Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசுக்கு சோனியாவின் ஆதரவை எதிர்த்து சிவசேனா ஊர்வலம். 10 பேர் கைது.

Featured Replies

தமிழ்நாடு, காரைக்குடியில் நடைபெறும் மாகாநாட்டில் பங்குபற்ற சோனியா காந்தி வருகை தந்திருந்த போது, இலங்கை அரசுக்கு சோனியா ஆதரவளிப்பதாகக் கூறி கண்டன ஊர்வலம் மேற்கொள்ள இருந்த சிவசேனாவின் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புலிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு ஆதரவாக சோனியா செயற்படுவதைக் கண்டிப்பதாக கூறி கறுப்புக் கொடியுடன் சிவசேனா கட்சியினர் காரைக்குடிக்கு ஊர்வலமாக புறப்படத் தயாரக இருந்த வேளையில் கட்சி செயற் தலைவர் தூதை செல்வம் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

மாறாத ஆதரவுக்கு நன்றிகள்

மராத்தியத்தில் இருந்து தமிழக தமிழர்களை துரத்தி தன் அரசியலை தொடங்கிய பால்தகரே நல்லவராக எனக்குபடவில்லை தூயவன்...!! அரசியலில் இது சகஜம்தான்... அதுக்காக எல்லாம் அரவணைக்க முடியாது...

முதலிலை நான் தமிழன்...

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு காரணங்களுக்களுக்காக யாழ்ப்பாணம் தொடக்கம் மராத்தி வரை இடப்பெயர்வுகள் தேவைப்பட்டன. மராத்திய மக்களின் தேவைகள் என்று அன்றைக்கு அவர் கோட்பாட்டை வைத்தார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டைப் பிரி, பாகிஸ்தானோடு தென்னிந்தியாவைச் சேர் என்று தமிழ்நாட்டில் பேய் பிடித்தாடிய காலம் அது. எரிச்சல் வராமல் என்ன செய்யும்.

அதற்காகத் தமிழரைத் துரத்தியதை நியாயப்படுத்தவில்லை. ஆனால் எமக்கு ஆதரவு வேண்டும்.

பழய சாமாங்கள தமிழகத்தில உள்ள உறவுகள் கூட அவ்வளவா உருட்டி பார்ர்க வில்லை...

பின்ன நாங்களேன் உருட்ட வேண்டும்... இலக்கங்களின் எண்ணிக்கைக்கு பாவிக்கிறதை விட்டுபோட்டு... ஞாயம் பேசிக்கொண்டு இருக்கிற கலமில்லை இது.

மராட்டியத்தின் உள்ளூர் அரசியல் எப்படி இருந்தாலும், பால் தக்கரேயும் சிவசேனாவும் ஆரம்பகாலத்தில் இருந்தே விடுதலை புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்கள். மும்பையில் சில சில உதவிகள் செய்ததும் உண்டு.

அதற்காக பால் தக்கரேயின் எல்லா செயற்பாடுகளும் கொள்கைகளும் சரியானது என்று நான் சொல்லவில்லை!

இந்தியாவில் உள்ள வாக்கு வங்கி அரசியலில் , வாக்கு பலம் உள்ளவர்களின் ஆதரவை நாம் கட்டியெழுப்ப முடிந்தால்

இந்தியா நம்மை கட்டித் தழுவும் காலம் வரும்

Edited by vettri-vel

முன்பு மராத்தியர்களை தமிழர்கள் சுரண்டுவதாக மராத்தியர்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் அடைந்தது சிவசேனா... பின்னர் மும்பையின் வளர்ச்சியில் தமிழரின் உழைப்பை அவர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது இப்போது மராத்தியர்கள் தமிழர்களை விரோதிகளாகப்பார்ப்பதில்லை.

மும்பையில் அரசால் தமிழ்வழிக்கல்வி பள்ளிகள் இன்று நடத்தப்படுகின்றன.

என் சொந்த மாவட்டமான குமரி மற்றும் அண்டைய நெல்லை மாவட்ட மக்கள் மும்பையில் அதிகம் .

இன்று அவர்கள் பயமின்றி மும்பையில் வாழ்கின்றனர்... சில நாட்கள் முன்பு இந்தி பேசும் மக்கள் தாக்கப்பட்ட போது கூட தமிழர்கள் தாக்கப்படவில்லை...

பால்தாக்கரேயின் பல மெய்க்காப்பாளர்கள் தமிழர்கள் .

