Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டிக் கதை

Featured Replies

பள்ளிக்குப்; போவதற்காய் புறப்பட்டுச் சென்ற செந்தூரன் அன்றைக்கும் அழுது கொண்டே திரும்பி வந்து விட்டான்.

அன்று தான் வேலை விடயமாக வெளியூர் சென்றுவிட்டுத் திரும்பி வந்திருந்த தகப்பன்

“ஏன் தம்பி பள்ளிக்கூடம் போகாமல் திரும்பிட்டாய். என்ன பிரச்சினை’’ என்று ஆச்சரியத்துடனும் கவலையுடனும் கேட்டார்.

“மூலைவீட்டிலை இருக்கிற அந்தக் கொழுத்த நாய் நான் பள்ளிக்கூடம் போகும் போது கத்திக் கத்திக் குலைக்குது அப்பா. இப்ப ஒரு கிழமையா நான் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டுப் போறதும் திரும்பி வாறதுமா இருக்கிறன்" கவலையுடன் சொன்னான் செந்தூரன்.

சின்னப்பிள்ளைக்கு விளங்கும் விதமாகத் தகப்பன் சொன்னார்

“தம்பி அந்த நாய் படிக்க இல்லை எல்லோ. அதாலை ஆக்கள் படிக்கப் போறதைப் பாத்தால் அந்த நாய்க்குப் பொறாமை. அது தான் குலைச்சு நீயும் படிக்கப் போக விடாமல் விடாமல் பண்ணுது. ஆனால் நீ பயப்படாமல் போய் வா’’

“அந்த நாய் கடிச்சால்’’ .... செந்தூரன் பயத்துடனே கேட்டான்.

தகப்பன் சிரிச்சக் கொண்டே சொன்னார்.

“செந்தூரன் அந்த நாய்க்குக் கடிக்கிற துணிச்சல் இருந்திருந்தால் முதல் நாளே கடிச்சிருக்கும். இப்படிக் குலைச்சுக் குலைச்சு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காது.’’

தகப்பனின் பதிலில் தெளிவடைந்த செந்தூரன் பள்ளிக்குச் செல்லப் புறப்பட்டான். அந்தத் தெருநாய் குலைத்தது. அவன் சத்தமின்றித் தொடர்ந்து நடந்தான். அந்தத் தெருநாய் இன்னும் சத்தமாக அச்சப்படுத்தும் விதத்தில் குலைத்தது.

செந்தூரன் சிறிதும் சலனமின்றி தொடர்ந்து நடந்தான்.

தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விட்டது அந்தத் தெருநாய்க்கு விளங்கியது. வாலைச் சுருட்டிக் கொண்டு சுருண்டு படுத்துவிட்டது.

தந்தை சொன்ன குலைக்கிற நாய் கடிக்காது என்ற விடயம் இப்போது செந்தூரனுக்குப் புரிந்தது. இப்போதெல்லாம் செந்தூரனைப் பார்த்து அந்த நாய் குலைப்பதில்லை. :lol::lol:^_^

  • கருத்துக்கள உறவுகள்

வாலை சுருட்டி கொண்டிருக்கிற நாய் சில நேரம் விசர் பிடித்தால் பாய்ந்து கடித்து போடும் :lol:

  • தொடங்கியவர்

ஆலோசனைக்கு நன்றி புத்தா :lol::lol:^_^

ஓவியன். நேத்துத்தான் ஒரு நாய்க்கூட்டத்தை நிர்வாகம் தூக்கிட்டுப்போச்சு மறந்திட்டுதா? :lol:

  • தொடங்கியவர்

வசீ,

இந்தக் கதையிலை தூக்கிற மாதிரி எதுவுமே இல்லையே? :lol::lol:^_^

அச்சோ ஓவியன் அண்ணா கதை நன்னா இருக்கு :lol: பட் உங்களுக்கு ஒன்னு தெரியாதோ நாய் எல்லாம் படிக்கிறதில்லையே..(பிறகு எப்படி நாய் பொறைமை படும் :lol: )...நேக்கு டவுட்டா இருக்கு அப்படி பார்க்க போனா உந்த கருத்தை சொல்லுற அப்பா...(அவரும் படிக்கல்ல போல இருக்கு)..அச்சோ..அச்சோ.. :lol:

