Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலமைச்சர் ஆசை யாரைதான் விட்டுவைக்கவில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் ஆசை யாரைதான் விட்டுவைக்கவில்லை!

வீரகேசரி இணையம் 5/20/2008 10:03:03 AM - முதலமைச்சர் பிள்ளையானுக்கும்,ஹிஸ்புல்லா

வீரகேசரி இணையம் துதி பாடத்தொடங்கிட்டுது போல...... :icon_idea:

புலிகளில் இருந்தவர் என சொல்லிறது ஓகே தமிழ் மக்களுக்காக அர்பணித்தவர் என சொல்வது வீரகேசரியின் உண்மை முகத்தை காட்டுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரி இணையம் துதி பாடத்தொடங்கிட்டுது போல...... :icon_idea:

வீரகேசரி மட்டும்தான் கிழக்கில் விற்பனையாகும் ஒரே ஒரு தமிழ்ப் பத்திரிகை. தினக்குரல் சுடரொளி போன்றவற்றுக்கு அனுமதி இல்லை/ வீரகேசரி இந்தியர்களால் நடாத்தப்படும் பத்திரிகை. இதில்ப்போய் ஈழ ஆதரவு எதிர்பார்ப்பது முட்டாள்தனம். சென்ற ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகையில் யாழ் மக்களுக்கு ஒரு நட்செய்தி உங்கள் மரண அறிவித்தல்கள் இலவசமாக எமது இணையத்தில் பிரசுரிக்கப்படும் என விளம்பரப்படுத்தியவர்கள்.

அதன் தற்போதைய ஆசிரியர் காராட்டிக்காரர்களினால் வழங்கப்படும் டொக்டர் பட்டம் பெற்றவர். இதிலிருந்து அவரின் தராதரத்தை அறியமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: அந்த ஆசிரியரின் பெயர் என்ன அமுதன். ஒருவர் 1990 களில் கொழும்பு இந்துக்கல்லூரியில் பின்னேரங்களில் கராத்தே சொல்லிக்கொடுத்து வந்தார். அவர்கள் 2 சகோதரர்கள். அவரா இவர் ?

முதலமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் நான்தான், பிள்ளையானுக்கு அனுபவம் இல்லை : மௌனகுருசாமி

Tuesday, 20 May 2008

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு அனுபவம் எதுவும் இல்லாத பிள்ளையானைவிட, நிர்வாகத் துறையில் நிரம்பிய அனுபவத்தைக் கொண்டுள்ள தானே மிகவும் பொருத்தமானவர் எனத் தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஆர்.மௌனகுருசாமி, மாகாண சபை உறுப்பினராகவல்ல, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு தன்னையே நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார்.

பிள்ளையான் குழுவின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் ஆளுங் கட்சியின் போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு நியமிக்கப்பட்ட மௌனகுருசாமி அதனை ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக பி.பி.சி.யின் சிங்கள சேவை அவரிடம் கருத்துக் கேட்ட போதே, மாகாண சபையின் சாதாரண உறுப்பினர் பதவி அல்ல. முதலமைச்சர் பதவியே தனக்குத் தரப்பட வேண்டும் என மௌனகுருசாமி தெரிவித்திருக்கின்றார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த போனஸ் ஆசனங்களில் ஒன்றைப் பெற்றுக்கொள்ளுமாறு மௌனகுருசாமியிடம் பிள்ளையான் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், முதலமைச்சர் பதவியை மட்டுமே தன்னால் பெற்றுக்கொள்ள முடியும் என மௌனகுருசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னத்தில் போட்டியிட்ட மௌனகுருசாமி போதிய விருப்பு வாக்குகளைப் பெறாததால் தோல்வியடைந்தார்.

நான் ஒரு அனுபவம் வாய்ந்த சிவில் அதிகாரி. கிழக்கு மாகாணத்துக்கென புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு மிகவும் பொருத்தமான ஆள் நான்தான் எனத் தெரிவித்த மௌனகுருசாமி, ஆனால் என்னை முதலமைச்சர் பதவிக்குச் சிபார்சு செய்வதற்குப் பதிலாக அனுபவமற்ற பிள்ளையானை முதலமைச்சராக நியமிக்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு அரசாங்கத்தைக் கோரியது எனவும் குற்றஞ்சாட்டினார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராகச் செயற்பட்ட மௌனகுருசாமி, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்ற போது கருணாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டார். இருந்தபோதிலும் கருணா குழுவினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடுத்த போது லண்டன் சென்று அங்கு அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டார். கடந்த சுமார் மூன்று வருடகாலமாக அவர் லண்டனிலேயே இருந்துவந்துள்ளார்.

