தையுமே பிரசுரிக்கவில்லை என்பதை அதன் இணைய பக்கத்தை பார்த்தவர்களே உணரலாம். அவர்களின் பொறுப்பின்மையால் பாதிக்க்கப்பட்ட நான் எழுதிய நியாயமான மறுப்பைக்கூட பிரசுரிக்கவில்லை. சில வரிகளே இருந்தது அது. இவர்களை எனக்கு நன்றாகவே தெரியும். நீண்ட கடிதம் போட்டால் அதில் இருந்து சம்பந்தமில்லாத வரியை பிடிங்கி போட்டு இடமில்லாத காரணத்தால் சுருக்கினோம் என்பார்கள். அதை விட எழுத்தாளர்கள் சேர்ந்து அனுப்பிய கடிதத்தையும் போடவில்லை. அந்தக் கடிதம் திண்ணை இணைய தளத்தில் உள்ளது.

விகடனின் ஜனநாயகம் இதுவே. இத்தகைய ஊடகங்களால்தான் நம் கலாச்சாரச் சூழல் சிறுமைப்படுகிறது. சினிமாவால் அல்ல. அரசியலாலும் அல்ல என்று படுகிறது

http://jeyamohan.in/?p=278

ஆனந்தவிகடன், குமுதம் உட்பட பல பத்திரிகைகள் பரபரப்பிற்காகவும் வியாபார நோக்கத்திற்காவும் கருத்துக்களை திரிவுபடுத்தி வேறு ஒரு பொருள்படகூடியதாக வெளியிடுவது வழக்கம். அவர்கள் நமக்கு சார்பான கருத்துக்களை பிரசுரித்தால் அந்த வரையில் மகிழ்ச்சிப்பட வேண்டியது தான். அதற்கு மேல் என்ன சொல்ல ...

கிருபன்,

ஜெயகாந்தனின் வலைப்பதிவை தேடிக்கொண்டிருந்தேன். அறிய தந்தமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்,

ஜெயகாந்தனின் வலைப்பதிவை தேடிக்கொண்டிருந்தேன். அறிய தந்தமைக்கு நன்றிகள்.

இணைப்பு ஜெயமோகனின் வலைப்பதிவு.. ஜெயகாந்தன் வலைப்பதிவு வைப்பிருப்பதாகத் தெரியவில்லை..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.