Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்து மாற்று இனங்கள் பலம் பெறுவதை அனுமதிக்க முடியாது. - த.ம.வி.பு -இளையபாரதி

Featured Replies

போராட்டம், பயங்கரவாத எனும் போர்வையில் தமிழ் மக்கள் அடக்கபட்டு, அவர்களது உரிiமைகள் ஒடுக்கப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இழந்த உரிiமைகளைப் பெற்று புதிய அரசியல் பாதையில் நாம் செல்ல வேண்டும்."

இவ்வாறு த.ம.வி.பு. அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி சூளுரைத்துள்ளார்;.

மேலும், நாம் போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்லர். தமிழீழம் கிடைத்தால் நாமும் சேர்ந்து ஆளுவோம். எனினும், தமிழர்களின் போரட்டம் பயங்கரவாதம் எனச் சித்தரிக்கபட்டு, அதைக் கொண்டு மாற்று இனத்தவர்கள் தமது இருப்பைத் தக்க வைக்கும் நிலையைத் தொடரவிடக்கூடாது. நாமும் அரசியல் ரீதியில் பலம் பெறவேண்டும்'.

மேலும் தெரிவித்ததாவது :

இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் நல்லதொரு அரசியலை உருவாக்குவதன் மூலம் எமது எதிர்கால சமுதாயத்திற்கு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

போராட்டம் என்ற போர்வையில் மட்டுமின்றி ஆழிப்பேரலை அனர்த்தத்தாலும் தமிழ் சமூதாயம் பெரும்; இழப்புகளைச் சந்தித்து நிலை குலைந்து நிற்கின்றது.

எனவேதான், எமது சமூதாயம் வளமுடன் வாழ்வதற்கான ஓர் புதிய அரசியலை அமைக்க நாம் நிர்ப்பந்திக்கபட்டுள்ளோம்.

நமது அபிவிருத்தி, பொருளாதார, கல்வி மேம்படடைய நாம் பாடுபட வேண்டியதுடன் இனிமேலும் நாம் மறைந்திருப்போமாகவிருந்தால் நமது அரசியலும் மறைந்து விட சந்தாப்பம் உண்டு.

ஒருவகையில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சா என்ற பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், இந்தப் பொறுப்புடனாவது எமது இழந்த உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கு ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்.

எனினும் மட்டு, திருமலை மாவட்ட தமிழ் மக்கள் தேர்தலின் போது சரியான முறையில், சிந்தித்து சரியாக செயல்பட்டிருந்தால் கூடிய உறுப்பினர்களைப் பெற்று, அமைச்சுப் பதவிகளையும் கூட்டிப் பெற்றிருக்கலாம்.

அதேவேளை. அம்பாறை தமிழ் மக்கள் எமது மானத்தைக் காப்பாற்றினா. அதற்காக அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆனால், மத்திய அரசின், மஹிந்தவின் உறுதியான நடவடிக்iயும், கிழக்கு மாகாணம் தமிழர் கை;ககே கொடுக்கப்பட வேண்டும் என்ற அவரது அசையாத நிலைப்பாடு காரணமாகவுமே முதலமைச்சர் பதவி நமக்குக் கிடைத்து.

நம்மவர்கள் தழிழீழம் தேவையெனப் போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழீழழம் தான் இலக்கு என்றும் கூறுகின்றனர்.

ஆனால், அந்தப் போராட்டத்தை வைத்து, பயங்ரவாதிகள், பயங்கரவாதம் எனப் பிழையாகக் காட்டி, அதன் போர்வையில் எம்மை விற்று மாற்று இனத்தவர்கள் தங்களது அரசியலைப் பலப்படுத்திக் கொண்டிருக்கின்றனா,

இப்போக்கு முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டும். போரட்டம் எனும் போர்வையில் தமிழர்கள் அடக்கப்படுவதை இனி மேலும் அனுதிக்க முடியாது. போரடட்டம் ஒருபுறம் நடக்கலாம். நாம் போராட்டத்திற்கு எதிரானவர்களலல்லர். உண்மையில் தமிழீழம் கிடைத்தால் நாமும் சேர்ந்து ஆளுவோம்.