பிறகு ஜம்மு பேபி படித்ததோ என்று கேட்க கூடாது பிகோஸ் ஜம்மு பேபி மொண்டசூரி ஆக்கும் பாருங்கோ..ம்ம் கதை என்னவோ நன்னா இருக்கு ஆனா நாய்களை வைத்து காமேடி பண்ணிணா நேக்கு கேட்ட கோபம் வரும் சொல்லிட்டன்.. :lol:

பிகோஸ் நம்ம ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ஆனா நாய் வளர்க்கள்ள அதுக்காக..(சரி அங்கால வேண்டாம் :lol: )..

ம்ம் யாரோ ஒருவர் சொல்லி இருக்கிறார் நான் மனிதர்களை உற்று நோக்க நோக்க நாய்களை மிகவும் நேசிக்கிறன் என்று அந்த அர்த்தம் ஜம்மு பேபிக்கு இப்ப தான் விளங்கிச்சி...ரொம்ப தாங்ஸ் அண்ணா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

சரியா சொன்னீங்க ஜம்மு பேபி.

நமக்கும் மனிதர்களை உற்று நோக்க உற்று நோக்க நாய்களைப் பற்றித்தான் கதை வருது.

  • கருத்துக்கள உறவுகள்

எனது அயலவர் நேற்று தனது நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். எங்கே சில நாட்களாக உங்கள் நாயைக்காணவில்லையே என்று கேட்டேன்.

ஆதற்கு அவர் அது சில கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்ததால் நாய்ப் பள்ளிக்கூடத்தில் விட்டு இன்று அழைத்து வந்ததாகக் கூறினார். நல்லது என்றுவிட்டு வந்தேன்.

ஏனோ என் ஞாபகத்தில் 'இந்த மனுசன் ஒரு சொல்வழி கேட்காது."என்று அவர் மனைவி அப்பப்ப சொல்வது அசந்தர்ப்பமாக என் ஞாபகத்தில் வந்து தொலைத்தது!!!

  • 4 weeks later...

நான் சிறுவனாக இருக்கும் போது எனது கிராமமான குப்பிளானில் இருந்து அயல்கிரமான குரும்பசிட்டிக்கு மிருதங்கம் கற்க நடந்து செல்வதுண்டு. நடக்கும் போது ஒருமுறை ஒரு நாய் என்னைத் துறத்திக் கொண்டு செல்ல நான் வேகமாக ஓடினேன். நாயும் கலைக்க ஒடிய வேகத்தில் விழுந்து விட்டேன். நாய் கிட்ட வந்து விட்டது. நான் வேகமாகா எழ, எனது வேகத்தைப் பார்த்து விட்டு நாய் பயப்பட்டு திரும்பி ஒட்டி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருக்கிற காலத்தில் துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது துரத்தாத நாய்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. சில வீதிகளில் செல்லும் போது தப்பிப் பிழைக்க வேண்டி வரும். ஆனால் இந்திய இராணுவகாலத்தில் நாத்தம் பிடித்த இந்திய இராணுவத்தின் வாசத்துக்கு நாய்கள் குரைத்து , இராணுவம் வருகிறது என்று பல இளைஞர்களை இந்தியப் படைகளில் இருந்து காப்பாறியதும் நாய்கள் தான்.

காசியானந்தனின் கவிதை ஒன்று யாபகத்தில் வருகிறது. நாயே பீற்றருக்கு சாப்பாடு கொடுத்தாயா? இங்கே நாய் என்று அழைக்கப்படுபவர் வேலைக்காரன். பீற்றர் என்று அழைக்கப்படுபவர் செல்ல நாய். நறுக்குகள் என்ற கவிதைப் புத்தகத்தில் வாசித்த யாபகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.