Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் உயிர் எழுத்தே!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் உயிர் எழுத்தே!!

அன்பே அன்பே அன்பின் அன்பே என்பை உருக்கி நின்றால் கூட அன்பைக் காட்டும் அன்பே அன்பால் உன்பால் இணைந்தேன் அன்பே அதனால் என்னுள் உயர்ந்தேன் நானே!!

ஆறுதல் தரும் ஆருயிர் நீயே ஆறாய் என்னுள் பாயும் தமிழே ஆரிருள் நீக்கிட என்னுள் வந்தாய் செல்லம்! ஆறுதல் என்றும் உன் திருமடியே!

இடிகள் கூடத்தாங்கும் இதயம் பழிகள் தாங்க முடியாப்பொழுதில் இன்னிசை தந்து இன் தமிழ் தந்து இன்னல் போக்கி இன்பம் தந்து இணைத்துக்கொள்ளும் இன்னுயிரே இசைந்தே நிறைந்தேன் உந்தன் மடியே!!.

ஈட்டி போல குத்தும் வார்த்தைகள் கேட்டதும் உடனே வாடிவிடுவேன்!! ஈர்த்தாய் உன்பால் இணையில்லாத் தமிழால் ஈரம் உள்ள நெஞ்சைக் கண்டேன்…ஈரேழுலுகமும் வாழ்த்தவேண்டும் ஈடில்லா உறவே உனைச் சேர்ந்திட வேண்டும்!

உண்மை உயர்வு உழைப்பு அனைத்தும் உள்ளில் வைத்து உயர்வைக் காட்டி உந்தன் உயிரில் என்னைக் கூட்டி உறவைத் தந்த உன்னதமே உந்தன் பதமே எந்தன் நிம்மதி

ஊடல் இன்றிப்போனால் கூட காதல் இன்னும் உயரும் என்று ஊமைப்பெண்ணைப் பேச வைத்தாய் உயர்ந்தாய் எந்தன் நெஞ்சுள் செல்லம்!

என்னை எனக்கே அன்பே உணர்த்தி எழுதும் எழுத்தில் அன்பைச் செலுத்தி எண்ணும் எண்ணம் நீயாய் இருத்தி என்னை உன்னில் கொண்டாய் நீயே!

ஏற்றம் பெற்று ஏணி தட்டும் சிலரில் ஏணியாகி உள்ளம் குளிர்ந்து என் ஏற்றம் தன்னில் தன்னை ஏற்று மகிழும் உன்போல் உறவு கிடைத்ததென் வரமே!! ஏறிவானில் எரிவான் தன்னை பழம் எனப்பறித்த ஆஞ்சநேயன் தந்த ஏற்றமிகு உறவே உன்னை ஏற்றேன் என்னுள் என்றும் இன்பம்!!...ஏந்திழையின் ஏக்கம் தகர்க்க விரைவில் இங்கு அன்பே வேண்டும்!

ஐயமில்லா அன்புக் குன்றே ஐம்புலனும் உன்னால் மகிழ்ச்சி கொள்ளும் அணையில்லா அன்பின் பெரு நிதி வெள்ளம் ஐவகை நிலமும் உன் தொடுதலில் கண்டேன் உன்னால் வாழ்வில் அனைத்தும் பெற்றேன்!

ஒன்றாய் ஒன்றி உந்தன் அன்பின் ஒன்றில் கலந்து ஒருவராகி ஒன்றிப் பிணைந்து ஒத்துமேவி வாழும் வாழ்வை தருகின்ற எந்தன் உத்தமன் என்றும் நீயே!

ஓதும் சொல்லும் ஓசையும் ஒலியும் எல்லாம் எல்லாம் ஆனாய் நீயே!!...ஓடம் போல ஏற்றிச் சென்று கரை சேர்க்க வந்த எந்தன் தாயே!!...ஓடும் நொடிகள் யாவிலும் உந்தன் நினைவே நிறைந்து நிற்குது செல்லம்!! ஓவியமானாய் காவியமானாய்!! ஓதும் வேதப்பொருளும் ஆனாய்!! நீயே எல்லாம் ஆனாய் அன்பே!

ஔவை கொண்ட தமிழின் காதல் உன்மேல் இங்கு கொண்டேன் எந்தன் அன்பே!! காதல் நோய்க்கு ஔடைதம் நீயே!!! தமிழே உயிரே! உறவே! உயர்வே!!.எந்தன் உயிர் எழுத்து நீயே!!! ..

அழகிய பதிவு தமிழ்தங்கை... உங்கள் உணர்வுகளிற்கு வாழ்த்துகள்..

இப்பிடி தமிழ் - உயிர் எண்டு எழுதி இருக்கிறீங்கள். எங்க தமிழ் உணர்வாளர்கள் ஒருத்தரும் பதில் எழுதக்காண இல்ல?

