Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு: "நிலவரம்" ஏடு

Featured Replies

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு என்று சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு என்று சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (16.05.08) வெளிவந்த அந்த ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எதிர்வரும் 21 ஆம் நாள் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா தனது இடத்தை அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தக்க வைக்கும் இறுதிக் கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது.

அனைத்துலக அரங்கில் மிக மோசமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள சிறிலங்கா தனது செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடத் தயாராக இல்லாத நிலையில் மனித உரிமைக் குழுவில் தனக்கான இடத்தைத் தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளமை வியப்பூட்டுவதாக உள்ளது.

சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம நியூயோர்க் சென்று நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் முகாமிட்டு தமது முயற்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் தன் பங்கிற்குக் களத்தில் இறங்கி பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கருணா விடயத்தில் தோன்றியுள்ள நிலைமையைச் சமாளித்து அவரை மீட்டு வரும் முயற்சியில் ஈடுபடுவதற்கே அவர் பிரித்தானியாவுக்குச் சென்றிருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப் பட்டுள்ள போதிலும் கூட, அதற்கும் அப்பால் மனித உரிமைக் குழுவின் உறுப்புரிமைக்கான தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்கும் இப் பயணத்தைப் பாவிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

எனினும், செல்லும் இடமெல்லாம் அவர்கள் பலத்த கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டிய இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் குழுவின் அனைத்துலக கிரம மீளாய்வுக் குழுக்கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த சமரசிங்கவை டென்மார்க், அயர்லாந்து, பிரித்தானியா, கனடா, யேர்மன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விட்டார்கள்.

தனது உதவிக்கு அழைத்து வந்த சட்டமா அதிபர் உள்ளிட்ட பரிவாரங்களின் அனுசரணையுடன் முடிந்தவரை கூறக்கூடிய பொய்களைக் கூறிச் சமாளிக்க முயன்றுள்ளார் மகிந்த சமரசிங்க. அவரது முயற்சி வெற்றி அளித்துள்ளதா என்பதை 21 ஆம் நாளே கண்டறிய முடியும்.

இதேவேளை, உலக நாடுகளைத் தவிர மனித உரிமைகளுக்காகக் குரல் தரும் அனைத்துலக அமைப்புக்களும் சிறிலங்கா அரசு மனித உரிமைக் குழுவில் மீள் நியமனம் பெறுவதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன இது விடயத்தில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

எனினும், இந்த முயற்சிகள் சிறிலங்கா மீண்டும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இடம் பிடிப்பதைத் தடுத்து விடுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வழங்கப்படும் வரிச்சலுகை நிறுத்தப்படப் போவதாக அண்மையில் பல செய்திகள் வெளிவந்த போதிலும் கூட அவற்றை அடுத்த மூன்று வருடங்களுக்கு நிபந்தனையுடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் சம்மதம் தெரிவித்திருந்தது.

இதனைப் போன்றே மனித உரிமைக்குழு நியமன விவகாரத்திலும் இடம்பெற்று விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக்குழுவில் சிறிலங்கா மீள் நியமனம் கோரி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற மிக மோசடிகள் நிறைந்த ஒரு தேர்தலை நடாத்தி முடித்திருக்கின்றது சிங்கள அரசு. அதே நேரம், கொழும்பு நகரச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் எதுவித முன்னறிவித்தலும் இன்றி பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதுடன் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆக்கப்பட்டுள்ளதான தகவல்களும் வெளிவந்துள்ளன.

விடுதலைப் புலிகளுடன் இனி எக்காலத்திலும் போர்நிறுத்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளப் போவதில்லை என சிறிலங்காப் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியதன் மூலம் சமாதானத்துக்கு இனி சிறிலங்காவில் என்றுமே இடமில்லை என்பதனைத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில், சிறிலங்கா ஐ.நா. மனித உரிமைக் குழுவில் மீள் நியமனம் பெறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது. உலக நாடுகளும், அனைத்துலக மனிதநேய அமைப்புக்களும் அதனைப் பார்த்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்படன் நாம் வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் எமது வரலாற்றுக் கடமையில் இருந்து பிறழ்ந்தவர்களாய் ஆவோம்.

எனவே சிந்திப்போம்! விரைந்து செயற்படுவோம்! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இலங்கைக்கு இடம் வழங்கப்படக்கூடாது என தென்னாபிரிக்க மனித உரிமை ஆர்வலர் கோரியுள்ளார்.

