Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

Featured Replies

வாகனங்கள் பலவும் நொருக்கப்பட்டன

அமைச்சர் அதாவுல்லா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது கல்முனையில் வைத்து நேற்று மாலை நடத்தப்பட்ட கல்வீச்சு மற்றும் தாக்குதல்களினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், பலவாகனங்கள் அடித்து நொருக்கப்பட்ட நிலையில் விஷேட அதிரடிப்படையினர் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் அமைச்சர் அதாவுல்லாவை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்டனர்.

நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் கல்முனையில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அரசு தரப்பு வேட்பாளர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் அக்கரைப்பற்றிலிருந்து பெரும் ஊர்வலமாக மருதமுனையை நோக்கிச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் சென்றவர்கள் தகாத வார்த்தைகளை கோஷங்களாக எழுப்பியவாறு ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் மருதமுனையை நோக்கி சென்று விட்டு பின்னர் மீண்டும் திரும்பி வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் சென்றவர்களின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் ஆத்திரமடைந்த நிலையில், பெருமளவானோர் கல்முனையில் இவர்களின் வருகையை எதிர்பார்த்து திரண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஊர்வலக்காரர்கள் கல்முனையை வந்தடைந்ததும் அவர்கள் மீது மிக மோசமாக கல்வீச்சுகள் மற்றும் தாக்குதல்கள் கண் மூடித்தனமாக நடத்தப்பட்டன.

அப்பகுதிமக்களின் தாக்குதல்களினால் நிலைகுலைந்த ஊர்வலக்காரர்கள் அவலக்குரலெழுப்பியவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர். பல வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட ஊர்வலக்காரர்கள் காயமடைந்தனர். வீதியெங்கும் இரத்தக்கறைகளும் கண்ணாடிச்சிதறல்களும் காணப்பட்டதுடன், மோட்டார் கைக்கிள்களும் வீதிகளில் ஆங்காங்கே கிடந்ததுடன், 3 மகேந்திரா ஜீப் வண்டிகள் சேதமடைந்த நிலையில், வீதியில் கைவிடப்பட்டிருந்தன.

இதற்கிடையில், பொதுமக்களின் தாக்குதலுக்குள் சிக்கிய அமைச்சர் அதாவுல்லாவையும் அவரது வாகனத்தையும் விஷேட அதிரடிப்படையினர் பெரும் சிரமத்தின் மத்தியில் மீட்டெடுத்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

இதன் பின்னர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்ட பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகத்தை நடத்தி அவர்களை அவ்விடத்திலிருந்து விரட்டியடித்தனர்.

இதனால் அப்பகுதியெங்கும் பெரும் பதற்றநிலை காணப்பட்டது.

http://isoorya.blogspot.com/

space.gif

செய்தது யார் ஹக்கீம் ஆதரவாளர்களா..?? இல்லை உண்மையில் பொது மக்களா...??

பொது மக்களாக இருந்தால் மிகவும் மகிழ்ச்சி..

யார் தாக்கினார்கள் எண்டு அறிய அவசியம் இல்லை.. தாக்க பட்டதேகாணும்..

  • கருத்துக்கள உறவுகள்

அதாவுல்லாவை தாக்கிய குழுவுக்கு நன்றிகள். அடுத்த கட்டமாக ஹக்கீம் அவர்களுக்கான தாக்குதலை மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். :lol::lol:

எனக்கென்னமோ அந்த முதல்லமைச்சர் ஆரெண்டு தெரியவர்ர பூண்டிக்குள்ள ரண்டு மூண்டு தலை உருளும் போலகிடக்கு..

ஆற்ற ஆற்ற தலையெண்டு அவயல் அவயலின்ர வாயை வைத்துத்தான் முடிவெடுக்கபடலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

யார் தாக்கினார்கள் எண்டு அறிய அவசியம் இல்லை.. தாக்க பட்டதேகாணும்..

இது கிழக்கில்

தமழ் முசுலீம் மக்களுக்கிடையே ஆன மிகவும் பலமான அழிவுகளுக்கு ஆரம்பமாக இருக்கலாம்

எனவே ஆதரிக்கவேண்டாம்?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.