Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்புப் போர் ஒன்றை புலிகள் விரைவில் தொடங்கக்கூடும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்புப் போர் ஒன்றை புலிகள் விரைவில் தொடங்கக்கூடும்!

[ சனிக்கிழமை, 31 மே 2008, 11:05.57 AM GMT +05:30 ]

அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்,கடலிற் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதையே அவதானிக்க முடிகிறது.

சமீப காலமாகக் கடற்புலிகள் நடத்தியுள்ள மூன்றுக்கு மேற்பட்ட தாக்குதல் வெற்றிகள் இவற்றுக்கு ஆதாரமாக உள்ளன. இத் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவருகின்ற செய்திகள் ஊடாக விடுதலைப்புலிகளிடம் அதி நவீன கடற்கலங்களும், நவீன போர்த் தளபாடங்களும் உள்ளதை மறைமுகமாகவோ,நேரடியாகவோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

இதேவேளை இவ்வாறான தாக்குதல் முன்னோட்டங்கள் புலிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள அவாவி நிற்கும் பெருமெடுப்பிலான பாரிய தரைவழித்தாக்குதலுக்கான முன் அதிர்வுகளாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நாயாற்றில் கடந்த மார்ச் மாதம் கடற்படையினரின் பீரங்கிப் படகு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து,புலிகள் தீவிரப்படுத்தி வரும் கடல் வழித் தாக்குதல்கள் தரைவழியாகப் புலிகள் பெரும் நில மீட்புச் சமரொன்றுக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரில்,புலிகளைப் பொறுத்தவரையில் கடல் வழி அணி நகர்த்தல்களும் முக்கியத்துவம் பெறும் அதேவேளை, எதிகாலச் சமர்க்களங்களில் புலிகளின் விமானப்படை பங்கேற்கப் போவதும் நிதர்சனம்: கிழக்கிலோ,அல்லது வடக்கிலோ உள்ள பெரும் பகுதி ஒன்றை விடுவிப்பதற்கு, விடுதலைப்புலிகள் தங்களது முப்படைப்பலத்தையும் இதன்போது பிரயோகிக்கக்கூடும்!

இதேவேளை கிழக்கை விட வடபகுதியான இலங்கையின் உச்சியில் நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் மனிதப் பேரவலத்தை கருத்தில் எடுத்து,விடுதலைப்புலிகள் தாக்குதலை நெறிப்படுத்தக்கூடும்!

யாழ்ப்பாண மக்கள் கடந்த 3 அல்லது 4 வருடங்களாக பல்வேறு அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகங் கொடுத்து வரும் நிலையில், இதுவரை சர்வதேச சமூகமோ, இந்தியாவோ மனிதாபிமான ரீதியில் மக்கள் துயர் போக்க, இரு தரப்பையும் இவ் விடயத்தில் இணங்கவைக்க அக்கறை காட்டாத போதும், குடாநாட்டுக்கான ஒரேயொரு தரைவழிப் பாதையான A-9 வீதியின் முக்கியத்துவம் குறித்துப் பல தரப்பினரும் யதார்த்தபூர்வமான கருத்துக்களை முன்வைத்தே வந்துள்ளனர்.

இவ்விடயத்தில் இரு தரப்பினருக்கும் தீவிர அழுத்தங்களைக் கொடுத்து மூடப்பட்ட A-9 ஐ திறப்பதற்குச் சர்வதேச நாடுகளும், மனிதாபிமான தொண்டர் அமைப்புகளும், தீவிர நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால், யாழ்ப்பாண மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிர்க்கதி நிலைக்குள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

அத்துடன் இது தொடர்பாகப் பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்த கருத்துகளும் சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே உள்ளது.அரசாங்கத்தைப் பொறுத்தவரை வன்னியை மீட்பதே அதன் இறுதிக்கட்ட இலக்காகித் திக்குமுக்காடி வரும் நிலையில்,மக்கள் நலன் சார்ந்த நோக்கில் விடுதலைப் புலிகள் முன்கூட்டியே பெருமெடுப்பிலான பாரிய நில மீட்புச் சமர் ஒன்றை எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடும்!

வீரகேசரி இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே சொல்லி ஏத்தி விடுறாங்கையா..! :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே சொல்லி ஏத்தி விடுறாங்கையா..!