[ வெள்ளிக்கிழமை, 16 மே 2008, 02:39.45 AM GMT +05:30 ]

எதிர்வரும் 21 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதி நாடுகளின் தேர்தலில் இலங்கை தோற்கடிக்கப்படவேண்டும் என தென்னாபிரிக்காவின் மனித உரிமைகள் நடவடிக்கையாளர் வணக்கத்துக்குரிய டெஸ்மன் டுடு தெரிவித்துள்ளார்.

desmondtutuzv9.jpg

இலங்கையின் உறுப்புரிமை இந்த சபையில் தோற்கடிக்கப்படுமானால் அது இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடும் பொதுமக்களுக்கு மாத்திரமல்லாமல், மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் ஏனைய உலக நாடுகளுக்கும் ஒரு பாடமாக அமையும் என டுடு கருத்துரைத்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன.

நள்ளிரவில் மக்கள் கடத்திசெல்லப்படுகின்றனர். சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிஷன்றனர். கொல்லப்படுகின்றனர். இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்; கண்காணிப்பு அலுவலகத்தை நாட்டில் நிறுவுவதற்கும் இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்து வருகிறது எனவே இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 41 நாடுகளின் உறுப்புரிமை நிலையில் இடம் வழங்கப்படக்கூடாது என டெஸ்மன் டுடு குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு அங்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப்புலிகள் தற்கொலை தாக்குதல்கள் உட்பட்ட பல்வேறு உபகிரமங்களை கையாள்கின்றனர். எனினும் இதனையடுத்து படையினர் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் டெஸ்மன் டு;டு தெரிவித்துள்ளார்.

tamilwin.com

மிச்சம் வாசிக்க எதுக்கு அங்கை போகணும் ? இனி வரும் நபர்கள் இங்கேயே படியுங்கள் -

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு: "நிலவரம்" ஏடு

[வெள்ளிக்கிழமை, 16 மே 2008, 05:47 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு என்று சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (16.05.08) வெளிவந்த அந்த ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எதிர்வரும் 21 ஆம் நாள் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா தனது இடத்தை அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தக்க வைக்கும் இறுதிக் கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது.

அனைத்துலக அரங்கில் மிக மோசமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள சிறிலங்கா தனது செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடத் தயாராக இல்லாத நிலையில் மனித உரிமைக் குழுவில் தனக்கான இடத்தைத் தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளமை வியப்பூட்டுவதாக உள்ளது.

சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம நியூயோர்க் சென்று நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் முகாமிட்டு தமது முயற்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் தன் பங்கிற்குக் களத்தில் இறங்கி பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கருணா விடயத்தில் தோன்றியுள்ள நிலைமையைச் சமாளித்து அவரை மீட்டு வரும் முயற்சியில் ஈடுபடுவதற்கே அவர் பிரித்தானியாவுக்குச் சென்றிருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப் பட்டுள்ள போதிலும் கூட, அதற்கும் அப்பால் மனித உரிமைக் குழுவின் உறுப்புரிமைக்கான தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்கும் இப் பயணத்தைப் பாவிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

எனினும், செல்லும் இடமெல்லாம் அவர்கள் பலத்த கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டிய இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் குழுவின் அனைத்துலக கிரம மீளாய்வுக் குழுக்கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த சமரசிங்கவை டென்மார்க், அயர்லாந்து, பிரித்தானியா, கனடா, யேர்மன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விட்டார்கள்.

தனது உதவிக்கு அழைத்து வந்த சட்டமா அதிபர் உள்ளிட்ட பரிவாரங்களின் அனுசரணையுடன் முடிந்தவரை கூறக்கூடிய பொய்களைக் கூறிச் சமாளிக்க முயன்றுள்ளார் மகிந்த சமரசிங்க. அவரது முயற்சி வெற்றி அளித்துள்ளதா என்பதை 21 ஆம் நாளே கண்டறிய முடியும்.

இதேவேளை, உலக நாடுகளைத் தவிர மனித உரிமைகளுக்காகக் குரல் தரும் அனைத்துலக அமைப்புக்களும் சிறிலங்கா அரசு மனித உரிமைக் குழுவில் மீள் நியமனம் பெறுவதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன இது விடயத்தில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

எனினும், இந்த முயற்சிகள் சிறிலங்கா மீண்டும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இடம் பிடிப்பதைத் தடுத்து விடுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வழங்கப்படும் வரிச்சலுகை நிறுத்தப்படப் போவதாக அண்மையில் பல செய்திகள் வெளிவந்த போதிலும் கூட அவற்றை அடுத்த மூன்று வருடங்களுக்கு நிபந்தனையுடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் சம்மதம் தெரிவித்திருந்தது.