இப்படியும் கவிதை எழுதலாமா என யோசித்தேன்்.. அதனால் தாமதம்.. :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகிய பதிவு தமிழ்தங்கை... உங்கள் உணர்வுகளிற்கு வாழ்த்துகள்..

இப்பிடி தமிழ் - உயிர் எண்டு எழுதி இருக்கிறீங்கள். எங்க தமிழ் உணர்வாளர்கள் ஒருத்தரும் பதில் எழுதக்காண இல்ல?

தமிழோடு ஒன்றி உயிராகிவிட்டார்களோ என்னவோ கலைஞா?!!

மிக்க நன்றி உங்கள் ஊக்கம் எனக்கு உற்சாகம்.

இப்படியும் கவிதை எழுதலாமா என யோசித்தேன்்.. அதனால் தாமதம்.. :o

:huh:

இது பாராட்டு என்று எடுத்துக்கொள்ளவோ இல்லை இன்னும் முன்னேற இடமுண்டு என்னும் தட்டிக்கொடுக்கும் வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளவோ? !! தவறாமல் என் கவிதைகளுக்கு வாழ்த்துதரும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

வணக்கம் ஒளவையாரக்கா....

கனகாலமாய்க் காணேல்ல.. காரணம் புரிஞ்சுபோச்சு...

எழுதுங்கோ நிறைய... தம்பி வெட்டியா இருக்கேக்க படிப்பேன்தானே...

வேலையா இருந்தாலும் படிப்பன் அக்கா எழுதினா :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஒளவையாரக்கா....

கனகாலமாய்க் காணேல்ல.. காரணம் புரிஞ்சுபோச்சு...

எழுதுங்கோ நிறைய... தம்பி வெட்டியா இருக்கேக்க படிப்பேன்தானே...

வேலையா இருந்தாலும் படிப்பன் அக்கா எழுதினா :lol:

அடடே!! வாங்கோ வாங்கோ உங்களையும் கனகாலமாக் காணேல்லை :wub:

தம்பி உடையாள் படைக்கு அஞ்சாள்"

களத்தில் குதிச்சாச்சு தம்பி :wub:

அட!! உங்கட ஒவ்வொரு வரியும் 'புத்துணர்ச்சிதருகின்றதே!!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தங்கை நலமா?

நல்ல ஆக்கம், திரும்பத் திரும்ப வாசிக்கும்போது வித்தியாசமான விளக்கத்தை தரக்கூடியதாகவுள்ளது.

பாராட்டுக்கள்!

அட...அட தமிழ்தங்கை அக்கா பேஷ்..பேஷ்..கவிதை படித்தேன்..(உங்கள் தமிழ் மேல் கொண்ட பற்றை ரசித்தேன் அதே வேளை உங்கள் உள்ள காதலையும் ரசித்தேன்) :D ...வாழ்த்துக்கள் அக்கா இரண்டிற்குமே.. :D

உயிர் எழுத்தில்

சங்கமமான

உங்கள் தமிழ்

காதல்..

அழகிய

தமிழ்

மகனோடும்

சங்கமிக்க... :D

தம்பியின் வாழ்த்துக்கள்... :D (பிறகு என்னை ஏசுறதில்லை அக்காவிட்ட கற்றதை அக்காவிற்கே சொல்லி பார்த்தேன் :D )..

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தங்கை நலமா?

நல்ல ஆக்கம், திரும்பத் திரும்ப வாசிக்கும்போது வித்தியாசமான விளக்கத்தை தரக்கூடியதாகவுள்ளது.

பாராட்டுக்கள்!

மிக்க நன்றி வல்வை அண்ணா,

இது சிலேடை மாதிரி...உயிரான தமிழுக்கும் பொருந்தும் உறவான உயிருக்கும் பொருந்தும் :D

அட...அட தமிழ்தங்கை அக்கா பேஷ்..பேஷ்..கவிதை படித்தேன்..(உங்கள் தமிழ் மேல் கொண்ட பற்றை ரசித்தேன் அதே வேளை உங்கள் உள்ள காதலையும் ரசித்தேன்) :D ...வாழ்த்துக்கள் அக்கா இரண்டிற்குமே.. :D

உயிர் எழுத்தில்

சங்கமமான

உங்கள் தமிழ்

காதல்..

அழகிய

தமிழ்

மகனோடும்

சங்கமிக்க... :D

தம்பியின் வாழ்த்துக்கள்... :D (பிறகு என்னை ஏசுறதில்லை அக்காவிட்ட கற்றதை அக்காவிற்கே சொல்லி பார்த்தேன் :D )..

அப்ப நான் வரட்டா!!

சேச்சே,,,,ஜம்முவைப் போய் பேச மனசு வருமோ?!!

நன்றி ஜம்மு. ஒவ்வொரு கருத்துக்கும் நீங்கள் வைக்கும் பின்னூட்டம் எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. வாழ்க! வளர்க!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.