தாக்கரே என்றும் தமிழீழ ஆதரவாளர் போல் தான் தோன்றுகிறது ... எனவே வரவேற்கலாம்

ஏதோ ஒரு காரணங்களுக்களுக்காக யாழ்ப்பாணம் தொடக்கம் மராத்தி வரை இடப்பெயர்வுகள் தேவைப்பட்டன. மராத்திய மக்களின் தேவைகள் என்று அன்றைக்கு அவர் கோட்பாட்டை வைத்தார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் நாட்டைப் பிரி, பாகிஸ்தானோடு தென்னிந்தியாவைச் சேர் என்று தமிழ்நாட்டில் பேய் பிடித்தாடிய காலம் அது. எரிச்சல் வராமல் என்ன செய்யும்.

அதற்காகத் தமிழரைத் துரத்தியதை நியாயப்படுத்தவில்லை. ஆனால் எமக்கு ஆதரவு வேண்டும்.

இதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை

அதற்காகத் தமிழரைத் துரத்தியதை நியாயப்படுத்தவில்லை. ஆனால் எமக்கு ஆதரவு வேண்டும்.

அத்வாணி அவர்கள் ஈழத்துக்கு ஆதரவு எண்றார் எண்டால் மகிழ்ச்சி கொள்ள முடியும்.. ஆனால் அத்வாணிக்கே ( குடியரசு தலைவர் தேர்வில் காங்கிரசுக்கு ஆதரவு எண்டு எல்லாம்) விலை(ளை)யாட்டு காட்டும் பால்தகரேயை நம்பலாமா...????

தமிழர்களை துரத்தியவர், இண்று கடல்கடந்து தமிழர்களுக்கு ஆதரவு..! எனக்கு என்னவோ ஜெயலலிதா அம்மையாருக்கும் உவருக்கும் நிறைய வித்தியாசம் தெரியவில்லை...!

எல்லாரினதும் ஆதரவு வேண்டும் அதிலும் இந்திய தமிழர்களின் ஆதரவு மிகமுக்கியம்..!!

Edited by தயா

தாக்கரே என்றும் தமிழீழ ஆதரவாளர் போல் தான் தோன்றுகிறது ... எனவே வரவேற்கலாம்

ஆனால் அவர் இந்து மதம் என்ற படியால தான் புலிகளை ஆதரிப்பதா சொன்னாரே?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் படுகொலை செய்ய சிறீலங்காவுக்கு இந்திய மத்திய காங்கிரஸ் அரசு அளித்து வரும் ஆதரவுக்கு எதிரான இந்திய தேசியக் கட்சிகள் போராட முன் வருவதை வரவேற்க வேண்டும். அப்போதுதான் ஈழத்தமிழர்களின் உரிமைக்கான நியாயப்பாடு என்ன என்பதைப் புரியவும் இந்திய தேசிய அளவில் காங்கிரஸ் மீது அழுத்ததைப் பிரயோகிக்க உதவும்..!

சிவசேன.. மற்றும்.. இந்திய இடதுசாரிக் கட்சிகள் தற்போது இந்திய தேசிய அளவில் ஈழத்தமிழர்களைக் கொல்ல இந்திய மத்திய காங்கிரஸ் அரசு உதவுவதாகத் தொடர்சியாக குற்றம் சாட்ட ஆரம்பித்துள்ளன.

தமிழகத்துள் மட்டும் ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல் அடங்கிவிடாது.. இந்திய தேசிய அளவில் அது வலுப்பெறும் போதே காங்கிரஸ் போன்ற இந்திய தேசியக் கட்சிகளின் கொள்கை முன்னெடுப்பாளர்களை அது புதிய அணுகுமுறைக்குள் சிந்திக்க வைக்கும்..!

  • கருத்துக்கள உறவுகள்

அத்வாணி அவர்கள் ஈழத்துக்கு ஆதரவு எண்றார் எண்டால் மகிழ்ச்சி கொள்ள முடியும்.. ஆனால் அத்வாணிக்கே ( குடியரசு தலைவர் தேர்வில் காங்கிரசுக்கு ஆதரவு எண்டு எல்லாம்) விலை(ளை)யாட்டு காட்டும் பால்தகரேயை நம்பலாமா...????

குடியரசுத் தலைவர் பற்றிய கருத்தில் அத்வானிக்கு கட்டாயம் ஆதரவு தெரிவிக்க வேண்டிய தேவையைச் சிவசேனை கொண்டிருக்கவில்லையே. அது தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் முடிவெடுப்பதில் என்ன தப்பு. சிவசேனை பிஜேபியின் நட்புக்கட்சியே தவிர, காட்டயம் ஆதரவு தரவேண்டும் என்ற தேவையைக் கொண்டிருக்கவில்லை.

