Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியன் விமானத்தில் பயணிப்பவர்களின் கவனத்திற்கு -தூங்கிப் போன விமானிகள்-தப்பிய 100 பயணிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கிப் போன பைலட்டுகள்-தப்பிய 100 பயணிகள்

வியாழக்கிழமை, ஜூன் 26, 2008

மும்பை: மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளும் தூங்கிவிட்டனர். இதனால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே வந்துவிட்டது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த 15 நாட்களாகிவிட்ட நிலையில் இப்போது தான் வெளியில் தகவல் கசிந்துள்ளது.

துபாயிலிருந்து மும்பை கிளம்பிய IC 612 என்ற அந்த ஏர் இந்தியா விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர். துபாய் நேரப்படி இரவு 1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி, இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ஜெய்ப்பூரில் தரையிறங்கியது.

இதையடுத்து அங்கிருந்து மும்பை கிளம்பியது. ஆனால், கிளம்பிய சிறிது நேரத்தில் ஆட்டோ பைலட்டை இயக்கிவிட்டு முதலில் ஒரு பைலட் தூக்கத்தில் ஆழ்ந்தார். இதைத் தொடர்ந்து துணை பைலட்டும் தூங்கிவிட்டார்.

விமானம் 'A 474 South route' என்ற பாதையில் சென்று கொண்டிருந்தது. விமானத்தை இயக்கியது ஆட்டோ பைலட்.

இந் நிலையில் மும்பை வான் வெளியில் இந்த விமானம் நுழைந்தது. அப்போது, மும்பை விமான நிலையத்தின் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் பறக்கும் உயரத்தைக் குறைக்குமாறு விமானிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். ஆனால், அவர்களிடமிருந்து பதில் இல்லை.

மும்பை விமான நிலையத்திற்கு 100 மைல் தொலைவில் வரும்போதே உயரத்தைக் குறைக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அந்த விமானம் தொடர்ந்து அதிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

இதனால் விமானம் கடத்தப்பட்டுவிட்டதோ என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதையடுத்து SELCAL (selective calling) என்ற முறையை பயன்படுத்தி விமானத்தை தரைக் கட்டுப்பாட்டு பிரிவினர் தொடர்பு கொண்டனர்.

இந்த முறையை பயன்படுத்தினால் விமானிகளின் காக்பிட் அறையில் அலாரம் ஒலிக்கும். இதை அவ்வளவு சீக்கிரத்தில் பயன்படுத்திவிட மாட்டார்கள்.

அதே போல SELCAL அலாரம் ஒலிக்கவே அதைக் கேட்டு திடுக்கிட்டு இரு விமானிகளும் விழித்துள்ளனர். இவர்களை எழுப்புவதற்குள் விமானம் மும்பையைத் தாண்டி கோவாவுக்கு பாதி தூரம் வரை போய்விட்டது.

இதையடுத்து விமானத்தை திருப்பி மும்பையில் பத்திரமாக தரையிறக்கினர் இரு விமானிகளும்.

இந் நிலையி்ல் இந்த சம்பவத்தை பூசி மொழுகும் வகையில் புதிய 'திரைக்கதையை' ஏர்-இந்தியா எழுதி வருவதாகத் தெரிகிறது. விமானத்தின் தொலைத் தொடர்பில் பழுது ஏற்பட்டதாக 'கதை' ரெடியாகி வருகிறது.

- தற்ஸ் தமிழ்

அடப்பாவிகளா...தூங்குவதற்கு வேறு இடமே கிடைக்கலையா..

என்ன கொடுமை சார் இது

தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல் விட்டால் இதுதான் பிரச்சினை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கெட்டார்...! :lol:

நல்ல பைலட்டுகள்..நல்லவேளை விமானம் பாகிஸ்தானுக்குள்ளோ அல்லது இலங்கைக்குள்ளோ நுழையவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமானிகள் தூங்கியதிற்கு அண்டை நாட்டு தீயசக்திகளே காரணமென அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :lol:

அதேபோல் தங்கள் நாட்டை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்றுவது போல் திரைப்படம் எடுப்பவர்களுக்கும் நல்ல கரு கிடைத்து விட்டது :lol:

ஏனப்பா எல்லாரும் அந்த விமானிகள் ஏசுறியள் வேலையில போய் தூங்கிறது இல்லாட்டி பள்ளியிள போய் தூங்கிற சுகம் இருக்கே அது தான் தனி சுகம் பாருங்கோ.. :lol: (அத தான் அவையளு செய்து இருக்கீனம் போல)..ஆனா என்ன அவையள் விமானத்தில தூங்கி போயீட்டீனம்.. :lol:

என்னவோ பத்திரமா சனம் வந்து சேர்ந்திட்டுது தானே..அது வரைக்கு சந்தோஷம்.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில தூங்கிறது பிரச்சினையில்ல ஆனா வாழ்க்கையே தூக்கமா போயிட கூடாது" :lol:

அப்ப நான் வரட்டா!!

யாருக்குத்தெரியும் தூங்கினாங்களோ தூக்க திட்டம்போட்டு பிழைச்சிட்டுதோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.