ஆனால் இதை அடிப்படையாக வைத்து எமது உரிiமைகள் இழக்கப்படக்கூடாது. இதன் மூலம் எமது கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி என்பன அழிக்கபட்டுள்ளன. இவற்றை மீடடெடுக்க வேண்டிய கட்டாயம் கடப்பாடு எமக்கு உண்டு.

குறிப்பாக போராட்டம் என்ற போர்வையில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கிய படுவான் கரைப்பிரதேச தமிழ் மக்களின் நிலைமை பெரும் துயரைத் தருகின்றது. இன்றும் அங்குள்ள பிள்ளைகள் குப்பி விளக்கிலேயே படிக்க வேண்டிய பரிதாப நிiமையில் இருக்கிறார்கள். போரட்டம் என்ற போர்வையில் நசுக்கப்பட்ட இவர்களது வாழ்வில் விடியல் ஏற்பட வேண்டும். அதற்கு எம் மக்கள் மீதான கெடுபிடியை நிறுத்த வேண்டும்.

மத்திய அரசில் எம் தரப்பில் பேசுவதற்கு யாருமில்லாததால் பல விடயங்களை விட்டுக் கொடுத்து மௌனம் சாதிக்க வேண்டிய நிலையுள்ளது.

எனவே, இந்த இலக்கை நாம் ஸ்திரப்படுத்தி வேண்டும். எமது இலக்கு மாகாணசபையல்ல. மத்திய அரசில் அங்கம் வகிப்பதிலேயே அரசியல் பலமுள்ளது. மத்திய அரசில் அமைச்சர்களாக நம்மவர்கள் வரவேண்டும்.

இதற்காக எமது அரசியல் மாற்றப்டபட வேண்டும். இழந்த அரசியலை மீளவும் எடுக்க வேண்டிய கட்டத்திலுள்ளோம். ஒரு நிலைப்படுத்தி ஒரே பாதையில் செல்லத் தமழ் மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

எந்த விடயத்தையும் எவராவது செய்வார்களேன தமிழ் மக்கள் மௌனம் சாதிப்பதால்;தான் அரசியலில் நாம் பலவீனப்பட்டவர்களாக உள்ளோம். இந்நிலை தொடரக்கூடாது. ஜனாதிபதியின் இணைப்பாளராக நான் நியமிக்கபட்டள்ளேனென்றால் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் மக்கள்தான்.

எனவே, இதன் மூலம் நாம் பெறக் கூடிய அனுகூலங்கள் குறித்து நல்லாலோசனைகளை மக்கள் தரவேண்டும். என்றார்.

நன்றி சுடர் ஒளி

என்னையா நடக்குது நாட்டில..

என்னமோ நடக்குது உலகத்திலே

ஒண்ணுமே............

யாரு இந்த பஞ்சோந்தி?

கருணா க்ழுவில் ஒரு இனியபாரதி இருந்தான் இவன் யார்? அல்லது வனே இவன் தானோ?

கருணாவிற்கு ஒரு பிள்ளையான்

பிள்ளையானுக்கு ஒரு இனியபாரதி

என்ன புரியவில்லையா? அதற்கு இன்னும் கொஞ்சம் காலமிருக்கிறது. அக்காலம் வரை இருவரும் இருந்தால் அது நடக்கும்.

யாரு இந்த பஞ்சோந்தி?

கருணா க்ழுவில் ஒரு இனியபாரதி இருந்தான் இவன் யார்? அல்லது வனே இவன் தானோ?

அந்தப் பாரதி தானுங்கே இந்தப் பாரதி

மிகவிரைவில் அனைத்துக்கும் பதில் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி

இதென்ன பதவி

இதிலிருந்து கொண்டு

இதென்ன கதை

ஏதோ வெளியில வர வெளிக்கிட்டுட்டார்

அப்பாடா அதுபோதும்????

முஸ்லீம்களை மனதில் வைத்துதான் இந்த அறிக்கை போல.

அடுத்து வாற எலெக்சனை கருத்தில் கொண்டுதான் தமிழீழ கோசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.