தமிழர்களை துரத்தியவர், இண்று கடல்கடந்து தமிழர்களுக்கு ஆதரவு..! எனக்கு என்னவோ ஜெயலலிதா அம்மையாருக்கும் உவருக்கும் நிறைய வித்தியாசம் தெரியவில்லை...!

இந்த உங்களுடைய கருத்துக்கு என்னால் தனிமடலில் தான் நியாயம் சொல்ல முடியும்...

எல்லாரினதும் ஆதரவு வேண்டும் அதிலும் இந்திய தமிழர்களின் ஆதரவு மிகமுக்கியம்..!!

அரசனை நம்பிப் புருசனைக் கை விடு என்று சொல்ல வரவில்லை. ஆனால் சென்னையில் இருந்து கிளம்பிப் போன சிவசேனையினரும் தமிழர்களே... அவர்கள் ஆதரவாகக் கிளம்பியதற்கு நன்றி தெரிவிப்பதில் என்ன தப்புக் கண்டீர்களோ தெரியவில்லை..

வாறது சோனியா என்றபடியால் தான் போராட்டமா? எதாவது காரணம் வேண்டுமல்லவா..

பிஜேபி இருந்தால் என்ன, காங்கிரச் இருந்தால் என்ன, அவர்களின் ஈழத்தமிழர்களுக்கான் கொள்கை மாறபோவதில்லை....!

குடியரசுத் தலைவர் பற்றிய கருத்தில் அத்வானிக்கு கட்டாயம் ஆதரவு தெரிவிக்க வேண்டிய தேவையைச் சிவசேனை கொண்டிருக்கவில்லையே. அது தன்னுடைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் முடிவெடுப்பதில் என்ன தப்பு. சிவசேனை பிஜேபியின் நட்புக்கட்சியே தவிர, காட்டயம் ஆதரவு தரவேண்டும் என்ற தேவையைக் கொண்டிருக்கவில்லை.

சிவசேனையின் தலைவர் பால்தகரேயை பற்றியே எனது அவ நம்பிக்கை.. (இப்ப அதிமுக தலைவர் போலவே எல்லா தொண்டர்களும் எண்று சொல்லி விட முடியாது அல்லவா) ஆகவே தமிழ் நாட்டை சேர்ந்த சிவசேனையரை விட்டு விடுங்கள்...

சிவசேனையரின் ஆரம்ப முதல் இப்போத்தைய செயற்பாடுகள் எல்லாம் மத ரீதியானது அல்ல... இன ரீதியானதும் கூட... அதனால்தான் தமிழர்களை துரத்தினார்கள்... மராத்திகளோடு சம்பந்தப்பட்ட குஜராத்தி பெண்மணியான பிரதீபா படேலுக்கு ஆதரவு எண்று வெளிப்படையாக சொன்னவர்கள்....!! அதனாலேயே பரதிய ஜனதா கட்ச்சியின் வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டவர்கள்..

இன ரீதியான அணுகு முறை என்பது பால்தகரே அவர்களிடம் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது என்பதுக்கு அது நல்ல உதாரணம்...!! தேவை ஏற்படின் இன்னும் ஒரு முறை தமிழர்களை வதைக்காமல் விட மாட்டார்.. நாய் நடுக்கடலுக்கு போனாலும் நக்கித்தான் தண்ணீர் குடிக்கும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா

தமிழன் ஒருவன் பிரதமர் ஆக வர முடியுமென்றால் அதற்காகத் தானே தமிழன் ஆதரிக்க முயல்வான். அது இனவாதமாகுமா? பிரதீபா பட்டேல் வருவதற்குத் தான் சிவசேனை ஆதரவு தந்தது என்றால் , இதே சிவசேனை தான் முன்பு அப்துல் கலாம் வருவதற்குத் தன்னுடைய ஆதரவையும் தந்தது. அப்போது மதம் இனம் கவனத்தில் கொள்ளப்படவில்லையே. அப்துல் கலாம் வருவதில் எனக்குச் சந்தோசம் தான். ஆனால் சிவசேனை இன, மத அடிப்படையில் இதை நோக்கியது என்பது ஏற்க முடியவில்லை. ஆனால் அப்படி இருந்தாலும் தவறில்லை...