இந்தநிலையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட போது அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் மட்டக்களப்பு திரும்பி பிள்ளையான் குழுவின் சார்பில் போட்டியிட்டார். இருந்தபோதிலும், அரசியல் மற்றும் நிர்வாகத்துறையில் ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த மௌனகுருசாமி தனக்குப் போட்டியாக உருவாகலாம் என அஞ்சிய பிள்ளையான் தேர்தலில் விருப்பு வாக்குகளை அவருக்குக் கிடைக்காமல் செய்து அவரைத் தோற்றடித்தார்.

தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், போனஸ் ஆசனத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும் என அரசாங்க உயர் மட்டத்தினர் வலியுறுத்தியதால் பிள்ளையானும் அதனை ஏற்றுக்கொண்டார். இதன்படி போனஸ் ஆசனங்களில் ஒன்றுக்கு மௌனகுருசாமி நியமிக்கப்படுகின்றார் என ஆளும் கட்சி நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இருந்தபோதிலும், அந்தப் பதவியை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என மௌனகுருசாமி நேற்று அறிவித்தார். பீபீசீ சிங்கள் சேவை முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையானா ஹிஸ்புல்லாவா பொருத்தமானவர் என்று கேட்கப்பட்ட போதே மெளனகுருசாமி மேற் கண்டவாறு தெரிவித்தார்.

http://www.ajeevan.ch/content/view/2835/1/

ஏன் உவர் கரிநாகம் கருணாவுக்கு தகுதி இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் முதலமைச்சர் பந்தாவுடன் பவனி வரும்போது கருணா மறியலுக்குள்ளே இருந்து என்ன யோசிப்பார் என்று யாருக்காவது தெரியுமோ?

வீரகேசரியின் ஆசிரியர் காதல் திருமணாம் முடித்த தனது மகளை பிரித்து எடுப்பதற்காக வன்முறையை பாவிச்சு தனது மகளை சட்டபடி காதலிச்சவனை சட்டவிரோதமான சட்டத்தினால் தட்டி போட்டவர். இதுன் பிகுதி தேவைப்படின் வழங்கப்படும்....

அட இது போகட்டும்.. ரகுநாதன்!

நீங்கள் சொன்ன அந்த கராத்தே ஆசிரியர்களினால்தான் அந்த பட்டம் வழங்கபட்டது. அவர் மாத்திரம் இல்லை.. திருமதி (+/-) வேலம்மாள் செல்லச்சாமிக்கும் டாக்குத்தர் பட்டம் கொடுத்தவங்கள்.... இதை பத்திரிகைகள் எழுதி கிளிக்கேக்குள்ள செல்லச்சாமிக்கும்... டாக்குத்தர் பட்டம் குடுக்க வெளிக்கிட்டவங்கள்...

வீரகேசரி மட்டும்தான் கிழக்கில் விற்பனையாகும் ஒரே ஒரு தமிழ்ப் பத்திரிகை. தினக்குரல் சுடரொளி போன்றவற்றுக்கு அனுமதி இல்லை/ வீரகேசரி இந்தியர்களால் நடாத்தப்படும் பத்திரிகை. இதில்ப்போய் ஈழ ஆதரவு எதிர்பார்ப்பது முட்டாள்தனம். சென்ற ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகையில் யாழ் மக்களுக்கு ஒரு நட்செய்தி உங்கள் மரண அறிவித்தல்கள் இலவசமாக எமது இணையத்தில் பிரசுரிக்கப்படும் என விளம்பரப்படுத்தியவர்கள்.

அதன் தற்போதைய ஆசிரியர் காராட்டிக்காரர்களினால் வழங்கப்படும் டொக்டர் பட்டம் பெற்றவர். இதிலிருந்து அவரின் தராதரத்தை அறியமுடியும்.

எதிர்காலத்தில் தமிழர்கள் அதுவும் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் என்ன சாவதற்கு மகிந்தவால் எழுதப்பட்ட தீர்ப்பா அல்லது .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.