Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியப் பிரதமர் உட்பட சகலருக்கும் எமது படையினரே பாதுகாப்பு வழங்குவர் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன கூறுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி நாளேடு - சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சகல சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பும் இலங்கைப் படையினராலேயே வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமருடன் இந்தியப் பாதுகாப்புப் படையினர் எவரும் வருகை தரமாட்டார்கள். அதற்கான தேவை எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

சார்க் மாநாட்டில் பங்குபற்றவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பளிப்பதற்கு இந்தியப் படையினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோதே பாலித கோஹன இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது

விஷேடமாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய பாதுகாப்பு படையினர் எவரும் வருகைதரமாட்டார்கள் . எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை கொழும்பில் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சார்க் உறுப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட இராஜதந்திரிகள், பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள அமைப்பு நாடுகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போதிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தங்கியிருப்பதற்காக விடுதிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அதன் பாதுகாப்பையும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அப்ப இலங்கை படையினருக்குத்தான் பாதுகாப்பு கொடுக்கப்போகினம் போல,,,,,,,,,,,,,,,,,,

வீரகேசரி நாளேடு - சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட சகல சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பும் இலங்கைப் படையினராலேயே வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமருடன் இந்தியப் பாதுகாப்புப் படையினர் எவரும் வருகை தரமாட்டார்கள். அதற்கான தேவை எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

சார்க் மாநாட்டில் பங்குபற்றவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பளிப்பதற்கு இந்தியப் படையினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோதே பாலித கோஹன இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது

விஷேடமாக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய பாதுகாப்பு படையினர் எவரும் வருகைதரமாட்டார்கள் . எதிர்வரும் ஜூலை மாதம் 27ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை கொழும்பில் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சார்க் உறுப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட இராஜதந்திரிகள், பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகைதரவுள்ள அமைப்பு நாடுகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போதிலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தங்கியிருப்பதற்காக விடுதிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அதன் பாதுகாப்பையும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாத முற்பகுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கான பாதுகாப்பை வழங்குவதற்காக இந்தியப் படையினர் கொழும்பு வருகை தரவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் மறுத்திருக்கின்றது. சார்க் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறிலங்கா படையினராலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சின் செயலாளரான பாலித கோஹணவே இது தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்திகளை சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார். சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த அவர், இந்தியப் பிரதமர் உட்பட அனைத்துதத் தலைவர்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறிலங்கா படையினராலேயே வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்திய பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்றவர்களான கறுப்பு பூனைகள் பிரிவைச் சேர்ந்த சுமர் 1,500 பேர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு வரவிருப்பதாகவும், கடந்த வாரம் கொழும்பு வந்த இந்திய உயர் மட்ட அதிகாரிகள் கொண்ட குழு இது தொடர்பாகவே முக்கியமாகப் பேசியிருந்ததாகவும் கொழும்பு ஊடகங்களில் கடந்தவார இறுதியில் செய்தி வெளியாகியிருக்கின்றது.

இச்செய்திகள் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கோஹண, சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தரும் இந்தியப் பிரதமருடன் இந்தியப் படையினர் எவரும் வருகை தர மாட்டார்கள். அதற்கான தேவை எதுவும் இல்லை. அவருடைய பாதுகாப்பை சிறிலங்கா படையினரே வழங்குவார்கள் எனக் குறிப்பிட்டார். இம்மாநாட்டுக்கு வருகை தரவிருக்கும் தலைவர்கள் அனைவருக்கும் சிறிலங்கா படையினரே பாதுகாப்பை வழங்குவார்கள். இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாநாட்டுக்கு வருகை தரவிருக்கும் தலைவர்கள் தங்கியிருப்பதற்கான விடுதிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அதன் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இக்காலப் பகுதியில் தலைவர்களுயை போக்குவரத்து வசதிகளும் சிறிலங்காப் படையினராலேயே மேற்கொள்ளப்படும். அதற்கான ஏற்பாடுகளும் திருப்திகரமாகச் செய்யப்பட்டுள்ளன, வெளிநாட்டுத் தலைவர்களுடைய பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறிலங்கா படையினராலும், காவல்துறையினராலுமே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

அப்படி இந்திய படையினர் வராவிட்டால் இலங்கை படையினரில் நம்பிக்கையும் இல்லாவிட்டால் தமிழீழ விசேட பாதுகாப்பு பிரிவிடம் கேட்டால் பாதுகாப்பு வழங்குவது பற்றி பரிசீலனை செய்யக்கூடும்

பாதுகாப்புக்கு இந்தியா, ஆயுதத்துக்கு இந்தியா, ஆயுதம் வாங்க காசுக்கும் இந்தியா, சோத்துக்கும் இந்தியா. பிச்சை எடுக்கவும் இந்தியா.

பின்ன என்னத்துக்கு சிங்கார சிரிலங்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.