மற்றும்ப சிவசேனை தொடர்பாக உங்களுக்கு நான் தனியே சொன்ன கருத்தில் எனக்கு 100 வீதம் உடன்பாடு உண்டு. தவறுகள் மன்னிக்கப்படலாம். திருத்திக் கொள்ளும் பட்சத்தில்...

எல்லாம் சரி இந்த செய்தி எந்த பத்திரிக்கையில் வந்தது???

தமிழக செய்திதாள்களிலோ அல்லது தொலைக்காட்சி செய்திகளிலோ பார்க்கவில்லை அதனால் கேட்கிறேன்...

தூயவன்

தமிழன் பிரதமராகவர மற்றொரு தமிழன் ஆதரவு கொடுப்பானா?

ஒரு தமிழனுக்கு கிடைத்த பிரதமராகும் வாய்ப்பை இன்னொரு (கிழட்டுத்) தமிழன் தட்டிப்பறித்திருக்கிறான். அதுவும் வேற்றினத்தவர் ஒருவர் பிரமராவதற்காக.

பிரதமராகும் வாய்ப்பைப் பெற்ற தமிழன் மூப்பனார். அந்த வாய்ப்பை தட்டிப்பறித்த தமிழன் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தமிழக கூட்டணி தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்

மூப்பரானர் பிரதமர் ஆகி ஏதாவது சாதித்திருப்பார் என நம்பவில்லை. கலைஞரும் அது தான் வரவிடவில்லை போலும்.

தமிழன் ஒருவன் பிரதமர் ஆக வர முடியுமென்றால் அதற்காகத் தானே தமிழன் ஆதரிக்க முயல்வான். அது இனவாதமாகுமா? பிரதீபா பட்டேல் வருவதற்குத் தான் சிவசேனை ஆதரவு தந்தது என்றால் , இதே சிவசேனை தான் முன்பு அப்துல் கலாம் வருவதற்குத் தன்னுடைய ஆதரவையும் தந்தது. அப்போது மதம் இனம் கவனத்தில் கொள்ளப்படவில்லையே. அப்துல் கலாம் வருவதில் எனக்குச் சந்தோசம் தான். ஆனால் சிவசேனை இன, மத அடிப்படையில் இதை நோக்கியது என்பது ஏற்க முடியவில்லை. ஆனால் அப்படி இருந்தாலும் தவறில்லை...

ஈழம் பிரியும் நிலை வந்தால் வட இந்தியரின் நலனா? இல்லை தமிழர் நலனா எண்று பார்த்து சிவசேனா வட இந்தியரை ஆதரித்து தமிழரை கை கழுவும்... அதை நீங்கள் ஆதரிக்க வேஎண்டிவரும்...

தமிழர் எனபதால் ஜெயலலிதா இந்திய பிரதமர் ஆனால் ஆதரவு தருவீர்களா என்ன..?? கன்னட வெறிக்கூட்டத்தில் ஜனதாதள தலைவர் தேவகௌடா எண்ற ஒருவர் பிரதமராக வந்த போது தமிழக கட்ச்சிகள் நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்து போல இருக்கிறது உங்கள் கதை....!

கன்னட வெறியர்களில் "வாட்டாள் நாகராஜ்" எனும் பெயரை அடிக்கடி ஊடகங்களில் கேட்டு இருப்பீர்கள்... அவனும் பால்தகரே போலத்தான்... தனது அரசியல் எதிர்காலத்துக்காக தமிழனை விரட்டுகிறான்... நாளைக்கு அவனே கர்னாடகத்தில் பெரிய பதவிக்கு வந்தபின் , நான் ஈழத்துக்கு ஆதரவு எண்று அறிவித்தால் சந்தேசப்படுவீர்களா..??

உங்களின் தனிமடல் பெட்டி நிரம்பி உள்ளதால் பதில் அனுப்ப முடியவில்லை...

மூப்பரானர் பிரதமர் ஆகி ஏதாவது சாதித்திருப்பார் என நம்பவில்லை. கலைஞரும் அது தான் வரவிடவில்லை போலும்.

பாண் பராக் போட்டு துப்பவே அவருக்கு நேரம் போதாது எண்று கலைஞர் நினைத்து இருக்க கூடும்...!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பாண் பராக் போட்டு துப்பவே அவருக்கு நேரம் போதாது எண்று கலைஞர் நினைத்து இருக்க கூடும்...!

அது தான் காமராசார் ஆட்சியோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.