இதனைப் போன்றே மனித உரிமைக்குழு நியமன விவகாரத்திலும் இடம்பெற்று விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக்குழுவில் சிறிலங்கா மீள் நியமனம் கோரி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற மிக மோசடிகள் நிறைந்த ஒரு தேர்தலை நடாத்தி முடித்திருக்கின்றது சிங்கள அரசு. அதே நேரம், கொழும்பு நகரச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் எதுவித முன்னறிவித்தலும் இன்றி பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதுடன் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆக்கப்பட்டுள்ளதான தகவல்களும் வெளிவந்துள்ளன.

விடுதலைப் புலிகளுடன் இனி எக்காலத்திலும் போர்நிறுத்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளப் போவதில்லை என சிறிலங்காப் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியதன் மூலம் சமாதானத்துக்கு இனி சிறிலங்காவில் என்றுமே இடமில்லை என்பதனைத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில், சிறிலங்கா ஐ.நா. மனித உரிமைக் குழுவில் மீள் நியமனம் பெறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது. உலக நாடுகளும், அனைத்துலக மனிதநேய அமைப்புக்களும் அதனைப் பார்த்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்படன் நாம் வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் எமது வரலாற்றுக் கடமையில் இருந்து பிறழ்ந்தவர்களாய் ஆவோம்.

எனவே சிந்திப்போம்! விரைந்து செயற்படுவோம்! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : http://www.puthinam.com/full.php?2b24OOA4b...cf1e02cceocYA3e

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடையம்......

உடனடியாக தென்னாபிரிக்கா பேராயரின் வேண்டுகோளை கார்டியன் பத்திரிகையில் இருந்து பிரதி செய்து உலகத்தின் முக்கியமான மனிதவுரிமைகளுக்கு வாதடும் நிருவனங்களுக்கும்,முக்கியமா

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka not fit to be in UN Rights Council- Tutu

[TamilNet, Thursday, 15 May 2008, 11:36 GMT]

"With a terrible record of torture and disappearance, Sri Lanka doesn't deserve a seat on the UN human rights council. It should be voted out," says the first black South African Anglican Archbishop of Cape Town, South Africa, in a comment that appeared on the daily Guardian, U.K., May 15th edition.

Full text of the article follows:

Archbishop Desmond TutuIt would seem self-evident that a country which tortures and kidnaps its own people has no place on the world's leading human rights body. Apparently not: Sri Lanka, despite repeated criticism for its human rights record, is running for re-election to the UN human rights council, with a vote to be held in New York on May 21.

tut0-008.jpg

Governments owe it to Sri Lankan human rights victims - and to victims of human rights abuses around the world - to ensure that the Sri Lankan bid fails. This will be an important test of the 47-member council, to show that the UN's standards for it will be honoured.

If Sri Lanka is defeated this year, that will be important not just for the Sri Lankan human rights leaders who, at great personal risk, have called for Sri Lanka's defeat, and for Sri Lankan civil society. In combination with the humiliating defeat last year of Belarus, it will send an important signal for the future: governments with track records of serious human rights abuses do not belong on a body set up to protect the victims of such abuses.

Sri Lanka has failed to honour its pledges of upholding human rights standards and cooperating with the UN since joining the council two years ago. Indeed, its human rights record has worsened during that time. The Sri Lankan idea of cooperation with the UN, meanwhile, has been to condemn senior UN officials (including the high commissioner for human rights, Louise Arbour, and the under secretary general for humanitarian affairs, John Holmes) as "terrorists" or "terrorist sympathisers."

The systematic abuses by Sri Lankan government forces are among the most serious imaginable. Government security forces summarily remove their own citizens from their homes and families in the middle of the night, never to be heard from again. Torture and extrajudicial killings are widespread. When the human rights council was established, UN members required that states elected must themselves "uphold the highest standards" of human rights. On that count, Sri Lanka is clearly disqualified.

The separatist Tamil Tigers have used despicable tactics in their war against the government, including frequent suicide bombings. But that can in no way excuse the scale of government abuses.

Fortunately, the news from the council is not all bad. Countries running from other regions of the world have credible claims to be leaders in promoting human rights. Argentina and Chile, which suffered terribly from torture, enforced disappearances and extrajudicial killings in the past, have become leading supporters of human rights, and now seek to join the council. On the African slate, there are some true human rights leaders, and - thankfully - no candidacy from Zimbabwe or Sudan. In the entire world, Sri Lanka stands out as the most clearly unqualified state seeking election to the council this year, and the place where things are getting unambiguously worse.

Defeating the Sri Lankan candidacy would be a comfort to the people of Sri Lanka. It would place international pressure on the government to respect human rights, and to accept a UN human rights monitoring mission, which it has stubbornly refused. It would help make the council a place where true human rights leaders in all regions can help lead the world towards greater respect for human life and human dignity. An outcome, in short, that would benefit those who care about human rights in the world. Any other result would be a travesty.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25644

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு: "நிலவரம்" ஏடு

[வெள்ளிக்கிழமை, 16 மே 2008, 05:47 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]

ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு என்று சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (16.05.08) வெளிவந்த அந்த ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எதிர்வரும் 21 ஆம் நாள் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் போட்டியிடும் சிறிலங்கா தனது இடத்தை அடுத்த இரண்டு வருடங்களுக்குத் தக்க வைக்கும் இறுதிக் கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது.

