Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் சிறிலங்கா அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Featured Replies

தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழத்து விட்டு கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, லண்டனில் வாழும் தமிழ் மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக லண்டனில் இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொதுநலவாய நாடுகள் அலுவலகத்தின் வெளிப்புறமாக இன்று முற்பகல் 11.30 மணியில் இருந்து 2.00 மணிவரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

பிரித்தானிய தமிழர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மஹிந்த ராஜபக்ஸ அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கோஸங்களை எழுப்பியுள்ளனர்.

மறுபுறம் 50ற்கும் நூற்றுக்கும் இடைப்பட்ட சிங்களவர்களைக் கொண்ட குழு ஒன்று அரசாங்கத்திற்கு சார்பான, புலிகளுக்கு எதிரான கோஸங்களுடன் எதிர்ப் பக்கமாக ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தது. இந்த இரு தரப்பினருக்கிடையிலும் தடுப்பு அரன்களை பிரித்தானிய காவற்துறையினர் அமைத்திருந்தனர்.

அந்த மண்டபத்திற்கு வெளியே சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து 2,000 இற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக, சிறீலங்கா அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூறு பேர் வரையிலான சிங்களவர்களும் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த முனைந்த போதிலும், தமிழ் மக்களின் ஓர்மம் நிறைந்த கொட்டொலிகள் காரணமாக அங்கியிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

பொதுநலவாய அமைப்பின் தலைவர்களது மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக நேற்றைய தினம் அம்னாஸ்றிக் இன்றநாஸ்னல் என்ற அமைப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://isoorya.blogspot.com/

space.gif

என்னையா... 2000 பேர்தான் போகமுடிந்ததா?...

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில் பார்க்க

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி.சி தமிழோசை இவ்வாறு சொல்கிறது

ஒன்றுக்கு ஒன்று எதிரான கோஷங்களுடன் அருகருகாக ஆர்ப்பாட்டங்கள்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் லண்டன் வருகையை முன்னிட்டு இன்று இங்கு பொதுநலவாய அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக சில ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

நண்பகல் பன்னிரண்டு மணியளவில் அங்கு ஆரம்பமான இரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஒன்று அரசுக்கு ஆதரவானது, விடுதலைப்புலிகளுக்கு எதிரானது.

ஆனால், அதற்கு அருகாகவே மற்றுமொரு ஆர்ப்பாட்டமும் அங்கு நடந்தது அது, இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளையும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஆதரித்தும் நடத்தப்பட்டது.

தாம் பயங்கரவாதத்துக்கு எதிராகவே இந்த ஆர்பாட்டத்தை நடத்துவதாக அரச ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.

அதேவேளை இதற்கு அருகில் நடந்த ஆர்ப்பாட்டம் அதற்கு முற்றிலும் எதிரானதாக இருந்தது.

தமிழர்கள் மீது இலங்கை அரசு இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும், இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டு அமைப்புக்களில் ஒன்றான பிரிட்டிஷ் தமிழ் போரத்தை சேர்ந்த ராஜமனோகரன். அதனை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை தாம் நடத்துவதாகக் கூறினார்.

அதேவேளை, இன்று பிற்பகலில் மற்றுமொரு ஆர்ப்பாட்டமும் பிறிதாக அதே இடத்தில் நடத்தப்பட்டது.

இனங்களுக்கு இடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான குழுவினால் நடத்தப்பட்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கை நிலைமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் என இரு தரப்பினரையும் குற்றஞ்சாட்டினார்கள். அதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் என்கிறார் இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சபா நாவலன்.

-பிபிசி தமிழோசை

காணொளிக்கு நன்றி கந்தப்பு...

  • கருத்துக்கள உறவுகள்
:o உந்த சபா நாவலன் என்கிறவன் லண்டனில் இருந்து தமிழ்த் தேசியத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறான். பிரபல இணையத் தளங்களில் தமிழ்த் தேசியத்தைக் கேவலமாகத் திட்டியும், ஈழம் என்பது ஒரு தோல்வியடையும் கனவு என்றும் எழுதி வருகிறான். பிள்ளையான் முதலமைச்சரானதை கிழக்குக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று எழுதுவதோடு, இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் சமாதானத்துக்குமான இயக்கம் என்ற பெயரில் அரசின் பிரச்சாரத்தை தந்திரமான் முறையில் நடத்தி வருகிறான். இதற்கு அரசின் பூரண ஆசீர்வாதமும் இருக்கிறது. இவன் போன்ற புல்லுருவிகள் தமிழ்ச் சமூகம் இனங்கண்டு சமூகத்திலிருந்து ஒதுக்குவதே தேவையானதும் , அவசியமானதும் ஆகும்.
  • கருத்துக்கள உறவுகள்

ஊர்வலத்தில் பங்கு பற்றிய உறவுகளுக்கு மிக்க நன்றி." சிறு துளி பெரு வெள்ளம்".

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில் பார்க்க

இனைப்புக்கு நன்றி

வாழ்கா தழிழ் வெல்க ஈழம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.