:) டங்குவார், நீங்கள் சொல்வதுபோல இந்தக் கட்டுரை "சும்மா ஏற்றி விடுவதாகக்" கூட இருக்கலாம். ஆனால் அதில் கூறப்பட்டிருக்கும் யாழ்ப்பாணத்து தமிழீழ உறவுகள் சிங்கள ஆக்கிரமிப்பினுள் அகப்பட்டு படும் துன்பங்களும், அதனால் அவர்கள் மீட்கப்பட வேணிடிய அவசியமும் இருந்து கொண்டிருக்கிறதல்லவா?

மீட்க்கப்படவேண்டும்... மீட்க்கப்படவேண்டும்... மீட்க்கப்படவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே சொல்லி ஏத்தி விடுறாங்கையா..!

:lol: டங்குவார், நீங்கள் சொல்வதுபோல இந்தக் கட்டுரை "சும்மா ஏற்றி விடுவதாகக்" கூட இருக்கலாம். ஆனால் அதில் கூறப்பட்டிருக்கும் யாழ்ப்பாணத்து தமிழீழ உறவுகள் சிங்கள ஆக்கிரமிப்பினுள் அகப்பட்டு படும் துன்பங்களும், அதனால் அவர்கள் மீட்கப்பட வேணிடிய அவசியமும் இருந்து கொண்டிருக்கிறதல்லவா?

ரகுநாதன்,

சும்மா வில்லங்கத்துக்குத்தான் சொன்னேன்.. :lol:

யாழ்ப்பாணத்தை மீட்டெடுக்க வேண்டியது கட்டாயமே..! ஆனால் அது எப்பொழுது என்பது புலிகளுக்கு மட்டுமே தெரிந்த சங்கதி.. அந்த வகையில் இந்தக் கட்டுரை ஒருவரது தனிப்பட்ட அனுமானமே.

இதைப்பற்றி எனக்கும் ஒரு கருத்து உண்டு. இப்பொழுது யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 40,000 க்கும் மேற்பட்ட படையினர் நிலை கொண்டுள்ளனர். அவர்கள் நிலைகொண்டுள்ளனர் என்பதை விட சிக்குண்டுள்ளனர் என்பதே பொருத்தம். அவர்களை வெளியேறாமல் பார்த்துக்கொண்டிருப்பது கொழும்பின் தந்திர மற்றும் அரசியல் இலாப நோக்கு. புலிகளின் பார்வையில் கூடிய வரைக்கும் சிக்குப்பட்டவர்களை ஒரு குறிப்பிட்ட காலம் வரை அப்படியே வைத்திருக்கவே விரும்புவர்.

இந்தப் படையினர் விலக்கப்பட்டு மன்னார், வவுனியா மற்றும் மணலாறு களமுனைகளில் மீள நிறுத்தப்பட்டால் அது சாதகமான விடயமாக இராது. இது யாழ்ப்பாணம் தொடர்பான நடவடிக்கையில் முக்கிய அம்சமாகக் கொள்ளப்படும் என எண்ணுகிறேன்.

வீரகேசரி படையினரை உசார் நிலையில் வைத்திருக்கிறது போல்தான் தோன்றுகிறது. தேவைகள் வரும்போது நிலம் மீட்கப்பட வேண்டும். அது தவிர இவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக நிலமீட்புப்போர் என்ற நடவடிக்கை இருக்காது. யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து அனைத்துக் கதைகளும் புனையப்படுகிறதே தவிர வெறெதையும் காணவில்லை. இவைகள் செய்தியாவதற்கு முன் செயலாக முன்னிற்கும், அப்போது விளைவைக் கண்டுகொள்வோம்.

மீட்க்கப்படவேண்டும் எமது நிலங்கள்...

நிலமீட்பு ஒன்றுதான் எம் மக்கள் நிம்மதியாக வாழ ஒரே வழி, வழி,

அதை வேகப்படுத்துவது புலம் பெயர்ந்தவர்களாகிய எம் கையில்தான் உள்ளது,

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையில் உண்மையும், சாத்தியக்கூறுகளும் அதிகமாகத் தென்படுகின்றன. இது எங்களுக்குத்தெரியுமோ இல்லையோ ஆனால் எதிரி நன்றாக அறிந்துள்ளான்.

இந்த திட்டத்தை திசை திருப்பும் கைங்கரியத்தில் தான் பல வேலைத்திட்டங்களை நகர்த்திக்கொண்டும் இருக்கின்றான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.