அனைத்துலக அரங்கில் மிக மோசமாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள சிறிலங்கா தனது செயற்பாடுகளை ஒருபோதும் கைவிடத் தயாராக இல்லாத நிலையில் மனித உரிமைக் குழுவில் தனக்கான இடத்தைத் தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளமை வியப்பூட்டுவதாக உள்ளது.

சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம நியூயோர்க் சென்று நேரடியாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை, மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் முகாமிட்டு தமது முயற்சிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் தன் பங்கிற்குக் களத்தில் இறங்கி பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கருணா விடயத்தில் தோன்றியுள்ள நிலைமையைச் சமாளித்து அவரை மீட்டு வரும் முயற்சியில் ஈடுபடுவதற்கே அவர் பிரித்தானியாவுக்குச் சென்றிருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப் பட்டுள்ள போதிலும் கூட, அதற்கும் அப்பால் மனித உரிமைக் குழுவின் உறுப்புரிமைக்கான தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்கும் இப் பயணத்தைப் பாவிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

எனினும், செல்லும் இடமெல்லாம் அவர்கள் பலத்த கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டிய இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் குழுவின் அனைத்துலக கிரம மீளாய்வுக் குழுக்கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த சமரசிங்கவை டென்மார்க், அயர்லாந்து, பிரித்தானியா, கனடா, யேர்மன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து விட்டார்கள்.

தனது உதவிக்கு அழைத்து வந்த சட்டமா அதிபர் உள்ளிட்ட பரிவாரங்களின் அனுசரணையுடன் முடிந்தவரை கூறக்கூடிய பொய்களைக் கூறிச் சமாளிக்க முயன்றுள்ளார் மகிந்த சமரசிங்க. அவரது முயற்சி வெற்றி அளித்துள்ளதா என்பதை 21 ஆம் நாளே கண்டறிய முடியும்.

இதேவேளை, உலக நாடுகளைத் தவிர மனித உரிமைகளுக்காகக் குரல் தரும் அனைத்துலக அமைப்புக்களும் சிறிலங்கா அரசு மனித உரிமைக் குழுவில் மீள் நியமனம் பெறுவதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன இது விடயத்தில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன.

எனினும், இந்த முயற்சிகள் சிறிலங்கா மீண்டும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இடம் பிடிப்பதைத் தடுத்து விடுமா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சிறிலங்கா உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வழங்கப்படும் வரிச்சலுகை நிறுத்தப்படப் போவதாக அண்மையில் பல செய்திகள் வெளிவந்த போதிலும் கூட அவற்றை அடுத்த மூன்று வருடங்களுக்கு நிபந்தனையுடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் சம்மதம் தெரிவித்திருந்தது.

இதனைப் போன்றே மனித உரிமைக்குழு நியமன விவகாரத்திலும் இடம்பெற்று விடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக்குழுவில் சிறிலங்கா மீள் நியமனம் கோரி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற மிக மோசடிகள் நிறைந்த ஒரு தேர்தலை நடாத்தி முடித்திருக்கின்றது சிங்கள அரசு. அதே நேரம், கொழும்பு நகரச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப் பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் எதுவித முன்னறிவித்தலும் இன்றி பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதுடன் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆக்கப்பட்டுள்ளதான தகவல்களும் வெளிவந்துள்ளன.

விடுதலைப் புலிகளுடன் இனி எக்காலத்திலும் போர்நிறுத்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளப் போவதில்லை என சிறிலங்காப் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியதன் மூலம் சமாதானத்துக்கு இனி சிறிலங்காவில் என்றுமே இடமில்லை என்பதனைத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில், சிறிலங்கா ஐ.நா. மனித உரிமைக் குழுவில் மீள் நியமனம் பெறுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது. உலக நாடுகளும், அனைத்துலக மனிதநேய அமைப்புக்களும் அதனைப் பார்த்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்படன் நாம் வெறுமனே கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தோமானால் எமது வரலாற்றுக் கடமையில் இருந்து பிறழ்ந்தவர்களாய் ஆவோம்.

எனவே சிந்திப்போம்! விரைந்து செயற்படுவோம்! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthinam.com

இங்கு ஆங்கிலப் புலமையுடையவர்கள் கடித மாதிரி ஒன்றை உருவாக்கித் தந்தால் அதை அந்நாடுகளிலுள்ள மனித உரிமை அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.